வியாழன், 30 ஏப்ரல், 2020

வீடு, வீதி, காடு மற்றும் கடைசி!!!

#tccontest2020
"உறவுகள் - என் பார்வையில்

விடுதியில் தங்கி பத்தாவது படித்து கொண்டு இருந்த காலத்தில் விதிமுறைகளை மீறி சுவரேறி செகண்ட் ஷோ  சினிமா சென்று அகப்பட்ட ஒரு நாள்.

"ஏன் சினிமாவிற்கு போன?"

"சாரி சார்"

"ஏன் போன?"

"படுத்தா தூக்கம் வர மாட்டுது"

"ஏன்?"

என்று பிரம்பை தூக்கியவர் .

"ஒரே வீடு, அம்மா,  அக்கா  நினைவா வருது"

என்ற பதிலை கேட்டு பிரம்பை மேசையின் மேலே வைத்து விட்டு,

"என் ஆபிசில் வந்து பார்!"

என்று சொல்லிவிட்டு  கிளம்பினார்.

"சார்"

அதோ அந்த பறவை போல் காற்று வாங்க போனேன்.!

கொரோனா தாக்கத்தினால் "ஒர்க் ப்ரம் ஹோம் " என்று ஆரம்பித்து தற்போது எட்டாவது வாரம் ஓடி கொண்டு இருக்கின்றது.

சென்ற வாரத்தில் இந்த ஊரடங்கு சற்று தளர்த்தப்பட மாலை நடையை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைத்தது.  அடியேனின் இல்லத்திற்கு மிக அருகில் ஒரு பெரிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மலை மடு காடு என்று அனைத்தும் உண்டு. பல வகை பறவைகளையும் காணலாம். சென்ற மாதத்தில் மக்களின் வரவு அதிகம் இல்லாதால் பறவைகள் அதிகமாக வெளியே சுற்றித்திரிவதை காண முடிந்தது.

சென்ற வாரம் ஒரு நாள் இங்கே நடந்து கொண்டு இருக்கையில் ஒரு அருமையான காட்சி பார்க்க நேர்ந்தது. அதை படம் பிடிக்கும் வாய்ப்பும் அமைய இதோ அந்த காணொளி.  கடைசி வரை பாருங்கள்.  என்ன அருமையான முடிவு.



கடற்கரை அருகே தானே என் இல்லம் அமைந்துள்ளது. கொரோன ஊரடங்கில் கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது என்ற விதி அமலுக்கு வர பசிபிக் பெருங்கடலை பார்த்து ஒரு மாதமாகி விட்டது.

சரி, விதிகள் சற்று தளர்ந்துள்ளதே என்று நேற்று கடற்கரை பக்கம் போகலாம் என்று வண்டியை விட..

காற்று வாங்க போனேன் வெறும் கையேடு வந்தேன் என்ற கதை தான். இதோ பாருங்கள்.




என்று தணியும் இந்த கொரோனாவின் தாக்கம்! 

புதன், 29 ஏப்ரல், 2020

ஏன் இந்த கொலைவெறி ?

இந்தியாவை விட்டு வெளியேறி முப்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இந்தியாவை விட்டு நான் வெளியேறினாலும் இந்தியா என்னை விட்டு வெளியேறவில்லை என்றுதான் சொல்வேன்.

ஒரு சராசரி வெளிநாடு வாழும் இந்தியனை விட  இந்தியாவின் நடப்புகளை கொஞ்சம் அதிகமாகவே கவனிப்பவன் தான் நான்.

இணையதளம் வருவதற்கு முன்பான காலத்தில், தெற்கு அமெரிக்காவிலும் சரி வளைகுடா நாடுகளிலும் சரி, இந்திய செய்தித்தாளை படிப்பதற்காக அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று வந்த காலமும் உண்டு.

அன்றைய காலம் முதல் இன்று வரை! இந்தியாவில் உறவில் சரி நட்ப்புகளிலும்  சரி சமுதாயத்திலும் சரி எதோ ஒரு நல்லதோ கெட்டதோ என்றால் அடியேனை நாடுவார்கள். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.  அதுமட்டும் அல்லாமல் இங்கே உள்ள உறவுகள் மற்றும் நட்புக்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு அவர்களையும் உதவி செய்ய  வற்புறுத்திய காலமும் உண்டு.

சனி, 25 ஏப்ரல், 2020

உள்ளம் என்பது பொறாமை!

பொறாமை படாத மனிதன் என்பது காணுவதே அரிது. உலகில் உள்ள அனைத்து மனிதரும் எதோ ஒரு விஷயத்தில் ஏதாவது அளவில் பொறாமை இருக்கும்?

அடியேனுக்கும் இந்த பொறாமை இருக்கு. வளரும் பருவத்தில் சரி, வாலிப வயதில் சரி இன்றும் சரி.. ஏதாவது ஒரு பொறாமை இருந்துகொண்டே இருக்கின்றது.  ஆண்டவன் புண்ணியத்தில் அடியேனுக்கு அது பெரிய அளவில் இல்லை. சாப்பாட்டிற்க்கேற்ற உப்பு போல சரியான அளவில்.

ஆரம்ப பள்ளியில் ..

டீச்சரின் பெட்டாக இருந்த நண்பனை பார்த்து

அதற்கும் முன்பு ...

அப்பாவின் கையை பிடித்து நடக்கும் சிறாரை பார்த்து..

நடுநிலை பள்ளியில்..


Camel  ஜாமெட்ரி பெட்டி வைத்து இருந்த நண்பனை  பார்த்து...

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ரமதான் நோன்பும் மறவாத பண்பும்.. (சமையல் குறிப்பு : அசைவம்)


யார் செய்த புண்ணியமோ, பிரம்மச்சாரியாய் வாழ்ந்த நாட்களில்  சில காலம் அருமை இஸ்லாமிய நண்பன் அப்சர் ரூம் மெட்டாக அமைந்தான். என்னே ஒரு மனிதன். அவனுடன் பழகிய அந்நாட்களில் வாழும் முறையை பற்றி நிறையவே கற்றுக்கொண்டேன்.

அப்படி வாழ்க்கையில் ஒரு முறை ரமதான் நோன்பு காலம் ஆரம்பிக்க... (அதை ஏன் கேக்குறீங்க.. ? அப்சர் பாயின் குணத்தை அறிய இந்த பதிவையும் தயவுகூர்ந்து படியுங்கள்..     "நாலு பேருக்கு நல்லதுன்னா .. ராமதானின் நாயகன்"!)
அந்த காலத்தில் அடியேன், அப்சர் மற்றும் தீபக் 

அந்நாட்கள் முதல் இந்நாள் வரை நோன்பு கடைபிடிக்கா விட்டாலும் சாயங்காலம் நோன்பை முறிக்கும் நேரத்தில்  நிற்பன நடப்பன பரப்பன என்று வைச்சி தாக்குவது வழக்கமாகிவிட்டது.

நேற்று நோன்பிற்கான முதல் நாளாயிற்றே. நண்பன் அப்சரை அழைத்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்ட பிறகு, அந்நாட்களையே நினைத்து கொண்டு இருக்க..

"டாடா.. அம்மா வர கொஞ்சம் லேட் ஆகுமாம்.. சாயங்காலம் என்ன டின்னர்"

என்றாள் இளையவள்.

இன்றைக்கு நோன்பை முறிக்கும் முதல் நாளாயிற்றே என்று பிரிட்ஜை திறந்து பார்க்க.. எதிரில் .. அருமையான நெஞ்செலும்பு ஆட்டுக்கறி..

என் கேலிக்கு என்ன பதில்?

அப்பா மட்டும் கேட்பதால் தான் "Apology " என்ற வார்த்தை வந்ததா?

இஸ்திரி பெட்டி என்பதாலே ஸ்திரிகளின் வேலையாகிடுமா?

அம்மணியின் பதில் .. "அவருட்ட ஒருவார்த்தை கேட்டு சொல்றேன்" அவர் சொல்வதோ "வீட்டுல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்"  - இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

வீடு விவகாரத்தில் வாக்குவாதம் நடக்க.....
அவன்.. "சரி, உன் இஷ்டப்படி செய் " என்றால் முற்றுப்புள்ளி.
அம்மணியோ "சரி, உங்க இஷ்டப்படி செய்யுங்க" என்றால் அது கமா...
உண்மையா ?

அலை பேசி அலறியவுடன் ஹலோ சொல்வதற்கு பதில்..
"அம்மணி பக்கத்துல இருக்காங்க.. நீ ஸ்பேங்கேரில் இருக்க, அவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லிடு" ன்னு ஒருவன் சொன்னால் - என்ன அர்த்தம்?

வாஷிங் மெஷின் டிஷ்வாஷர் மற்றும் மணப்பெண்ணின் உடையை போலேவே வெள்ளையாக இருக்கின்றதே என்றேன், அடுத்த நாளே இரண்டையும் மணமகன் கருப்பு நிற கோட் போல மாற்றி விட்டார்களே...
எதற்கு ?

வியாழன், 23 ஏப்ரல், 2020

சினிமா நட்சத்திரங்களின் மின்னலடிக்கும் வெண்மை!

கிட்டத்தட்ட ஒன்றரை  மாதம் வீட்டுக்குளே அடைந்து கிடந்த நான் இரவு எட்டரை மணி போல் சும்மா வெளிய போகலாம் என்று கிளம்ப மூத்தவள்...

"எங்கே கிளம்பிடீங்க?"

"சும்மா, வெளியே நடக்கத்தான்!!!"

"அதுக்கு எதுக்கு கார் சாவி எடுத்தீங்க!!!?"

"பாத்துட்டியா.. !!!? ரொம்ப போர் அடிக்குது மகள். கார் டிரைவிங் கூட மறந்துடும் போல இருக்கு, அதுதான் ஒரு சின்ன ட்ரைவ் போகலாம்னு..."

"டாடா.. கொஞ்சமாவது அம்மாவை பத்தி யோசிச்சீங்களா, வேலைக்கு போய்  பத்து மணி நேரத்துக்கு மேல ஆச்சி.. இன்னும் லேட் ஆகும்னு சொல்றாங்க.."

அந்த அரேபிய நாட்கள்...

திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பதற்கு   ஏற்றார் போல்.. வாலிபவயதில் அடியேனுக்கும் வளைகுடா பகுதியில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் 4500  ருபாய் சம்பளம் வாங்கி கொண்டு இருந்த எனக்கு கத்தார் நாட்டில் முதல் சம்பளமே 75000  ருபாய். முதல் சம்பளம் வாங்கிய போது கை நடுங்கியது இன்றும் நினைவில் உள்ளது.

வளைகுடாவில் அனைத்து இந்தியர்களுக்கும் இம்மாதிரியாக அமைவது இல்லை.  என் ஆத்தா செஞ்ச புண்ணியம்!  எனக்கு மிகவும் அருமையான வாழ்க்கை அமைந்தது.

அருமையான வீடு.. பின்னர் மனைவி பின்னர் ராசாத்திக்கள்
 நல்லதோர் வீடு.. வீட்டிலே துணைக்கு இந்தியாவில் வந்த உதவி அம்மணி.

அங்கே வேலை சேர்ந்த முதல் வாரத்தில், கூட பணிய புரியும் தமிழரிடம், இங்கே கோயில் எங்கே இருக்கு என்று கேட்க அவரும் அந்த விலாசத்தை கொடுக்க, ஒரு ஞாயிறு மாலை அவர் தந்த விலாசத்திற்கு சென்றேன்.

புதன், 22 ஏப்ரல், 2020

ஒரு குட்டி மங்கி கதை.



ஒரு ஊருல ஒரு காடு இருந்துச்சாம் ! அந்த காட்டுல ஒரு மங்கி கூட்டமே இருந்ததாம்! அந்த மங்கிக எல்லாம் அந்த காட்டுல ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம். அந்த நேரத்துல...ஒரு மூத்த மங்கி  ஒரு நாள் கிணத்துல தண்ணி குடிக்க எட்டி பாத்திச்சாம் .

எட்டி பாத்த மங்கி அங்கே தண்ணீரில் இருந்த நிலாவின் பிம்பத்தை பார்த்து "அய்யகோ , வானத்தில் இருந்த நிலா கீழே விழுந்திடிச்சி. நல்ல வேளை நம்ம கிணறில் தான் விழுந்து இருக்குனு சந்தோச பட்டு.."

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

வடிவேலும் நானும் ...

ஏற்கனவே பலமுறை கூறியதை போல், ரஜினிகாந்தின் பாபா படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி சென்ற நான் படம் துவங்கிய 15  - 20 நிமிடத்தில் வெளியேறி, நமக்கு வயசாகி விட்டது (அப்போது மிட் 30 'ஸ் ) இனிமேல் சினிமா  நமக்கு ஒத்து வராது , இதை ரசிக்கும் தன்மை இழந்துவிட்டேன் என்று படம் பார்ப்பதை ஒதுக்கி விட்டேன்.

இருந்தாலும் மக்களை பெற்ற  மகராசன் தானே நான் அதனால் ராசாத்திக்கள் என்றாவது கண்டிப்பாக போகனும்னு அடம்  பிடிச்சதால் சில ஆங்கில படங்கள்.. அதிலும் தீயேட்டரிலே குறட்டை.






பாபாவிற்கு பிறகான படத்தைதான் தவிர்த்தேன்  (அதற்கு பிறகு வந்த படங்களில் ஒரு ஐந்து அல்லது ஆறு படங்கள் பார்த்து இருப்பேன்)  மற்ற படி.. யு டுயூப்பில் இருக்கும் பழைய படங்களை இன்னும் ரசித்து கொண்டு தன இருக்கின்றேன். சென்ற வாரம் கூடன் ரஜினியின் கழுகு என்ற படத்தை ரசித்து விட்டு.. 80  களில் இப்படி ஒரு படம்.. இப்படி ஒரு இசை.. என்று வியந்தேன்.

இந்த படம் பார்ப்பதை நிறுத்தியதை இந்தியாவில் இருந்து வந்த நண்பர் ஒருவரிடம் சொல்ல..

திங்கள், 20 ஏப்ரல், 2020

விசு .. வேலை வேண்டும்!

ஞாயிறு மதியமும் அதுவுமா மகளிர் மூவரும் குட்டி தூக்கம் போட்டு கொண்டு  இருக்கையில் பூனை நடை போட்டு (மூவரில் யாராவது ஒருத்தர் எழுந்தாலும் ஏதாவது ஒரு வேலையை சொல்லுவாங்க) சமையலரை சென்று ஒரு தேநீர் போட்டு அதை பருகி கொண்டே  பின்னால் உள்ள தோட்டத்தில் அமர்ந்து இருக்கையில், இளைய ராசாத்தி முதுகை தட்டினாள்.

"டீ வேணுமா!!!? "

"ப்ளீஸ்... தேங்க்ஸ் !!!"

"என்ன மக சோகமா இருக்க , என்ன ஆச்சி!!!?"

"ஹ்ம்ம்... ஒன்னும் இல்ல!!!"

என் அகத்தில்...  உன்  அகத்தின்  அழகு தான் முகத்தில்  தெரியுதே.. என்று எண்ணி கொண்டே..

"ஓகே. If you want to talk, you know where to find me"

என்று சொல்லி சமையலறைக்குள் நுழைய..

"இந்த கொரோனா.. ஐ ஹேட் இட்!!!!"

என்று கதறினாள்.

"இங்க வா..!!!! "


ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இனி எனக்காக அழ வேண்டாம் !!!

கொரோனாவின் பாதிப்பால் எங்கள் குடும்பத்தை சார்ந்த நால்வரும் இல்லத்தில் அடங்கி இருக்க, ஆட்டம் பாட்டம் வேலை படிப்பு உணவு சற்று நடை சற்று உடற் பயிற்சி  மற்றும் வெட்டி பேச்சு என்று போய்  கொண்டு இருந்த வேளையில்..

சென்ற வாரத்தில் அம்மணி பணிக்கு சென்று இருந்த வேளையில் என்னுடைய அறையில் இஞ்சி தின்ன குரங்கை போல் விட்டத்தை நான் ஆராய்ந்து கொண்டு இருக்கையில் நான் பெற்ற மகாராசிகள் இருவரும் வந்து....

"டாடா..உங்களிடம் ஒன்னு கேக்கணும்..."

"கோ அ ஹெட் , ஐ அம் லிசனிங்!!!"

"நீங்க அழுதே நாங்க பார்த்தது இல்ல, கடைசியா எப்ப அழுதீங்க"

மனதிலோ, அட பாவத்த.. அவனவன் எப்படா கடைசியா வாய் விட்டு சிரிச்சேன்னு கேப்பாங்க, இவளுங்க என்னடானா ?

"எப்ப அழுதீங்க!!!?"

"லெட் அஸ் டாக் பாசிட்டிவ் திங்ஸ். ஏற்கனவே ஊரடங்குன்னு நொந்து போய் இருக்கேன், இதுல எப்ப அழுதேன், ஏன் அழுதேன்னு யோசிக்க வைச்சா இப்பவே அழுதுடுவேன்"

சனி, 18 ஏப்ரல், 2020

பட்டம் அவள் கையில்

சனி காலை ...

இன்றோடு கொரோனாவின் " Work from home"  ஒரு மாதம் நிறைவேற, வார  இறுதி என்று சற்று அதிகமாக தூங்கிவிட்டு .. (அஞ்சி நிமிஷம் தான் கூடுதல்!, நமக்கு வேலை நாட்களில் தானே தூக்கம் வரும், வார இறுதியில் அஞ்சரைக்கே முழிப்பு வந்து விட்டத்த தானே பார்த்துன்னு இருப்போம்) அம்மணி அன்போடு அளித்த காப்பியை கையில் எடுத்து கொண்டு வீட்டின் வாசலுக்கு வர...

எதிரில் காலை நடையை முடித்து திரும்பி கொண்டு இருந்த நபர் ஒருவர், அடியேனை பார்த்து,

"Congratulations, all  the  best "

என்று சொல்ல! நானோ..

 ஓ.. ஒருவேளை.. இந்த கொரோனா நேரத்தில் நம்ம வீதியில் யாருக்கும் கொரோனா தொற்றவில்லை என்று வாழ்த்து  சொல்கிறாரோ என்று இரு கணக்கை போட்டு , பதிலுக்கு

"Thanks, Congrats to you as well"

என்ற பதிலை சொல்ல, அவர் முகத்தில் இவன் எதற்கு எனக்கு வாழ்த்து சொல்கிறான் என்று விழித்து கொண்டே செல்ல..

சனி, 11 ஏப்ரல், 2020

18 வயது விசுவிற்கு ஒரு கடிதம்!

அன்பார்ந்த விசு,

இந்த கடிதத்தை எழுதம் எனக்கு தற்போது 54 வயதாகிறது. இன்றைக்கு இங்கே ஏப்ரல் 10,2020!  இதை பெரும் உனக்கு இன்று 18 வயது தான்.  நாளும் ஏப்ரல் 10 , 1983  என்று நினைக்கின்றேன்.

கடந்த ஒரு மாதமாகவே இங்கேயும் சரி, உலகம் முழுக்கவும் சரி, கொரோனா என்ற கொடூர நோய் தாக்கி கொண்டு இருக்கின்றது.ஒரு மாதமாக உலகமே வீட்டிற்குள் அடங்கி கொண்டு உள்ளது. அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல.

மருத்துவமனையில்  சேரும் நோயாளிகளை பார்க்கையில், அவர்களின் சுகத்திற்காக தியாக மனதுடன் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களை பார்க்கையில் எனக்கு உதித்த எண்ணத்தை தான் இந்த கடிதத்தில் உனக்கு எழுதுகிறேன்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மதுவந்தி - ஏன் இந்த அளவுகடந்த மோடி புகழ்ச்சி?!

மதுவந்தி..

மேலே செல்லுமுன் ..

விக்கிபீடியாவில் இவர் பெயரை போட்டால் " இன்னாரின் மகள் என்றும், இன்னாரோடு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்றும் மற்றும் ஒரு பள்ளி நிர்வாகத்தில் அதிகாரியாக உள்ளார் என்றும் உள்ளது. தொழில்  முறையில் நடிகை மற்றும் நாடக தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இவரின் படிப்பு தகுதி என்று எதுவும் இல்லை.!

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களில் நாடகம் என்று ஒரு அழைப்பிதழ் வந்தது. அதில் YG மதுவந்தி குழுவினர் என்று போட்டு இருந்தார்கள். அதை பார்த்தவுடன் YG குடும்பத்தை சார்ந்தவர் என்று அறிந்து கொண்டேன். 80களில்  தமிழ் நாடகங்களில் தரத்தை கண்ட நான் அவற்றை முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டேன். அதை பற்றி வேறொரு இடத்தில பார்க்கலாம்.

அதற்கு பிறகு, சென்னையில் ஸ்வாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்ய பட்ட போது அதை பற்றி YG மஹேந்திரன் இஸ்லாமியர்களை  பற்றி பேசியது பல எதிர் வினையாற்ற தகப்பன் கூறியதை நியாய படுத்தி ஒரு காணொளி இட்டு இருந்தார்.  பிறகு இவரை பற்றி எதுவும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக (இரண்டு வருடம்? ) இவரும் இவரின் தகப்பனும் BJP கட்சியையும் அதன் தலைவர் மோடியையும்  மிகவும் ஆதரித்து பேசி வந்தார்கள்.  அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம், உரிமை! அங்கே இங்கே கேட்க நேர்ந்தது.

பின்னர் கடந்த வருடத்தில், YG மதுவந்தி குழுவினரின் நாடகம் என்று மீண்டும் ஒரு அழைப்பிதழ்   வர அதில் அமெரிக்காவில் கிட்ட தட்ட  ஐம்பது நகரில் இவர்கள் நிகழ்ச்சி நடக்கின்றது என்று எழுதி இருந்தது. நான் அறிந்த தமிழ் சங்கத்தில் தலைவராக இருக்கும்  நண்பர் ஒருவரை அழைத்து..

"இவர்கள் நாடகத்திற்கு இவ்வளவு டிமாண்டா ? ஐம்பது நகரம் அடேங்கப்பா என்று கூற"

அவரோ ...

"விசு ,அழைப்பிதழை மீண்டும் பார், இதில் எதுவும் தமிழ் சங்கம் கிடையாது, இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேண்டபட்ட சிலர் செய்யும் ஏற்பாடுகள் இது"

அது சரி, உங்கள் சங்கத்திற்கு விண்ணப்பம் வந்ததா...

"அதை ஏன் கேக்குற ... ஒரு வருடத்திற்கு முன்பு, பணமே வேண்டாம், டிக்கட்  மற்றும் தங்கும் வசதி மட்டும் செய்து கொடுத்தால் போதும் என்று சொல்லி நாங்களும் அழைத்து மட்டும் கொடுத்தால் போதும் என்று அவர்கள் சொல்ல நாங்களும் அழைக்க, சரி வேண்டாம் விடு "

என்று சொல்ல... சென்ற வருடம் அக்டோபர் போல், ஒரு செய்தி.

"இவரும் இவர் குழுவை சார்ந்த  சிலரும் சிகாகோ விமானநிலைய குடிவரவு அதிகாரிகளால்  விசாரிக்கபட்டு  சரியான அனுமதி பெறாமல் இங்கு நாடகம் போட்டு பணம் பெற  வந்ததால் விமான நிலையத்தில்  இருந்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப பட்டார்கள்"

இந்த செய்தி வந்த சில நாட்களில் YG மதுவந்தி அமெரிக்காவில் கைது நாடு கடத்த பட்டர் அவமானம் என்று பல செய்திகள் அங்கும் இங்கும் வந்து கொண்டு இருந்தன.

இவர் மட்டும் அல்ல... தமிழ் வளர்க்கிறேன் என்று பலரும் தமிழ் நாட்டில் இருந்து வருடாவருடம் அமெரிக்கா வந்து சரியான வசூல் செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மதுவந்தி திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சங்கங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து வரும் பிரபலங்களின் விசாவை சரி பார்த்து கொள்கின்றார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

மதுவந்தி நாடு திருப்பி அனுப்பப்பட்ட பிறகு மீண்டும் அமெரிக்கா வரவில்லை என்று நினைக்கின்றேன். என் அறிவிற்கு எட்டியபடி ஒரு முறை  நாடு திருப்பப்பட்டால் ( deportation ) மீண்டும் அமெரிக்காவில் நுழைய  பல வருடங்கள் ஆகும் என ஒரு விதி உள்ளது. அதனால் இங்கே வர மீண்டும் பல வருடங்கள் ஆகும் என நினைக்கின்றேன்.

இப்படி இருக்கையில்... இவர்களின் மோடி ஆதரவு மோடியின் ஆதாரவாளர்களையே  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோடி .. நல்லவர் வல்லவர் என்று மீண்டும் மீண்டும் பேசி இவர் பிஜேபி தமிழக அரசிய வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த மாதம், ஒரு நாள்,  ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் கை தட்ட வேண்டும் என்று மோடி சொல்ல, இவர் அதற்கு அளித்த விளக்கம், அடேங்கப்பா.. அருமை அருமை.. ஒன்பது கோள்  .. ஒன்றரை பில்லியன்  கை தட்டு.. என்று சொல்லிவிட்டு மோடி கை தட்ட சொன்னதின் அறிவியல்  பின்னணி என்று  ஒரு அற்புத காணொளி.

இந்த காணொளி வந்த சில நிமிடங்களில் இந்திய அரசாங்கம் இந்த கை தட்டு நன்றிக்காகவே இதில் அறிவியல் விடயம் எதுவுமில்லை என்று சொல்ல அடுத்த காணொளி வந்தது .

அது தான்..

மொத்த  காணொளியும் மிகவும் அபத்தமானது. ஒருவர், அதுவும் ஒரு பள்ளியின் நிர்வாகி இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பார்கள் என்று  நான் நினைக்கவில்லை. இந்த பிதற்றல் வேண்டும் என்றே வைரலாக வேண்டும் என்று  நடத்த பட்ட நாடகம்  என்று தான் நான் நினைக்கின்றேன். சென்ற காணொளியில் "ஒன்னரை பில்லியன் மக்கள்" கை தட்டினால் என்று  சொல்லியவர்கள் ஒரே வாரத்தில் 8,000  கோடி மக்கள் , 3,000 கோடி வயதானோர், மாற்று திரானோர், 20,000  கோடி பெண்கள்...8,000  கோடி மக்களுக்கு 5,000  கோடி நேரடியாக (ஆளுக்கு 62 பைசா என்பது வேற விஷயம்) வங்கியில் செலுத்த பட்டது என்று பல பிதற்றல்கள். அவர்கள் எதிர்பார்த்த படியே வைரலாகிற்று, இவர்களின் இந்த அளவற்ற மோடி புகழ் மோடியின் காதிற்கு கண்டிப்பாக  எட்டும் என்று தான் நினைக்கின்றேன்.

எட்டி என்ன பயன்?

என் அறிவிற்கு எட்டியபடி தமிழக BJP யில் எந்த பதவியும் கிடைக்காது. அதற்கு ஒரு டசன் மக்கள் ஏற்கனவே காத்து கொண்டு இருக்கின்றார்கள்.  பின்னர் எதற்கு இப்படி ஒரு தத்து பித்து?

Let me take a long shot! (In the words of John Lenon, "You may think I am a dreamer, but I am not the only one).

மோடியின் காதிற்கு எட்டி என்ன பயன்?

ரிமெம்பர் யுனைடெட் நேஷன் பாரத  நாட்டிய புகழ் "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" !  அதுபோல தான். யுனைட்டட் நேசனில் அல்ல ஏதாவது ஒரு சர்வதேச  NGO  நிறுவனத்தில் இவருக்கு கண்டிப்பாக ஒரு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. 

அதனால் இவருக்கு என்ன பயன்?

அப்படி ஒன்னும் பெரிதாக இல்லை. மீண்டும் ஐம்பது நகரில் நாடகம் என்று    ஒரு அழைப்பிதழ் வர இந்த பதவி  வழி வகுத்து  தரும்.

I sincerely hope I am proved wrong, for the sake of Tamils in USA! 

கொரோனா கொடுத்த வரம்!

"ராத்திரி எட்டு மணிக்கு கிச்சனில் என்ன சத்தம்!!!?"

அதட்டி கொண்டே வந்தாள் பெரியவள்.

மேலே செல்லும் முன்பு, அவளை பற்றிய சிறு குறிப்பு :

இருபது வயது.எனக்கும் சரி அம்மணிக்கும் சரி எங்கள் வாழ்க்கையில் கிடைத்த இரண்டு  பொக்கிஷயங்களில் ஒன்று.

அம்மணி அம்மா இல்லாமல் வளர்ந்தாலும் அடியேன் அப்பா இல்லாமல் வளர்ந்தாலும், மூத்தவளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற முறையையே "Trial and Error" என்று தப்பு சரி தெரியாமல் வளர்த்தோம்.

எவ்வளவு அன்பு காட்ட வேண்டும்?
எப்போது கோபப்பட வேண்டும்?
எப்போது / ஏன் கண்டிக்க  வேண்டும் ?
எவ்வாறு கண்காணிக்க   வேண்டும்?
எப்போது எதற்கு தண்டிக்க வேண்டும்?
மற்றும் சிலவற்றை சரியாக அறிந்து கொள்ளாமல் அவளை வளர்த்தோம்.

வியாழன், 9 ஏப்ரல், 2020

கொரோனா - கணக்கின் கணக்கு!

ஜனவரி மற்றும் பிப் மாதத்திலேயே "கொரோனா" என்ற வார்த்தை  பேச்சுவாக்கில் இருந்தாலும் அது இவ்வளவு தீவிரமான நோயாக மாறி வாழ்க்கை முறையையே மாற்றி விடும் என்று அனைவரை போல அடியேனும் நினைக்கவில்லை.

மார்ச் முதல் வாரத்தில், நிறுவனத்தின் மேலதிகாரிகள் கூட்டத்திற்கான 911  (அவசர) அழைப்பு வர, இது என்னவாய் இருக்கும் என்று நகத்தை கடித்து கொண்டு அலுவலகத்திற்குள் நுழைய, மேலும் கீழும் நடந்து கொண்டு  இருந்த எங்கள் ப்ரெசிடெண்ட்..

"I am not asking you, I am telling you"!!

என்று கூறிவிட்டு, நாளை முதல் யாரும் அலுவலத்திற்கு வரக்கூடாது. அவரவர்களுக்கு தேவையான பொருட்களை ( கணினி, பிரிண்டர்) போன்றவற்றை இன்று வேலை முடிந்து போகும் போது வீட்டிற்கு எடுத்துகொண்டு போக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…

மீள் பதிவு (Saturday, December 19, 2015).



"விசு, ரொம்ப நாளா வெளிநாட்டிலே இருக்கிறியே? ஒரு “ஆறுவருஷம்” நல்ல ஒரு ப்ராஜக்ட் இருக்கு, வரியா?"


"மாப்பு, ரெண்டு வாரம் விடுமுறைக்கு வந்தாலே எனக்கு அங்கே பிரச்சனை,இதுல அங்கேயே வந்து தங்க சொல்லுறியா?அதை பத்தி வேற ஒரு நாள் சொல்லுறேன், இப்ப விஷயத்திற்கு வா, என்ன ப்ராஜக்ட் இது?
"என்ன வேலை என்பதை அப்புறம் சொல்லுறேன், முதலில் எவ்வளவு “மாலு’ தேரும்என்பதை கேட்டுக்கோ."
"ஒன்னாம் தேதி ஆனா வரி இல்லாமல் சுளையா மாசத்துக்கு50,000 ருபாய்."
"ஓகே அப்புறம்",
"நீ வேலைக்கு வர நாள் எல்லாம் ஒவ்வொரு நாளுக்கும் 2000 ரூபாய்!!!"
"என்னா மாப்பு, முதலில் சம்பளம் 50,000 ரூபாய்ன்னு சொன்ன, அப்புறம் வேலைக்கு வர நாளுக்கு 2000 ருபாய்ன்னு சொல்ற? சம்பளம் வாங்கினா வேலைக்கு போய் தானே ஆகனும்?"

திங்கள், 6 ஏப்ரல், 2020

ஜனாவை நாய் கடிச்சிடிச்சி !

1986 ஃபுட்பால் சீசன், நடப்பது என்னமோ மெக்சிகோவாக இருந்தாலும், இந்தியாவிற்கும் மெக்சிகோவிற்கும் மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஃபுட்பாலுக்குமே ரொம்ப தூரம் என்றாலும் உலகக் கோப்பையை அணுஅணுவாக ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உடல் முழுக்க வெறியேறிக் கிடந்தது.


காலேஜ் ஆரம்பிச்சு ரெண்டே நாள் தான் ஆச்சு, ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் அம்புட்டு பேருக்கும் எம்புட்டு அரியர்ஸ் என்ற செய்தியுடன்.  இது ஃபைனல் இயர் இதுக்கு முன்ன அரியர்ஸ் இருந்ததை வீட்டில் மறைச்சிடலாம்.  ஆனா இப்போ ஃபெயில் ஆனா வீட்டுக்கு தெரிஞ்சிடும்ன்னு கொஞ்ச பயத்துல முதல் நாளில் இருந்தே படிக்கலாம்னு ஒரு முடிவோட இருந்ததுல யார் கண் பட்டுச்சோ, அடுத்த ரெண்டே நாள்ல உலகக் கோப்பை ஆரம்பிச்சுட்டானுங்க.


சரி ஆனது ஆச்சு ஒரு மாசம் தானே, உலகக்கோப்பையை முழுசா பார்த்துட்டு அப்புறம் படிச்சிக்கலாம்னு ஒரு முடிவெடுத்துட்டு நண்பர்களோடு சேர்ந்து ஒரு எந்த அணியோட எந்த அணி என்னைக்கு ஆடுறாங்கன்னு ஒரு பெரிய சார்ட் போட்டு கையில் கிடைச்ச அஞ்சையும் பத்தையும் வைச்சி பந்தயம் கட்டிட்டு இருந்தோம்.


ஒரு ராத்திரிக்கு மூணு ஆட்டம், முதல் ஆட்டம் 10 மணி போல் ஆரம்பிக்கும், ரெண்டாவது ஆட்டம் 1 மணிக்கு, கடைசி  ஆட்டம் 3 மணி போல் ஆரம்பிச்சி முடியும் போது விடிஞ்சிடும். ரா முழுக்க கண்ணுல விளக்கணையை ஊத்தி  பாத்துட்டு காலம்பற பக்கத்துல இருக்க ராதா கடைக்கு போய் ஒரு டீ ரெண்டு பன் வாங்கி சாப்பிட்டு வந்து வீட்டுல ஃபேன எட்டுல தட்டி விட்டு தூங்கப் போனா சாயங்காலம் அஞ்சு மணிக்கு எழுந்தா விம்பிள்டன் பாக்கறதுக்கு சரியா இருக்கும்.


தொடர்ந்து நாலஞ்சு நாள் போகாம இருந்ததுல புரொபஸர் நம்ம மேல ரொம்ப அன்பா இருக்கிறதா கேள்விப்பட்டு  CMCயில் வேலை செஞ்சிட்டு இருந்த பங்காளியின் காலைப் பிடிச்சு கையில் மாவு கட்டு ஒன்னைப் போட்டுட்டு புரொபஸரை பார்க்கப் போனேன்.


"எங்க ஆளை காணோம்?"


"அது வந்து சார்"


"கையில என்ன?"


"மாவு கட்டு"


"அது கை உடைஞ்சவங்களுக்கு தானே போடுவாங்க, நீ ஏன் போட்டுட்டு இருக்க?"

"அது வந்து சார்"


"உண்மையை மட்டும் சொல்லு"


"அது வந்து சார்"


"எதுக்கு ஜன கன மன பாடுற மாதிரி அசையாம நிக்குற? உண்மையா சொல்லு.."

"ஜன கன மன.."

"ஜன!!!!?"

"நம்ம ஜனா இருக்கான் இல்ல சார்"


"ஆமா, அவனையும் உன்னோட சேர்ந்து காணோம், உன்னை மாதிரியே மாவு கட்டு போட்டுட்டு வரப் போறானா?"


"உங்களுக்கு தெரியாதா சார்?"


"எனக்கு என்ன தெரியும் தெரியாதுன்னு உனக்குத் தெரியாது"


"ஜனாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாதா சார்!"


"கிளைக்கதையா? சொல்லு கேப்போம்"


"ஜனாவை..."


"சொல்லு ஜனாவை..."


"ஜனாவை..." யோசித்தேன்...


"ம்ம்... இன்னுமா யோசிக்கிற?  சொல்லு"


"சார், ஜனாவை..."


"ஜனாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுக்குள்ள உன் நாக்கு ஏன் இப்படி ஓடி வந்த நாய் மாதிரி தொங்குது?"


"சார் ஜனாவை நாய் கடிச்சிருச்சு"


"அவன் ஏன் நாயக் கடிச்சான்?"


"சார், கடி வாங்கிட்டான்"


"நாய்க்கு ஒன்னும் இல்லையே"


"சார்..."


"ஜோக் சொன்னா சிரிக்கணும்"

"சார்..."


"ஜனா எப்படி இருக்கான்?"


"பரவால்ல போல இருக்கான் சார்"


"உனக்கு ஏன் மாவு கட்டு?"


"நான் ஜனாவை காப்பாத்த போகும் போது..."


"காப்பாத்தி விட்டா மாவு கட்டு போடுவாங்களா?"


"சிரிக்கணுமா சார்?"


"வேண்டாம், மேல சொல்லு"


"காப்பாத்த போன என்னையும் நாய் துரத்த, நான் சுவரை தாண்டி குதிச்சேன்"


"அது நீங்க வழக்கமா செய்றது தானே"


"ஆமா... இல்ல சார்"


"ஜனா ஏன் சுவர் ஏறி குதிக்கல?"


"அவனை தான் நாய் கடிச்சிருச்சே"


"கடிக்கிறதுக்கு முன்னால ஏன் குதிக்கல!?"


"அவன் தான் பார்க்கலையே!"


"பார்க்காம நாய் கடிக்கிற வரைக்கும் கண்ணை மூடிட்டு இருந்தானா?"


"அவன் சுவரை பார்க்கல சார்"


"சரி, உனக்கு ஏன் மாவு கட்டு?"


"கீழே விழுந்துட்டேன்"


"இது எத்தனை நாளைக்கு?"


"ஃபைனல்ஸ் வரைக்கும், இன்னும் ஒரு மாசம் இருக்கு"

"வாட்?"


"ஃபைனல் செக் அப் இன்னும் ஒரு மாசம் இருக்கு, அது வரைக்கும் சார்"


"சரி, அப்ப நீ புக்ஸ் எல்லாம் கொண்டு வர வேணாம், சும்மா வந்து க்ளாஸ்ல உட்காரு"


"இல்ல சார், வந்து... கைக்கு மட்டும் தான் மாவு கட்டு, உட்கார எடத்துல கூட சரியான அடி, தையல் கூட போட்டு இருக்காங்க"


"அது எத்தனை நாள்?"


"அதுவும் ஃபைனல்ஸ் வரைக்கும்"


"ஓகே, எலியும் பாலாஜியும் எங்க?  அவங்களையும் காணோமே?!"


"சார்... நம்ம ஜனாவை..."


"நாய் கடிச்சிருச்சு"


"ஆமா சார்"


"எலி எங்க?"


"மருந்து வாங்க..."


"எலிக்கு தான் மருந்து வாங்குவோம், இங்க எலியே மருந்து வாங்க போயிருக்கா?"


"இதுக்கும் சிரிக்கணுமா சார்?"


"இனிமே எதுக்குமே நீ சிரிக்க வேணாம், பாலாஜி எங்க?"


"எலிக்கு துணையா போயிருக்கான் சார்"


"காமர்ஸ் பாலாஜி எதுக்கு எலியோட போனான்?"


"சார்..."


"இது ஜோக் இல்ல, எலியும் பாலாஜியும் எங்கே?"


"சார் நம்ம ஜனாவை..."

"அடேய்... ஜனாவை நாய் கடிச்சுருச்சு, எலி மருந்து வாங்க பாலாஜியோட போனான்?  என்ன மருந்து?  எங்கே போனான்?


"நாய்க்கடிக்கு ஊசி வாங்கப் போனானுங்க"


"ரெண்டு நாளாவா?"


"பதினாறு ஊசியாம் சார், இங்கே இருக்க எல்லா கடையிலும் கேட்டு பார்த்தாச்சு சார், ஸ்டாக் இல்லையாம்"


"ஏன் ஸ்டாக் இல்லையாம்?"


"இது நாய்க்கடி சீசனாம்"


"பாவம், தொப்புளை சுத்தி வேற போடணுமே"


"தொப்புளுக்கு கூடவா சார் திருஷ்டி சுத்தி போடுவாங்க?"


"டேய் நான் ஊசியைச் சொன்னேன்"


"சார்..."


"இப்ப என்ன பண்ணப் போறீங்க? அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பிடீங்களா?


"சார்... ஜனா இன்னும் உயிரோட தான் சார் இருக்கான்"


"பாலாஜி எங்கே?"


"அவன் மெட்ராஸ் போய் இருக்கான்"


"எதுக்கு?  எப்போ வருவான்?"


"ஊசி வாங்க சார், பதினாறும் கிடைச்சதும் பெரு வாழ்வோடு வருவான்"


"நீ போய் சொல்லல தானே"


"சார், நம்பலைன்னா அந்த நாயக் கூட கேட்டுப் பாருங்க சார்"


"இந்த காலத்துல எந்த நாயையும் நம்பறதுக்கு இல்ல"


"வேணும்னா டாக்டர் சர்டிபிகேட்..." நாக்கைக் கடித்துக் கொண்டேன்.


"நல்ல ஐடியா... உன் கூடவே சுத்திட்டு இருப்பானே சந்தானம், அவனை ஏன் காலேஜ் பக்கமே காணோம்?"


"சார்... ஜ..."


"டேய்... சந்தானம் எங்கன்னு மட்டும் சொல்லு"


"அதான் சார், முதல்ல இருந்து சொன்னா தான் எனக்கு சரியா சொல்ல வரும்"


"சொல்லித் தொலை"


"ஜனாவை நாய் கடிச்சிடிச்சி இல்ல"


"அதைத்தான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கியே, அதுக்கும் சந்தானத்துக்கும் என்ன சம்பந்தம்?"


"சம்பந்தம் இருக்கு சார்"


"சொல்லுடா"


"டாக்டர்... டாக்டர் இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த நாயோட பிஹேவியரை கவனமா பார்க்கணும்னு சொல்லி இருக்காரு"


"சோ..."


"சந்தானம் நாயை கவனிச்சிட்டு இருக்கான்"


"அந்த நாயை கவனிக்கவே நாலு நாய் வேணும், இதுல அது ஒரு நாயை கவனிக்குதா?"


"கரெக்ட் சார்"


"எவ்வளவு நாள்?"


"ஃபைனல்ஸ் வரைக்கும்"


"ஜனாவை கடிச்ச நாயை இவன் ஏன் பாத்துக்கணும்?"


"கடிச்சது சந்தானத்தோட நாய் சார்"

"சந்தானத்து நாய் ஜனாவை ஏன் கடிக்கணும்?"


"நாயை தான் கேட்கணும்"


"எந்த நாயை?"


"சார்..."


"எனக்கு ஒரு உதவி பண்ணு"


"மாவு கட்டு போட்டு இருக்கேன் சார்"


"கை தேவையில்லை"


"சொல்லுங்க சார்"


"ஜனாவை உடனே ஒரு டாக்டர் சர்டிபிகேட் வாங்கி அனுப்ப சொல்லு"


"சார்..."


"ஏன்டா கத்துற?  பாலாஜியை மெட்ராஸ்க்கு போன பஸ் டிக்கட் எடுத்திட்டு வந்து காட்ட சொல்லு"


"சார்..."


"மறுபடியும் ஏன்டா கத்துற?  எலி வாங்கிய நாய் ஊசி ஒன்னாவது எடுத்திட்டு வந்து என் கிட்ட காட்ட சொல்லு"


"சார்..."


"காது அடைக்குதுடா, சந்தானம் காலேஜுக்கு திரும்பவும் வரும் போது அவன் நாயை கூட்டிட்டு வர சொல்லு"


"சார்..."


"சோடா குடி.. போய் ரெஸ்ட் எடுத்துக்கோ, ஃபைனல்ஸ்க்கு அப்புறம் பாக்கலாம்"


அன்று இரவு அறையில் சந்தானம், எலி மற்றும் பாலாஜியுடன்...


"இன்னைக்கு செம மேட்ச் விசு"


"ஆமா"


"நம்ம  டிப்பார்ட்மெண்ட் பெருச எப்படி சமாளிக்க போறோம்?"


"ஏற்பாடு பண்ணியாச்சு"


"பழைய ஏற்பாடா புதிய ஏற்பாடா?"


"புத்தம் புதிய ஏற்பாடு"


"எப்படி?"


"எலி, எப்படியாவது எந்த பார்மஸிக்காவது போய் நாய்க்கடி ஊசி ரெண்டு வாங்கிட்டு வா"


"டன்"


"பாலாஜி, காலையில் வேலூர் பஸ் ஸ்டான்ட் போய் மெட்ராஸில் இருந்து வரவங்க கை காலை பிடிச்சி அவங்க ட்ராவல் பண்ண டிக்கட் ரெண்டு மூணு வாங்கிட்டு வா"


"ஓகே"


"சந்தானம், உடனே உங்க வீட்டுல சொல்லி கொஞ்சம் சுமாரான சைஸ்ல ஒரு நாய் வாங்கு"


"வாங்கிடுவோம்"


"ஜனா, உன்னோட டாஸ்க் தான் கொஞ்சம் கஷ்டம், ஆனா ரொம்ப முக்கியமானது"


"வோர்ல்ட் கப்புக்காக என்ன வேணும்னாலும் செய்றேன் விசு"


"ஒரு தடவைக்கு ரெண்டு தரம் நல்லா யோசிச்சிக்கோ"


"வானத்தை வில்லா வளைக்கணுமா, மணலை கயிறா திரிக்கணுமா?"


"ஜனாவோட நாய்க்கிட்டே லைட்டா ஒரே ஒரு கடி மட்டும் வாங்கணும்..."


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

"அன்றாட வாழ்வில் நகைச்சுவை"

"ஹலோ ..."


"வாத்தியாரே !!!!?"

"சொல்லு தண்டபாணி.."

"தண்டபாணியா..? என்ன வாத்தியாரே உடம்புக்கு முடியலையா? "

"உடம்பு ஓகே தான், எனக்கு தான் முடியல! உன் குரல் என்ன அந்த காலத்து கமலா காமேஷ் குரல் மாதிரி சோகமா இருக்கு"?

"இல்ல, ரொம்ப டென்ஷனா இருந்தா தானே என்னை நீ தண்டபாணின்னு கூப்பிடுவ, இல்லாட்டி தண்டம் தானே..!"

"ரெண்டு வாரமா கொஞ்சம் டென்ஷன் தானே"

" ஒரு  முக்கியமான விஷயம்"

"ஒன்னும் முக்கியம் இல்ல, கொரோனா முடியிற வர வெளிய போக கூடாது , வீட்டிலேயே மைண்டைன் பண்ணு"

"இத தான் கேக்க போறேன்னு எப்படி வாத்தியாரே தெரியும்!!!?"

"வீட்டுக்கு வீடு ஜாடிக்கேத்த மூடி தான்"

"பழமொழியை மிக்ஸ் பண்ணிட்ட, அது வீட்டுக்கு வீ....."

"தண்டம், அஞ்சி நிமிசத்துல கூப்புடுறேன் ... கொஞ்சம் பிஸி"

"என்ன வாத்தியாரே... திங்களும் அதுவுமா, ஆபிசில் இருந்தாலே நிதானமா  பேசுவியே, இப்ப ஒர்க் ப்ரம் ஹோம் தானே, என் இப்படி அலறுற?"

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...