சனி, 29 டிசம்பர், 2018

துணி துவைக்கவா அல்ல பாத்திரம் கழுவவா?

ஓகே.. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வசித்து கொண்டு வருடத்தின் கடைசி வாரத்தில் நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் விரும்பி செய்யும் ஒரு காரியம்.
LA Lakers  அணியின் பாஸ்கெட் பால் போட்டிக்கு செல்வது.  கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் இந்த போட்டிக்கான கட்டணம் மற்றவைகளை விட அதிகமாக இருக்கும். இருந்தாலும் We gotta bite the bullet and போகவேண்டும். அவ்வளவு அருமையான atmosphere.

இந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் அடியேன் வேலை செய்யும் நிறுவனத்தில்..

"விஷ்... இந்த வருடம் கம்பெனி கிறிஸ்துமஸ் பார்ட்டியில் லக்கி லாட்டரி ப்ரைஸ்  என்ன வைக்கலாம்"?

"நல்ல விலை உயர்ந்த Lakers  டிக்கட் ரெண்டு போடுங்க"

"குட் ஒன்..."

பிறகு, ஒரு நாள்.. மூத்த ராசாத்தி..

"டாடா... பாஸ்கட் பால் டிக்கட் வாங்கிட்டிங்களா"?

"இல்ல மகள்.. கம்பெனியில் லக்கி ப்ரைஸ் லாட்டரி .. அது எனக்கு வரலையனா வாங்குறேன்."

"You are Pathetic Dad... இந்த வருஷம் லேப்ரான் ஜேம்ஸ் LA Lakers  டீமில் இருக்கார். டிக்கட் பயங்கர விலை.சீக்கிரம் வாங்குங்க"!

வியாழன், 27 டிசம்பர், 2018

இன்னைக்கு என்ன விசேஷம் சொல்லுங்க?

"என்னங்க"!

"சொல்லு"

"இன்னைக்கு என்ன விசேஷம்"" ? சொல்லுங்க..

"ஹாப்பி பர்த்டே டு யு! காலையிலே சொல்லணும்னு நினைச்சேன், நீ கொஞ்சம் பிசியா இருந்த சாரி.."

"ஐயோ..!

"வெரி சாரி..திருமண நாள் இல்ல.. 20 வருஷம் போனதே தெரியல!வாழ்த்துக்கள் "!

"உங்க அறிவுல ., எதுக்கு இப்படி பயப்புடறீங்க. இந்த வருஷம் தான் சமத்தா பிறந்த நாளையும் கண்ணால நாளையும்  மறக்காம சொன்னீங்களே.. இன்னைக்கு கிறிஸ்துமஸ்".

"ஆமா இல்ல.. எதோ நினைப்பில் இருந்தேன். மெரி கிறிஸ்மஸ்."

"மெரி கிறிஸ்மஸ் டு  யு டூ..  சீக்கிரம் கிளம்புங்க.. லஞ்சுக்கு பிரென்ட் வீட்டுக்கு போறோம்"

"ஓ.. ஆமா இல்ல... "

செவ்வாய், 13 நவம்பர், 2018

பதிவர் வருணுக்காக இந்த பதிவு.

வருண்,

ஒரு மின்னஞ்சலாக வரவேண்டிய இந்த எழுத்துக்கள் பதிவாக வர காரணமே, தங்களின் தொடர்பு விவரங்கள் அடியேனிடம் இல்லாதது தான். 
தாம் ஏற்கனவே அறிந்தது போல் அடியேன் ஒரு NFL சாவுக்கடினவிசிறி. ( Diehard Fan).

கடந்த சில வருடங்களாக ராசாதிக்கள்இருவரின் படிப்பை பாதிக்கும் என்று தொலைகாட்சியில்  பார்ப்பதை கூட இயன்ற வரை தவிர்த்தேன்.

ஒன்றுமில்லை.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா?

இது என்ன விஷ பரீட்சை என்று வியப்பா? இந்த தலைப்பை படித்ததும்  எனக்கும் இந்த வியப்பு வந்தது.

தென் கலிபோர்னியா தமிழ் சங்கத்தின் 2018  தீபாவளி கொண்டாட்டத்தில் நடக்க இருக்கும் பட்டிமன்றத்தில் தலைப்பு தான் இது. சங்கத்தின் தலைமையில் இருந்து இதில் பங்கேற்கும் படியான அன்பான விண்ணப்பம் வந்தது. இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏற்று கொள்ள முடியாத நிலை.

சிரிக்க சிந்திக்க என்று வந்த இந்த பட்டிமண்டப தலைப்பை பார்த்தவுடன்  மனதில் ஏக பட்ட  நினைவுகள்.

ஒரு வேளை, இந்த பட்டிமன்றத்தில் நான் பேசும்படி இருந்தால்...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே என்று தான் பேசி இருப்பேன்.

என்ன விசு?

ஒரு ஆணாக இருந்து கொண்டு எப்படி மகிழ்ச்சி பெண்களால் வருகின்றது என்று சொல்வாய் என்று அநேகர் கேட்பது காதை  கிழிக்கின்றது. இருந்தாலும் அது தானே உண்மை..  அடியேனின் சில வாதங்கள்.


இந்த தலைப்பில் பெண்களா ஆண்களா என்று இருந்தாலும் அதை கணவனா அல்ல மனைவியா என்று தான் விவாதிக்க தேவை படுகின்றது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

விடிந்ததை அறிந்தேன்!

குடுகுப்புக்காரன்
நல்ல காலம் என்று
சொல்லும்
முன்னே..

சூரியன் மேகத்தை
கிழித்து கொண்டு
வெளிவரும்
முன்னே..

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

நந்தவனத்தில் ஒரு "அயோக்கியா"

கற்பனை தான்..

இதை படிக்கும் அனைவரும் தமக்கு அறிந்த ஒரு சிற்றூர் அல்லது கிராமத்தை மனதில்  ஏற்றி கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். அடியேனின் மனதில் பருகூர் !

பெரியவரின் இல்லத்தில் நல்ல காரியம். ஆறு வருடத்திற்கு முன் பெரியவரின் மூத்த மகளின் திருமணம் நடந்ததை ஊரில் யார் தான் மறப்பார். அப்படி ஒரு  திருமணம்.

ஊரின் எல்லையில் இருக்கும் காட்டில் இருந்து விறகு பொறுக்குபவர்கள் துவங்கி உள்ளே இருக்கும் ரெட்டி குடும்பத்தாரின் தங்க நகை வியாபாரிகள் வரை மகிழ்ந்த திருமணம்.

ஆறு வருடம் கழித்து பெரியவரின் இரண்டாம் மகளுக்கு  நிச்சயதார்த்தம் சென்ற வாரம். ஊரே மீண்டும் மகிழ்ந்தது. இன்னும் நான்கு மாதத்தில் கல்யாணமாம். அதுவும் பருகூரிலே கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பெரிய படிப்பு படித்து இருந்தாலும், ஊரிலேயே செட்டில் ஆகி பெரியவரோட நஞ்சை புஞ்சையை சமாளிக்க போறாராம்.

ஊரே களை கட்டியது.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சோம்பேறி பலகாரம்- பெயர் வந்த கதை.

வேலை முடிந்து இல்லம் வந்து சேருகையில், இளையவள் அலறினாள்..

ரொம்ப பசிக்குது. ரொம்ப பசிக்குது...

நம்ம ராசி, இல்லத்தில் அம்மணி இருந்ததால்...

எனக்கும் தான் பசி.. உங்க அம்மாட்ட சொல்லி ஏதாவது மாலை டிபன் செஞ்சா எனக்கும் ரெண்டு வாய் செய்ய சொல்லு..

என்று சொல்லி விட்டு...

அடே டே.. இந்தியாவில் இருக்கும்  போது இப்படி "மாலை பசி" வந்தால், அப்படியே  பக்கத்துல இருக்க கடைக்கு போய் , ஒரு பஜ்ஜி, போண்டான்னு ஏதாவது வாங்கி சாப்பிடலமாமேனு நினைத்து கொண்டே, கணினியை தட்டி,  இசை உலகில் இறங்கி விட்டு, மின்னஞ்சலையும் முகநூலையும் பார்த்து கொண்டு  இருக்கையில், அம்மணி மேசைக்கு அருகில் வந்து அமர..இளையவளோ..

புதன், 8 ஆகஸ்ட், 2018

கருணாநிதி நல்லவரா, கெட்டவரா?


என்னங்க கருணாநிதி இறந்துட்டாராமே..
அடக்கம் முடிந்தவுடன் என் இல்லத்து அம்மணி அடித்து பிடித்து வந்து சொன்னார்கள்.

அவர்களுக்கு அரசியலில் அம்புட்டு விருப்பம் இல்லை.
ஆமாம் நேற்று இரவு?
என்ன ஆச்சி..
சுகவீனம் தான்!
வருத்தமா ? அவருக்கு 90 க்கும் மேலே இருக்கணுமே.
ஆமா..

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

காற்று வாங்க வந்தேன்.. கதை தான்!

ஐம்பதை தாண்டிய ஆண்மகன் பலருக்கு கொடுத்து வைக்காத அதிர்ஷ்டத்தை ஆண்டவன் அடியேனுக்கு கொடுத்துள்ளான். இன்னும் எத்தனை நாளுக்கு என்று தெரியாது, இருந்தாலும் இருக்கும் வரை அதை சீராக வைப்போம் என்று நினைத்து கொண்டே தலை முடியை கோதினேன்.

வாலிப வயதில் இருந்ததில் பாதி இருந்தாலும் பாதியாவது இருக்கிறதே  என்று எண்ணுகையில்.... இளையவள் அலறினாள்...

ரொம்ப வளந்துடிச்சி .. இந்த வாரம் ஒரு மீட்டிங்கில் பேச போறீங்க, போய் நல்லா கட் பண்ணிட்டு வாங்க...

நமக்கு எப்பவுமே இந்த வேலை, சனி காலையில் தான்..

எழுந்தேன் ... அருகில் உள்ள "சூப்பர் கட்" என்ற இடத்திற்கு சென்றேன். எட்டு மணிக்கு திறக்கும் என்ற பலகை இருக்க... எனக்கும் முன்னால் ஒரு வெள்ளைகாரர்.

அவருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ...அலை பேசியில் நுழைய.. அவரோ..

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

என்ன சத்தம் இந்த நேரம்?

என்ன டாடா?  இப்ப எல்லாம் நீங்களும் அம்மாவும் வீட்டுல சண்டையே போடறதில்லையாமே..

சிரிப்போடு கேட்டாள் வார இறுதிக்கு  இல்லம் வந்த மூத்தவள்.

என்னது... நானும் அம்மாவும் சண்டை போட்டோமா? நாங்க எங்க வாழ்க்கையில் இது வரை சண்டை போட்டதே இல்லை... நீ என்ன புது கதை சொல்ற?

வாவ்... நீங்க சண்டை போட்டதே இல்லை!?  நான் வீட்டுல இருக்கும் போது ஒரு நாளைக்கு அஞ்சு முறையாவது அம்மா உங்களை சத்தம் போடுவாங்களே..

ஆமா ... அதுக்கு என்ன இப்ப?

அப்புறம் சண்டை போடுறதே இல்லைனு சொன்னீங்க...?

நான் பெத்த ராசாத்தி.. ஒரு சண்டை போடணும்னா அதுக்கு ரெண்டு பேரும் சத்தம் போட்டு பேசணும். இங்கே அம்மா மட்டும் தான் என்னை சத்தம் போடுவாங்க.. இதுக்கு பேர் சண்டை இல்ல.."Domestic  Violence ".நீ பிறந்து உன்னை முதல் முதலா தூக்குனனே..அப்ப தான் உங்க அம்மா என்னை சத்தம் போட  ஆறாம்பிச்சாங்க ..

சரி,..அப்படியே இருக்கட்டும்.. இப்ப எல்லாம் அம்மா உங்களை சத்தம் போடறதில்லையாமே.. சின்னவ சொல்றா?

நான் நோட் பண்ணவே இல்லை.. நீ சொன்னவுடன் தான் கூட்டி கழிச்சி பார்த்தேன். கொஞ்சம் கம்மியாகி இருக்கு.

அது தான் ஏன்.. எப்படி.. எதுக்கு... நான் காலேஜ் போகிறதுக்கு முன்னாலே வீட்டிலே இருக்கும் போது எப்போதும் சத்தம் போடுவாங்களே.. என்ன ஆச்சி..

வெள்ளி, 27 ஜூலை, 2018

நானும் கலைஞரும் .. "A Love - Hate Relationship"

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்து கொண்டு இருக்கையில், ஒரு புத்த மத கோயிலில் நம்பியார் எம்ஜியாரை புரட்டி கொண்டு இருக்கையில்.. எதிரில் இருந்த பெருசு ஒன்று குடித்து விட்டு அலறியது..


"இந்த நம்பியாரை கூட மன்னிச்சிடலாம் ஆனா அந்த கருணாநிதி .. கருணாதியை மன்னிக்க கூடாது வாத்தியாரே..."

எனக்கு நினைவு தெரிந்த வரை அதுதான் நான் கருணாநிதி என்ற பெயரை முதன் முதலாக கேட்டேன்..

அந்த வயதில் அனைவரை போலவே அடியேனும் MGR விசிறி. அதற்கு முன் வந்த அனைத்து படங்களிலும் முதல் பாதியில்  நாயகியை நம்பியார் கற்பழிக்க முயல MGR வந்து காப்பாற்ற, பின்னர் இரண்டாம் பாதியில் MGR நம்பியார் செய்த அதே வேலையை சிரித்து  கொண்டே செய்ய எனக்கோ புரியாத வயது...

வரவு பத்தணா .. வந்தது எட்டணா !

டாடா..

அலை பேசி அடித்தது  அதை எடுத்து ஹலோ சொல்வதற்கு முன் அலறினாள்  மூத்தவள்.

ஹெலோ...

டாடா...

வாட்?

என்ன நடக்குது இங்கே?

மகள்.. காலையில் அஞ்சறை .. எவெரிதிங் ஆல்ரைட்  வித் யு ?

நோ.. ஐ அம் வெறி அப்செட் .

எனிபடி ஹர்ட்?

நோ..

ராசாத்தி.. காலையில் அஞ்சி மணி.. அப்புறமா பேசலாமே..

கால் மீ . .இட்ஸ் அர்ஜன்ட்.

கடந்த 16  வருசமா இவளுங்க ரெண்டு பேரை பள்ளி கூடத்தில் டிராப்  பண்ண காலையில் அஞ்சி அஞ்சறை போல எழுறேன். மூத்தவ கல்லூரிக்கு போய்ட்டா.. இளையவ இந்த வருஷம்  11வது   போறா.  செப் மாசம் பள்ளி ஆரம்பிக்கும் போது அவளே வண்டி ஓட்டிடுவா.. 16 வருஷம் கழிச்சி கொஞ்சம் ரிலாக்ஸ்சா காலையில் நிதானமா எழலாம் என்ற மிதப்பில் மீண்டும் கண்ணை மூடினேன்.

ஏங்க...

கொர் ர் ர் ர் ர் ர் ர்

இந்த நடிப்பு எல்லாம் வேணாம்.. ஏங்க?

என்ன?

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆணியை பிடுங்கும் VIPகள்

ஓகே..

கீழே குறிப்பிடபட்டுள்ள  இந்த வசதியெல்லாம் உங்களுக்கு வாழ்நாள் வரை மட்டும் இல்லாமல், நீங்கள் இறந்த பின்பும் தங்களின் அடுத்த பரம்பரைக்கும் இருக்கும் என்பதை நினைத்து கொண்டு இதை படியுங்கள்.

இலவச மின்சாரம்..
இலவச குடிநீர்..
இலவச ரயில் பேருந்து..
இலவச வெளிநாட்டு விடுமுறை..
இலவச விமான டிக்கட்..
இலவச வீடு..
இலவச அலுவலகம்..
காவலுக்கு குறைந்த பட்சமாக மூன்று போலீஸ் (தற்போதைய நிலை படி நம் நாட்டில் 736 குடிமகன்களுக்கு ஒரு போலீஸ் தான் வாய்த்துள்ளது. இதில் இந்த தேச தியாகிகளுக்கு 24  மணி நேரமும் மூன்று பேர்!)...
சாலையில் செல்லுகையில் போலீஸ் பந்தோபஸ்து..
அரசு நடத்தும் உணவகத்தில் குறைந்த விலையில் உணவு...
சாகும் வரை மற்றும் செத்தபின்பும் பென்ஷன் ( இது எப்படி என்று ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். மறைந்த நடிகர் SS சந்திரன் MP  யாக சில வருடங்கள் இருந்ததால் இன்று வரை அவர் குடும்பத்திற்கு கிட்டத்தட்ட மாதத்திற்கு  ஒரு லட்சம் பென்ஷன். நம்ம மானஸ்தன் கூட போன வருஷம் வரை அவர் நாட்டிற்காக செய்த தியாகத்திற்காக பென்ஷன், இந்த பென்ஷன் வகையில் மல்லையா. நடிகை ரேகா, அமிதாப் பச்சன்,டெண்டுல்கர் போன்றோர்கள் சேர்ந்து இருக்கவும் சேட்டை போகும் வாய்ப்பு இருப்பதும் கசப்பான உண்மை)

பிள்ளையை பெத்தா இளநீரு...

என்ன ஒரு அற்புதமான நாள் இன்று.

காலை எழுந்து முகநூல் திறக்கையில் என் அருமை நண்பனின் பதிவு.ஆண்டவனின் அருளால் என் மகன் தணிக்கையாளர் தேர்வில் வெற்றி பெற்றான் என்று.
என் நண்பனும் தணிக்கையாளனே.
நான் தணிக்கையாளனாவதற்கு பல பேர் உற்சாக படுத்தி இருந்தாலும், இந்த நண்பனின் உந்துதலை மறக்கவே இயலாது.

ஒரு முறை பரீட்சைக்கு செல்லும் போது, கடைசி நிமிடத்தில் ஒரு சந்தேகம் வர, நேரமின்மை காரணமாக புத்தகத்தை எடுக்காமல், ஒரு இன்டர்நெஷனல் ( அந்த காலத்தில் அந்த கால் ரொம்ப அரிது) கால் போட்டு அவன் சந்தேகத்தை விளக்க .. அதே கேள்வி தேர்வில் வர..
விட்ட குறை தொட்ட குறை தான் போங்க.

வளைகுடா பிரதேசத்தில் கடைசியாக பார்க்கும் போது அவன் மகனிற்கு நான்கோ ஐந்தோ வயது. விடை பெரும் போது,
நல்லா தானே இருக்கே.. நீ ஏன் அமேரிக்கா போற? இன்னும் கொஞ்சம் வருடம் இங்கேயே இரு..
இல்லே...மொத்த குடும்பமே அமெரிக்காவில் இருக்காங்க.. என் பொண்ணுக்கு (அப்ப ஒரு ராசாத்தி தான்) அவளோட கசின் மற்றும் சொந்தம் பந்தம் எதுவுமே தெரியாம வளருறா.. நான் அங்கே போறது தான் சரி...
ஓகே..


நீ இன்னும் எவ்வளவு நாள் இங்கே இருக்க போற...

ஞாயிறு, 22 ஜூலை, 2018

"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்"

வாரம் முழுக்க வேலைக்கு சென்று விட்டு, வெள்ளி வரை காத்திருந்து வெள்ளி ஐந்து அடித்தவுடன்.. "ஹாப்பி வீக்கெண்ட்" என்று அலுவலகத்தில் அலறி விட்டு இல்லத்தை அடைந்து...

இசை ..

டிவியில் ஸ்போர்ட்ஸ்..

சாப்பாடு ...

கோல்ப்  (அதை தான் வாரமுழுக்க தாக்குவோமே)

நண்பர்கள்..

உறவினர்கள்...

என்று தாக்க திட்டம் போட்டு,

அந்த திட்டத்தையும்  சனி இரவு வரை நேர்த்தியாக நடத்தி விட்டு

ஞாயிறு காலையில் ஆலயத்திற்கு சென்று, எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு ..

மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுகையில், மணி 3:45.

மூத்தவள் எங்கே?

அவ வீட்டுக்கு போய்ட்டா ..

சனி, 21 ஜூலை, 2018

50+லும் ஆசை வரும்!

ஜூலை 20 . ஆம். "That's one small step for man, one giant leap for mankind,"  என்று  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலை பதித்து விட்டு சொன்னாரே அந்த நாள் தான். அடியேனின் பிறந்த நாளும்.

ஒரு மாதத்திற்கு முன்னே ராசாத்திக்கள் இருவரும் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, மனமோ என்னத்த பிறந்த நாளோ.. என்னமோ.. 53  ஆக போகின்றது. இனிமேல் என்ன பிறந்த நாள் என்று சொல்ல..

அவர்களோ.. "Age is just a number" என்ற அப்பட்டமான பொய்யை சொல்லிவிட்டு ... யோசித்து சொல்லுங்கள் என்றார்.

பிறந்த நாள் பரிசு...

வயது ஒன்றில் இருந்து ஆறு வரை என்ன விருப்பட்டேன் என்று நினைவில்லை.

ஆறில் இருந்து 13  வரை வெவ்வேரு பள்ளிகள் - விடுதிகள். பிறந்த நாள் என்பது எப்போது வரும் போகும் என்று தெரியாது. Nobody Cares! வாழ்த்துவதற்கே ஆள் இல்லை என்னும் போது, பரிசாவது கரிசாவது...
12  வது பிறந்தநாள் என்று நினைக்கின்றேன். பிறந்த நாள் வந்து போனதையே மறந்துவிட்டு மூன்று நாள் கழித்து பள்ளியில் எதோ ஒரு விண்ணப்பத்திற்க்காக பிறந்த தேதியை எழுதும் போதுதான் நினைவிற்கே  வந்தது. அவ்வளவு கொண்டாட்டம்.

புதன், 18 ஜூலை, 2018

பனிரெண்டு தானே

திங்கள் முதல் வெள்ளி வரை
ஞாயிறுடனே விழிப்பதனால்
சனி காலையில் சற்றே அயர்ந்து
நித்திரையில் இருக்கையில்..

அப்பா அப்பா..
கனவு தான் இது என்று
திரும்பி படுக்க முயல்கையில்
அப்பா..அப்பா..
அலறினாள் என் ராசாத்தி...

பனிரெண்டு தானே..

அம்மாடி...
அவசரம் எதுவானாலும்
காக்கட்டும்..
இன்னும் ஐந்தே நிமிடம் கொடு
என்று சொல்ல...

சரி என்று சொல்லி
கடிகாரத்தையே பார்த்து கொண்டு
அருகிலேயே அமர்ந்து விட்டாள்
அவளையும் அறியாமல்
ஒரு  மெட்டைமுணுமுணுத்து கொண்டு.

பனிரெண்டு தானே..

நொடி முள் முன்னூறு தாண்ட
நொடி இருக்கையில்..
அப்பா..அப்பா..
அவசரமா ஓடி வா...
ஓடினோம் ..
கதவை திறந்து
காட்டினாள்..
குண்டு மல்லியை..
பூத்திடுச்சி ..
அப்பா
பூத்திடுச்சி..

பனிரெண்டு தானே..

வெள்ளி, 6 ஜூலை, 2018

வருமுன் காப்போம் (Go Fund Me)

இந்த பதிவை எழுதும் போதே மனதில்..

இதை நாம் எழுதி தான் ஆகவேண்டுமா என்ற ஒரு கேள்வி வந்தது. அது மட்டும் இல்லாமல், இந்த பதிவிற்கான சரியான நேரம் இது தானா? என்ற கேள்வியும் வந்தது.

இரண்டாம் கேள்விக்கு பதில்.. இந்த பதிவிற்கென்று ஒரு சரியான நேரம் அமையாது. எப்போது இதை பற்றி எழுதினாலும் யாராவது தவறாக நினைக்க வாய்ப்புள்ளது அதனால் இப்போதே எழுதிவிடலாம் என்பது சரியாக பட்டது.

முதல் கேள்வி!

அமெரிக்காவிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் பல வருடங்கள் வாழ்ந்தவன். இரண்டு இளவயது பெண்களின் தகப்பன். அம்மணியின் கணவன். எங்கள் கூடவே வசிக்கும் அம்மா. மற்றும் தொழில் ரீதியாக நிதி துறையில் படித்து பணிபுரிபவன். இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது இதை நான் எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது.

திங்கள், 2 ஜூலை, 2018

நாய் கடி ஜனா !

1986 உலக கால்பந்து சீசன்..கல்லூரி நாட்கள்.. கால் பந்து நடப்பது என்னமோ அமெரிக்காவில இருந்தாலும்.. கால் பந்துபோட்டியில் இந்தியா கலந்துக்காம இருந்தாலும்..

உலகமே தலை கீழே போனாலும் பரவாயில்லை .. இந்த கால்பந்து போட்டியை அணு அணுவா அனுபவிக்கணும்னு உடம்பில் இருக்க ஒவ்வொரு செல்லும் சொல்ல.. ரசிக்கணும்னு முடிவும் பண்ணியாச்சு

கல்லூரி ஆரம்பிச்சி  ரெண்டே நாள் தான் ஆச்சி.. ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் அம்புட்டு பேருக்கும் எம்புட்டு அரியர்ஸ் என்ற செய்தி வந்தது. இந்த வருடம் மூன்றாம் ஆண்டு. கடைசி வருடம். முதலாம் ரெண்டாம் வருடம் அரியர்ஸ் இருந்ததை வீட்டில் மறைச்சிடலாம். ஆனா மூணாவது வருஷம் பெயில் ஆனா.. வூட்டுக்கு தெரிஞ்சிடும்ன்னு கொஞ்ச பயத்துல முதல் நாளில் இருந்தே படிக்கலாம்னு ஒரு முடிவு பண்ண ரெண்டே நாளில் உலக கோப்பை ஆரம்பிச்சிடிச்சி.

சரி .. ஒரு மாசம் தானே உலக கோப்பையை முழுசா பார்த்துட்டு அப்புறம் படிச்சிக்கலாம்னு ஒரு முடிவெடுத்துட்டு நண்பர்களோடு சேர்ந்து ஒரு எந்த அணியோட எந்த அணி என்னைக்கு ஆடுறாங்கன்னு ஒரு பெரிய வரை படம் போட்டு கையில் கிடைச்ச அஞ்சையும் பத்தையும் வைச்சி பந்தயம் கட்டினு  இருந்த நாட்கள்..

திங்கள், 18 ஜூன், 2018

ரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம்?

இன்று முகநூலில் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பதிவை காண நேர்ந்தது.

அதில் .. அவர் சேலத்திற்கான எட்டு வழி சாலையை எதிர்ப்பவர்களை / ஆதரிப்பவர்களை பற்றிய சில கருத்துக்களை வைத்தார். இறுதியில் அவரின் கருத்து ..

எதற்கெடுத்தாலும் போராடினால்  நாடு எவ்வாறு முன்னேறும் என்று கூறியவர் அனைத்து சாலைகளும் ஒரு காலத்தில் விவசாய நிலமாக தான் இருந்தது என்ற ஒரு நல்ல வாதத்தையும் எடுத்து வைத்தார்.

அது மட்டும் இல்லாமல், அமெரிக்காவில் இல்லாத சாலைகளா?

அவரிடம் நான்.. இந்த சேலம் சாலையை பற்றி சேலத்தை சார்ந்த யாரிடமாவது பேசி இருக்கின்றீர்களா ? அவர்களின் கருத்து என்ன என்று அறிந்திருக்கீர்களா என்றேன். அப்படி இருந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்த சேலத்து நண்பர்களை வைத்து ஒரு நல்ல விவாதம் நடத்தலாம் என்று கூறினேன்.

கண்டிப்பாக கேட்டு சொல்கிறேன் என்றார். அந்த விவாதத்தை அடுத்த வாரம் போல் முகநூலில் லைவ் போட்டு ஒளிபரப்பலாம் என்று ஒரு எண்ணம்.

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (இறுதி பாகம்)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.

செக் எங்கிருந்து அனுப்ப பட்டு என்று பார்த்தால் சிக்காகோ நகரில் ஒரு ஹோட்டல் விலாசத்தில் இருந்து. அனுப்பியவர் பெயர் அறை எண்  என்று எந்த விவரமும் இல்லை.

சரி.. செக் தான் வந்து இருக்குதே.. அதுவும் கம்பெனி செக். வங்கியில் போட்டு வேலைய பார் என்று பொதுவாக நினைக்க தோன்றினாலும்... கொஞ்சம் அலசினேன்.

இவர்களின்  திட்டம்.

வீடு வாடகைக்கு என்று ஏதாவது ஒரு விளம்பரம் வந்தால், அதற்கு உடனடியாக தொடர்பு கொண்டு நாம் விரும்பும் படி பேசுவது. பிறகு ஏதாவது ஒரு கள்ள செக் அனுப்பி அதில் கேட்பதற்கும் அதிகமாக பணம்  அனுப்புவது. அனுப்பிய செக்கை நம் வங்கியில் போட சொல்லிவிட்டு அதில் இருந்து அதிகமாக அனுப்பிய பகுதியை இன்னொரு வங்கிக்கு மாற்றி விட சொல்வது.

நாமும் வங்கியில் செக்கை போட்டவுடன் அந்த பணம் நம் கணக்கில் க்ரெடிட் செய்யபடும். உடனே அவர்கள் சொன்னது போல் இந்த பணத்தை நாம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிடுவோம். பிறகு நான்கு நாட்களுக்கு பிறகு  அந்த செக் பௌண்ஸ் ஆகிவிடும். நம் கையில் உள்ள பணம் ஸ்வாஹா.

ஞாயிறு, 17 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 3)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.


இன்னாது ... 1600 டாலர் அதிகமா அனுப்பி இருக்கேன்.. அதை உங்களுக்கு அனுப்பனுமா?

அட பாவி..

தர்மத்தின் வாழுவதனை சூத்து கவ்வும் பின்னர் தர்மமே...
முற்பகல் செய்வது பிற்பகல் நமக்கு..

இந்த மாதிரி ஏதாவது நடக்கபோதா என்று நினைக்கையில்...

மனமோ .... பிளாஷ் பேக் சென்றது..

என்ன விசு... பாட்டை இவ்வளவு சத்தமா வச்சி இருக்கியே...பக்கத்து வீட்டில் கோப படமாட்டார்களா?

வா செந்தில் .. வா... பக்கத்து வீட்டில் யாரும் இல்லையே.. அடுத்த பக்கத்தில் வீடே இல்லை. அதனால் கவலையில்லை.

என்னாது பக்கத்து வீட்டில் யாருமே இல்லையா.. போன வாரம் கூட அந்த ஸ்டேட் பேங்க் மானேஜர் குடும்பத்தோடு இருந்தாரே.. என்ன ஆச்சி..

அவருக்கு ட்ரான்ஸ்பெர் .... வீடை காலி பண்ணிட்டு கிளம்பிட்டாரு.
சாவியை என்னிடம் தான் கொடுத்து இருக்கார். வாடகைக்கு நல்ல குடும்பமா வந்தா கொடுத்துட சொன்னார். மாசம் 150  ருபாய்.


உனக்கு எவ்வளவு..

நல்லா கேட்ட போ..அந்த ஆள் எச்சி கையில் காக்க ஓட்டுறத விடு  .. எச்சி கையில் ஜன்னலில் நீட்டி அதுல இருக்க சோத்து பருக்க காக்கா சாப்பிட வந்தா  அதை பிடிச்சி கொழம்பு வச்சி சாப்பிடுவான்.. அவனாவது எனக்கு ஏதாவது தரதாவது..

அப்புறம் ஏன் இந்த சாவியை வாங்கினே..

சனி, 16 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 2)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.

என்னடா இது? கும்புட போன தெய்வம் குறுக்கால வந்த மாதிரி.. இம்புட்டு பெரிய கல்லூரியில் பெரிய பெரிய படிப்பு படிக்கும் அம்மணி நம்ம பிள்ளையோடு தங்க போறாங்க..அவங்களிடம் இருந்து நம்ம பிள்ளை நிறைய விஷயம் கத்துக்கலாம்.

மகளுக்கு படிப்பும் ஆச்சி..
நமக்கு வாடகையும் ஆச்சி..ன்னு  ஒரு புன் முறுவலோடு..

மாச மாசம் வர வாடகையை ஒரு உண்டியலில் போடுறது போல தனியா ஒரு வங்கி கணக்கு ஆரம்பிச்சி.. அதை வைச்சி இன்னொரு வீடு வாங்கி.. அண்ணாமலை ரஜினி மாதிரி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகிடலாம்னு

ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்...அனுப ....

என்று பாடுகையில்..

ஒரு டெக்ஸ்ட் வந்தது....

ஒரு சின்ன பிரச்சனை.. என்னுடைய கார் டிரான்ஸ்போர்ட் பணத்தை டெலிவரி சமயத்தில் தான் தரணுமாம். இப்ப தர முடியாதாம். நான் முதல் மாத வாடகை மற்றும் டெபாசிட் கூட இன்னும் ஒரு 1600  டாலர் சேர்த்து அனுப்புறேன். அந்த கார் டெலிவரி வரும் போது தயவு செய்து அதை அவர்களிடம் பணமாகவோ அல்ல காசோலையாகவோ கொடுத்துடுங்க. நன்றி.

வெள்ளி, 15 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 1)


நானும் விலாசம் அனுப்பினேன்.

உடனடியாக பணமும்  வந்தது ...

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.


பணம் வருமுன்.. சில டெக்ட்ஸ் பரிமாற்றங்கள்.

செக் அனுப்ப போகின்றார்கள் என்று நான் என்னுடைய விலாசத்தை அனுப்ப .. சில நிமிடங்களில்...

விலாசத்திற்கு நன்றி.. அதை என் அப்பாவிற்கு அனுப்பிவிட்டேன். அவர் உங்களுக்கு பணத்தை அனுப்பிவைப்பார்.  தாம் எனக்கு அந்த அறையை வாடகைக்கு விடுவதற்கு நன்றி ... என்ற செய்தி வர...

அம்மணியோ..

அந்த பொண்ணு எந்த கல்லூரிக்கு படிக்க போறான்னு கேளுங்க..

நீங்கள் எந்த கல்லூரிக்கு போக போறீங்க..?

உங்க மகள் போற கல்லூரிக்கு தான்..

என்ற பதிலை பார்த்து என் மனமோ..

என்ன விசு.. இப்படி பிரிச்சி போட்டு தாக்குறியே ..

என்று பாராட்டிக்கொள்ள..

வியாழன், 14 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை!

மூத்தவள் முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடிய, நம்மில் அனைவருக்கும் உள்ள அதே பிரச்சனை அடியேனுக்கும் வந்தது.,

இங்கே பொதுவாகவே முதல் வருடம் விடுதியில் தங்கி படித்தாலும் இரண்டாம் வருடத்தில் இருந்து வெளியே தங்க வேண்டிய நிர்பந்தம் வரும்.
சில கல்லூரிகளில் அவர்களே இடம் இல்லை, கல்லூரி விதி முறைகள் அவ்வாறு என்பார்கள். மற்றும் சில இடங்களில் கல்லூரியில் இடம் இருந்தாலும் பிள்ளைகள் தமக்கு விடுதியில் இருக்க பிடிக்கவில்லை என்று அடம் பிடிப்பார்கள்.

நம் மூத்தவள் தான் அடம் பிடிப்பதில் முனைவர் பட்டம் பெற்றவளாயிற்றே. நான் வெளியே தான் இருப்பேன் என்று அடம் பிடிக்க..

இரண்டு மாதத்திற்க்கு முன் அவளுக்கு வீடு தேடும் படலம் ஆரம்பித்தது. தனியாக ஒரு பெட் ரூம்  கொண்ட அபார்ட்மெண்டிற்கு கிட்டத்தட்ட 1200$ ல் இருந்து 1800 $ வரை என்று அறிந்த நான் பேய் அறைந்தவன் போல் ஆனேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?

டைட்டானிக் கப்பலில் மாமியாரை அனுப்பிவைத்த மருமகன் போல் அமர்ந்து இருந்த என்னிடம் அம்மணி..

என்னங்க.. டைட்டானிக் கப்பலில் ஒன் வே டிக்கட் எடுத்த மாதிரி சோகமா இருக்கீங்க?

இல்ல.. இவ விடுதியில் இருந்து வெளியே வரேன்னு சொல்றா?

அதுக்கு..


செவ்வாய், 5 ஜூன், 2018

மஞ்சள் நிறத்தில் நிலத்தில் ஓர் பொட்டு!

கடிகாரம்
இல்லா
கால நேரம்.

ஆறரைக்கு
எழும் அவசியம்
அலாரம்
இல்லா காலம்.

மண்ணுக்கும்
விண்ணுக்கும்
நடுவே
தென்னைகூரை.

சேவல் கூவி
தூக்கம்
கலைந்த பின்னரும்
படுக்கையில்
இருந்து எழாமல்..
பூனை தூக்கம்.

பளீச்
என்ற வெளிச்சம்
நெற்றியில் துவங்கி
கண்ணுக்குள்
நுழைந்தாய்.
















அன்று தான் அறிந்தேன்..
இனி நமக்கெதற்கு
கடிகாரம் என்று.

படுக்கையில்
இருக்கும் என்
நெற்றியை
தொட்டால்
எழ வேண்டும்.

அனைத்தையும்
தாண்டி நீ
சமையலறை சென்றால்
நேரமும்
காலமும்
ஏழரை...

வெள்ளி, 25 மே, 2018

விக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன்

படித்ததில்  பிடித்தது...

நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுநர் வந்தார். ஹாலிவுட் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸ் போலிருந்தார், ஆனால் ரொம்ப களைப்பாக.

கொஞ்ச தூரம் சென்றதும் அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுமுனையில் ஒரு ஆண்குரல் பேசுவது கேட்டது.

பின்னர் அவர் ஃபோனை கட் பண்ணாமலே என்னிடம் திரும்பி, `சார், நான் விமான நிலையம் வந்துட்டு வந்தா ரொம்ப லேட் ஆய்டும்; ஒங்கள மெஹந்திபட்டினத்தில் விட்டுடறேன்; வேற டாக்சி புடிச்சி போயிடறீங்களா?' என்றார்.

`முடியாது; நான் புக் பண்ணும்போதே விமான நிலையம் போகணும்னுதானே புக் பண்ணினேன்; நீங்க கன்ஃபர்ம் பண்ணி வந்து்ட்டு, இப்படி பண்ணினீங்க்னா எப்படி? நான் என் லக்கேஜ்லாம் எடுத்துட்டு அங்க நடுத்தெருவில் நிக்க முடியாது' என்றேன்.


`சரி' என்று என்னிடம் சொல்லிவிட்டு, ஃபோனில், `அவர் ஒத்துக்கல' என்றார். மறுமுனையில் ஏதோ சொன்னதும், ஃபோனை என்னிடம் கொடுத்து, `கார் ஓனர் பேசறாரு' என்றார்.

திங்கள், 30 ஏப்ரல், 2018

வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்..

திங்களும் அதுவுமாய் வேலை முடிந்து சாயங்காலம் ஐந்து மணிக்கு இல்லத்தை நோக்கி வண்டியை விட்டேன்... நான் பயணம் செய்யும் இந்த வழி மிகவும் அழகாக இருக்கும்.. இடது புறத்தில் பசிபிக் பெருங்கடலோடு..பயணம்.

இல்லத்தை நெருங்க இருக்கையில் கடைசி சிக்னல் ... எனக்கு முன்பாக இரண்டு மூன்று வண்டிகள் நின்று கொண்டு இருந்தன. சிவப்பு பச்சையாக மாறிய போதும் முதலில் இருந்த வண்டிகள் நகராதலால் இரண்டாவது மற்றும் மூன்றாவது வண்டி இடது புறத்தில் இண்டிகேட்டர் போட்டு நகர, தற்போது என் முறை..

தென் விரிகுடா தமிழ் சங்கம் - கடவுள் உள்ளமே, கருணை இல்லமே!

சென்ற வாரம் அலை பேசி அலறியது...
விசு அண்ணா.. நான் கவிதா பேசுறேன்...
கவிதா ... சொல்லுங்க எப்படி இருக்கீங்க!
அதெல்லாம் இருக்கட்டும்..
இந்த சனி ஊரில் இருக்கீங்களா...?
விஷயத்தை சொல்லு... நீங்க முதலில் சொல்லுங்க ஊரில் இருக்கீங்களா? ( விஷயத்தை கேட்டுட்டு நான் வெளியூருக்கு போற ட்ரிக்கை கண்டு பிடிச்சிட்டாங்களா? ) சொல்லுங்க... நீங்க சொல்லுங்க..

புதன், 11 ஏப்ரல், 2018

இவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி?

என்ன பாலாஜி? ஆள் ரொம்ப டென்சனா இருக்க, என்ன விஷயம்?


ஒன்னும் இல்ல விசு


மாப்பு, +2ல இருந்து ரெண்டு பெரும் ஒன்னா படிக்கிறோம். இப்ப B.com கடைசி வருஷம்,
அதுவும் இன்னும் 3 வாரத்தில் முடிய போது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று
சும்மாவா சொன்னார்கள்? என்ன காதல் பிரச்சனையா?

ஆமா விசு, 5 வருஷமா தொடர்ந்து லவ் பண்ணி தொலைச்சிட்டேன். B.com முடியும் முன்னே
எப்படியாவது என் காதலை சொல்லிடும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.


அட பாவி, +2ல இந்நாள் வரை எவன் அவளிடம் பேசினாலும் "அவ என் ஆள், அவ
என் ஆள்"ன்னு  சொல்லுவியே, இன்னும் உன் காதலையே சொல்லவில்லையா?


இல்லை விசு, எத்தனையோ முறை சொல்லலாம்னு போவேன், ஆனால் கடைசி நிமிடத்தில்
சொல்லாமல் வந்து விடுவேன்.


எப்ப பாரு அவ கூடவே பேசி கொண்டு இருப்பாயே, அப்ப என்ன பாலாஜி பேசுவிங்க?.


பொதுவா , பாடத்தை பத்தி, இல்லாவிட்டால், வானிலை, ரொம்ப நல்ல மூடில் இருந்தால்
சினிமா, இசை..அவ்வளவுதான்.


டேய் முட்டாள், அப்ப ஏன்டா எங்களிடம் "அவ என் ஆள்"ன்னு பில்ட் அப் கொடுத்த.

திங்கள், 12 மார்ச், 2018

பஞ்சாபி மசாலா வடை - ஆபத்வந்தவன்..

அம்மணியும் இளையவளும் (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே) சனி மதியம் எங்கேயோ போறோம்னு கிளம்ப..

கிளம்ப போற  நேரத்தில்.. ஏங்க, நீங்க சும்மாதானே இருப்பீங்க.. ( அது எப்படி.. வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்து சனிக்கிழமை ஒரு நாள் வீட்டுல இருந்தா.. நீங்க சும்மாதானே இருப்பீங்கன்னு சொல்றாங்க )

சும்மாதானே இருப்பீங்கன்னு ஆரம்பிக்கும் போதே..

எனக்கு இன்னைக்கு பின்னாடி தோட்டத்தில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு..

நீங்க கிளம்புங்க.. அப்புறம் பார்க்கலாம்...

கிளம்பினார்கள்..

வீட்டில் தனியா இருந்தா நம்ம பண்ற முதல் வேலையே பாட்டு தானே.. இசையை  திருப்பி விட்டு... அப்படியே ரிலாக்ஸ் பண்ணுகையில்..

தொலை  பேசி அலறியது...

ஏங்க..

ஞாயிறு, 11 மார்ச், 2018

கீரை வாங்கலையோ.. கீரை!

சுனாமியோ பூகம்பமோ  வெள்ளமோ. காட்டு தீயோ.. நாட்டுல என்ன நடந்தாலும் ஞாயிறு காலை 7  மணிக்கு நம்ம கோயிலுக்கு போக தயாரா இல்லாட்டி..  அடியேனின் வீட்டில் இந்த நாலுல ஏதாவது ஒன்னு ஆரம்பிச்சிடும்.

ஆரம்பிச்ச அது ஞாயிறு காலையோடு  நிக்காது.. சனி இரவு வரை போகும். இத அறிந்ததால்.. நானும் சரி  இளையவளும் சரி (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே).. "I am a Complan Boy  - I am a Complan Girl" ன்னு கோரஸ் பாடினே பைபிளோடு காரில் காத்திருப்போம்.

இன்றும் அப்படி தான்.

காரில் ஏற வந்த  அம்மணி ஒரு ஷாப்பிங் பையோட வர..

அது எதுக்கு. இந்த வார காணிக்கையை உனக்கு தரேன்னு சொல்லிட்டாங்களா?

வேணாம்.. வாயை கிளறாதிங்க..

பின்ன எதுக்கு?

கோயில்களில் இருந்து அப்படியே உழவர் சந்தைக்கு போறோம்.

உழவர் சந்தையான்னு நான் அலற..

வெள்ளி, 9 மார்ச், 2018

என் கண்ணுக்குள் 100 நிலவா...

நண்பர் ஒருவர் ... பார்வையற்றவருக்கு  பரீட்சை எழுதுவதை பற்றிய பதிவு ஒன்றை போட்டார்..

படித்தவுடன் நினைவு கடந்த காலத்திற்க்கு சென்றது..

சில நேரங்களில்  நாம் செய்யும் ஒரே காரியம்  நம்மை எல்லையில்லா இன்பத்திற்கும் மன நிம்மதிக்கும்.. அதே நேரத்தில் அதே காரியம் நம்மை சில நாட்களிலே எண்ணற்ற துன்பத்திற்கும் துயரத்திற்கும் தள்ளும்

 உதாரணம்..ஒரே காரியம்..

அடியேனின் அம்மா நடத்தி கொண்டு இருந்த பார்வையற்ற பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு பத்தாவது பொது தேர்வு எழுத உதவி தேவை என்று அழைப்பு வர..

நானும் சென்றேன்..   நான் தான் பள்ளி தலைமை ஆசிரியையின் பிள்ளையாயிற்றே.. அது மட்டும் இல்லாமல், படிப்பிலும் நான் ரொம்ப  கெட்டி என்று எனக்கு நானே ஏற்றி வைத்த  ரெப்புட்டேஷனும்   சேர்ந்து கொள்ள...

அந்த பார்வையற்ற பள்ளி மாணவர்களில் மிகவும் அறிவான மாணவனுக்கு பரீட்சை எழுத என்னை அழைத்தார்கள்.

விசு.. பார்த்திபன்.. நல்லா படிப்பான்.. ரொம்ப சமத்து... அவனுக்காக நீ பரீட்சை எழுதினா.. அவன் சொல்ற பதிலை நீ எழுதினா.. அவன் பள்ளி கூட முதல் மதிப்பெண் வர கூட வாய்ப்புள்ளது.. அதுவும் கணக்குல.. அவன் பிரில்லியண்ட்.. எதிர் காலத்தில் வங்கியில் தான் வேலை செய்யனும்ம்னு  அவன் கனவு.. ஆல் தி பெஸ்ட்.

புதன், 7 மார்ச், 2018

டாக்டர் .. என் பிரெண்டுக்கு என்று ஆரம்பித்தால்!

டாக்டர்...

சொல்லுங்க .. உடம்புக்கு என்ன?

என்னத்த சொல்வேன்..

அப்ப சொல்லாதீங்க.. வெளியே பீஸ் மட்டும் கட்டிட்டு போங்க..

டாக்டர்..

சொல்லுங்க...

உடம்பு OK .. மனசு தான் சரியில்லை..

அதுக்கு இங்கே ஏன் வந்திங்க...அதுக்கு வேற டாக்டர் இருக்காங்க..

அது இல்லை டாக்டர்..

சரி சொல்லுங்க..

என் பிரென்ட் ஒருத்தருக்கு..

இதுல பொய் எதுக்கு... அதுக்கெல்லாம் இப்ப புது புது ஊசி வந்து இருக்கு..இனிமேல் அந்த மாதிரி தவறு செய்யாதீங்க..

டாக்டர்... என்ன சொல்றீங்க..?

நீங்க தானே சொன்னீங்க.. என் பிரென்ட் ஒருத்தருக்குன்னு...

அப்படி சொன்னா ?

புதன், 28 பிப்ரவரி, 2018

முன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..


சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில்  தோழி புவனா கருணாகரன்  ..

"வாஷிங்டன் அருகே வசிக்கும் தமிழர்கள் கவனத்திற்கு" என்று ஒரு அழைப்பிதழ்  அனுப்பி இருந்தார்.

அதில் கார்த்திகேயன் சிவசேனாதிபதியுடன் ஒரு சந்திப்பு என்று அச்சிட பட்டு இருந்தது.

மெரினாவில் ஜல்லி கட்டு போராட்டத்தின் போது கேள்வி பட்ட பெயர், மற்றும் இணைய தளத்தில் இவரின் பேச்சை கேட்ட அனுபவம்., நேரம் இருந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நாள் குறித்து கொண்டேன்.

நடுவில்.. மனதில் சில கேள்விகள்?

இந்த சந்திப்பினால் என்ன சாதிக்க போகின்றோம்?

யாருக்கு பயன்?

என்பது உட்பட...

இருந்தாலும்..  பல ஆயிர டாலரகளை வீணடித்து மார்க்கெட்  போன நடிகை மற்றும் டைரக்டர்களை அழைத்து வைத்து கொண்டு..

உங்கள் இருவரில்.. முதலில் யார் "ஐ லவ் யு" சொன்னார்கள் என்று கேட்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பதில் இது கண்டிப்பாக புதிய முயற்சி என்ற  எண்ணம் மனதில் வந்தது.

நாளும் வந்தது..

வாஷிங்டன் பகுதியில் நமக்கு அறிந்த சில முக நூல் நண்பர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு போவதில் மூலம் அவர்களையும் சந்திக்கலாம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றெண்ணி மாலை நான்கு மணி நிகழ்ச்சிக்கு அந்த அரங்கை சேர்ந்தேன்.

அரங்கில்  நுழைகையில், மணி நான்கை  தாண்டி இருந்தது. யார் கவனத்தையும்  கெடுக்க கூடாதென்று மிகவும் அமைதியாக அரங்கில் நுழைந்த எனக்கு ஒரு அதிர்ச்சியில்லா விடயம் தான் தென் பட்டது.

நிகழ்ச்சிக்கான மேடையையும் மற்றும் ஒளி -  ஒலி வகையாறாக்களையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக சரி செய்து கொண்டு இருந்தனர்.

முகநூல் புகை பட சாயலில் இருந்த நண்பர் ஒருவருடன் நேரே சென்று அறிமுக படுத்தி கொள்ள..

அவரும் ..

இன்ப அதிர்ச்சியில்  மூழ்க  ( அப்படி தான் சொன்னாருங்க ) ..மற்றும் சிலரை அறிமுக படுத்தினார்.   மணி கிட்ட தட்ட ஐந்து ஆக..

நிகழ்ச்சி நான்கு என்று போட்டு இருந்தீர்கள்..ஐந்து ஆகி விட்டதே...?

பனி - மழை - போக்குவரத்து நெரிசல்...

மனதிலோ..

அடே.. அடே.. தமிழகன் எங்கே நிகழ்ச்சி நடத்தினாலும் இந்த மாதிரி எதிர்பாராத பிரச்சனைகள் வந்து அவனை ஒரு நிகழ்ச்சியையும் சரியான நேரத்தில் நடத்த விடமாட்டேங்குதே ..

என்று நினைக்கையில்..,

அவரோ..

இதோ வந்து கொண்டே இருக்கின்றார்..

என்று உறுதி அழைக்க..
'
ஒலி பெருக்கியில்.. தேநீர் மற்றும் பக்கோடா விற்பனைக்கு உள்ளது என்ற அறிவுப்பு வர..

பக்கோடா.... நாட்டின் வேலை வாய்ப்பிருக்கும் சரி.. வயிற்றின் பசிக்கும் சரி  .. என்று நினைத்து கொண்டே...

அங்கே சென்று அவை இரண்டையும் பெற்று கொண்டு வந்து அமருகையில்..


எதிரில் முக நூல் தோழி ஒருவர் இருக்க அவரிடம் நட்ப்பை  பரிமாறி கொண்டு இருக்கையில்..

யாழ்ப்பாணத்தை சார்ந்த அம்மணி ஒருவர்..

அவிக நேரத்துக்கு வெளிக்கிட்டாலும்  போக்குவரத்தில் நெரிசலாகி அங்கே சாலையில் நிக்கிறாங்களாம்.. நாம எதுக்கு நேரத்தை  வீணடிக்கணும்.. யாராவது உங்களுக்கு தெரிஞ்ச ஜல்லிக்கட்டை பத்தி கதையுங்கன்னு .. விண்ணப்பம் தர..

நம்ம தான் வெறுங்காலிலே ஆண்டவர் பாணியில் ஆடுவோமே.. இவங்க வேற சலங்கையை கட்டி விட்டுட்டாங்களே என்றெண்ணி ..

மைக்கை பிடித்து சிறு வயதில் நான் ரசித்த மஞ்சு விரட்டு ( இது ஜல்லி கட்டு அல்ல)  நிகழ்ச்சியை பற்றி  கதைத்தேன்.

என்னை தொடர்ந்து இன்னும் சிலர்...

அவரவர்கள் ஊரில் .. ஜல்லி கட்டு எப்படி இருந்தது என்பதை பற்றியும்,  ஜல்லி கட்டில்தங்களுக்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்பதை பற்றியும் மிகவும் அழகாகவும் நகைசுவையாகவும் எடுத்து சொல்லி கொண்டு இருக்கையில்..

சிறப்பு விருந்தினர் வந்து விட்டார் என்ற செய்தி காதில் எட்ட .. ஐந்து நாற்பத்தி ஐந்திற்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

தமிழ் தாய் வாழ்த்து.. ..

அனைவரும் எழுத்து நிற்க .. தமிழ் தாய் வாழ்த்தை பாடி நிகழ்ச்சி ஆரம்பிக்க .. வாஷிங்டன்  தமிழ் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சால்வைகளை போற்ற.. கார்த்திகேயன் சிவசேனாதிபதி   உரையை ஆரம்பித்தார்,.

அவர் பேசுகையில், நான் குறித்து கொண்ட சில விடயங்கள்..

ஜல்லிகட்டின்  பூர்விகம்..
ஜல்லி கட்டின் அவசியம்..
ஜல்லி கட்டின் நிர்வாகம்..
ஜல்லி கட்டின் எதிர்காலம்..
ஜல்லி கட்டை எதிர்ப்பவர் யார்?
ஜல்லி கட்டை இவர்கள் எதிர்ப்பது ஏன்?

என்று எடுத்துரைத்து மட்டும் அல்லாமல்..

நாளைக்கே அமெரிக்காவை விட்டு தமிழகம் சென்று உடனடியாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு தவறு .. நிதானம் மிகவும் அவசியம் என்பதை மிகவும் சீராக விளக்கினார்.

மற்றும் ....

மெரினா புரட்சியில்  நான் அறியாத பல தகவல்களை சொன்னார். அவர் பேசி முடிந்தது.. கேள்வி நேரம் என்று அறிவிக்க பட..

இது ஆரம்பிக்கும் முன்னர்.. அமெரிக்காவில் ஏதோ  ஒரு இந்தியனுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றெண்ணி இன்னொரு பிளேட் பக்கோடாவை அடித்து பிடித்து வாங்கி கொண்டு வந்து என் இருக்கையில் அமர...

அடேங்கப்பா.. எத்தனை கேள்விகள்.. ஒவ்வொன்றும்.. திருவிளையாடலில் தருமி சிவபெருமானை கேட்ட கேள்விகள்.. பதிலும் அவ்வாறே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்த பாகமே .. இந்த கேள்வி நேரம் தான்..

அதில் சில கேள்விகள்.

ஜல்லி கட்டை காப்பதின்  மூலம் இந்த நாட்டு காளைகளை காப்பது எப்படி சாத்தியம்?

இந்த காளைகள் காப்பதில் மூலம் விவசாயம் எப்படி காப்பாற்ற படுகின்றது?

தமிழகத்தில் .. நிலம் உரிமையில்லா விவசாயிகள் தான் அதிகம், அவர்களால் இந்த காளைகளை எப்படி பராமரிக்க முடியும்?

மெரினா புரட்சியில் தமிழக அடுத்த தலை முறையினரின் ஒழுக்கம் தலை சீர் தூக்கி நின்றது. இதை எப்படி ஆவண படுத்தி  அடுத்த தலை முறைகளுக்கும் எடுத்து செல்வது?

ஜல்லி கட்டிற்கென்று மெரினா சென்ற தமிழர்கள் மற்ற தமிழின பிரச்சனைகளுக்கும் போராடுவார்களா?

ஜல்லி கட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கையை எதிர்க்கின்றார்களே ஏன் ( நான் தான் கேட்டேன்) ?

சிறு விவசாயிகளிடம் இருந்து பணக்கார வியாபாரிகள் நிலத்தை அபகரிக்கின்றார்களே அதை எப்படி தடுப்பது?

என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட.. திரு சிவசேனாதிபதி அவர்கள் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் தகுந்த பதில்களை தந்தார்.

மணி எட்டை தொட. ஒலி பெருக்கியில்.. இரவு உணவு தயார் என்று சொல்ல.. நண்பர்கள் சிலர் விசுவிற்கு நான் தான் வாங்கி தருவேன் என்று தமிழனின் விருந்தோம்பலை காட்ட. .

எனக்கோ...

உறவினர் ஒருவர் எட்டரைக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடு.. என் வூட்டுக்காரி பிரியாணி ( எப்படி ஒவ்வொரு வூட்டு காரும் இதே டயலாக்கை  சொல்றாங்க)  மாதிரி நீ சாப்பிட்டதே இல்லை என்று சொன்னது நினைவிற்கு வர ..

கையோடு  எடுத்து சென்ற கடந்த வருடம் வெளிவந்த "விசுவாசமின் சகவாசம்" என்ற புத்தகத்தின் மூன்று பிரதிகளை அங்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டு கிளம்பினேன்.

நிகழ்ச்சி மிகவும் பிடித்து இருந்தாலும்.. குறையை கண்டிப்பாக சொல்லித்தானே ஆகவேண்டும்..

இம்மாதிரியான நிகழ்ச்சியை தயவு செய்து சொல்லிய நேரத்தில் ஆரம்பிக்கவேண்டும்.

புத்தகத்தை வாங்கி கொண்ட மூவரில் ஒருவராவது.. ஒரு சில பக்ககங்களை படித்து இந்நேரத்திற்கு  நிறை குறைகளை சொல்லி இருக்க வேண்டும்..


பின்குறிப்பு :

கேள்வியை மட்டும் போட்டு இருக்கியே விசு? அவர் என்ன பதில் சொன்னாரு?

அதை எப்படி நான் சொல்வது? நீங்களும் அவரை உங்கள் ஊருக்கு வரவழைத்து கேளுங்கள். மார்க்கெட் போன நாடக காரர்களையும், சினிமா காரர்களையும்,  பட்டிமன்ற நிபுணர்களையும் அழைத்து பணத்தை விரயம் செய்வதற்கு மேல் , இது எம்புட்டோ மேல்.

புதன், 7 பிப்ரவரி, 2018

உங்க பொன்னான கைகள் ....

இந்த வாரம் முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தேன்.. அதற்கான வினையும் எதிர் வினையும் கொஞ்சம் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது...

என் பதிவு

//ஏங்க.....ரெண்டு மூணு பாத்திரம் தான்.. கொஞ்சம் அலசிடுறிங்களா?

பை ஆல் மீன்ஸ்...நீ இங்கே இருந்து கிளம்பு.. கழுவுறேன்.

நான் இங்கே இருந்தா தான் என்ன?

நமக்கு சின்ன வயசில் இருந்தே யாராவது சூப்பர்விஷன் செஞ்சா கை கால் வேலை செய்ய்யாது !

என் இனிய ஆண் குலமே.. உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா? //

இந்த பதிவிற்கு ...  சிவ குமரன் என்ற நண்பர்...

//கரெக்டுதான், பக்கத்துல இருந்து பாத்துகிட்டே, நூத்தியெட்டு நொள்ளை சொல்லுவாங்க. தேநீர்ப் பாத்திரத்துல, அந்த ஓரமா, கருப்பா புள்ளி மாதிரி தெரியுதுன்னு, சொல்லி வெறுப்பேத்துவாங்க. இதுலாம், சகிச்சுக்கிட்டு கழுவுற அளவுக்கு, ஆண் வர்க்கத்துக்கு பொறுமையிருக்காது, யுவர் ஆனர்.....//

என்று பின்னூட்டம் இட்டது.. மனதிற்கு சற்று ஆறுதல் தந்தது.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

டிக் டிக் டிக்... அந்த இறுதி நொடிகள்..

பள்ளி கூட நாட்களில் அடியேனும் சரி அடியேனின் நண்பர்களும் சரி.. ஒரு விடயத்தில் உறுதியாய் இருந்தோம். கூட படிக்கும் மாணவர்களில்  (மாணவிகள் அல்ல) யாராவது விளையாட்டில் விருப்பம் காட்டாவிட்டால் அவனை நம்பாதே...அதுமட்டும் இல்லாமல் விளையாட்டில் ஈடுபாடு உள்ளர்வர்களை எப்போதுமே கூட வைத்து கொள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு  வரை தானே ..இந்த பழக்கம் இன்னும் அடியேனோடு ஒட்டி கொண்டுள்ளது. இப்போது கூட நமக்கு நெருங்கி அமைந்த தோழர்கள் "விளையாட்டு விரும்பிகள்"

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பிறவி பலன் என்பது இது தானோ..

அலை பேசி அலறியது...

டாடி ஹியர்...

டாடா ...யாராவது போன் எடுத்து டாடி ஹியருன்னு சொல்லுவாங்களா... பேர சொல்லுங்க..

போனில் தான் உன் போட்டோ போட்டு வந்ததே அது தான்.. காலேஜ் எப்படி போது?

சென்ற வருடம் செப்டெம்பரில் கல்லூரியில் சேர்ந்த மூத்த ராசாத்தி இந்த ஜனவரியில் கல்லூரியில் ரெண்டாவது செமெஸ்டர் ஆரம்பிக்கிறன்றாள். சிறுவயது முதலே தானும் கணக்கு பிள்ளையாகவேண்டும் என்ற ஒரு எண்ணம்.

11 -  12  வது படிக்கையில்  ..

சனி, 27 ஜனவரி, 2018

ரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை!

மட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2  படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் "வாடி என் கெப்பங்கிழங்கு" மற்றும் ஒரு தலை ராகத்தில் வரும் "நீனா மீனா லீலா ஷீலா ராதா வேதா..."என்ற பாடல்களை முணுமுணுத்து  கொண்டு இருந்த வேளையில் ... அடியேனின் மனதில் குடி இருந்தது..

சிலோன் பாப்பிசை..

சுராங்கனியில் ஆரம்பித்து, சின்ன மாமியே, ஓ மை டார்லிங் ரோஸி, அடிடா சுந்தரலிங்கம், காலேஜ் லைஃப் பைன் என்று பல பாடல்கள் ... என்னே ஒரு ராகம் என்னே ஒரு தாளம் ... இசையோடு நகைசுவை வேறு... சொல்ல வேண்டுமா?

எங்கு போனாலும் நண்பர்கள் மத்தியில் ..

விசு ஒரு பயலா பாட்டு பாடு என்று விண்ணப்பம் வரும். இந்த பாடல்களை நான் அறிந்த ஒரே காரணத்தினால் அறியாதவர்கள் இல்லத்தில் நடக்கும் விழாக்களுக்கும் அடியேனுக்கு அழைப்பிதழ் வரும்.

இப்படி நாட்கள் ஓடி கொண்டு இருக்கையில்...

அருகில் இருந்த ஒரு தியேட்டரில் கமலஹாசனின் "சவால்" என்ற படம் காலை காட்சிக்கு வந்தது. ரிலீஸ் ஆகும் போது அந்த படம் சரியில்லை என்று கேள்வி பட்டதால் தவிர்க்க பட்டது. இப்போது பார்க்க வேற படம் இல்லையே என்று காலை காட்சிக்கு நண்பன் ஒருவருடன் சென்றேன். அங்கே ஒரு சண்டை காட்சியில் .. பேட்டை ரௌடியாக பரட்டை தலை தொங்கு மீசை  வைத்து கொண்டு வந்து ஒருவர் "வூடு  கட்ட" அருகில் இருந்த நண்பன்..

விசு.. இவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கோ...

யாரு இவர்...?

அட பாவி.. பயலா பாடல்கள் பாடுறேன்னு ஊரை ஏமாத்தி சுத்தினு இருக்கியே..

அதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?

அந்த பாடல்கள் பாடியது  இவருதான்.. .. சிலோன் மனோகர்...!

ஓ மை காட்.. உண்மையாகவா.. என்னே அருமையான குரல் என்று நினைக்கையில் அந்த காட்சி மறைய அவரை மீண்டும் காண அடுத்த நாள்  அதே பகல் காட்சிக்கு வந்தேன். படம் மாற்ற பட்டு ரஜினியின் "தீ "என்ற படம் ஓடி கொண்டு இருக்க.. அதே நண்பன்..

நீ என்ன படம் பார்க்கவா வந்த.. மனோகரனை தானே பார்க்க வந்த.. இந்த படத்திலும் இருக்காரு வா..

என்று அழைக்க.. இன்னொரு முறை .. மனோகரன்..

சிலோன் பாப்பிசை ஒரு வித்தியாசமான வகை. அதை பாடுபவர்கள் எனோ தானோ என்று பாட முடியாது.. ரசித்து ருசித்து சிரித்து பாடவேண்டும். AE மனோகரன் அவர்களின் குரல் வளம் மற்றும் ரசிப்பு தன்மை இப்பாடல்களுக்கு மிகவும் பொருந்தியது...


அதற்கு பின்னர் உறவினர் ஒருவர் மனோகரனின் கேசட் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கி அனுப்ப.. இவரின் அணைத்து பாடல்களும் அத்துப்படி..

விட்ட குறையோ தொட்ட குறையோ என்று யாழ்பாணத்து பெட்டையை  மணமுடிக்க.. மணம் முடித்த சில மணி நேரங்களில், நண்பன் ஒருவன், அம்மணியை..

அவர்.. பாப்பிசை பாடல்களை வடிவா பாடுவார்.. அதனால அவர் காதல் வலையில் துள்ளி விழுந்தீர்களோ ..

என்று பகடி பண்ண..

உங்களுக்கு எப்படி இந்த பாடல்கள் தெரியும்?

உனக்காக கற்றுக்கொண்டேன்..

விசிறு கதை கதைக்காதீங்க.. எங்க ஊரில் இந்த பாடல்களை படிக்கும்  பொடியன்களை நாங்கள் தள்ளியே வைப்போம்.. உங்களுக்கு எப்படி?

சரி விடு... அதுவா முக்கியம்...?

ஒரு பாட்டு படிங்க ..

எனக்கு கொஞ்சம் பாட வரும் அதனால படிக்கவேண்டாம் .. வேணும்னா பாடுறேன்..

பாடுறத தான் நாங்க படிக்குறதுன்னு சொல்வோம்..

அப்ப படிக்கிறதை   "பாடு"ன்னு சொல்லுவீங்களா?

அய்யயோ... படிங்க..

யாரு பாட்டு.. மனோஹரனா? நித்தி கனகரத்தினமா?

ஏங்க.. நான் மோசம் போய்ட்டேன் போல இருக்கே.. பாட்டு மட்டும் இல்லாம பாடுனவங்க பேரு கூட தெரியுதே..

சரி வேணா விடு...

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

சொல்லு..

AE மனோகரன் வீடு எங்க தெருவில் தான் இருந்தது..

ரியலி..அவரு எப்படி...

அப்ப நான் ரொம்ப சின்ன பெட்டை .. ஆனா அம்மாவுக்கு அவங்க வீடை நல்லா தெரியும்..

சரி.. அவரை பத்தி கொஞ்சம் சொல்லு!

சின்ன வயசுலே எப்ப பாரு சுருட்டை முடி பரட்டை தலை, அழுக்கு  ஜீன்ஸ் 
கையில் சிகரெட் பாட்டு  .. சினிமானு அலைவாராம்.

என் கதையை விடு. மனோகரனை பத்தி சொல்லு..

அவரு தாங்க..நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? 

அதுவா முக்கியம்.. சொல்லு..

எப்படியாவது இசை மற்றும் சினிமாவில் பெரிய ஆளா வரணும்னு கொலோம்போ கிளமபி போய்ட்டாரு ...

அப்புறம்..எங்க ஊரில் வந்த முதல் தமிழ் படத்துல கதாநாயகனா  நடிச்சார்.. அதுல அவரு நடிச்சத பார்த்து கமல் ரஜினி ரெண்டு பெரும் .. இவரு எங்க படத்துல நடிச்சாதான் அடுத்த படமே நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தார்களாம்..



கமல் - ரஜினி பிடிவாதம்.. அதை யார் சொன்னா?

அதுவா முக்கியம்..?

சினிமா மட்டும் இல்லீங்க.. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மேடையில் சிலோன் பாப்பிசை  பாடல்களை படித்து , தமிழை கடல் கடந்து எடுத்துன்னு போனாரு. உண்மையாவே நல்ல குரல் வளம்..அவரு மட்டும் தலைமயிரை கொஞ்சம் வடிவா வெட்டி இருந்தாரு .. அப்புறம் ரஜினி கமல் எல்லாம் அவுட்.

நீ அவரை பார்த்து இருக்கீயா அவர் பாடி கேட்டு இருக்கீயா?

சத்தியமா...கடைசியா ஒருமுறை நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும் போது  ஒரு நிகழ்ச்சி பண்ண வந்தாரு.. அங்கே இருக்க எல்லாரும் சுராங்கனி .. சுராங்கனின்னு சத்தம் போட இவரோ.. இந்தியாவில் இப்ப இருக்க நம்பர் ஒன் சாங் படிக்கிறேன்னு  சொல்லி .."வாசலில்லா மரமிதுன்னு" ஒரு பாட்ட படிச்சாரு.

அது.. வாசமிலா மலரிது..

ரொம்ப முக்கியம்... நான் பேசும் போது இப்படி திருத்துறது எனக்கு பிடிக்காது.

சரி..அவரை பத்தி மேலே சொல்லு..

வேற என்னத்த சொல்றது.. இங்கே வந்த பிரச்சனையில் தான் நாங்க எல்லாம் ஊரை விட்டு வெளிக்கிட்டோமே.. அப்புறம் அவரை பத்தி ஒன்னும் தெரியல..

தற்போது, அம்மணியோட ஒரு உரையாடல்..

AE மனோஹரன் தவறிட்டாரு...

ஐயோ.. உண்மையாவா.. நல்ல நடிகருங்க.. அந்த காலத்துல..

நினைவு இருக்கு.. அவரோட நடிப்பை கேள்வி பட்டு கமல் ரஜினி ரெண்டு பேரும் பண்ண பிடிவாதம்..

அது எப்படி உங்களுக்கு தெரியும்..?

எங்கேயோ படிச்சேன்..

நல்ல மனுஷன்.. நல்ல பாடகர்.. உலகம் முழுக்க தமிழை பாடி பாடின்னு வந்தார்.. இருந்தாலும் அவரோட திறமையை இந்த உலகம் வெளி கொண்டு வரலைன்னு தான் சொல்லணும்..

கண்டிப்பா..

RIP  .. AE மனோகரன்.. 

தங்களின் இசைக்கு.. விட்டு சென்ற நினைவிற்கு கோடி நன்றி!


இதோ இந்த குறுகிய காணொளியில் இவரின் அட்டகாசமான குரல் வளத்தையும் உச்சரிப்பையும்  கேளுங்கள்.. கூடவே   எங்களின் ஆட்டமும் பாட்டமும் தான்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...