ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சொந்த செலவில் சூனியம்... I Dont know Why...?




தமிழக அரசியலை சித்தரிக்கும் அடியேனின் பாடல்... (மேலே சொடுக்குங்கள்))


மே மாதம் 17ஂ தேதி தேர்தல்... கடந்த ஐம்பது வருடமாக அடுப்பில் இருந்து நெருப்பு .. நெருப்பில் இருந்து அடுப்பு...என்று காலத்தை தள்ளு விட்டோம்... 

நாம் என்ன செய்வோம். நம்மக்கு வாய்த்தது, அப்படி! டெல்லியை பார்த்தால் பொறாமையாக உள்ளது. உன்னால நான் கேட்டேன் என்னாலே நீ கெட்ட என்று சொல்லி கொண்டு இருந்தவர்களுக்கு "அம் ஆத்மி" என்ற விமோசனம் கிடைத்தது. 

ஆரம்பத்தில் அரசியல் நிர்வாக அனுபவம் இல்லாமல் அவர்கள் தடுமாறினாலும், நாட்க்கள் செல்ல செல்ல இவர்களுடைய ஆட்சி சிறப்பாக அமைந்ததே என்று சொல்லலாம்.

அடுத்த வருடம் பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலில் .. அம ஆத்மி கட்சிக்கு அனைத்து இடங்களும் இவர்களுக்கே என்ற ஒரு பேச்சு அடி படுகின்றது.

நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.  ஒரு காரியம் பண்ணலாம். நம் தொகுதியில் நிற்பவர்களிலே சிறந்தவரை நல்லவரை தேர்ந்தெடுங்கள். 

இந்த ஒரு முறை கட்சியை பார்த்து வாகு அளிக்காதிருங்கள். வேட்ப்பாலர்களை பார்த்து வாக்குகளை அளியுங்கள். அணியாது தொகுதிகளிலேயும் கண்டிப்பாக ஒரு நல்ல வேட்பாளர் இருப்பார். அவரை அறிந்து ஆதரியுங்கள். இதுவே இம்முறை நாம் நமக்கு செய்யும் பெரிய உதவி...




செய்வீங்களா ... செய்வீங்களா .....



வந்தோரை வாழவைத்தாய்  உன் பெருமை

வாடியதை கண்டதும் வாடினாய்  உன் தன்மை.
வள்ளுவனின் வம்சமே உன் மொழி வாய்மை.
இப்ப பிச்ச்சகாரனாகிவிட்டாய்  ..  ஐ டோன்ட் நோ வொய்....


அடுக்குமொழி பேசிக்கிட்டே ஆப்பு வைச்சாள் ஒய்

ஆடவந்த கூத்தாடி  ஆள வைச்சோம் ஒய்
மருத்துவரு வந்தவுடன்  மரத்த காணோம் ஒய்
கேனையங்க   ஊருக்குள கேப்டன்   நாட்டாமை.


ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

சொந்த செலவில் ஒய் ... சூனியம்  தான் ஒய்.
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
கையில வெண்ணை ..ஐ டோன்ட் நோ வொய்.


உடன் பிறப்புகளே...

வாக்கா பெருமக்களே..
மக்க்களே.. மக்களே...
உங்கள் பொன்னான வாக்குகளை...

கருப்பு பணம் காட்டிடிச்சு டாடா பை பை.
கொண்டு வரேன்னு சொன்னவர் ஆல்வேஸ் இன் தி ஸ்கை
இல்லத்துக்கு பல  லட்சம் அது தேர்தல் பொய்.
மல்லையாக்கு நல்ல நேரம் வைச்சான் பீச்சாங்கை..


ஆதினமும் சொல்லூராரு அம்மாதானு   ஒய்

மே தினமும் கும்பலோடு தள்ளாடுது ஒய்
சாதிகொரு கட்சி வச்சி கொல்லுறாங்க ஒய்.
மீதி உள்ள அல்பங்களும்  அள்ளுராங்க ஒய்.


ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

பேய்க்கு பயந்தோம் ஒய். இப்ப பிசாசாடோ   ஒய்..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
ஈயத்த பாத்து  ஒய் ...ஐ டோன்ட் நோ வொய்.

அம்மாவின் ஆணை படி 
மாப்பிள்ளை அவருதான் ஆனா அவரு போட்டு இருக்க டிரஸ் பத்தி நான் மறந்துட்டேன்.
அப்புறம் எதுக்கு டா ஷார்ட் நேம் சூப்பி?

மூணு மாசம் முன்னாலே பெஞ்சது மழை.
திறந்து விட்ட ஏறினால எத்தனை கொலை.
வெள்ளம் காஞ்சி நிலம் வறண்டு வெயில் வந்த வேளை
அம்மாவோட மீட்டிங் போனா பாடையில்  மாலை .


90 க்கும் மேலே ஆச்சி இன்னும் பேராச ...

கே ந கு தலைவருக்கு முடியல பேச
இலவசம்ன்னு சொல்லி காட்டுவான் ஆச
பரதேசியாகிடுவான் வாங்காத காச



ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

ஏறி ஆத்தா  ஒய் ஏரிடிச்சி ஒய் .
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
அடுப்பில பூனை ... .ஐ டோன்ட் நோ வொய்.


தொங்கு சட்டசபை வந்தால் ...

எந்த கட்சியும் யாரோடும் சேர வாய்ப்பு உள்ளது.
கூட்டணியில் ஏதுங்க கொள்கை, கோட்பாடு..
அம்மா வரட்டும்ம்னு காத்துன்னு இருக்கோம்...


2ஜியில்  2லட்சம் கோடி கொள்ளை

போட் ஹௌச்சில் போன் எக்சென்ஜ் இல்லை எல்லை.
சொத்து குவிப்பு வழக்குல கொஞ்சம் நாள் உள்ள
செய்வீங்களா .. செய்வீங்களா .. எனக்கு இல்ல பிள்ளை.


மணல் இல்லாமல்  காஞ்சி போச்சு   பாரு ஆறை

மலையெல்லாம் பேத்துட்டாங்க காணோம் பாறை
அரசாங்க ஆபிசில்   ஊருது சாரை
போனது போச்சி, போடு  புதிய பாதை.. 



ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

கட்டை விரலில் மை...டாஸ்மாக் கடை..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
வெந்தத  தின்னு ஒய் ....ஐ டோன்ட் நோ வொய்.


உலகிலேயே சிறந்த ஜனாயக நாடு பாரதம் என்று ஜப்பானிய பிரதமர் கூறினார்.

உடன் பிறப்புகளே...
மாண்புமிகு அம்மாவின் ஆணை படி... இந்த பாட்ட இப்ப முடிச்சிடறேன்..


இன்றுடனே ஒழித்திடுவோம்i  இந்த சுடுகாட்டை

நல்ல ஆளா பாத்து  போடு உன்னோட   வோட்டை
நல்லவர் வென்றால் அது நம்மோட  கோட்டை..


நம்  வாழ்க்கை நம்  கையில்...

இருக்கையில், இதுவரையில்..
தடம் மாறி தடுமாறி....
ஐ டோண்ட் நோ வொய்...

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பங்கஜவல்லி ...தீர்க்க சுமங்கலி ..

முகநூல் நண்பர் அமுதன் சாந்தி அவர்கள் தன் முக நூல் சுவற்றில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார், இதோ அந்த ஸ்டேட்டஸ் ..

//முந்தா நேத்து ஒரு எடத்துல கார்டுக்கு பதிலா கேஷா செலவழிச்சதை மறந்துட்டேன்...

பர்ஸுல பணம் கம்மியா இருக்கவும்
ஒய்ஃப் கிட்ட (தைரியமா),
"எதுக்காச்சும் பணம் எடுத்தியா?" ன்னு கேட்டுட்டேன்...

"இல்லை, சாயங்காலம் வூட்டுக்கு வாங்க பேசிக்கலாம்!"ன்னுட்டாக ஒய்ஃபு...
கஞ்சியா உப்புமாவா இல்ல கரண்டியான்னு தெரியாம டென்ஷனாருக்கு...//


இதை படித்ததில் இருந்தே நான் பலவிதங்களில் குழம்பிவிட்டேன். உலகில் இப்படியும் நடக்குமா?

இதோ என் குழப்பதிர்க்கான கேள்விகள்..

முதலில்.. "கார்டுக்கு பதிலா கேஷா"

இதை என்னால் நம்பவே முடியல. திருமணம் ஆனா ஒரு மனிதனிடம் "கார்ட் -கேஷ்" இரண்டும் உள்ளதா? நான் இதை ரெண்டையும் சேர்த்து ஒன்றாக பார்த்த கடைசி நாளை என்னால் மறக்கவே முடியாது.

ஒன்றும் இல்லை, அன்று தான் என் திருமண நாள்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

காதுல ஈயத்த காச்சி ஊத்த .....

ஞாயிறும் அதுவுமாய் கோயில் வழிபாட்டில் நான் உண்டு என் வேலை உண்டு என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டு இருக்கையில், இருக்கையில்... எல்லாம் வல்லவனால் எனக்கு அளிக்க பட்ட அன்பு மனைவி மெதுவாக காதை கடித்தார்கள்.

என்னங்க...?

நீ கொடுத்த காணிக்கைய உண்டியலில் போட்டுட்டேன்.

அது இல்ல...

பின்ன என்ன?

அங்கே முன்னால இருக்காங்களே .. அவங்க தான் நம்ம ரமேசுடைய புது பொண்டாட்டி.

என்னாது/? ரமேசுக்கு ரெண்டு சம்சாரமா?

ச்சே .. போய் வாயை கழுவுங்க? ஏன் அப்படி கேக்கறிங்க?

இல்லையே, புது பொண்டாட்டின்னு சொன்னீயே.. புது பொண்டாட்டின்னு ஒருத்தங்க இருந்தா, பழைய பொண்டாட்டி ஒருத்தர் இருக்கணும் இல்ல, அதுதான்.

உங்க வாயிலே..

ஈயத்த காச்சி ஊத்த போறியா?

சனி, 9 ஏப்ரல், 2016

கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுகள்

வணக்கம் . கலாய்க்க  போவது யார் என்ற தலைப்பில் நடந்த ஏப்ரல் மாதத்திற்கான போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த போட்டிக்கான கார்ட்டூன் இங்கே.. 



மயங்கி விழற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?



முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அரசியல் வாசனையே அதிகம் வீசியது . தேர்தல் வரபோகின்றதல்லவா? அதனால் என்று நினைக்கின்றேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

வாசமில்லா மலரிது .....

டாடி வேலைக்கு போகலையா?

என்ற அலறல் சத்தம் மூத்த ராசாத்தியின் அறையில் இருந்து வந்தது.

நீ முதலில் கிளம்பு, ஒரு அஞ்சு நிமிஷம் கழித்து நான் கிளம்புறேன்

என்ற பதிலை தந்து விட்டு மனிதனாக பிறந்த எவனும் விரும்பும் அந்த அஞ்சு நிமிடம் கூடுதல் நேர தூக்கத்திற்கு போர்வையில் அடைக்கலமாகும் முன்..

நான் எங்கே போக போறேன் ... இந்த வாரம் முழுக்க பள்ளிக்கூடம் விடுமுறை, மறந்துடீங்களா?

பொதுவாக பள்ளி நாட்களில் 5:30 போல் எழுப்புவாள், இருவரும் தயாராகி செல்வோம். இந்த வாரம் பள்ளி கூடம் இல்லையே.. அதனால் அவள் எழவில்லை, நானும் அலாரம் வைக்கவில்லை..

ஆமா இல்ல., சுத்தமா மறந்துட்டேன், மணி என்ன ஆச்சி?

8:15.

அட பாவி. 9 மணிக்கு அலுவலகத்தில் ஒரு  முக்கியமான மீட்டிங் இருக்கே,
சீக்கிரம் எழுப்பி இருக்க வேணாமா?

உங்க மீட்டிங் எனக்கு எப்படி தெரியும்?

சரி, மீட்டிங்கை விடு, வழக்கம் போல் எழுப்பி விடவேண்டியது தானே?

சனி, 2 ஏப்ரல், 2016

ஆம்லெட்டும் அப்பளமும்...

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...



இந்த பதிவை படிக்கும்முன் பயணங்கள் முடிவதில்லை .. ஆமாங்கோ என்ற தலைப்பில் வந்த என் முந்தைய பதிவை படித்து விட்டு வாருங்கள். அதை படித்து விட்டு வந்தால் இது ஒரு மாலையாக மாறும். இல்லாவிடில் இது ஒரு மொட்டாக மட்டுமே தெரியும்.


திரும்பி வர 40 பேருக்கும் டிக்கட் எடுத்துடிங்களா ?

ஏன்.. டாடி.. இந்த டிக்கட்டை பத்தியே பேசுறிங்க.. எனி ப்ராப்ளம்?

தஞ்சாவூரில் இருந்து சீர்காழிக்கு திரும்ப வருகையில் ரயிலில் நடந்த அசம்பாவிதத்தை அவளிடம் சொல்லவா முடியும் ?

இப்படி தான் அந்த பதிவு முடிந்தது..

சனி இரவு..

என்னங்க இவ்வளவு சீக்கிரம் ..

தூங்க போறேனா?

அதே தான்..

காலையில் 4 மணிக்கு எல்லாம் எழனும் இல்ல, அதுதான்?


4 மணிக்கு ஏன்?

நாளைக்கு ஞாயிறு தானே.. மூத்தவ சீயாட்டில் (Seattle) நிகழ்சிகள் முடிந்து வரா  இல்ல, விமான நிலையம் போய் கூட்டினு வரணும்.. அதுதான்.

எல்லாம் சரி.. அஞ்சு மணிக்கு வர விமானத்துக்கு ஏன் 4 மணிக்கு போறீங்க.

போற வழியில் ஒரு காபி வாங்கின்னு போக சரியா இருக்கும்.

காலையில் 4 மணிக்கு .. காலையில்  நாலு மணிக்கு நீங்க கிளம்பி போனா.. காபிக்கு மட்டும் இல்ல. நாஸ்டா, 10:30 டிப்பன், 1 மணிக்கு லஞ்ச் ,, சாயங்காலம் 3 மணிக்கு டீ எல்லாத்துக்கும் நேரம் இருக்கும்.

பொடி  வச்சி பேசுறே...புரியல..

ஆமா. இப்ப எல்லாரும் தட்டுல் தோசைய வச்சினு இருக்கீங்க தானே..  பொடி வச்சி பேச?

புரியல.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...