cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 மார்ச், 2025

"Hold my Beer" - Illaiyaraaja's ultimatum

"Hold my Beer" - Illaiyaraaja's ultimatum


I don’t mind being biased because, let’s face it, it's the need of the hour.

It was the early '80s, and we were fortunate enough to be born at the perfect time, getting the best of both worlds. I was in Vellore, Tamil Nadu, India, a city that had more highs than lows. There were a few things that would forever etch themselves in my memory.

  • Would this guy named Kapil Dev be as good as Imran Khan?
  • Why is the sports page always at the second last page in The Hindu? Can’t they put it on the front page?
  • When is Balu Mahendra’s next movie coming out?
  • Is Jaws really a true story?
  • How could Rajini, who dances like a wooden spoon, have more hits than Kamal Hassan?
  • Will India ever beat Pakistan in a cricket game?
  • Why do I have to study B.Com when I can be a medical student?

But the mother of all questions back then was:

"What's next from Illaiyaraja?"

சனி, 20 மார்ச், 2021

கண்ணதாசன் கவியில் காதல் !!!?

நியூயார்க் தமிழ் சங்கத்தின் இலக்கிய பிரிவில்


கண்ணதாசன் பாடல்களில் அதிகம் காணப்படுவது காதல் சுவையே ,கவி சுவையே என்ற ஒரு பாட்டுமன்றத்தில்  பாட / பேச அழைப்பு வந்தது.


பாடினேன்/பேசினேன்.


இதோ அந்த நிகழ்ச்சிக்கான லிங்க்.


https://www.youtube.com/watch?v=we4k7GXAk94

புதன், 27 ஜனவரி, 2021

Sir மற்றும் The White Tiger

 காது முழுக்க சார் .. சார் .. Sir !

கடந்த பல வருடங்களாகவே சில பல காரணங்களினால் சினிமா பார்ப்பதை தவிர்த்து வந்தேன். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலமும் சேர்த்து தான். ஹிந்தி சினிமாவா? அதை பார்த்து ரசிக்கும் அளவிற்கு நமக்கு அறிவு கிடையாது. அதனால் அதை எப்போதும் பார்ப்பதில்லை.


கொரோனா காலம் துவங்கி இல்லத்திலேயே இருப்பதால் நேரம் சற்று கிடைப்பது மட்டுமல்லாமல் ராசாதிக்கள் இருவரும் தம் தம் சொந்த கால்களில் நிற்க துவங்கியதால் இன்னும் சற்று நேரம் கிடைக்க, சில மாதங்களாக இந்த சினிமா பார்க்கும் பழக்கம் மீண்டும் துவங்கியுள்ளது.

சென்ற வாரம் அலுவலகம் செல்ல, அங்கே இருந்த அமெரிக்க சக பணியாளர்கள் சிலர்.. 

" எங்க போன விசு, முக்கியமான விஷயம் பேசணும், வா" 

என்று அழைக்க , 

வியாழன், 1 அக்டோபர், 2020

"விழியில் என் விழியில்"

 "வாத்தியாரே..."

ஓடோடி வந்தான் ஏழாம் அறிவு பெற்ற  என் நண்பன் குரு!

"சொல்லு!!"

"ராம் லக்ஷ்மணன் படம் பாத்தியா!!?"

2020 ல் 1981ன் இளையராஜாவோடு!

"குரு,!!! அது நான் +2 பர்ஸ்ட்  இயர் படிக்கும் போது வந்துச்சி"

"+2 பர்ஸ்ட் இயர்!!! ?  வாத்தியாரே, அதை +1 ன்னு சொல்லுவாங்க"

"முட்டா பசங்க, +1ன்னு ஒன்னு கிடையாது, + 2 பர்ஸ்ட் இயர் , + 2 செகண்ட் இயர்"

"ரொம்ப முக்கியம், விஷயத்துக்கு வா, ராம் லக்ஷ்மணன் பாத்தியா!!?"

"குரு, நான் தேவர் பிலிம்ஸ் படம் பாக்குறது இல்ல, குரு!"

"ஏன்!!?"

திங்கள், 28 செப்டம்பர், 2020

பரீட்சையினாலும் விடமாட்டேன்..

80 களின் ஆரம்பத்தில்..

ஹிந்தியில் எந்த படம் வந்து ஹிட் ஆனாலும் அதை K R பாலாஜியின் புண்ணியத்தில் தமிழில் ரஜினி அல்லது கமல்ஹாசனை வைத்து பார்த்துவிடுவோம்.


இப்படி அடித்து பிடித்து ஹிந்தி படத்து காப்பி ரைட்டை வாங்கும் பாலாஜியை முந்தி கொண்டு மலையாள இயக்குனர் IV சசி எதோ ஒரு தயாரிப்பாளரை வைத்து ஹிந்தியில் தர்மேந்திரா நாயகனாக நடித்து வந்த Jugnu படத்தை குரு என்ற டைட்டிலோடு கமல் ஹாசனை வைத்து எடுத்தார். நாயகி ஸ்ரீதேவி.

படம் என்னமோ ஹிந்தியில் போடு போடு என்று போடடாலும் தமிழில் அவ்வாறான வெற்றியை பெறவில்லை.

இசை இளையராஜா..

ஆடுங்கள் பாடுங்கள்..

பறந்தாலும் விடமாட்டேன்

பேரை சொல்லவா..

எந்தன் கண்ணில் ..

இப்படி பட்ட சூப்பர் ஹிட் பாடல்களும் மற்றும், 

தயாரிப்பாளர் சொன்ன பணத்தை தரவில்லையே என்னமோ 

மாமனுக்கு பரமக்குடி

நான் வணங்குகிறேன் 

என்று 

"இது இளையராஜாவா கம்போஸ் பண்ணாரு!!!?"

 என்று கேட்கும்  படியான இரண்டு பாடல்களும் நிறைந்த படம்.

சரி .. தலைப்பிற்கு வருவோம்.

B .Com  இறுதி ஆண்டு.

எப்படியும் அரியர்ஸ் எதுவும் இல்லாமல் பாஸ் பண்ணவேண்டும் என்ற ஒரு நிலைமை. இறுதி செமெஸ்டரில் " Income Law - Practicals"என்ற ஒரு பாடம்.  இந்த பாடம் மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தாலும் ஒழுங்காக கவனித்து படித்தால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறலாம். 

ஒழுங்காக படிப்பதற்கு நாம் எங்கே போவோம்? அதனால்.. என்னால் முடிந்தவரை படித்து விட்டு, இனிமேலும் முடியவில்லை என்று கடைசி தஞ்சமாக பிரைவேட் டுயூஷன் எடுக்க ஆபத்வாந்தவான் "எழில்" வாத்தியாரிடம் செல்ல..

"என்ன விசு, இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு ? ஆறு மாச சிலபஸை எப்படி கவர் பண்ண போறோம்"?

"சாரி, எப்டியாவது ஹெல்ப் பண்ணுங்க, எழில்! நான் பாஸ் பண்ணியே ஆகணும், இது வாழ்க்கை பிரச்னை"

"உனக்குன்னு தனியா எடுக்க முடியாதே, விசு! இன்னும் ரெண்டு மூணு பேர் பேர் இருந்தா!!?"

"பிரச்சனையே இல்ல"

வகுப்பில்..

"யாருக்காவது income Tax - Practicals பாடத்தில் உதவி தேவையா?"

ஏற குறைய அனைத்து நட்புகளும்..

"அந்த பாடத்தில் தேறுவது கஷ்டம்ன்னு தெரிஞ்சி அதை அரியர்சில் வைச்சிட்டோம், அதை நிதானமா அடுத்த வருஷம் பாத்துக்கலாம்"

"எழில் இரெண்டே மாதத்தில் முழு சிலபஸ் எடுக்குறேன்னு சொல்லி இருக்காரு. வாரத்துக்கு அஞ்சி க்ளாஸ், எனிஒன் இன்டெரெஸ்டட்?"

ஆறு பேர் அடித்து பிடித்து ஒத்துக்கொள்ள.. ஏப்ரல் மாதம் நடுவில் வர இருக்கும் இறுதி தேர்விற்க்கான புத்தகத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில்  வாங்கினோம்.

"டே, எப்படியாவது பாஸ் ஆகிடு, பைல் ஆனா என் மூஞ்சிலே முழிக்காதேன்னு"

என்ற அசரீரோ ஒலிக்க..

சும்மா சொல்ல கூடாது. எழிலின் உதவியால் வருமான வரி நன்றாகத்தான் போனது. வாரம் ஐந்து நாட்கள் காலை ஐந்தில் இருந்து ஏழு வரை. அடுத்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை.

இன்னும் பத்து நாட்களில் பரீட்சை.

எழில்," இந்த சனி கிழமை காலை பத்து டு ஒரு மணி எல்லாரும் இங்கே வந்துடுங்க. ஒரு பைனல் ரிவியூ பண்ணலாம். பரீட்சையில் எப்படி  கேப்பாங்க, A B C செக்ஸனில்  என்ன என்ன கேள்வி வரும், எப்படி எப்படி பதில் எழுதணும்னு பார்க்கலாம்.  இத மிஸ் பண்ணிடாதீங்க! இரண்டு மாசம் படிச்சது வேஸ்ட்  ஆகிடும்"

என்று சொல்ல..

அனைவரும் தலையாட்டிவிட்டு விடை பெற, வெள்ளி மாலை வந்தது..

எனக்கும் ஒரு வருடம் முன்னால் B  Com  முடித்து CA படித்து கொண்டு இருக்கும் நண்பன் குரு,  காலிங் பெல்லை அடிக்க ..

"வாத்தியாரே.. !!!"

(நல்ல கேள்வி, உனக்கும் முன்னால B .Com  முடிச்சவன் உன்னை எதுக்கு வாத்தியாரென்னு கூப்பிட்றான் என்று நீங்கள் கேட்பது, அதை குருவிடம் தான் கேட்கவேண்டும்)

"நாளை காலை பத்தில் இருந்து ஒரு மணி வரை எந்த பிளானும் வைச்சிக்காத.. "

"என் வாழ்க்கையில் தான் உனக்கு என்ன அக்கறை குரு!!!"

"இருக்காதா பின்ன, இளையராஜாவை எனக்கு அறிமுகடுத்தியதே நீ தானே.. அதுக்கு நன்றி கடன்"

"புரியல!"

"நாளைக்கு காலையில் பத்து மணிக்கு, குரு"

"சுத்தமா புரியல, குரு"

"வாத்தியாரே, காலை பத்து மணிக்கு குரு"

"ஓ.. எழிலை நீ குருன்னு கூப்புடுவியா  குரு ?

"இப்ப எனக்கு புரியல!!! "

"பத்து மணிக்கு குரு குரு ன்னு என்ன சொல்ல வர குரு?":

"இப்ப தான் ஆபிசில் இருந்து வரேன், வாத்யாரே"

"வா, தப்பே இல்ல !!"

"எங்க ஆபிசில் பக்கத்துல என்ன இருக்கு"

"சொல்லு"

"ராஜா தியேட்டர்"

"அதுக்கு என்ன இப்ப!!!?"

"வாத்தியாரே, நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை காட்சி.. IV சசி இயக்கத்தில்  கமல் ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில்,  படத்து... பேரை சொல்லவா? அது நியாயமாகுமா ?"

"குரு!!!! "

"அதே தான், பத்து மணிக்கு ஆரம்பிச்சிடும்.. நான் ஒரு ஒன்பதரைக்கெல்லாம்  இங்கே வந்துடுறேன், பகல்காட்சியினாலும் விடமாட்டோம்" பாடினான்.

"ஓகே, குரு.. "

"ஓகே வாத்தியாரே.."

நினைவு வந்தது..

"குரு, நாசமா போச்சி..."

"ஆடுங்கள் பாடுங்கள்ன்னு இருக்குற நேரத்தில், இது என்ன நாசமா போச்சி?:

"நாளைக்கு காலை எழில்ட்ட பத்துமணிக்கு பைனல் ரிவிசன்".

"எதுக்கு!!!?"

"Income Tax - Practicals"

"ரொம்ப அவசியம்! அதை வேற ஒரு நாள் பாத்துக்கலாம்"

"ஐயோ, முடியாது குரு.. "

"வாத்தியாரே.. ஆறுமாசத்துக்கு ஒரு முறை பரீட்சை வரும், ஆனா இந்த பகல் காட்சி குறிஞ்சி பூ போல, பனிரெண்டு வருசத்துக்கு ஒரு முறை தான் வரும், வண்டியில் ஏறு, நேரா போய் எழில்ட்ட பேசிடலாம்"

வண்டியை கிளப்பி எழில் இல்லம் செல்ல ..

"எழில், நாளைக்கு கிளாசை ஞாயிறு திங்கள் போல வைச்சிக்கலாமா "

"இல்ல விசு, நாளைக்கு மதியம் மூணு போல திருவள்ளுவர் பஸ்ஸில் திருப்பதி போக போறோம், வர ஒரு வாரமாகும்.  குடும்பத்தோடு திருப்பதி போறோம்".

"இல்ல, அவசரமா ஒரு விஷயம், காலையில் கண்டிப்பா போகணும்.."

"உனக்கு என்ன பிரச்சனை? அம்மா எல்லாம் OK தானே.. "

"இல்ல, அது வந்து, காலை பத்து மணிக்கு குரு.."

"புரியல.. என்ன குரு.. ?"

குரு, "நீயே சொல்லு"

எழில் "குரு, நீ இவனுக்கு எடுத்து சொல்லு, போன வருஷம் நீ கூட இந்த ரிவிசன் எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிச்சினு என்கிட்டே மணிக்கணக்கில் சொன்ன தானே, இவனுக்கு சொல்லு"

குரு,"இல்ல எழில், ராஜா  தியேட்டரில், நாளைக்கு ஒரு நாளுக்கு மட்டும் காலை காட்சி   IV சசி இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில்..

"குரு!!!"

"அதே தான்"

என்னை விட எழில் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு..

"இப்ப என்ன பண்றது விசு, ஒரே ஒரு நாள் காலை காட்சியா, நல்லா தெரியுமா?"

குரு, "நாளை ஒரு நாள் மட்டும்ன்னு போஸ்டர் போட்டு இருக்கு..

"இப்ப என்ன பண்றது.." 

என்று மூவரும் மூளையை பிசக்க .. எழில் ஒரு பிரமாத பிளான் சொல்ல.. 

அடுத்த நாள் காலை ஒன்பதே முக்காலிற்கு எழிலின் இல்லத்தின் எதிரே என்னை தவிர மற்ற நட்புகள் இருக்க, அங்கே ஒரு நோட்டிஸ்..

'எல்லாரும் , பத்துமணிக்கு ராஜா தியேட்டருக்கு வந்து அங்கே காலை காட்சிக்கு ஒரு டிக்கட் வாங்கி உள்ளே வந்துடுங்க. விசுவும் நானும் அங்கே இருப்போம். மத்த விஷயங்களை அங்கே பேசிக்கலாம்"

எழிலும் இளையராஜா வெறியர் என்று அன்று தான் அறிந்தேன்.

பத்து மணிக்கு, ராஜா தியேட்டரில் டிக்கட் வாங்கி நானும் எழில் மற்றும் குரு அங்கே இருந்த கான்டீன் பெஞ்சில் அமர, மற்ற மாணவர்களும் வந்து சேர..

எழில், "இன்னைக்கு இங்க தான் டுயூஷன்!" 

என்று சொல்லி அங்கே இருந்த பெஞ்சில் அனைவரும் அமர..

" குரு, நீ உள்ள போ, பாட்டு வரும் போது மட்டும் வந்து எங்களை கூப்பிடு"

எழில் ஆணையிட குரு அடிபணிய, பைனல் ரிவிசன் தீர்க்க சுமங்களிப்பவ என்று முடிந்தது.



வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 4 (ஸ்கூல் நேரத்தில் சினிமாவா!!?)

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 3 (பாக்யராஜின் அறிவுரை)

இரண்டு மணி நேரம்...


இரண்டு மணி நேரம்...



இரண்டு மணி நேரம்..

காலை காட்சி பாமா ருக்மணி 10  க்கு ஆரம்பிக்கும்.

இப்ப பத்தாக போது. அடிச்சி பிடிச்சி ஓடுனா நியூஸ் ரீல் முடிஞ்சி படம் தொடங்கறதுக்குள்ள போயிடலாம்.

அடிச்சி பிடிச்சி  கிளம்பினோம்.  

காலை காட்சி ஆரம்பித்ததோ இல்லையோ.. நான் ஏமாறும் படலம் ஆரம்பித்தது.

"எழில், காசு எவ்வளவு இருக்கு!!?"

"ரெண்டு ரூவா சில்லறை"

"என்கிட்டே ஒரு மூணு தேறும், வா நைசா போய் பாமா  ருக்மணி பாத்துட்டு வந்து இந்த பார்ம்ஸ் வாங்கின்னுபோலாம் "

கிளம்பினோம். பள்ளி சீருடை அணிந்து இருக்கின்றோம் என்பதை மறந்தும்  கூட.

தியேர்ட்டர் வாசல் எதிரில்..

"என்ன கதவு பூட்டி இருக்கு..!!!? "

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

அதற்கு முன் பல முறை சென்று இருந்தாலும் மெட்ராஸ் என்றவுடன் நினைவிற்கு வருவது பதினான்காம் வயதில் +2 வகுப்பிற்கு சென்ற பயணம் தான்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பெரம்பூரை தாண்டியவுடன் தலைக்கு  மேலே உள்ள பைகளை கீழ் இறக்கி கதவருகில் காத்திருக்க  பேசின் பிரிட்ஜ்ன் அருகே இரண்டு பெரிய வாளிகளை போன்ற புகை கக்கிகள் கண்ணுக்கு  தெரிய அடுத்த சில நிமிடங்களில் சென்ட்ரல் நிலையம்.

போர்ட்டர் ஒருவரை வைத்து வெளியே வந்து டாக்சி ஒன்றை பிடித்து அத்தை   வீட்டை நோக்கி செல்ல சாலையின்  இருபுறமும் 70MM அளவிற்கான சினிமா போஸ்டர்கள். 

எங்கு பார்த்தாலும் பில்லா ரஜினி!

வெள்ளி, 17 ஜூலை, 2020

ஒரு ஆணி(யி)ன் மனது இன்னொரு....!!

இரண்டு நாட்களுக்கு முன்பு " இல்லத்தரசிகளுக்கு ஒரு சலாம்" என்று ஒரு பதிவிட்டேன். அதில், இந்த கொரோனா காலத்தில் அடியேனின் இல்லத்தில் உள்ள மூண்டு மகாராசிகளும் வேலைக்கு தம் தம் நிறுவனத்திற்கு சென்று விடுவதும் நான் மட்டும் இல்லத்திலேயே 24 மணிநேரமும் இருப்பதை பற்றியும் எழுதி இருந்தேன்.

குறிப்பாக, இந்நாள் வரை .. 

வீட்டில் இருக்கும் அம்மணிகள், கணவன் மற்றும் பிள்ளைகள் வெளியே சென்றவுடன் புத்தகம் படிப்பது மற்றும் டிவி பார்ப்பது என்று   இருப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் சுக்கு நூறாகியது. 

இல்லத்தில் தான் எத்தனை வேலை? எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று எழுதி...

மற்றும், 

இவர்கள் மூவருக்கும் நான் பகல் நேரத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு  என் அலுவலக வேலையையும் செய்துவருகிறேன் என்பதையும் விளக்கினேன்.

சினிமாவா?! இல்லாட்டி Moral Science வகுப்பா?

சரி...

இன்னாடா இது வாழ்க்கையே இப்படி தலை கீழே இருக்கே, வெளிய எங்கேயும் போக முடியலைன்னு என்று நினைக்கையில்...

எங்கேயும் வெளிய போக முடியாது! சினிமா, விளையாட்டு, கான்சர்ட், நண்பர்கள் இல்லம் இப்படி அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதால் ...

சரி, ஒரு தமிழ் படமாவது பாக்கலாம்னு நினைச்சி டிவியை ஆன் பண்ணேன்.  அதில் ப்ரைம் டைம் சேனல் தட்டி தமிழ் மூவிஸ் என்று தேடியதில் "திருமணம் " என்ற ஒரு படம் வந்தது. 

வியாழன், 16 ஜூலை, 2020

இந்த கூத்தாடிய என்ன பண்றது?

காதலியை அடிச்சி துன்புறுத்துவது. சட்டத்துக்கு புறம்பா காட்டுக்குள் போய்  வேட்டை ஆடுவது, தொண்டை வரை குடிச்சிப்புட்டு காரை ஓட்டினு ரோட்டுல படுத்துன்னு இருந்த அன்றாண்டகாய்ச்சிகளை வண்டி ஏத்தி சாவடிகிறது ...
உள்ளங்கை சேற்றில் படாத விவசாயி!

இப்ப சமீபத்தில்," வாரிசு - குடும்பம்" பின்பலம் இல்லாமல் முன்னேறும் நடிகர்களை வளர விடாமல் தடுப்பது..

என்று பல உன்னதமான செயல்களுக்கு சொந்தகார்தான், " சல்மான் கான்"

என்னமோ சினிமாவில் ஒரு நடிகராகி பிரபலம் ஆகிவிட்டால் உலகமே தன் காலில், தனக்கு எல்லாருமே அடிமை .. நான் .. நான்.. நான்..

என்ற ஒரு போக்கு.

குடித்து விட்டு ஆட்களை கார் ஏற்றி கொன்ற வழக்கில் இவருக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை படித்தால்...

புதன், 15 ஜூலை, 2020

நல்ல வே(லை)ளை நான் பிழைத்து கொண்டேன்.

கொரோனா வந்தாலும் வந்தது அதின் கொடுமைகள் தலைவிரித்து ஆடி கொண்டு இருந்தாலும் சில, மிகவும் சில நல்ல காரியங்களை இந்த கொரோனா நமக்கு கற்று தந்து கொண்டு   இருக்கின்றது.

அதில் முக்கியமான சில..

ஆடம்பர திருமணம் முற்றிலுமாக தவிர்க்க படுகின்றது.

ஊரடங்கின் மூலம் இல்லத்திலேயே பணி. சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் இது ஒரு மிக பெரிய உதவி.

சுகாதாரம். அனைவரும் தங்களை தாமே சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

இம்மாதிரியான சில பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அட்டவணையில் இன்னொன்றையும் சேர்த்து கொள்ளலாம்.

கடந்த நான்கு மாதங்களாக அமெரிக்க தமிழ் சங்கங்கள் எதிலும் இருந்து .. 

சனி, 11 ஜூலை, 2020

அஜித் சூர்யா விஜய் = அமர் அக்பர் அந்தோணி!

அமர் அக்பர் அந்தோணி என்று அந்த காலத்தில் ஒரு படம். இந்தியில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. சிறு வயதில் அந்த படத்தின் தலைப்பை கேட்க்கும் போதே மனதில் ஒரு நிம்மதி. எதோ என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம். இந்தியாவின் இறையான்மையே இந்த ஒற்றுமையில் இருப்பது போல் ஓர் உணர்வு.

தமிழிலும் சங்கர் சலீம் சைமன் என்று ஒரு படம் மற்றும் தெலுங்கில்  ராம் ராபர்ட் ரஹீம் என்ற இன்னொரு படம் வந்தது. இந்த படங்களை பார்க்கும் போதே நம்மையும் அறியாமல் இப்படியும் ஒருமையாக இருக்கலாமே என்ற உணர்வு தொற்றி கொள்ளும்.

இந்த மத நல்லிணக்கம் ஒற்றுமை கடந்த சில வருடங்களில் சீர் குலைந்து சின்னா பின்னமாகி மட்டும் அல்லாமல் ஏறகுறைய பிணமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டம்.

புதன், 10 ஜூன், 2020

நட்பிற்கும் நகைச்சுவைக்கும் - கண்ணதாசன் ஒரு இலக்கணம்! (கண்ணதாசன் 2)


இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் ) பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.

கண்ணதாசன் அவர்கள் ஒரு முறை நண்பர் ஒருவருடன் ஒரு வெளிநாட்டு பயணம் போய் இருந்தார். அங்கே அவருக்கும் அவர் நண்பருக்கும் நடந்த சில நிகழ்ச்சிகள் …. கவுண்டமணியின் பாணியை பல வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் பண்ணி விட்டாரே என்ற எண்ணத்தை தருகின்றது.
பயணம் ஆரம்பம் … விமானத்தில்…


"அண்ணே .. கண்ணதாசன் அண்ணே…"
"சொல்லு …"
"என்ன அண்ணே .. விமானத்துல பயணிக்கிரதுக்கு தான் சீட் தருவாங்கன்னு நினைச்சேன் .. இங்கே பார்த்தா ரூமை எல்லாம் வாடகை விடுவாங்க போல இருக்கே .."
"என்ன சொல்ற .. ?”
"அங்கே பாருங்க அண்ணே … “tolet ” போர்ட் போட்டு இருக்கே…!!"
"அது tolet லேட் இல்ல, Toilet , நல்ல கூர்ந்து படித்து பாரு.."
"அண்ணே, இப்ப நம்ம எங்கே அண்ணே போறோம் ..?"
"எங்கே போறோம்ன்னு கூட தெரியாம விமானத்தில ஏறிட்டியா? சமத்து …"
"சொல்லுங்க அண்ணே … இப்ப எங்கே போறோம் …?"
"ஆப்கானிஸ்தான் …!!!"
"அப்படினா …!!?"

திங்கள், 8 ஜூன், 2020

காலாவிற்கு கண்ணதாசன் எழுதிய ஹிந்தி பாடல். (கண்ணதாசன் 1)

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசாசானி பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.

மும்பை நாட்கள், இன்னொரு நாள்!

அதிகாலை எழுந்து அடித்து பிடித்து கிளம்பி.. மெயின் லைனில் அமைந்துள்ள மாட்டுங்கா ரயில் நிலையம் சென்று அங்கு வரும் மின்சார ரயிலை பிடித்து அடுத்த நிலையமான "டாடரில்" இறங்கி அங்கு வெஸ்டர்ன் லைனில்  வரும்  துரித மின்சார ரயிலில் ஏறி, இன்னும் ஒரு முக்கால் மணிநேரம் பயணித்து "சர்ச்கேட்" நிலையத்தில் இறங்கி வேலைக்கு செல்லவேண்டும்.

இந்த இரண்டு ரயில்களுக்குமே சொன்ன நிமிடத்திற்கு மட்டுமல்ல, சொன்ன நொடிக்கு கூட தவறாமல் வந்துவிடும்.

தமிழகத்தில் இருக்கையில் "பெங்களூரு செல்லும் நம்பர் 40 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் நாற்பது நிமிடம் தாமதமாக வரும்" என்று கேட்டு பழகி போன எனக்கு பாம்பாய் சென்றவுடன், அங்கே ரயில்களின் அட்டகாசமான நேரம் கடைபிடிப்பு மிக்க ஆச்சர்யம் தான்.

இங்கே நான் சொன்ன இரண்டாவது ரயில், "டாடர் டு சர்ச்கேட்" வண்டி, வெகு தொலைவில் உள்ள "வீரார்" என்ற ஊரில் இருந்து தன் பயணத்தை துவங்கும். விராரில் இருந்து சர்ச்கேட் ஒன்னரை மணிநேரத்துக்கும் மேல் என்று நினைக்கின்றேன்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

வடிவேலும் நானும் ...

ஏற்கனவே பலமுறை கூறியதை போல், ரஜினிகாந்தின் பாபா படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி சென்ற நான் படம் துவங்கிய 15  - 20 நிமிடத்தில் வெளியேறி, நமக்கு வயசாகி விட்டது (அப்போது மிட் 30 'ஸ் ) இனிமேல் சினிமா  நமக்கு ஒத்து வராது , இதை ரசிக்கும் தன்மை இழந்துவிட்டேன் என்று படம் பார்ப்பதை ஒதுக்கி விட்டேன்.

இருந்தாலும் மக்களை பெற்ற  மகராசன் தானே நான் அதனால் ராசாத்திக்கள் என்றாவது கண்டிப்பாக போகனும்னு அடம்  பிடிச்சதால் சில ஆங்கில படங்கள்.. அதிலும் தீயேட்டரிலே குறட்டை.






பாபாவிற்கு பிறகான படத்தைதான் தவிர்த்தேன்  (அதற்கு பிறகு வந்த படங்களில் ஒரு ஐந்து அல்லது ஆறு படங்கள் பார்த்து இருப்பேன்)  மற்ற படி.. யு டுயூப்பில் இருக்கும் பழைய படங்களை இன்னும் ரசித்து கொண்டு தன இருக்கின்றேன். சென்ற வாரம் கூடன் ரஜினியின் கழுகு என்ற படத்தை ரசித்து விட்டு.. 80  களில் இப்படி ஒரு படம்.. இப்படி ஒரு இசை.. என்று வியந்தேன்.

இந்த படம் பார்ப்பதை நிறுத்தியதை இந்தியாவில் இருந்து வந்த நண்பர் ஒருவரிடம் சொல்ல..

வெள்ளி, 30 அக்டோபர், 2015

பாட்டு பாடவா ? வா .....


பல வருடங்களுக்கு முன் என் கல்லூரி தோழன் "முத்து" வை  போலிஸ் கைது செய்த விஷயம் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.

வேலூர் அருகே காந்திநகரில் வாழ்ந்த நாட்கள். ஒவ்வொரு வீடும் "சீட்டு கட்டு கணக்காக" அருகே அருகே கட்டப்பட்டு இருக்கும்.நண்பன் முத்து நமக்கு மிகவும் வேண்டியவன்.

சில நாட்களாகவே நண்பன் முத்து காலை வேளையில் கோழி கூவுவதற்கு முன்பே எழுந்து குளித்து  நண்பர்கள் அனைவரையும்  " என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று நினைக்க வைத்தது மனதில் இன்றும் பசுமரத்து ஆணி போல் உள்ளது.

என்ன முத்து ? இப்பெல்லாம் காலையில் சீக்கிரமா ரெடி..

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விசு..

டேய்.. .முயல் புடிக்கிற நாயை ... பழமொழி தெரியும் இல்ல..

அப்படி என் மூஞ்சில் என்ன தெரிஞ்சது ?

ஒரே புன்னகையா இருக்கியே..

அப்படி ஒன்னும் இல்ல..

காதல் ஏதாவது...

புதன், 28 அக்டோபர், 2015

"பராசக்தி"யில் இருந்து "படையப்பா" வரை...

இது ஓர் தொடர் பதிவு ..

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."



இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் .

(ரஜினியின் "முரட்டுகாளை" &  கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!)


மூன்றாம் பாகம் .... கீழே தொடருகின்றது..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான்,

விசு சார் ...எப்படி இருக்கீங்க ..?

நல்லா இருக்கேன்.

என்று சொல்லி நான் திரும்பி பார்க்கையில்.. எதிரில்..

மீண்டும் பேய் அறைந்தவனை போலானேன் ..

என்று சொன்னேன் அல்லவா .. ஏன் என்று பார்ப்போம்.

விசு என்று அழைத்தவுடன், அடே டே, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நம்மை பெயர் சொல்லி அழைக்கவும் யாரோ இருகின்றார்கள் என்று திரும்பி பார்த்தால் அங்கே சினிமா இயக்குனர் -கதை வசனகர்த்தா விசு நின்று கொண்டு இருந்தார். அவரை யாரோ எப்படி இருக்கீங்க என்று கேட்க்க... நான் பதிலை சொல்ல..

மன்னிக்கவும் .. என் பெயரும் விசு தான் .. அதுதான் உங்கள் கேள்விக்கு நான்  பதில் சொல்லிட்டேன்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

ரஜினியின் "முரட்டுகாளை" & கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அந்த பதிவை படித்து விட்டு இங்கே வந்தால் இன்னும் நன்றாக புரியும். அதை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."(தொடர்ச்சி..1)


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான், அப்படி என்ன ஒரு எதிர் பாராத காட்சியை காட்சியை பார்த்தேன்.

திரும்பி பார்த்த நான் அக்காலத்து மாமன்னர்கள் உடையணிந்த இரண்டு மன்னர்களையும் மற்றும் அவர்கள் இருவரின் மத்தியிலும் நடந்து வந்த ஒரு மூதாட்டியும் பார்த்தேன். நான்காம் வகுப்பில் நான் படித்த வரலாற்று நாடகம் நினைவிற்கு வர அந்த மூதாட்டியை அவ்வையார் என்று அறிய நிறைய நேரம் பிடிக்கவில்லை. அம்மை அவ்வையார்... அப்போது அந்த மன்னர்கள்... ஒருவேளை ...அதியமானும் .. தொண்டைமானும்..

திங்கள், 26 அக்டோபர், 2015

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."

என்ன டாடி, காலையில் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றிங்க?

அடியே, நான் பெத்த ராசாத்தி, இன்னைக்கு என்ன தேதி ..

அக்டோபர் 25, 2018, அதுக்கு என்ன இப்ப?

அதுக்கு என்னவா? ரெண்டு வருஷம் கழித்து  இந்தியா வந்து இருக்கோம் . அதுவும் மெட்ராசுக்கு (அது என்னவோ போங்க.. இந்த சென்னை என்ற பெயர் வாயில் நுழைய மாட்டுது), இன்னைக்கு பெரிய பிளான்.

என்ன பிளான்?

மகள், நம்ம ஊரில் ஹாலிவுட்டில் இருக்கிற "யுனிவர்சல் ஸ்டுடியோ" போல், இங்க தமிழ் சினிமாவின் வரலாறை பற்றி எடுத்து சொல்லும் ஸ்டுடியோ ஒன்னு திறந்து இருக்காங்க.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

டிங்கிரி டிங்காலே .... மீனாக்ஷி.. டிங்கிரி டிங்காலே ...

சனியும் அதுவுமா மதியம் அதுவுமா  அம்மணியும் கண்மணிகளும் வெளியே சென்ற இருந்த நேரம். வெளியே சிறிய மேகமூட்டம். இல்லத்தில் அமர்ந்து, நமக்கு பிடித்த பழைய பாடல்கள் சிலவற்றை கேட்கலாம் என்று கணினியை தட்டினேன்.

பொதுவாகவே இந்த மாதிரி பாடல்கள் கேட்க்க ஆரம்பித்தால் சந்திரபாபு அவர்களின் " பம்பர கண்ணாலே" பாடல் தான் முதலில் வரும். அந்நாள் இம்முறை.. அந்த பாடலுக்கு பதில் சந்திரபாபுவின் மற்றொரு பாடலான டிங்கிரி டிங்காலே என்று தட்டினேன்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...