வெள்ளி, 31 ஜூலை, 2020

அரபு மல்லி ஆட ...அபிநயங்கள் கூட..

வீட்டின் எதிரில் உள்ள ரோசா செடியில் பூக்கள் பூத்து பூத்து  குலுங்கினாலும்   ஏதோ பூச்சி தாக்கியதால் இலைகள் சற்று பாதிக்க பட்டு இருந்ததால் அதற்கு  மருந்து வாங்க கடைக்கு சென்றேன்.

இந்த வித விதமான ரோஜாக்கள் வெவ்வேறு  நிறத்தில் போது குலுங்குவதை  பார்க்கையில் தான் மனதில் நம்மை அறியாமலே ஒரு மகிழ்ச்சி. 


வாரத்திற்கு இருமுறை இந்த பூக்களில் சிலவற்றை பறித்து  அலங்கரித்து இல்லத்தின் நடுவில் வைத்து அழகு பார்ப்பதே அழகு தான்.

வியாழன், 30 ஜூலை, 2020

"பொரிகடலை"யோர கவிதைகள்

வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். முதல் இரண்டு நாட்கள் தோழிகள் தோழர்கள் நட்புகள் உறவுகள் என்று நேரம் போவதே தெரியாது. 

மூன்றாம் நாளில் இருந்து கொடுமை தான். கோடை வெயிலை சொல்லவும் வேண்டுமா? 

அருகில் உள்ள பனை மரத்தில் நொங்கு இறக்கினால் அதை வைத்து இரண்டு நாட்கள் ஓட்டலாம்.

புதன், 29 ஜூலை, 2020

இக்கறிக்கு அக்கறி பச்சா !

 80 களின் பெங்களூர் நாட்கள். திங்கள் காலை துவங்கி சனி மதியம் வரை வேலை. சனி மதியம் ஒரு மணிக்கு சனியன் விட்டது ஒன்னரை நாளுக்கு என்று, அந்த நொடிக்காகவே வாழ்ந்த ஒரு தருணம்.

ஒரு மணிக்கு வீட்டுக்கு சென்று டெரிகாட்டன் பேண்ட் மற்றும் ஷர்ட்டை கழட்டி எறிந்துவிட்டு, 

அழகானா
 அருமையான 
ஆச்சரியமான 
அம்சமான 
அட்டகாசமான
 அற்புதமான 
மற்றும் அழுக்கான ஜீன்ஸையும்

அதற்கென்றே வடிவமைக்க பட்ட T ஷர்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு கவாஸாகி பஜாஜை எட்டி  உதைத்தால் தானாக பிரிகேட் ரோடில் உள்ள "இந்தியானா பர்கர்ஸ்" உணவகத்திற்கு சென்று நிற்கும்.

இம்பீரியலின் சிக்கன் கபாப்,
எம்பையரின் சில்லி சிக்கன்
டாஜின் பிரியாணி
பானூஸின் ரோல்ஸ்...


இவை எல்லாம் அருமை தான். இருந்தாலும் அதற்கு அதற்கென்று ஒரு  கால நேரம் உள்ளதல்லவா .. சனி மதியம் இந்தியானா பர்கர்ஸ்.

இரண்டு மணி போல் உள்ளே நுழைய, நட்ப்புகள் சில ஏற்கனவே அமர்ந்து இருக்கும், மற்றும் சில நமக்கும் பிறகு வரும். இங்கே மெனுவில் மொத்தமே ஐந்து அல்ல ஆறு ஐட்டம் தான்.  என்னமோ வெவ்வேறு பெயர்கள் அந்த மெனுவில் இருந்தாலும் அவர்களுக்கு செய்ய தெரிந்த ஒரே விஷயம் பர்கர்ஸ் தான். ஆனாலும் சும்மா பில்டப்புக்காக வேற வேற பெயர்கள் வித்தியாசம் வித்தியாசமா வைச்சி இருப்பாங்க. 

"மெது மெது" என்று அப்போது தான் பேக்கரியில் இருந்து வந்த பன்னை இரண்டாக வெட்டி சட்டுவதில்கொஞ்சம் பட்டர் போட்டு, கூடவே க்ரில்ட் வெங்காயம், நேர்த்தியாக வெட்ட பட்ட தக்காளி நடுவில்  ரஸ்ஸல் மார்க்கெட்டில் இருந்து வந்த "கொத்து மாட்டு கறியில்" தட்டி செய்யப்பட்ட பர்கர்ஸ்..


அந்த கறியை அவர்கள் சட்டுவதில் திருப்பி திருப்பி போடும் போதே, நாக்கில் எச்சில்.

இதன் அருகிலேயே நாகார்ஜுன் போன்ற அசைவ உணவகங்கள் உண்டு. அங்கே பதினைந்து ரூபாய்க்கு மட்டன் சிக்கன் பிரியாணி கிடைக்கும். ஆனால் நமக்கு ருசி முக்கியமல்லவா. அதனால் இந்த பர்கர்ஸ்  அந்த மட்டன் சிக்கன்  பிரியாணியை விட விலை அதிகமாய் இருந்தாலும் நாங்கள் இங்கே தான் இருப்போம்.

இதற்கு தொட்டுக்கொள்ள எந்த நிமிடத்திலும் கெட்டுவிடும் என்று நிறத்தில் ஒரு சாஸ்.. மற்றும் வினிகரில் போட்டு எடுத்த ஒரு வெள்ளரி பிஞ்சு. என்ன ஒரு ருசி.. அட அட அட.. இப்ப யோசித்தாலும் நாக்கு ஊறுது.

இங்கே இன்னொரு விஷயம்.

தமிழகத்தின் இருந்த வந்த நம்ம பங்காளிகளை ஒரு முறை இங்கே அழைத்து செல்ல.. 

"என்ன மாம்ஸ், பெங்களூரில் பெஸ்ட் லன்ச் வாங்கி தரேன்னு சொன்னீயே ... எங்கே கூப்பிட்ன்னு போக போற ?" 

"அக்கடபண்ணி சூடு"

அங்கே சென்று ஆளுக்கொரு பர்க்கர்ஸ், கூடவே ஒரு "தம்ப்ஸ் அப் " ஆர்டர் செய்ய.,

பர்கரை ...

"மாம்ஸ், கரி பன் , சூப்பர்"

"கரி பன்.. ஐ, பேரே சூப்பரா இருக்கு!""

"என்ன மாம், ஒரு கடி கடிச்சா ஐட்டம்சுத்தமான  நெய்யில் செய்யபட்ட கேசரி போல பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி  தானா உள்ள போகுது, ஆட்டுக்குட்டி கறியா"

"டேய், இது  பீப்!!"

"என்னாது பீப்பா?"

எதோ ஒரு பாக்யராஜ் படத்தில் ஒருவர் "இட்லியா" என்று அலறுவாரே.. அப்படி அலறினான். .

"ஏண்டா சாப்பிடமாட்டியா?"

"நீ ஒன்னு.. நல்லா சாப்பிடுவேன், இருந்தாலும் என் கண்ணை என்னால நம்பவே முடியல?"

"ஏன்!?"

"இன்னா மாம்ஸ்..?பீப் ஹோட்டலை ஊருக்கு நடுவுல வச்சி வரவன் எல்லாரும் பெருமையா நுழைஞ்சி ஒருத்தனுக்கொருதன் ஆட்டம் பாட்டம்ன்னு?"

"இது என்ன பெரிய விஷயமா ?"

அழுதே விட்டான் பங்காளி..

"மாம்ஸ், எங்க ஊரில் எல்லாம் பீப் ஹோட்டலுக்கு நாற்காலி கூட கிடையாது. நின்னுக்குனு தான் என்று அவன் சொல்லும் போது தான், ஆமா இல்ல, என்று நம் தமிழகத்தின் அனுபவம் நினைவிற்கு வந்தது.

"இருந்தாலும் மாம்ஸ், நீ இப்படி எங்களுக்கு சீப்பா பீப் பர்க்கர்ஸ்  வாங்கி கொடுத்துட்ட பாரு. நீ ரொம்ப கொஞ்சம்!"

"அட பாவத்த, டே.. நீங்க எல்லாம் என் கசின்ஸ் அதனால தான் இங்கே செலவே நிறைய ஆனாலும் பரவாயில்லைன்னு கூட்டினு வந்தேன். சீப்பா வேணும்னா பக்கத்துல நாகர்ஜூனாவில் மட்டன் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்து இருப்பேன்"

"என்னா மாம்ஸ் சொல்ற..? இது மட்டன் சிக்கனோட காஸ்ட்லியா?  ... எப்படி, எதுக்கு ஏன்.."

"அப்புறம் சொல்றேன்.."

"மாம்ஸ், ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே.. இனிமேல் எப்ப இப்படி சேரில் உக்காந்து ரிலாக்ஸா பீப் சாப்பிடுவேன்னு தெரியாது.. இன்னொரு "கரி பன்" சொல்லேன் "

சொன்னேன்.

சரி, இது என்ன திடீர்னு "கரி பன் " பத்தி பதிவு?

ரொம்ப நாள் கழிச்சி ஆபிஸ் பக்கம் வர, மதிய பசி.. ஏதாவது சாப்பிடலாம்னு வெளியே போனா .. எதிரில் வந்தது எல்லாம் "பீப் பர்கர்ஸ்". இந்த கடையில் இருக்கும் பர்கர்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்னு தான், ஆனாலும்..

எங்க பெங்களூரில் கிடைக்கும் இந்தியானா பர்கர்ஸ் போல வருமா?

பின் குறிப்பு:

பெங்களூர் நகரில் இருப்பவர் யாராவது இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால்..

பிரிகேட் ரோடின் இறுதியில் உள்ள ரவுண்டு அபௌட்டில் இருந்த "இந்தியானா பர்கர்ஸ் " இன்னும் உள்ளதா? 



சொல்லவும்.

செவ்வாய், 28 ஜூலை, 2020

என் பணம் பணம் என் பணம் என் பணம் உன் பணம்..

பல மாதங்களுக்கு பின்னால் அலுவலக பணி நிமித்தம் வங்கி ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது.

முன்பெல்லாம் பார்க்கிங்கில் ரெண்டு முறை  சுற்றி இடத்திற்காக அலைவேன். கொரோனாவினால் காலியாக இருந்தது. வங்கியின் எதிரிலே நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, கண்ணாடியின் மறுபக்கத்தில் இருந்து என்னை கண்ட ஒரு வங்கி பணியாளர், என்னை நோக்கி..

"மாஸ்க் மாஸ்க்" என்று முகத்தில் சைகை காட்டினார். 

ஓ... 

சுதாரித்து வண்டியில் இருந்த மாஸ்க்கை அணிகையில்., போன வருடம் அக்டோபர்  மாதம் ஹாலோவீன் நேரத்தில் இதே வங்கிக்கு வந்த போது  அங்கே ஒரு தற்காலிக நோட்டிஸ்.

"யாரும் முகமூடி அணிந்து உள்ளே வர வேண்டாம் "

காலம் தான் எப்படி மாறி விட்டது என்று நினைத்து கொண்டே டெல்லரிடம் செல்ல....

"எப்படி இருக்கீங்க..?"

என்று அந்த அம்மணி விசாரிக்க 

"இருக்கேன்?"

"குழந்தைகள் எப்படி இருக்காங்க?!"

"குழந்தைகளா?, மூத்தவ 20  இளையவ 18 "

ஞாயிறு, 26 ஜூலை, 2020

வாழை மீன்... ஐ க்நொவ் வாட் ஐ மீன்..

அம்மணி வேலையில் இருக்க மூத்தவள் தன் வழி தனி வழி என்று இருக்க சனிக்கிழமை 11 மணி போல் இளையவள்...

"மதியம் என்ன சாப்பாடு?!!!"

"ஒன்னு சொல்றேன் கோச்சிக்க மாட்டியே..?"

"கோச்சிக்க சான்ஸ் இருக்கு தானே, பின்ன எதுக்கு அதை சொல்லணும், மதியம் என்ன சாப்பாடு!!!?"

"சரி, கோச்சிக்காட்டியும் பராவாயில்லை, சொல்றேன்".

"சொல்லுங்க, கூடவே மதியம் என்ன சமையல்னும் சொல்லுங்க..."

"இந்தியாவில் மட்டும் நாம் இருந்து இருந்தோம்னா?"

"இருந்தோம்னா ?!!!"

சனி, 25 ஜூலை, 2020

பெண்களின் ஆட்டத்தில் பண வாசனை உள்ளதா என்றோ ஆராய்ச்சி!

போயே போச்சி, போயிந்தி. இட்ஸ் கான்..

என்னதான் சொல்ல வரேன்னா? 

ஒன்னு ஒன்னா  சொல்றேன். வெயிட் எ நிமிட் பார் பைவ் நிமிட்ஸ்.

கொரோனா வந்ததுன்னு உலகம் முழுக்க நடக்குற அம்புட்டு ஸ்போர்ட்ஸையும் காலவரையின்றி தள்ளி வைச்சிட்டாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.


இதுல ரொம்ப விசனமான காரியம் இந்த வருஷம் ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ். ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வீரர்களுக்கு பொதுவா பரிசு தொகைன்னு பெருசா எதுவும் கிடைக்காட்டிலும் அதில் பங்கேற்ற பெருமையை சொல்லி மாளாது.

அதுக்கு தேர்வு பெறுவதற்காக செஞ்ச தியாகங்கள், பயிற்சிகள், உழைப்புகள் அனைத்தும் நிறைய பேருக்கு வீணாபோச்சி. அடுத்து ஒலிம்பிக்ஸ் வர நாலு வருசமாகும். அதுக்குள்ள என்ன என்ன நடக்குமோ.

சரி, தலைப்பில் அது என்ன பெண்கள்.. ஆட்டம் பண வாசனை?

வெள்ளி, 24 ஜூலை, 2020

ட்ரைவ் இன் பட்டமளிப்பு விழா !

இளையவளுக்கு இன்று பள்ளி இறுதியாண்டில் நடக்கும் பட்டமளிப்பு விழா! பொதுவாகவே இந்த விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 900 மாணவர்களும் அவர்களின் சொந்தம் பந்தம் என்று மொத்தம் 4000 ஆட்கள் வர திரு விழா போல் இருக்கும். 

ஆனால் இந்த வருடம் நிலைமையே வேறு. கொரோனாவின் கொடுமையால் சமூக விலகல் என்று சொல்லி, இந்த விழாவை தள்ளி தள்ளி வைத்து கடைசியில் இனிமேலும் தள்ளி வைக்க முடியாது என்று முடிவு செய்து இன்று வைத்தார்கள்.

புதிதாக, இதுவரை செய்யாத முயற்சி.

மாலை நான்கு மணி துவங்கி இரவு எட்டு வரை மாணவர்களின் குடும்ப பெயர்  வரிசை படி அவர் தம் வாகனத்தில் வர, பள்ளி வளாகத்தில் ஒரு மேடை அமைத்து அங்கே குடும்பம் முழுக்க வாகனத்தில் இருக்க, பிள்ளைகளின் பெயரை மட்டும் அவர்கள் சப்தம் போட்டு அழைக்க, மாணவர் மட்டும் வாகனத்தை விட்டு இறங்கி, பட்டத்தை பெற்று கொண்டு, ஒரு இருபது அடி நடக்க, பெற்றோர்கள் மற்றும் டீச்சர்கள் ஆர்ப்பரிக்க, மற்ற வாகனங்கள் ஹார்ன் சப்தம் போட்டு ஆர்ப்பரிக்க பட்டமளிப்பு விழா.
 

திங்கள், 20 ஜூலை, 2020

ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!

"என்னங்க?"

காலையில் எழுந்தவுடன் அம்மணி.. 

"நேத்து மளிகை கடைக்கு போய் மளிகை சாமான் வாங்க சொன்னேனே. இன்னும் வாங்கலையா!?"

"இல்ல, இன்னைக்கு வாங்குறேன்!"

"மறந்துடாதீங்க, இப்ப எல்லாம் கொஞ்சம் மறதி அதிகம் தான் உங்களுக்கு!"

அதை கேட்டு இளையவள் அலறினாள்...

"அடுத்த வருஷம் எங்கேயோ கார் ரேஸ் கூட்டின்னு போறேன்னு சொன்னீங்களே, விமான டிக்கட் வாங்கிட்டிங்களா ?"

"இல்ல இந்த வாரம் வாங்குறேன் "

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சொல்லாத கதையுமுண்டு ....

இன்றுவரை கணக்கு போட்டால் ஏறக்குறைய 750 பதிவுகளை எழுதி இருப்பேன். இந்த பதிவுகளில் 90 % க்கும் மேல் என் வாழ்வின் நடந்த நடக்கின்ற இன்னும் நடக்கும் என்று நான் யூகிக்கின்ற பதிவுகள்.

சிறு வயது ஆரம்ப பள்ளி கதைகள்.. சொந்த கதை சோகக்கதை போல் இருந்தாலும் ஒவ்வொரு பதிவிலும் நான் வாழ்க்கையில் கற்று கொண்ட ஒரு பாடமே.

உயர் நிலை பள்ளி கதைகள் சற்று சோகத்தை தவிர்த்து கொஞ்சம் அடாவடி தனத்தை காட்டி இருக்கும்.

கல்லூரி நாட்கள் பதிவுக்கு இங்கே அதிக இருக்காது. கல்லூரி நாட்களில் நான் படிப்பில் தானே கவனம் செலுத்தினோம். அதனால் இங்கே சொல்லும் படி எதுவம் இல்லை.

அடுத்து வேலைக்கு சேர்ந்த 

பெங்களுர் நாட்கள்... அட பாவத்த என்று நினைக்க சொல்லும்.

தொடர்ந்து பாம்பே நாட்கள்.. இவனுக்குன்னு வந்து  வாய்க்குது பாரு என்று சொல்ல தூண்டும்

சனி, 18 ஜூலை, 2020

தென்னையை வைச்சா கண்ணீரு!!!

சனியும் அதுவுமாய் அம்மணிகள் மூவரும் வெளிய செல்ல, மதியசமையலை நான் செய்கிறேன் என்று சொல்லி, என்ன சமைக்கலாம் என்று மனதிலே பல  எண்ணங்களை ஒட்டி கடைசியில்,  "தேங்காய் மீன் குழம்பு" என்று முடிவு செய்து சமையலை ஆரம்பித்தேன்.

கருவேப்பிலை பிடுங்க தோட்டம் செல்ல கோடை வெயில் முகத்தில் சுளீர் என்று அடிக்க அடித்து பிடித்து வீட்டில் நுழைந்தேன். 

எதிரில் தேங்காய் மீன்.

"வெயில் - தேங்காய் - மீன்"

பல வருடங்களுக்கு முன் பயணித்தேன்.


வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். அந்நாட்களில் எங்கள் கோடை விடுமுறையை கழிக்க நாங்கள் வருடா வருடம் செய்யும் ஒரு காரியம் "அடுத்துள்ள தென்னை தோப்பில் இளநீர் திருட்டு"

இந்த இளநீர் திருட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. பல வருடங்களுக்கு பின் அந்த தோப்பின் காவலரிடம் சென்று..

"அண்ணே, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க , சின்ன  வயசுல  உங்க தோப்பில் நிறைய முறை தேங்காய் திருடி இருக்கேன். ஒரு தேங்காய்க்கு ஒரு 4 ஆனாலும் கிட்டத்தட்ட 50 காய் திருடிருப்பேன். இந்தாங்க இருநூறு  ருபாய்"

 என்று கொடுக்க., அவரோ..

"மொத்தம் 64காய் எடுத்து இருப்ப!!? நீ ஒவ்வொரு முறை மரம் ஏறும் போதும் நானும் என் வீட்டுக்காரியும் சன்னல் வழியா பார்த்து சிரிப்போம். நீ காயை பறிச்சி போட அதை மத்தவங்க மறைஞ்சி மறைஞ்சி எடுத்துன்னு ஓட எங்களுக்கு ரொம்ப தமாஷா இருக்கும்"

பூந்தோட்ட கணக்குபிள்ளை !

ஈரமான ரோஜாவே...

பூவே செம்பூவே...

பூவரசம் பூ பூத்தாச்சு ...

பனி விழும் மலர்வனம்...

போக போக புரியும், இந்த பூவின் வாசம் தெரியும்..

அது என்னமோ தெரியல என்னோ தெரியல, பூ என்றாலே மனம் ஒரு நிமிடம்  "தகிட தகிட" என்று அலைகின்றது.

இல்லத்தின் எதிரில் ஒரு ரோஜா பூ தோட்டம் அமைத்து அந்த செடிகளும் பூத்து  குலுங்க, வாரம் மூன்று முறை இல்லத்தில்  விதவிதமான பூங்கொத்துக்களை வைத்து அழகு பார்க்கின்றேன்.

சனி கிழமை காலையில், கண்ணாடி பாத்திரத்தை (flower vase ) மற்றும் கத்திரிக்கோல் எடுத்து கொண்டு இன்றைக்கான பூங்கொத்தை  தயாரிக்கையில் தான் எத்தனை உரையாடல்கள்.

பொதுவாகவே என் இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் காலையில் தம் தம் நாய்களை அவைகளின் காலை கடனை கழிக்க நடைக்கு அழைத்து செல்வார்கள். இவர்கள் தவிர வார இறுதி சைக்கிள் ஓட்டுபவர்கள்.  அதற்கும் மேலாக தினந்தோறும் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் என்று சனி கிழமை காலை இல்லத்தின் எதிரில் அநேகரை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.இப்படி இருக்கையில் இந்த சனி பூங்கொத்திற்காக ஒரு கையில் ரோஜாவோடு மற்றொரு கையில்  கத்திரியோடு நின்று கொண்டிருக்கைலையில் நடந்த சில உரையாடல்கள்..

"குட் மார்னிங்" எதிரில் வந்த அடுத்த வீடு பங்காளி 

"குட் மார்னிங்" 

"என்ன தப்பு பண்ண? பூங்கொத்தை வைத்து சமாளிக்கிற!!!?"

இருவரும் சிரித்தோம்..

அடுத்து வந்த அம்மணி ....

"யாருக்கு பிறந்தநாள்?"

வெள்ளி, 17 ஜூலை, 2020

அன்றொரு ஒரு நாள் இதே நிலவில் ...

காலையில் அலாரம் அடித்தவுடன்.. அடிச்சி பிடிச்சி எழுந்து போய்.. அன்பான அதட்டலோடு பிள்ளைகளை  எழுப்ப...

அவர்களோ..

"அஞ்சு நிமிசம்"

ன்னு கெஞ்ச..

அம்மணி சமையலறை போய் .. காபியோ டீயோ போட...

நாமும் ஓடி போய் எல்லாருடைய மத்திய உணவை கட்டி அவங்க வாங்க பையில் போட்டுட்டு..கையில் கிடைத்த இட்லி தோசையை.. .அவசரமா முழுங்கிட்டு..

வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு காலை உணவு மத்திய உணவை தயார் செய்து மேசையில் வைத்து விட்டு...

அம்மணி ஒரு புறம்.. மூத்தவள் ஒரு புறம்.. அடியேன் ஒரு புறம் இளையவளோடு கிளம்பும்  போது...

அலை பேசி..

"இன்னைக்கு அவ பள்ளிக்கூட மீட்டிங் .. நீங்க போறீங்களா..?"

"அடுத்த வாரம் மூத்தவளை கூட்டினு வேற ஊருக்கு ஒரு விளையாட்டு போட்டி.. டிக்கட் வாங்கிட்டிங்களா?"

"உங்க அம்மாவுக்கு மாத மருத்துவ சோதனை.. டாக்டரிடம் கூட்டினு போகணும்"

இளையவள பள்ளியில் விட்டுட்டு நம்ம அலுவலகம் போகும் போது, அலை பேசி அலற..

மூத்தவள்..

"டாடி.."

"சொல்லு.."

ஒரு ஆணி(யி)ன் மனது இன்னொரு....!!

இரண்டு நாட்களுக்கு முன்பு " இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்" என்று ஒரு பதிவிட்டேன். அதில், இந்த கொரோனா காலத்தில் அடியேனின் இல்லத்தில் உள்ள மூண்டு மகாராசிகளும் வேலைக்கு தம் தம் நிறுவனத்திற்கு சென்று விடுவதும் நான் மட்டும் இல்லத்திலேயே 24 மணிநேரமும் இருப்பதை பற்றியும் எழுதி இருந்தேன்.

குறிப்பாக, இந்நாள் வரை .. 

வீட்டில் இருக்கும் அம்மணிகள், கணவன் மற்றும் பிள்ளைகள் வெளியே சென்றவுடன் புத்தகம் படிப்பது மற்றும் டிவி பார்ப்பது என்று   இருப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் சுக்கு நூறாகியது. 

இல்லத்தில் தான் எத்தனை வேலை? எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எழுதி...

மற்றும், 

இவர்கள் மூவருக்கும் நான் பகல் நேரத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு  என் அலுவலக வேலையையும் செய்துவருகிறேன் என்பதையும் விளக்கினேன்.

சினிமாவா?! இல்லாட்டி Moral Science வகுப்பா?

சரி...

இன்னாடா இது வாழ்க்கையே இப்படி தலை கீழே இருக்கே, வெளிய எங்கேயும் போக முடியலைன்னு என்று நினைக்கையில்...

எங்கேயும் வெளிய போக முடியாது! சினிமா, விளையாட்டு, கான்சர்ட், நண்பர்கள் இல்லம் இப்படி அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதால் ...

சரி, ஒரு தமிழ் படமாவது பாக்கலாம்னு நினைச்சி டிவியை ஆன் பண்ணேன்.  அதில் ப்ரைம் டைம் சேனல் தட்டி தமிழ் மூவிஸ் என்று தேடியதில் "திருமணம் " என்ற ஒரு படம் வந்தது. 

வியாழன், 16 ஜூலை, 2020

இந்த கூத்தாடிய என்ன பண்றது?

காதலியை அடிச்சி துன்புறுத்துவது. சட்டத்துக்கு புறம்பா காட்டுக்குள் போய்  வேட்டை ஆடுவது, தொண்டை வரை குடிச்சிப்புட்டு காரை ஓட்டினு ரோட்டுல படுத்துன்னு இருந்த அன்றாண்டகாய்ச்சிகளை வண்டி ஏத்தி சாவடிகிறது ...
உள்ளங்கை சேற்றில் படாத விவசாயி!

இப்ப சமீபத்தில்," வாரிசு - குடும்பம்" பின்பலம் இல்லாமல் முன்னேறும் நடிகர்களை வளர விடாமல் தடுப்பது..

என்று பல உன்னதமான செயல்களுக்கு சொந்தகார்தான், " சல்மான் கான்"

என்னமோ சினிமாவில் ஒரு நடிகராகி பிரபலம் ஆகிவிட்டால் உலகமே தன் காலில், தனக்கு எல்லாருமே அடிமை .. நான் .. நான்.. நான்..

என்ற ஒரு போக்கு.

குடித்து விட்டு ஆட்களை கார் ஏற்றி கொன்ற வழக்கில் இவருக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை படித்தால்...

இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்!

அறிந்தோ அறியாமலோ தெரிந்து தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ வாழ்க்கையில்...

விடிந்தவுடன் கணவன் வேலைக்கு செல்வான், பிள்ளைகள் பள்ளி / கல்லூரிக்கு செல்வார்கள். 

அம்மணி மட்டும் இல்லத்தில் இருந்து இவர்களுக்கான மதிய மற்றும் இரவு உணவை தயாரிப்பதிலும் மற்றும் இல்லத்தை சுத்தம் செய்வதிலும் நேரத்தை கழிப்பார்கள். 

அது என்ன பெரிய வேலை? ஒரு மணி நேரத்தில் இந்த வேலை எல்லாம் முடித்து விட்டு பின்னர் புத்தகம் படிப்பது ( அந்த காலத்தில்) தொலை காட்சி  (இந்த காலத்தில்) பார்ப்பது என்று சுகமாய் இருப்பார்கள் 

என்று தான் நினைத்து இருந்தேன்.

கொரோனா இவை அனைத்தயும் மாற்றி போட்டது.

மார்ச் மாதம் முதல் வாரம் துவங்கி அடியேன் இல்லத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அம்மணியும் சரி, பிள்ளைகளும் சரி தங்கள் வேலையை எப்போதும் போல் மருத்துவமனையிலும் அலுவலகத்திலும் தான் தொடருகின்றார்கள்.

புதன், 15 ஜூலை, 2020

நல்ல வே(லை)ளை நான் பிழைத்து கொண்டேன்.

கொரோனா வந்தாலும் வந்தது அதின் கொடுமைகள் தலைவிரித்து ஆடி கொண்டு இருந்தாலும் சில, மிகவும் சில நல்ல காரியங்களை இந்த கொரோனா நமக்கு கற்று தந்து கொண்டு   இருக்கின்றது.

அதில் முக்கியமான சில..

ஆடம்பர திருமணம் முற்றிலுமாக தவிர்க்க படுகின்றது.

ஊரடங்கின் மூலம் இல்லத்திலேயே பணி. சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் இது ஒரு மிக பெரிய உதவி.

சுகாதாரம். அனைவரும் தங்களை தாமே சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

இம்மாதிரியான சில பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அட்டவணையில் இன்னொன்றையும் சேர்த்து கொள்ளலாம்.

கடந்த நான்கு மாதங்களாக அமெரிக்க தமிழ் சங்கங்கள் எதிலும் இருந்து .. 

ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஹவாய் தீவில் செக்க செவேலென்று ஒரு பப்பாளி !

வளரும் வயதில் பொதுவாகவே நாம் அனைவரும் விரும்பி ருசித்து உண்ணுவது பழங்கள். பழங்கள் பலவிதம் தான். அவை அனைத்திற்கும் தனி தனி மணம் குணம் நிறம் வாசம் சுவை என்று உண்டு.

பொதுவாகவே யாராவது விருந்தினர் இல்லத்திற்கு நாம் சென்றாலோ நம் இல்லத்திற்கு யாராவது வந்தாலோ ஆப்பிள் மற்றும் ஆரஞ் எடுத்து செல்வது வழக்கம்.

இவை இரண்டும் தவிர திராட்சை மற்றும் வாழை பழம் இல்லத்திற்கு வருவதை அடிக்கடி கண்டு இருக்கின்றேன். காலத்திக்கேற்ப இல்லம் வரும் அடுத்த பழம் மா !

இப்படி பல வித பழங்களை வைத்து தாக்கினாலும் எது என்னமோ தெரியலை என்னோ தெரியல அந்த காலத்தில் பப்பாளி பழத்தின் மேல் அவ்வளவு ஈர்ப்பு வந்தது இல்லை.

சனி, 11 ஜூலை, 2020

அஜித் சூர்யா விஜய் = அமர் அக்பர் அந்தோணி!

அமர் அக்பர் அந்தோணி என்று அந்த காலத்தில் ஒரு படம். இந்தியில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. சிறு வயதில் அந்த படத்தின் தலைப்பை கேட்க்கும் போதே மனதில் ஒரு நிம்மதி. எதோ என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம். இந்தியாவின் இறையான்மையே இந்த ஒற்றுமையில் இருப்பது போல் ஓர் உணர்வு.

தமிழிலும் சங்கர் சலீம் சைமன் என்று ஒரு படம் மற்றும் தெலுங்கில்  ராம் ராபர்ட் ரஹீம் என்ற இன்னொரு படம் வந்தது. இந்த படங்களை பார்க்கும் போதே நம்மையும் அறியாமல் இப்படியும் ஒருமையாக இருக்கலாமே என்ற உணர்வு தொற்றி கொள்ளும்.

இந்த மத நல்லிணக்கம் ஒற்றுமை கடந்த சில வருடங்களில் சீர் குலைந்து சின்னா பின்னமாகி மட்டும் அல்லாமல் ஏறகுறைய பிணமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டம்.

நடிகர் பொன்னம்பலம்! என்னதான் நடக்குது?

நேற்று நடிகர் பொன்னம்பலம் அவர்கள் உடல்நல குறைவினால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி ஒன்று காண நேரிட்டது.

கூடுதல் தகவலாக இவரின் மொத்த மருத்துவ செலவுகளையும் அதுமட்டும்மல்லாமல் இவர் பிள்ளைகளின் படிப்பு செலவுகளையும் நடிகர் கமல்ஹாசன் ஏற்று கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியையும் படித்தேன்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கமல்ஹாசன் அவர்களின் மனிதாபிமான உதவிக்கு மனமார்ந்த நன்றி.

இந்த பதிவை நான் எழுத சில காரணங்கள் உண்டு.

நடிகர் பொன்னம்பலத்தை பல முன்னணி நடிகர்கள் படத்தில் நான் பார்த்த நினைவுண்டு. இவரை பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் இவர் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு மட்டுமில்லாமல் சண்டை பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

வியாழன், 9 ஜூலை, 2020

கட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்!

கொரோனா  காலத்தில் இல்லத்தில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மருத்துவதுறையில் பணிபுரியும் அம்மணியோ, 

"சும்மா எப்ப பார், எப்ப ஆபிஸ்க்கு போவேன்னு புலம்பின்னு இருக்காதிங்க, இது இன்னும் ரொம்ப நாளைக்கு போகும்ன்னு "

சொல்லிட்டு, வேளைக்கு கிளம்பிட்டாங்க. எனக்கு மட்டும் தான் வீட்டில் இருந்து வேலை. இவங்க மூணு பேரும் கிளம்புடுறாங்க.

காலையில் ஒரு ஒருத்தரா இவங்க ரெடியாகி 

"ஓகே பை"

ன்னு சொல்லிட்டு போகும் போது, என்னடா நம்ம நிலைமை இப்படியாச்சேன்னு ஒரு பீலிங்.  இருந்தாலும் இது ஒரு பிரச்சனையே இல்லை, நமக்காவது வேலை வீடுன்னு ஒன்னு இருக்கே. இந்த கொரோனாவிலினால் அம்புட்டையும் இழந்து தவித்து நிக்குறவங்கள  நினைச்சி பார்க்கையில் நம்ம நிலைமை எவ்வளவோ தேவலன்னு தோணுச்சி.

புதன், 8 ஜூலை, 2020

ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாறாதே..

எனக்கு  ஆங்கிலத்தில் மிகவும் பிடித்த பழமொழிகளில்  "Cheat me once shame on you, Cheat me twice shame on me"  இதுவும் ஒன்று. 

என்னை நீ ஒரு முறை ஏமாற்றினால் உனக்கு வெட்கக்கேடு.
அதே நீ என்னை மீண்டும் ஏமாற்றினால் எனக்கு தான் வெட்கக்கேடு.
 இந்த பழமொழி தான் எவ்வளவு உண்மை. இந்த பழமொழியில் அமைந்துள்ள தத்துவத்தை பின்பற்றியதால் நான் கண்ட பலன்கள் மிக அதிகம்.

நேற்று வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருக்கையில்..

"மீண்டும் கிரிக்கட்! இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் நேரடி மோதல்"

என்று காண நேரிட்டது.

அட பாவத்தை.. கொரோனா சனியன் நம்மை விட்டு ஒழிந்தாலும் இந்த கிரிக்கெட் சனியன் ஒழியாது போல இருக்கேன்னு சொல்லிட்டு மனதை பிளாஷ் பேக்கிற்கு அனுப்பினேன்.

இந்தியா பாகிஸ்தான் ஆட்டம். ஷார்ஜாவில்! நம்ம நாட்டு மானம் மரியாதை எல்லாம் இதுல தான் இருக்குன்னு இவனுங்க கொடுத்த பில்ட் அப்பில் மயங்கி .

செவ்வாய், 7 ஜூலை, 2020

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..

அருமையான வாழ்த்து வாக்கியம். இதன் உண்மையான அர்த்தத்தை கொரோனாதான் எனக்கு புரிய வைத்தது. இந்த வாழ்த்தை பொதுவாக நாம் திருமணமாகும் தம்பதியருக்கு சொல்லுவோம், மற்றும் சொல்ல கேட்டு இருப்போம். 

சிறிய வயதில்.. இது என்ன பதினாறு பெற்றுன்னு சொல்றாங்க.. அம்புட்டு பிள்ளைகளை பெற்றால் நாட்டு நிலைமை என்னாவாகுவது என்று நினைத்தது உண்டு.

பிறகு இந்த பதினாறு என்பதை என்னவென்று அறிந்தேன். அது..

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி

திங்கள், 6 ஜூலை, 2020

எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா? - தொடர்ச்சி

சென்ற பதிவில் அம்மணி " எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா" (அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)  என்று ஒரு பிட்டை போட நானோ அவரு இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பாருன்னு கூகுளை தட்டி..

"Gardening ideas for small patios" என்று கேட்க பல பதில்கள் வந்தது.

பிளாஸ்டிக் பைப்பை இரண்டாக வெட்டி, முதல் வகை.


மரக்கட்டையினால் செய்து வேலியில் / சுற்றில் தொங்க விடுவதை போன்ற அடுத்த வகை.

"எவ்வளவு செலவு பண்ணீங்க.. எங்க அப்பா இருந்து இருந்தாருன்னா, ஒரு கால்குலேட்டர் எடுத்து எல்லாத்தையும் கணக்கு போட்டு சரியா பண்ணி இருப்பார் "

என்ற அசரீரி கேட்க

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பிளாஸ்டிக் கிட்டத்தட்ட 3 மடங்கு விலை என்று அறிந்து அருகில் உள்ள "ஹோம்  டிப்போ" கடைக்கு சென்று உள்ளே நிலைய முயலுகையில் முக வசம் இல்லை என்று அவர்கள் திருப்பி அனுப்ப, அடித்து பிடித்து இல்லத்திற்கு வந்து, முககவசத்தை அணிந்து கொண்டு மீண்டும் செல்கையில்...

ஞாயிறு, 5 ஜூலை, 2020

எங்க அப்பா மட்டும் இருந்து இருந்தா?

எங்க அப்பா  மட்டும் இருந்து இருந்தா? 

என்று சொல்லி கொண்டே அம்மணி எதிரில் வர...

"கார் ஆயில் ரிப்பேர் எல்லாம் அவரே செஞ்சி இருப்பாரா?"

"அதுவும் தான்"

"அதுவுமா?!!!, பாத்ரூமில் லேசா தண்ணி லீக் ஆகுதே அதை அவரே சரி பண்ணி  இருப்பாரா?"

"அதுவும் தான், கண்டின்யு"

"பின்னால கதவு லேசா ஆடுதே, அதை ."

"கண்டிப்பா, ஆனா  சொல்ல வந்தது வேற.."

"வேற என்னவா இருக்கும்?"

என்று கேட்கையிலே..

வெள்ளி, 3 ஜூலை, 2020

என்னை பற்றி மூன்றில் எது பொய்?

பதிவுலகத்தில் பல வருடங்கள் உலா வந்துள்ள அடியேனை பற்றி உங்களில் அநேகருக்கு தெரியும். தங்களில் சிலரை பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பே தெரியும். உங்களில் சிலர் அடியேனின் பதிவுகளை படித்து பிடித்து  நெருக்கமான நட்பாகவும் மாறி விட்டீர்கள். 

மற்றும் சிலர், நட்ப்பாக மாறாவிடினும் பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்வீர்கள். பலர் சைலன்ட் ரீடர்ஸ். ஒரு சீக்ரட் அட்மைரர்.

என்னுடைய பதிவுகள் பொதுவாகவே என்வாழ்வின் நடந்த நிகழ்ச்சிகள் தான். உண்மையான நிகழ்ச்சிகளை நடுவில் மானே தேனே போட்டு எழுதுவேன். 

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஐம்பது வயதை சார்ந்த தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் நண்பர் ஒருவர்..

"மீட் விசு, இவர் தமிழில் பிளாக் எழுதுவார்"

வியாழன், 2 ஜூலை, 2020

பல் எல்லாம் மாணிக்க பல் ஆகுமா?


போன வாரமே அம்மணி ..

"அடுத்த வாரம் உங்களுக்கு டென்டிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, மறந்துடாதீங்கன்னு"

சொல்ல..

"கொரோனா நேரத்தில் எல்லாம் மூடி இருப்பங்களே"

"மூடி தான் இருந்தாங்க.. இந்த வாரம் தான் திறந்தாங்க, மறக்காம போங்க"

என்று அன்போடு அதட்ட..

என்னாடா இது.. ஒரு ஜுரம் மூச்சு திணறல் வறட்டு இருமல் வந்தா கூட டாக்டரிடம் நாம போக மாட்டோம் . டென்டிஸ்ட்க்கிட்ட போக வேண்டி இருக்கே, என்று நினைத்து கொண்டு இருக்கையில்..

இளையவள்.. 

"அம்மா.. நான் டென்டிஸ்ட்க்கிட்ட போய் ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சி. எனக்கும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க"

புதன், 1 ஜூலை, 2020

ஆளில்லா கடையில் டீ ஆத்தின்னு இருக்கும் பதிவர்!!!


பல வருடங்களுக்கு முன்பு குறிப்பாக சொல்லப்போனால் 2013ம் வருடத்தில் போல் நண்பன் ஒருவர் 

"நம்ம பரதேசி@நியூயார்க்  அல்ப்ரெட் அண்ணனின் பதிவுகளை படித்து இருக்கிறாயா?"

 என்று கேட்டார்?


"இது என்ன பதிவு?" 
என்று கேட்க அவரோ.. 

"அட பாவி! தமிழ் பதிவுலகத்தை பத்தியே உனக்கு தெரியாது போல இருக்கே. இப்ப அதுதான் லேட்டஸ்ட். போய் சிலரோட பதிவை படிச்சி பாரு.சிறுகதை, தொடர்கதை, உண்மை நிகழ்வுகள், அரசியல், சமூதாயம், சினிமா , நகைசுவைன்னு வைச்சு தாக்குறாங்க. படிச்சி பாரு"

என்று சொல்ல...

முதலில் கண்ணில் தென்பட்டது ..

"தருமி" அவர்களின் பதிவு.

பேராசிரியர் சாம் அவர்கள் தருமி என்ற பெயரில் எழுதிய சில எழுத்துக்களை படித்தேன். பல விடயங்களை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக எழுதி இருந்தார். அவற்றை படிக்கையில் ஒரு பின்னூட்டத்தில் பரதேசி என்ற பெயர் தென்பட  அவரின் "காதல் கசக்குதய்யா" என்ற ஒரு பதிவை படிக்க ஆரம்பித்தேன். மிகவும் ரம்மியமாக நகைச்சுவையோடு இருந்தது.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...