ஞாயிறு, 18 டிசம்பர், 2016

டேக் இட் ஈஸி ஊர்வசி

இசை அமைப்பாளர் .. ரஹ்மான் அவர்கள் ஊர்வசி பாடலை மீண்டும் பதிவு செய்ய அதே மெட்டுக்கு புதிய வார்த்தைகள் போட சொன்னார்.. அதற்காக அடியேன் அமைத்த வார்த்தைகள்..

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
உடம்புகிப்போ ஊசி போட தேவை இன்சூரன்ஸ் பாலிசி


ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
உடம்புகிப்போ ஊசி போட தேவை இன்சூரன்ஸ் பாலிசி

வாய்மையே வெல்லுமே சோ  டேக் இட் ஈஸி பாலிசி .
வந்தவரை இலாபம் என்றால் வாழ்க்கையே  ஒரு ஃபேன்டஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி…

கேட்டுக்கோ ரதியே ரதியே! மொத்த குறளும்மு ப்பாலில் தான்....
காமம் தான் இருக்கே இருக்கே  அறமும் பொருளும் அப்பாலே தான் ..

வாய்மையே வெல்லுமே சோ  டேக் இட் ஈஸி பாலிசி .
வந்தவரை இலாபம் என்றால் வாழ்க்கையே  ஒரு ஃபேன்டஸி

ATM போய் எம்ப்டியா வந்தா டேக்  இட் ஈஸி பாலிசி
facebook ல்  FAIR  And LOVELY  போட்டோவா  டேக்  இட் ஈஸி பாலிசி
ஆன்லைன் காதலிக்கு 60 வயசா டேக் இட் ஈஸி பாலிசி
அட்டகாச ஸ்டேட்டஸ்ஸில் ஆட்டைய போட்டா.. டேக் இட் ஈஸி பாலிசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி…

கேளடி ரதியே ரதியே..டாப் அப் செலவோ ஆறு லட்சம்...
தேவை தான்   இல்லையே இல்லையே மிஸ்ட் கால்ஸ் குறைந்த பட்சம்...


வாய்மையே வெல்லுமே சோ  டேக் இட் ஈஸி பாலிசி .
வந்தவரை இலாபம் என்றால் வாழ்க்கையே  ஒரு ஃபேன்டஸி


L   O  L   லொள்ளு கிடையாது...
O  M  G  சொல்லி விளையாடு
ANGRY  BIRD  அவளே என்றாலும்
SMILELY யில் காதலை சொல்லி விடு
Microwaweல்   சூடு பண்ணிவிட்டு
இன்ஸ்டாகிராமில் Chef போல் போஸ் கொடு
முகத்தை அவள் திருப்பி வைத்து கொண்டால்
MUTUAL  FRIENDSல்    தூண்டில் போடு....


கடலை போட கடன்காரன் ஆனா  டேக் இட் ஈஸி பாலிசி...
கொன்றோல் ஆல்டர் டிலிட்ட போட்டு ரீபூட் பண்ணும் பாலிசி.
ட்விட்டர் கணக்கில் தவிக்க விட்டா டேக் இட் எஸ்சி பாலிசி
வாட்சப் message  வ்ராங் நம்பர் போனா டேக் இட் ஈஸி பாலிசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
உடம்புகிப்போ ஊசி போட தேவை இன்சூரன்ஸ் பாலிசி
வாய்மையே வெல்லுமே சோ  டேக் இட் ஈஸி பாலிசி .
வந்தவரை இலாபம் என்றால் வாழ்க்கையே  ஒரு ஃபேன்டஸி


Clearing  Arrears  என்பதை
CA  ன்னு ஸ்டைலா சொல்லி பாரு
சேம் சைட் கோலே போட்டாலும்
 ஸ்டைலா Selfie   ஒன்னு போடு
சிக்ஸ் பேக் உன்னை பார்த்ததும்
சிங்கிள் பேக்கா போச்சுன்னு சொல்லு..
எருமையில் எமனே வந்தாலும்
எமர்ஜென்சின்னு டிராப் கேளு






வெள்ளி, 25 நவம்பர், 2016

நன்றி... நன்றி... நன்றி...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு....


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்நாட்டில் நன்றி திருநாள் கொண்டாடப்படும்.

மதம் - இனம் - நிறம் என்று எந்த வித்தியாசமும் பாராமல் நடைபெறும் ஒரு விழா தானே .. வியாழன் ஆரம்பித்து ஞாயிறு வரை இந்த கொண்டாட்டம் போகும்.

இந்த நாளை பொதுவாக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவர் வீட்டில் சேர்ந்து கொண்டாடுவார்கள். இந்நாளின் உணவையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். வான்கோழி... அனைவரின் வீட்டிலும் வான்கோழி தான் சமைப்பார்கள்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

தென்பாண்டி சீமையிலே...

2016  செப் மாதம் பள்ளி கூடம் துவங்கியதில் இருந்தே மனதில் ஓர் அமைதியின்மை. மூத்தவள் பள்ளி இறுதி வருடமாயிற்றே. அடுத்த வருடம் கல்லூரிக்கு போக வேண்டும்.

பொதுவாக இங்கே இந்தியர்களின் பிள்ளைகள் 100 க்கு 80 %  சதவீதம் கல்லூரியில் என்ன படிக்க போகின்றாய் என்று கேட்டால் அதற்கு வரும் பதில் .. Pre Medicine.

இந்த  Pre Medicine  என்ற படிப்பு இந்திய பெற்றோர்களுக்கு என்றே வந்த சனி என்று தான் சொல்லவேண்டும். இந்த படிப்புக்கு ஏற  குறைய நான்கு வருடங்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்க்கு எக்கசக்க செலவு, அதை முடித்தால் பின்பு மருத்துவ கல்லூரியை சேர்ந்து மருத்துவராகலாம். இந்த Pre Medicine   முடிப்பது என்பது குதிரை கொம்பு. நிறைய பிள்ளைகள் கிட்டத்தட்ட 3   வருடம் படித்து விட்டு தங்களால் முடியவில்லை என்று விலகி கொள்வார்கள்.

அமெரிக்காவின் கல்வி திட்டத்தின் படி ஒருவர் 26 - 28 வயதிற்குள் மருத்துவரானார் என்றல் அது பெரிய விஷயம்.

நானும் சரி - என் தோழமைகளுக்கு சரி முதல் பரம்பரை குடியேறிகள் ( First Generation Immigrants). நாங்கள் இந்தியாவில் படித்ததால் எங்களுக்கு இந்திய கல்வி திட்டம் சற்று தெரியும்.

18   வயதில் +2  முடித்து விட்டு அடுத்த  4 - 5  வருடங்களில் ஒருவர் மருத்துவர் -தணிக்கையாளர் - செவிலியர் - என்று ஏதாவது ஒரு துறையில் சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடலாம்.

திங்கள், 14 நவம்பர், 2016

அமெரிக்காவில் பாக்யராஜின் லொள்ளு !


உறவினர் ஒருவரின் "திருமணம்" மற்றும் ராசாதிக்களின் "கோல்ப் சீசன்"  மற்றும் "அம்மணியின் ஐம்பதாவது பிறந்தநாள்" என்று கடந்த சில வாரங்கள் படு வேகமாக சென்றது.

எழுத எவ்வளவோ இருந்தபோதும், தமிழர்களுக்கு இப்போது பழக்கமாகிய " இன்னும் மூணு வாரத்தில் சரியாகிவிடும்" என்று ஒரு வாக்கியத்தை எழுதி விட்டு, முக்கியமான காரியங்களில் ஈடுபட்டேன்.

இப்போது, திருமணம் - கோல்ப் சீசன் - பிறந்தநாள் மூன்றும் முடிந்து வந்து இருந்த அணைத்து உறவினரும் இந்திய திரும்ப .. இல்லத்தில் இயல்பு நிலை திருப்பியது என்று ஞாயிறு நண்பகலில்  ஒரு பூனை தூக்கம் போடுகையில் . அலை பேசி அலறியது...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்..

என்னை இப்படி ஏமாத்திட்டேயே.. ?

சாரி தண்டம்.. அந்த 5௦௦-1௦௦௦ மாத்தமுடியாதுன்னு  அந்த பணத்தை உனக்கு கொடுத்தவுடன் தான் எனக்கு தெரிய வந்தது!

என்னாது 5௦௦-௦௦௦ மாத்தமுடியாதா? வாத்தியாரே?

அப்படி தண்டம் கேட்கும் போது தான் தண்டத்திற்கு இந்த விஷயம் இன்னும் தெரியவில்லை என்று சுதாரித்து கொண்டு...

இல்ல... ஐநூறாயிரம் பிரச்சனை தண்டம், நான் என்ன ஏமாத்தினேன்னு கேட்டேன்  ?

இம்புட்டு நாளா என்னமோ உலகத்திலே உன்னை மாதிரி யாரும் சமைக்க முடியாதுன்னு சொன்ன?

இன்னைக்கும் அதே தான் சொல்றேன், விஷயத்துக்கு வா.

உனக்கு சமையே தெரியல , சும்மா "டூப்" விட்டு  இருக்கன்னு சுந்தரி சொல்றா?

அட பாவி.. ஏன்..

சனி, 12 நவம்பர், 2016

500 -1000 பற்றிய என் கருத்து .. யாசிரின் மூலம்.

இந்த  பற்றி இவ்வளவு உன் எண்ணங்களை எழுத்து என்று பலர் கேட்டு இருந்தீர்கள். எழுத ஆரம்பிக்க அமர்ந்த நிமிடத்தில் அருமை நண்பர் யாசிரின் பதிவு ஒன்று வந்தது.

வார்த்தைக்கு வார்த்தை நான் சொல்ல வந்தது.. இதோ அவரின் எழுத்தை என் எழுத்தாக படித்து கொள்ளுங்கள்.

யாசிர்... தங்களின் அனுமதி இன்றி இங்கே தங்கள் பதிவின் தொடர்பை கொடுத்துளேன்.  ஆட்சேபனை எதுவும் இருந்தால் சொல்லவும். எடுத்து விடுகின்றேன்.

இந்த பதிவு மட்டும் இல்லாமல் யாசரின் மற்ற பதிவுகளை படித்து பாருங்கள். மனுஷன் என்னமா எழுதுகின்றார்.

நான் எழுதும் எழுத்துக்களை வைத்து என்னை நகைசுவை பதிவர் என்று நீங்கள் அநேகர் அழைத்து இன்றோடு பொய்யாகிவிடும்.

புதன், 9 நவம்பர், 2016

அமெரிக்க தேர்தலில் பிடித்தது...

வல்லரசான அமெரிக்க நாட்டில் வாழ்வதை ஒரு வரமாக கருதுபவன் நான். நன்மை தீமை எங்கும் உண்டு... அதை எடை போட்டு பார்த்து நன்மை தான் அதிகம் என்று எனக்கே ஒரு தீர்ப்பு வழங்கி கொண்டு தான் இந்த வாழ்க்கையை இங்கே ஆரம்பித்தேன்.

இந்த நன்மைகளில் ஒன்று தான் இந்த நாட்டின் தேர்தல் முறை. அதில் எனக்கு பிடித்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

ஆயிரம் நிலவே வா !

அருமை அண்ணன் ஜார்ஜ் அவர்களுக்கு....

சென்ற வாரம் தாம் அடியேனின் இல்லத்தில் இருக்கையில் அடியேனின் இளைய ராசாத்தி என்னை  அலை பேசியில் அழைத்து உடனடியாக இல்லத்திற்கு வர சொன்னாள்.

அலுவலகத்தில் சில முக்கியமான வேளையில் இருக்கின்றேன் என்றேன். அவளோ பிடிவாதமாக உடனடியாக வரவேண்டும் என்ற கட்டளையிட ...

உடனடியாக வண்டியை எடுத்தேன்.

ஐம்பத்திலும் ஆசை வரும்...

என்னங்க ... எப்ப பாரு கம்ப்யூட்டரில் இருக்கீங்க...

அம்மணியின் குரல் கேட்டு அடித்த எழுத்தை கூட சேமிக்காமல் அப்படியே கணிணியை மூடி ...

ஒன்னும் இல்ல செய்தி படிச்சினு இருந்தேன்...

என்ன செய்தி படிச்சீங்க சொல்லுங்க...

தமிழக முதல்வர் எப்படி இருக்காங்கன்னு?

எந்த தளத்தில்...

தினமலரில் தான்..

புதன், 12 அக்டோபர், 2016

வாழும்வரை சாகடிப்போம்...!

இன்று நம் அதிபர் ஒபாமாவின் மேடை பேச்சு ஒன்று கேட்க நேர்ந்தது. நவம்பர் மாதம் வரும் தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க சொல்லி மிகவும் உணர்ச்சிவச பட்டு பேசினார்.

இந்த வாக்கு சீட்டில் என் பெயர் இருக்காது..

ஆனால்...

செவ்வாய், 11 அக்டோபர், 2016

காவல் துறைக்கு ஒரு ஆழ்ந்த கேள்வி!


கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் நாம் அனைவரும் அறிந்ததே.

ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குறைந்ததால் அவசரமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க பட்டார்கள்.

பெரும்பான்மையான தமிழக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வராயிற்றே. ஓர் கட்சியின் தலைமை ஆயிற்றே. அதனால் இவர்களின் ஆரோக்கியத்தை பற்றி பொது மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம் என்பது மிகவும் முக்கியமானது என்பதை கட்சியும் சரி - அரசாங்கமும் சரி - அப்போலோவும் சரி மறந்து விட்டனர்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

Then Sings my Soul.....




Kevin... Kevin...
The public addressing system of the hospital called the doctor. He is the newly joined doctor in Emergency room of the hospital. He was an assistant surgeon for few days since he joined. It was his that day, he was promoted to be the head surgeon. He was in the hospital canteen sipping his tea when he heard his name was called. He gulped down the tea in one swift action and rushed towards the emergency room.
When he was wearing his scrubs, a very familiar person, Ms. Dharti Sheth stood to face him.
Dr. Kevin Morton
“Hi Kevin,” she said.
“Hi”
“Can you handle this operation?” Dharti was worried.
“I am sure I can handle this. But let us have a small prayer for me and the patient first” Kevin said as he took Dr. Dharti’s hands. Her lips started moving involuntarily to a prayer “Dear Lord God above all, there is nothing that misses your attention. You have to be with Kevin when he performs this operation. Amen” She hugged Kevin as he moved to the operation theater to take care of the patient.
Dharti was still not convinced. She noticed his hands were shaking when he held it for prayers. His heart was beating faster when she hugged him. “I should have handled this,” she told herself as she sat on her chair. She had come at 4 PM the day before. It was 8 AM and she had been working continuously. She was more than sixty and before she knew she was out as a day.

Dharti..Dharti..” The public announcement system called out her name. She ran to the operation room.
“What is the matter?” She asked.
“Shooting” the other person answered
“What is his age?”
“A very young lad. He is just twenty”
“Is it drug related?”
“No. He is a very good guy. He goes to the college in the morning and works as the manager in the hotel at nights. He was shot as he was getting in his car to go home. A mugging went wrong”
“Oh My God. Who brought him here?”
“The police of course”
10% Chance of Survival
“Name of the patient, Age and Ethnicity?”
“Kevin Morton, 22, African American”
When Dharti saw Kevin who didn't show any signs of life in the hospital bed, she cried without her knowing. He was very young and he looked handsome too. He also had the sense to go work when he studied instead of partying or doing drugs. Why do bad things always happen to good people? She thought as she started the operation. It was over in few hours but Dharti was not sure. She met Kevin’s parents and his two sisters in the visitor’s room.
“The operation went well. You can go home. God is GoodDharti said. Kevin’s mother could see through her lies and uncertainty. She hugged both her daughters and started crying. Dharti took the father alone to her room.
“His liver is badly damaged because of the bullet he took”
“Will he live?”
“We have done our best. He has 10% chance of survival. It would be a miracle if he wakes up”
“We believe in miracles doctor. I am sure he will come back. Thank you and also keep us in your prayers”
“Sure I will”
It was one week since she completed operation for the young Kevin. He was treated by the post-operative care doctors. But still, Darthi visited him every morning, took his hands for a small prayer before she started his shift. She hoped one fine morning he will be awake and greet her.
He was only unconscious to the outer world. But he was aware of what was going on inside him. On a fateful day, he had finished his shift at the hotel and bought his sisters’ favorite food. He noticed a shadow and before he could realize what was going on, he was shot. He realized his best bet would be to drive to the police station and they would take him to the hospital. When he woke up again, he was in the hospital.
All these days in his mind he was only thinking about his sisters. I couldn’t die. They need me.
Weeks became a month and suddenly one day.
Dharti.. Dharti..
She looked at the public announcement system wearily. I just finished an operation, what is it again? She thought as she rushed to the beds. Kevin’s sisters met her on the way.
“Kevin is awake. He is asking for you” As Dharthi went into the room, Kevin’s mother was also there. She started crying, thanking Dharti. The sisters joined their mother. Dharti took Kevin’s hand which was warmer than usual. “Everything will be alright,” she said.
He asked for a pencil and note to write something. His note to Dharti read “Thank you so much Dr. Dharti. Thanks for not letting me die”
Fighting her tears, she folded the note and kept it with her. In another six months, Kevin was fully recovered.
Kevin was working on his computer when Dharti came to visit him.
“What are you doing there?” She asked.
“I am applying for my degree.”
“In the same college?”
“No. I don't want to be a businessman anymore. I want to be a doctor, just like you”
Dharti was moved and held his hand “Of Course, you want to be a doctor. And guess what, we will make sure you become a damn good one”
For the next seven years, when he toiled with small jobs here and there while pursuing medicine.
At the College
Dharti! My Graduation is next month and I want you to be there with my family” he said. She was there, happy for Kevin and his family. When everybody presented Kevin with something she handed over the same note he had passed to her on his bed seven years ago, with one line added to it.
“Now it is your turn, Kevin. You go and take care of them. Don't let them die. Love. Dharti
Graduation
Kevin came of the stage and hugged Dharti and ....
“How did it go?” Dharti asked.
One Young Kid, Dharti.. so young. Shot in his Chest. Some random shooting. He was so lucky that they brought him right on time.
He was not lucky, Kevin. There's a reason for everything.
Good Times
I don't know Dharti. I just could not let that kid die. I had to keep him alive...
Is that so? May I ask you why?
Dharti.. you should have seen his little Sisters... I wouldn't let this kid die... just for their sake!
Is that so? May I ask you why?
Dharti.. Every Girl needs her Brother

PS:
Friends,
Just happen to read a feel good article in CNN and added up my own thought to give it a story line. To read the actual article, please click below.
http://www.cnn.com/2016/10/07/health/kevin-morton-surgeon-st-john-hospital-detroit/index.html

மருத்துவமனையில் நடந்த அதிசயம்!

கெவின் ... கெவின்...

அலறியது அந்த மருத்துவமனையின் அவசர ஒலி பெருக்கி.

ஆம். .. கெவின் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக சேர்ந்த மருத்துவர். சேர்ந்து சில நாட்கள் துணை  சிகிச்சை நிபுணராக பணியாற்றிய இவர் அன்று தான் துணை பதவியில் இருந்து முதன்மை சிகிச்சை நிபுணராக பணியேற்று இருந்தார். பணியேற்றிய சில மணி நேரங்களில் தான் அந்த ஒலி பெருக்கி ..

கெவின் கெவின் என்று அலறியது..

மருத்துவமனையின் சிற்றுண்டி சாலையில் இருந்த கெவின் குடித்து கொண்டு இருந்த தேநீரை ஒரே முடக்காக குடித்து விட்டு அறுவை சிகிச்சை அறையை நோக்கி ஓடினான்..

அந்த அறையை அடைந்து அதற்காக மேலாடைகளையம் முகமூடிகளையம் அவசரமாக அணிந்து கொண்டு இருக்கும் போது  அவன் எதிரில் அவனுக்கு மிகவும் பரிச்சயமான மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் திருமதி. டார்தி சேத், அவனுக்கு எதிரில் வந்தார்கள்.

ஹை கெவின்..

ஹை..

உன்னால் இந்த சிகிச்சை செய்ய முடியுமா?

டார்தியின் வார்த்தைகளில் ஒரு பயம் கலந்த உணர்வு தான் வெளிப்பட்டது.

கண்டிப்பாக டார்தி..  ஜஸ்ட் செய் எ பிரேயர் பார் மீ அண்ட் தி பேஷண்ட்,  பாஸ்ட் !

டார்தி கெவினின் இரு கைகளையும் பற்றி கொண்டு ...

எல்லாம் வல்ல இறைவனே.. நீ இன்றி ஒரு அணுவும் அசையாது. கெவின் இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது நீ அவனுள் இருந்து இதை செய்யவேண்டும், ஆமென்..
Dr. Kevin Morton
என்று சொல்லி கெவினை கட்டிப்பிடித்து அனுப்பினாள். கெவின் அடுத்த அறைக்கு சென்றான்.

டார்தி மனதிலோ...

அய்யகோ... ஒரு வேளை  இந்த சிகிச்சையை நானே செய்து இருக்கலாமோ... அவன் கையை பிடித்து ஜெபிக்கும் போது ... அவன் கைகள் இரண்டும் நடுங்கியதே..

அவனை கட்டிப்பிடித்து அனுப்பும் போது அவன் இதயம்... அப்படி வேகமாக  துடித்ததே... நாம் ஒரு வேளை அவசரப்பட்டு கெவினை முதன்மை சிகிச்சை நிபுணராகி விட்டோமா? இன்னும் சில காலம் பொறுத்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு ... தன் அறையின் இருக்கையில் அமர்ந்தாள்.

நேற்று மாலை 4 மணிக்கு வேலைக்கு வந்தவள்... இப்போது காலை 8 மணி..வயதும் அறுபதை  தாண்டி விட்டது.. தன்னை அறியாமலே உறங்கினாள்..

சில நொடிகளில்...


டாக்டர் டாரத்தி.. டாக்டர் டாரத்தி.. ஒலி பெருக்கி அலறியது! ... அடித்து பிடித்து ஓடினாள் டாரத்தி. அறுவை சிகிச்சை அறை சென்றவள்...

என்ன கேஸ்?

அஸ் யூஷுவல் ... துப்பாக்கி சூடு.

பேஷண்ட் என்ன வயது..

பாவம்.. சின்ன பையன்.. 20 தான் இருக்கும்.

என்ன ஆச்சி? ஏதாவது போதை பொருள் ..?

இல்ல.. நல்ல பையன் தான். பகல் முழுக்க கல்லூரி போயிட்டு இரவில் மட்டும் இங்கே இருக்க ஒரு ஹோட்டலில் மானேஜராக இருக்கான்.  பாவம்.. வேலை முடிந்து வெளியே வந்து காரில் ஏறினான். பின்னாலே வந்த ஒரு ஆள் இவனை வயிற்றில் சுட்டுட்டு இவனிடம் உள்ளதெல்லாம் திருடிட்டு போய்ட்டான்.

ஓ மை  காட்.. யாரு இங்கே கூட்டினு வந்தா..

போலீஸ் தான்.
10% Chance of Survival
வாட் இஸ் தி நேம் ஆப் தி பேஷண்ட்? ஏஜ் அண்ட் எத்தினிசிட்டி?

கெவின் மார்ட்டன், 20, ஆப்பிரிக்கன் அமெரிக்கன் !

அறையில் சென்று படுக்கையில் கண்களை மூடி மரண நித்திரையில் இருந்த கெவினை பார்த்த டார்தி..  தன்னை அறியாமலே அழுதாள்.

20 வயது.. பார்க்க ஹாலிவ்யூட் பட கதாநாயகன் போல் தோற்றம். கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் வேளையில் மாலையில் வேலை செய்யும் அளவிற்கு பொறுப்பு.

ஆண்டவா.. இது என்ன சோதனை.. இவனுக்கு ஏன் இது? நீ தான் காப்பாற்ற வேண்டும்.. என்று சிகிச்சை ஆரம்பித்தாள். அடுத்த சில மணிநேரங்களில் சிகிச்சை முடிந்தது.

டார்தி வெளியே வந்தாள். அங்கே உறவினர்கள் அறையில் கெவினின் குடும்பம்.. அப்பா- அம்மா மற்றும் அவனுக்கே உயிரான இரண்டு குட்டி தங்கைகள்..

டாக்டர்... என் பையன்...?

ஆப்பரேசன் நல்ல படியா முடிஞ்சது. நீங்க தைரியமா வீட்டுக்கு போங்க.. காட் இஸ் குட்.

என்று டார்த்தி சொல்லிய பொய் கெவினின் தாய்க்கு புரிந்தது.

டார்த்தி சொன்ன எதையும் நம்பாமல் இரு பெண் குழந்தைகளையும் அவள் கட்டி கொண்டு மூவரும் அழ, டார்த்தியோ அந்த தகப்பனை ...

நீங்கள் ஒரு நிமிடம் என் அறைக்கு வர முடியுமா?

அறையில்..

சொல்லுங்க டாக்டர்..

ஐ அம் வெரி சாரி.. உங்க பையனுக்கு நடந்த இந்த துப்பாக்கி சூடு அவன் கல்லீரலில் பாதியை சிதற வைத்துவிட்டது.

டாக்டர்..என் பையன் பிழைப்பானா?

எங்கனால முடிஞ்சது நாங்க செஞ்சிட்டோம். இனிமேல் ... 10% Chance of Survival! மேலே இருந்து ஒரு அதிசயம் வந்தா தான்...

"வி பிலிவ்  இன் மிரக்கிள்ஸ் டாக்டர்".. கண்டிப்பாக என் பையன் பிழைப்பான்.. தேங்க்ஸ். யு ஆல்சோ கீப் அஸ் இன் யுவர் ப்ரேயர்ஸ்.

ஐ வில் ! கண்டிப்பாக..

தகப்பன் அங்கு இருந்து கிளம்ப ..

ஒரு வாரம் ஓடியது..

அந்த ஒரு வாரத்தில் டாரத்தி கெவினுக்கு எந்த சிகிச்சை அளிக்காவிட்டாலும், காலையில் வேலைக்கு வந்தவுடன் அவன் அறைக்கு  சென்று உறங்கி கொண்டு இருக்கும் அவனை பார்த்து அவன் கையை பிடித்து ஒரு ஜெபம் செய்து விட்டு  தான் தன் நாளை ஆரம்பிப்பாள்.

ஒவ்வொரு நாள் அவனை பார்க்கும் போதும்.. இன்றைக்காவது விழிப்பானா .. இன்றைக்காவது விழிப்பானா என்ற ஒரு நப்பாசை.

வெளி உலகத்திற்கு தானே அவன் விழிக்கவில்லை. கண்கள் மூடி கொண்டு இருந்தாலும்.. அவன்  நினைவிலோ...

பணி புரிவது ஒரு ஹோட்டலில் அல்லவா. வேலை முடிந்ததும்.. தன் தங்கச்சிகளுக்கு பிடித்த உணவினை வாங்கி கொண்டு  வாகனத்தில் ஏறிய கெவின்.. வாகனத்தின் அருகில் ஒரு நிழல் வருவதை  கவனித்தான். அவன் சுதாரிப்பதற்கு முன் "டுமீல்" என்ற சத்தம்.

அவனிடம் இருந்ததை எடுத்து கொண்டு வந்தவன் ஓட
.. கெவினின் இருக்கை முழுக்க இரத்தம்.

நொடிக்கு நொடி வலி அதிகரிக்க .. நினைவையும் இழக்க ஆரம்பித்தவன்.. அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு  சென்று விட்டால் அங்கே நம்மை மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று வண்டியை ஓட விட்டு.. ஆனால்பாதி வழியிலே நினைவை இழக்க போவதை அறிந்து அவசர விளக்கை போட்டு விட்டு ...

எழுந்து பார்க்கும் போது.. சிகிச்சை அறையில். இவனுக்கு சற்று நினைவு இருந்தாலும்.. அது அவனுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு தெரியவில்லை.

இவன் மனதில் தோன்றியதெல்லாம்..

என் தங்கைகள்.. நான் உயிர் வாழ வேண்டும். என் தங்கைகளுக்காக.. நான் சாக கூடாது.. சாக மாட்டேன்.. சாகவே மாட்டேன். என் தங்கைகளுக்கு நான் தேவை.

கடந்த ஒரு வாரத்தில் அவன் மனதில் தோன்றிய ஒரே எண்ணம் " அவனின் தங்கைகள் " தான்.


வாரம் மாதமாகியது. கெவினின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற...

டாகடர் டார்தி.. டாக்டர் டார்தி...

ஒலி பெருக்கி அலறியது.

என்ன இது? இப்போது தானே ஓர் அறுவை சிகிச்சை முடித்தோம். அதற்குள் எப்படி அடுத்து ? என்று நினைத்து கொண்டே ஓடியவளின் எதிரில் ...

கெவினின் தங்கைகள் இருவரும் ஓடி வந்தனர்..

டாக்டர்.. கெவின் இஸ் அவெக். ஹி இஸ் டாக்கிங். ஹி இஸ் ஆஸ்கிங் பார் யு.

மூவரும் ஓடினார்கள்.. அங்கே அறையில் கெவினின் தாயும் ..

"தேங்க்யு சோ மச்"  என்று அவர்கள் அழ..டார்தி கெவினின் கையை பிடித்தாள். வழக்கத்திற்கும் மேல் சூடாக இருந்தது.

கெவின்..

கண்ணாலே தான் பேசினான்.

எவெரிதிங் வில் பி ஆல்ரைட்.!

அவனுக்கு வாயில் எதோ ஒரு கருவி போட்டு இருந்ததால்.. எதையோ எழுத வேண்டும் என்று கை  அசைத்து  காட்ட.. ஒரு காகிதமும் பென்சிலும் தரப்பட்டது.

Thank You so Much Dr. Darthi. Thanks for not letting me Die.

படித்த டார்தி அதை மடித்து பையில் வைத்து கொள்ள அனைவரும் ஆனந்த கண்ணீர் விட..

அடுத்த  ஆறுமாதத்தில்...

கெவின் வீட்டில் ... டாரத்தி...

கெவின்.. சும்மா என்ன கம்ப்யூட்டரில் ... என்ன பண்ற?

டார்தி.. ஐ அம் ரெடி பார் காலேஜ் ... அப்பளை பண்றேன்.

நீ படிச்சியே அதே கல்லூரியா?

நோ.. அது பிசினஸ் காலேஜ். ஐ டோன்ட் வாண்ட் டு டூ பிசினஸ் எனிமோர் ..

பின்ன வேற என்ன படிக்க போற?

ஐ வாண்ட் டு பி லைக் யு.. ஐ வாண்ட் டு பி எ டாக்டர்.

டாரத்தி மீண்டும் அவன் கையை பிடித்து ...

அப் கோர்ஸ்.. யு வாண்ட் டு பி எ டாக்டர்.. அண்ட் கெஸ் வாட் ? வி வில் மேக் சுவர் தட் யு பி கம் எ டாக்டர்.

அடுத்த ஏழு வருடங்கள்.. படிப்பு. சிகிச்சை.. சிறிய சிறிய வேலை..
கல்லூரியில் 

டார்தி...

அலை பேசி அலறியது.

டெல் மி  கெவின்...

அடுத்த மாதம் எனக்கு பட்டமளிப்பு விழா. ஐ வாண்ட் யு டு பி தேர் வித் மை டாட்.. மாம் அண்ட் சிஸ்டர்ஸ்.

பட்டமளிப்பு விழா சீராக நடக்க.. அன்று இரவு.. நிகழ்ச்சியில் அனைவரும் கெவினை பாராட்டி அவனுக்கு பரிசளித்து கொண்டு இருந்தனர்.

டார்தியின் முறை வந்தது. இரு சிறிய தாளை அவன் கையில் வைத்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தாள்.


பட்டமளிப்பு விழா 

அந்த தாளை பார்த்த கெவினின் கண்கள் அவனை அறியாமலே ஈரமானது.  அதில் அவன் கைப்பட எழுதிய...


Thank You so Much Dr. Darthi. Thanks for not letting me Die.

என்று எழுத்தோடு.. கூடவே.. டார்தியின் கைபட எழுதிய.. 

Now it is your turn Kevin. You go and take care of them. Dont let them Die.

Love 

Darthi 

என்று எழுதி  இருந்தது.

மேடையில் இறங்கி வந்த கெவின் டார்தியின் தோளில் மேல் கையை வைத்தான்.

ஹாய் டார்தி?

கெவின்? 

ஆபரேஷன் எப்படி போனது...?
Happy Times. 
One Young Kid, Daarthi.. so young.. Shot in his Chest. Some random shooting. He was so lucky that they brought him right on time.

He was not lucky, Kevin. Theres a reason for everything.

I dont know Daarthi.. I just could not let that kid die. I had to keep him alive...

Is that so? May I ask you why?

Darthi.. you should have seen his little Sisters... I wouldnt let this kid die... just  for their sake!

Is that so? May I ask you why?

Daarth.. Every Girl needs her Brother. 


பின் குறிப்பு :

நண்பர்களே,  அடியேன் பதிவுகள் எழுத ஆரம்பித்து ரெண்டு வருடங்களாகி விட்டன. இந்த இரண்டு வருடங்களில் நான் எவ்வளவோ எழுதி இருந்தாலும் நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு இது தான்.

அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சற்றே கற்பனை கலந்து படைத்துள்ளேன் . 

தயவு செய்து எப்போதும் போல் படித்து விட்டு போய் விடாதீர்கள். Anonymous  போல வந்தாவது தங்களின் நிறை குறைகளை சொல்லுங்கள். 


இந்த உண்மை  சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க...இங்கே சொடுக்கவும்.

http://www.cnn.com/2016/10/07/health/kevin-morton-surgeon-st-john-hospital-detroit/index.html

நன்றி. 



ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ரோஸ்ட் (ROAST ) என்ற நகைச்சுவை நிகழ்ச்சி.

மனித இனத்தை மற்ற ஜீவன்களோடு வேறுபடுத்தும் ஒரு விஷயம் நகைச்சுவை. பசி - தாகம் - கோபம் - காமம் என்ற உணர்வுகள் அணைத்து ஜீவன்களுக்கும் இருந்தாலும் நகைச்சுவை என்ற ஒரு உணர்வு மானிட குலத்திற்கு மட்டுமே சொந்தம்.

வளரும் வயதில் சார்லி சாப்ளின்  -  ஐ லவ் லூசி - நாகேஷ் - சந்திரபாபு போன்றோர்களின் நகைசுவையை ரசித்தவன் தான்.  இவர்களின் நகைச்சுவை யாரையும் புண் படுத்தாமல் இருக்கும். ஒரு பாத்திரத்தை நையாண்டி தானம் செய்தாலும் அந்த பாத்திரத்தில் தானே நடித்து அதை நையாண்டி செய்வார்கள்.

அதன் பின்னர்.. என்னை அறியாமலே நான் முட்டாள் தனமாக ரசித்தவர்கள் ..

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

The Untouchables.....


“Dad, Whats our caste?” asked my little princess as she got in the car. I was taken aback.
“What did you ask?”
“What is our caste dad?”
“Why do you want to know?”
“No, they asked me in school.”
“Oh dear. I came 9000 miles away and am sending you school so that you will not be touched by this caste, religion and creed stuff. It is sad to see it is catching up so fast. Why does your school wants to know which caste you belong to?”
“Daddy, we are learning about the caste structure in India in our history classes. My teacher knows that I am an Indian. So I was asked to tell my caste”
“Oh! I was afraid if the segmentation has come to schools in the USA as well”
“Now tell me”
“Just tell them you don’t believe in caste and stuff.”
“At least tell me what caste mean”
“I honestly don’t know dear”
“How do you determine one’s caste?”
“I don’t”
“Our teacher said the caste is determined by the work they do. Is that true?”
“We can’t be sure”
“She said the barber belongs to one caste, the carpenter to another and business people belong to a different caste. She said that is how they determine the caste”
“I am not sure. But I know this. It is very cheap and silly to segment people based on their caste. Just let them know my concern”
“Will you or will you not tell your caste?”
“I won’t”
“Can I ask mother?”
“No. That would be a mistake. She is a Tamil from Yazhpanam. They are really short tempered”
“Is that a caste too?”
“No, it is a race”
“I am totally confused”
Next day, after school she got into the car...
“We had a skit today in school based on the caste. They asked us to choose a caste ourselves and each one can be of a caste”
“Oh,” I said uninterested.
“Can you guess my caste?
“Dear, We do not talk about caste even if it is for a game”
“Chill Dad. It was just a skit”
“There are thousands of things one can learn from India. All they chose was caste”
“Listen. There was a big fight while selecting the caste”
“No surprise there dear. When caste intervenes, fights follow. But what was the fight about?”
“We needed four boys to pick the caste of Untouchables”
“Nobody volunteered, is it?”
“No, all 40 boys wanted to be untouchables”
I resisted the urge to slam the brake and listen to the whole story. “But why?”
“They all wanted to be untouchables. They are so unique and strong. Nobody will be able to touch them or mess with them, they are like some kind of Superman".
I smiled. I never thought untouchables in that way.

திங்கள், 12 செப்டம்பர், 2016

அமெரிக்க தமிழனும் - தமிழ் ரத்னாவும்.

நேற்று இரவு உறங்கும் முன் நண்பர் ஒருவரின் அழைப்பு வந்தது.


சொல்லுங்க...

விசு அமெரிக்க தமிழர் யார்?

ஆமா.. இவ்வளவு நாள் தமிழர் யாருன்னு கேட்டுனு இருந்திங்க? இப்ப அமெரிக்க தமிழர் யாரு? ரொம்ப முக்கியம்.

சீரியஸ் ..அமெரிக்க தமிழர் யார்?

அப்படி ஒரு ரகமே இல்லை. தமிழை தாய்மொழியாக கொண்டோர் இடம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வசிப்பவர்கள் என்று வைத்து கொள்ளலாம்.

சரி...சந்தோசம்.

தமிழருக்காக நீங்க என்ன செய்து இருக்கீங்க.

இந்த விஷமம் தானே வேண்டாகுன்றது. தமிழருக்குஆகா தமிழநாட்டில் நீங்க தேர்ந்தெடுத்த தலைகளையே ஒன்னும் செய்யல ..
நாங்க என்னாத்த செய்ய போறோம்?

அப்புறம் "தமிழ் ரத்னா " என்ற ஒரு விருதை உருவாக்கி அதை கொடுக்கறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?
உலக தமிழரின் கௌரவத்திற்கு உழைத்ததற்காக ... 
(இப்பவும் இந்தியா தானே.. இதுல என்ன Former?)

டேய்.. இந்த தமிழ் ரத்னா எல்லாம் எனக்கு தெரியாது. நான் கொடுக்குறது " நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்வோர் விருது" அதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. இருந்தாலும் வேறே வேறே விருது...

சீரியஸ் விசு.. அமெரிக்க்கா தமிழ் சங்கத்தில் இருந்து .. தமிழ் ரத்னா என்ற விருதை சுபராமணிய ஸ்வாமிக்கு தந்து இருக்காங்க.

தமிழ் ரத்னா ... .சுனா சானாக்கா? எதுக்கு ?

."For his Service to enhance the Prestige of Global Tamils:......."

நீ சும்மா தமாஷ் பண்ற? எனக்கு வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்.

விசு, எனக்கு வர கோவத்துக்கு... நீ  தப்பிக்க பாக்குற!

எனக்கு .. சரி.. கேக்க ... ள்ளைன்னு நானே விட்டு விட்டு பேசி தொடர்ப்பை துண்டித்து... விசாரித்தேன்.

உண்மையாகவே தான் இவருக்கு அமெரிக்க தமிழ் சங்கம் என்ற ஒரு அமைப்பில் இருந்து இந்த விருதை தந்து இருக்கின்றார்கள்.

இந்த அமைப்பிற்கு இப்படி ஒரு விருதை தர யார் உரிமை தந்தார்கள் என்று தெரியவில்லை.

யு டுயூப் சென்று இந்த நிகழ்ச்சியை  கண்டேன். மூன்று பேர் மேடையில் உள்ளார்கள்.

மொத்த நிகழ்ச்சியும்  ஆங்கிலத்தில் நடந்தது. அந்த பகுதியில் வாழும் அறிந்த  நண்பர் ஒருவரை அழைத்து, நீங்க சென்று இருந்தீர்களா என்றேன்?

அவரோ..

ஏதோ கலந்துருடையாடல் என்று கூறினார்கள். இருந்தாலும் நான் செல்லவில்லை. மொத்தமே 15-20 பேர் தான் சென்று இருப்பார்கள்.. என்றார்.

இதனால் என் இனிய தமிழ் மக்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால்... இந்த விருதுக்கும் அமெரிக்க வாழ் தமிழ் மகனாகிய எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.  இந்த விருதை பற்றி அடியேனின் கருத்துக்களை முக நூலில் இட்டு இருந்தேன்... அதை கீழே படிக்கலாம்.


************************
அமெரிக்க தமிழ் சங்கத்தில் இருந்து தமிழ் ரத்னா விருது பெற்ற சுனா சானாவிற்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கமும் உடனடியாக இலங்கை தமிழ் ரத்னா என்ற விருதை வழங்குமாறு...

நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் சங்கம் சார்பாக பணிவோடு கேட்டு கொள்கிறோம் .
                                                                 ************************
நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் விருதில் ஒரு இன்ப அதிர்ச்சி .
இவ்வளவு நாளாக இந்த விருதை நாம் நமக்கு தெரிந்தோர்க்கு அளித்து வந்தோம். இம்முறை.. இந்த விருதை ஒரு விருதுக்கு கொடுக்கும் வாய்ப்பை பெற்று இருக்கின்றோம்.
இந்த வாரத்திற்க்கான விருது ... தமிழ் ரத்னா விருதுக்கு ..

                                                        ************************
அமெரிக்காவில் பொது இடத்தில குப்பையை போட்டதால் சுப்ரமணிய ஸ்வாமிக்கு அபராதம்.
குப்பையை எடுத்து பார்த்ததில்... ஒரு கட்டையினால் செய்த சட்டத்தில் "தமிழ் ரத்னா " என்று எழுதி இருந்தது.

                                                            ************************


இதுதாங்க அந்த தமிழ் ரத்னா மொமெண்ட்...
எல்லாரும் எழுந்து நின்னு ஒரு முறை " நீராரும் கடலெடுத்த" பாடிட்டு ... புளியோதரை இனமா தரங்களாம் சாப்பிட்டு போங்க..
By the Way ... அமெரிக்காவில் இந்த விருதை ஆர்டர் பண்ண 8 டாலர் ஆகியிருக்கும். ஒரு வேளை இந்தியாவில் 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பாங்களா?
                                                           ************************
சரி.. நம்ம தகுதிக்கு நாமும் ஏதாவது செய்து வைப்போம்.
அமெரிக்க தமிழ் வழிவந்தோர் சங்கத்தில் இருந்து தமிழ் ரத்னா விருது வழங்க போகின்றோம்.
தமிழே தெரியாத.. தமிழுக்கு சம்மந்தம் இல்லாதா ஆட்கள் யாராவது இருந்தா சொல்லுங்க..
இந்த விருதை அனுப்பி வைக்கிறோம்.
                                                           ************************
அட பாவிகளே..
கொஞ்சம் பெருமையா அமெரிக்க வாழ் தமிழன் என்று வண்டிய ஒட்டின்னு இருந்தேன்.
அதுக்கு இந்த அமெரிக்க தமிழ் சங்கம் வைச்சாண்டா ஆப்பு.
உண்மையா சொல்றேங்க.. யாராவது இந்த அமைப்பை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
எந்த தகுதியில் சுனா சானாவிற்கு தமிழ் ரத்னா என்ற விருதை கொடுத்தாங்கன்னு கேக்கவேணும்.
                                                           ************************
இன்னாபா நடக்குது உங்க ஏரியாவில் .... தமிழ் ரத்னா ன்னு வைச்சு தாக்குறீங்களாமே..
இந்த விருதுக்கான கலிபோர்னியா உரிமையை எங்களுக்கு தர முடியுமா?
நானும் இதை ரெண்டு மூணு பேருக்கு தரலாம்னு இருக்கேன்.

                                                           ************************

புதுக்கோட்டையில் மொத்தம் எத்தனை பேர் இருக்கீங்க.. ஒன்னும் இல்ல ... தமிழ் ரத்னா விருது ஆர்டர் பண்ணனும்.. மொத்தமா பண்ண சீப்பா இருக்கும் இல்ல ... அதுதான்,

                                                           ************************
On a serious note.... American Tamil Sangam has awarded Tamil Ratna ... to Dr. Subramaniya Swami..."For his Service to enhance the Prestige of Global Tamils:.......
Wow.. I am flabbergasted... More like Conked to the Gills and Blown to the Lungs...

                                                           ************************

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...