புதன், 7 பிப்ரவரி, 2018

உங்க பொன்னான கைகள் ....

இந்த வாரம் முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தேன்.. அதற்கான வினையும் எதிர் வினையும் கொஞ்சம் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது...

என் பதிவு

//ஏங்க.....ரெண்டு மூணு பாத்திரம் தான்.. கொஞ்சம் அலசிடுறிங்களா?

பை ஆல் மீன்ஸ்...நீ இங்கே இருந்து கிளம்பு.. கழுவுறேன்.

நான் இங்கே இருந்தா தான் என்ன?

நமக்கு சின்ன வயசில் இருந்தே யாராவது சூப்பர்விஷன் செஞ்சா கை கால் வேலை செய்ய்யாது !

என் இனிய ஆண் குலமே.. உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா? //

இந்த பதிவிற்கு ...  சிவ குமரன் என்ற நண்பர்...

//கரெக்டுதான், பக்கத்துல இருந்து பாத்துகிட்டே, நூத்தியெட்டு நொள்ளை சொல்லுவாங்க. தேநீர்ப் பாத்திரத்துல, அந்த ஓரமா, கருப்பா புள்ளி மாதிரி தெரியுதுன்னு, சொல்லி வெறுப்பேத்துவாங்க. இதுலாம், சகிச்சுக்கிட்டு கழுவுற அளவுக்கு, ஆண் வர்க்கத்துக்கு பொறுமையிருக்காது, யுவர் ஆனர்.....//

என்று பின்னூட்டம் இட்டது.. மனதிற்கு சற்று ஆறுதல் தந்தது.



சிவ நடராஜன் என்ற மற்றொரு நண்பர் .. சுருக்கமாக

//same  blood //

என்று கூறியது மனதில் சற்று தைரியத்தை வரவழைத்தது என்று தான் சொல்லவேண்டும்.

டைட்டஸ் துரைராஜ் என்ற நண்பர்..

//வீட்டிற்கு வீடு வாசற்படி //

என்று கூற.. நமக்கு மட்டும் இப்படி இல்லை என்று என்னை நானே தேற்றி கொண்டேன்..

இப்படி இருக்கையில் தான் பூகம்பம் வெடித்தது......

கவிதா சுந்தர் என்ற தோழி ...

//செய்யுற வேலையில கவனம் இருந்து ஒழுங்கா செஞ்சா நாங்க ஏன் சுபெர்வைஸ் பண்ணனும்....?!
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்துட்டு அதுக்கு காண்டா மிருகம்னு பேரு வச்ச கதையா.... நீங்க பாத்திரம் துலக்கிறதும், அலசுறதும் லட்சணம் தெரியதாகும்.... ம்க்கும்....//

என்று போட்டார் ஒரு போடு...

இந்த அம்மணி வெறுங்காலிலே குச்சிப்புடி ஆடுவாங்க.. இப்ப சலங்கை வேற கட்டினு வந்து இருக்காங்களே என்று.. மதுரை தமிழனை உதவிக்காக
//எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்// என்று நான் அழைக்க..மதுரையோ நேரே வந்து..

//விசு மூன்று பாத்திரத்துக்கே மூக்கால் அழுதா எப்படி நன் எல்லாம் எல்லா பாத்திரத்தையே கழுவிவிட்டு அமைதியா இருக்கேன் . உங்க மனைவி தெய்வம் அய்யா போங்க போயி அவர்களுக்கு ஒரு கோவில் கட்டுங்கய்யா//

என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச..அந்த வழியில் துடித்து கொண்டு இருக்கும் போது..

மற்றொரு தோழர் பிரபு சின்னத்தம்பி ...உடுக்கன் இழந்த நடிப்பை காப்பாற்ற ஓடோடி வந்து..

//எனக்கு மட்டும் தான் இந்த வியாதின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்//

என்று ஒரு பின்னூட்டம் இட.. அதை கண்ட கவிதா சுந்தர் மீண்டும் வந்து..

//உங்களுக்கு இப்படின்னா... எங்களுக்கு....
சமைக்க ஆரம்பிக்க கிட்சேனுக்கு வந்த உடனே, இன்னைக்கு என்ன மெனு... ஒஹ் அதுல கொஞ்சம் தூக்கலா பூண்டு போடு, காரத்தை கம்மி பண்ணு... கூடவே ரசம் வச்சுடு, அன்னிக்கு வாங்குன பாவக்காய் இருக்குமே - இல்ல வேஸ்ட்டா ஆயிடும் அதை எதாவது பன்னேனு instructions-ஆ வருமே.... எங்களுக்கு எவ்வளவு கடுப்ப்ஸ் வரும்...

அங்கிட்டு இருந்தவன் இங்கிட்டு வந்தானாம், இங்கிட்டு இருந்தவன் அங்கிட்டு போனானாம்.... ம்க்கும்//

என்று கூற..

நமக்கு தான் வாயில் சனியாச்சே.. அதனால் ...நான் அதற்கு பதிலாக...

//நீங்க செய்யும் போதே பூண்டை தூக்கலா போட்டு காரத்தை கொஞ்சம் கம்மி பண்ணி கூடவே ரசத்தை வைச்சி பாவக்காய் கூட்ட பண்ணா நாங்க ஏன் இன்ஸ்ட்ரக்சன் தரோம்//

என்று கேட்க.. பிரபுவோ அதற்கு ..

//சரியா சொன்னீங்க// என்று ஒரு இசை பாடல் பாட..

கவிதா அம்மணியோ..எங்கள் இரவுரின் ஒப்பாரியை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ..

//கூட்டத்தை போடுறதை நிறுத்திப்புட்டு போயி பாத்திரத்தை ஒழுங்கா இப்பாவது கழுவுங்க... போங்க போங்க....//

என்று கூவ.. மற்றொரு தோழி ராஜி வஞ்சி ...


//எம் குலத்திற்கு குரல் கொடுத்த தெய்வமே!.. //

என்று முழங்கினார்..

இதன் இடையில் மற்றொரு நண்பர் முனியாண்டி ..

//துவைக்க வாசிங் மிசின் கண்டுபிடிச்சவர நாம கடவுளா கும்புடனு பாத்திர கழுவுவது ஒரு வேலையா//

என்று சொல்ல..

டாஸ் இளங்கோவோ...

//எனக்கும் அதே என்றார்//

கடைசியாக பிரபு மீண்டும் வந்து...

//என்னமோ இவங்கள கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி நாம ஏதோ நாடோடியாவோ இல்ல காட்டு வாசியா வோ இருந்த மாதிரியும் இவங்க தான் நம்மள இரட்சிக்க வந்தா மாதிரியும்...

மிடியல//

என்று இன்னொரு புள்ளையார் சுழியை போட்டு சென்றார்..

என் கேள்வி..

இந்த இனிய.. ஆண் வர்க்கமே.. உங்கள் இல்லத்திலும் இந்த சூப்பர் விஷன் உள்ளதா? அதை எப்படி சமாளிக்கின்றீர்கள்.

சொல்லுங்கள்.. ப்ளீஸ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...