வியாழன், 25 ஜூன், 2020

பென்னிக்ஸ் ஜெயராஜும் ஜார்ஜ் பிலோய்ட்டும்!

அப்பா மகன் என்று இருவர், 24 மணி நேர இடைவெளியில் மரணித்து இருக்கின்றார்கள்.எங்கேயோ மருத்துவமனையில் அல்லது சாலை விபத்திலோ அல்ல.

தாம் நடத்தும் கடையை கொரோனா நேரத்தில் விதிக்கு புறம்பாக அதிக நேரம் திறந்து வைத்ததால் காவல் துறையால் விசாரிக்க அழைக்க பட்டு

அங்கே நடந்தது ஆண்டவுனுக்கே வெளிச்சம்.

விசாரணை எதுவும் நடக்கும் முன்பே தமிழக முதல்வர் அந்த மகன் நெஞ்சு வலியினாலும்  அப்பா காய்ச்சலினாலும் இறந்தார் என்று அறிக்கை விட்டு இருக்கின்றார்.

பத்திரிகைகளையும் மற்றும் காணொளிகளும் இவர்கள் உடலில் அதிக இரத்த காயங்கள் காணப்பட்டதாக தகவல்.



இங்கே அமெரிக்காவில் ஜார்ஜ் பிலோய்ட் என்பருவருக்காக # Black lives matter என்று உணர்ச்சிவசப்பட்டு தங்கள் உணர்வுகளை காட்டிய அமெரிக்க தமிழர்கள் இங்கே சாத்தன் குளத்தில் நடந்த இந்த அசம்பாவிதத்திற்க்காக ஒரு கட்டை விரலை கூட தட்டவில்லை.

ஜார்ஜ் பிலோய்ட் மரணம் மிகவும் கண்டிக்க தக்கது தான். அதற்கான போராட்டமும் வெளிப்பாடும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதே உணர்வு இங்கேயும் காட்டவேண்டும்.

காட்டுவார்களா?

அமெரிக்க வாழ் தமிழர்களை விடுங்கள்.

தமிழகத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு எவ்விதமான போராட்டமும் இல்லை என்று தான் நினைக்கின்றேன் (இவர்களின் சொந்த ஊரை தவிர்த்து)

ஏன்?

"அது நம்ம ஆளா"

"இல்லை.."

"அப்ப என்ன கேடு கெட்டுபோன நமக்கு என்ன, நம்ம வேலையை பாப்போம்"

என்று தான் மக்கள் பொதுவாக இருக்கின்றார்கள்.



ஹிட்லரின் கொடுமையான காலத்தில் பாதிக்க பட்ட ஒருவர் சொன்ன கூற்று தான் நினைவிற்கு வருகின்றது.

First they came for the socialists, and I did not speak out—
Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—

Because I was not a socialist.

Then they came for the Jews, and I did not speak out—
   
  Because I was not a Jew.

Then they came for me—

and there was no one left to speak for me.

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள். 

4 கருத்துகள்:

  1. ஃபேஸ்புக்கில் சில கண்டனங்கள் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. கொடுமை...

    அப்பாவிகள் இங்கு பாவிகள்...

    பதிலளிநீக்கு
  3. முகநூலில் கண்டனங்கள் பார்த்துதான் இச்செய்தியே அறிந்தேன். வேதனை.

    துளசிதரன்

    செய்தியே இப்போது உங்கள் பதிவின் மூலம் தான் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இவர்களை கட்டுப்படுத்தும் நீதித் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் அவலம்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...