வெள்ளி, 15 மார்ச், 2019

மொய்யுக்கே மொய்யா...! சாக்கிரதை!

ஆலய மணி அடித்து தாலியை கட்டி முடித்து அங்கு இருந்த அனைவரும் ரிசப்ஷன் ஹாலுக்கு கிளம்ப மாப்பிளை - மணமகள் மற்றும் சிலர் போட்டோ எடுத்து கொண்டு இருக்கையில்..


ரிசப்ஷன் ஹாலில் ....

மாப்பிளை வீட்டு ஆள் ஒருவரும் பெண் வீட்டு ஆள் ஒருவரும் ...

"உங்க குடும்பத்தில் இருந்து எல்லாருக்கும் தெரிஞ்ச ஆளு ஒருத்தர வர சொல்லுங்க எங்க வீட்டு ஆள் ஒருத்தரையும் அனுப்புறேன் ..."

"....ஏன்!?"

"ரிசப்ஷனுக்கு நிறைய பேர் வருவாங்க, தெரியாதவங்க யாரும் வந்துட கூடாது தானே ... "

"நல்ல ஐடியா...!"

"இருவரும் வாசலில் நின்று கொண்டு கண்ணாலேயே ஒருவரையொருவர்  பேசிக்கொண்டு பரிசோதித்து அனுப்பினர்.  இருவருமே அறியாத சிலர் உள்ளே நுழைகையில், அவர்களை தனியாக அழைத்து விசாரித்து வெளியே அனுப்பி வைத்தனர்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...