செவ்வாய், 21 ஏப்ரல், 2020

வடிவேலும் நானும் ...

ஏற்கனவே பலமுறை கூறியதை போல், ரஜினிகாந்தின் பாபா படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி சென்ற நான் படம் துவங்கிய 15  - 20 நிமிடத்தில் வெளியேறி, நமக்கு வயசாகி விட்டது (அப்போது மிட் 30 'ஸ் ) இனிமேல் சினிமா  நமக்கு ஒத்து வராது , இதை ரசிக்கும் தன்மை இழந்துவிட்டேன் என்று படம் பார்ப்பதை ஒதுக்கி விட்டேன்.

இருந்தாலும் மக்களை பெற்ற  மகராசன் தானே நான் அதனால் ராசாத்திக்கள் என்றாவது கண்டிப்பாக போகனும்னு அடம்  பிடிச்சதால் சில ஆங்கில படங்கள்.. அதிலும் தீயேட்டரிலே குறட்டை.






பாபாவிற்கு பிறகான படத்தைதான் தவிர்த்தேன்  (அதற்கு பிறகு வந்த படங்களில் ஒரு ஐந்து அல்லது ஆறு படங்கள் பார்த்து இருப்பேன்)  மற்ற படி.. யு டுயூப்பில் இருக்கும் பழைய படங்களை இன்னும் ரசித்து கொண்டு தன இருக்கின்றேன். சென்ற வாரம் கூடன் ரஜினியின் கழுகு என்ற படத்தை ரசித்து விட்டு.. 80  களில் இப்படி ஒரு படம்.. இப்படி ஒரு இசை.. என்று வியந்தேன்.

இந்த படம் பார்ப்பதை நிறுத்தியதை இந்தியாவில் இருந்து வந்த நண்பர் ஒருவரிடம் சொல்ல..



"அட பாவி..உனக்கு காமடி தான் பிடிக்குமே.. அந்த காலத்தில் அனுபவி ராஜா
  அனுபவி மற்றும் பாமா விஜயம்.. இந்த மாதிரி படங்கள் எங்க வந்தாலும் போய் பாப்பியே.. அதை கூட மிஸ் பண்ணலையா..!!?

"தமிழில் காமடி நல்லா தான் இருக்கும்.. ஆனா, கௌண்டமணி செந்தில் காமடி இப்ப போர் அடிக்குது. எப்ப பார் இவரை அவரு சட்டி   தலையா.. பானை மண்டையான்னு சொல்லிட்டு எட்டி உதைக்கிறதை எல்லாம் ரசிக்க முடியல.."

"இன்னாது? கௌண்டமணி செந்திலா!!!? விசு.. இப்ப வடிவேலுன்னு ஒரு காமெடியன்.. மவன் பின்னுறாரு!!"

"வடிவேலா?"

"தேவர் மகன் படத்துல நடிச்சாரே .. கவனிக்கல"

"தேவர் மகன் பாக்கல"

"அத்தையுமா பாக்கலா! அட பாவி.. அது தெய்வ காவியமாச்சே.. "

"அதனால தான் பாக்குல "

"சரி வடிவேலுக்கு வருவோம், சரியான காமடி விசு.. "

என்று சொல்லி யு டுயூப்பில் சில காட்சிகளை போட்டு காட்ட, வடிவேலுவின் காமெடிக்கு அடிமையாகி விட்டேன்.

நல்ல இயற்கையான நடிப்பு. நல்ல டைமிங் சென்ஸ். கிராமம் மற்றும் பட்டிணம் இரண்டிற்கும் ஏற்ற முக சாயல். மற்றும் தன்னை தானே முட்டாள் என்று காட்டி கொண்டு சிரிப்பு வரவைக்கும் யூகம்.

சரி .. தமிழ் படங்களை அறவே புறந்தள்ளினாலும் யு டுயூப்பின் அருளினால்  வடிவேலை ரசித்து வந்த வேளையில்.. நம்மாளுக்கு வாயில் சனி..

தேவையில்லாமல் அரசியலில் புகுந்து தேவையற்ற வார்த்தைகளை அறிவில்லாமல் உதறிவிட்டு.. நான் சினிமாவில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் முட்டாளாக இருப்பேன் என்று நிரூபித்து ..சினிமா உலகத்தில் இருந்து காணாமல் போனார்.

அங்கே இருந்து தான் காணாமல் போனார்.. ஆனால் சமூக வலைத்தளங்களின் புண்ணியம்.. மீம்ஸ் க்ரீயேட்டர்ஸின் கனவு நாயனாக  மீண்டும்  பிறவி எடுத்தார். சென்ற ஆண்டு வந்த "Pray for Nesamani" யை யாரால் மறக்க முடியும்?

அனைத்து கட்சி அனைத்து மதத்தினராலும் ஒருவரை ஒருவர் கலாய்க்க வேண்டுமென்றால்.. இவரின் ஏதாவது ஒரு ஸ்டில் போதும். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும்.

இப்படி இருக்கையில்.. இன்று காலை காப்பியை பருகி கொண்டே தளத்தை தட்ட, எதிரில் வந்த ஓவரின் மீம்ஸ்..

ஓ மை காட்  ..வாய்விட்டு சிரிக்க வைத்தது. காபியை சட்டையில் கொட்டி விட்டு.. சூட்டினால் பட்ட அவதியையும் மறந்து..

அப்படி என்ன மீம்..? அதற்குமுன் மீம்ஸின் பின்னணி..

கடந்த சில வருடங்களாகவே.. சமூக வலைத்தளங்களில் வெறுப்பு அரசியல் கை ஓங்கி இருக்கின்றது. இந்த நிலை பிடிக்காமல் தான் நான் கூட முகநூல் மற்றும் ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டேன். அப்படியே வெளியேறினாலும் சில நடப்புகள் மூலமாக.. முகநூலில் வரும் மீம்ஸ் வந்து சேரும். பார்த்து சிரிப்பேன்..

சென்ற வாரம் வளைகுடா நாட்டில் இருக்கும் இளவரசி ஒருவர்.. மத வெறுப்பாக யாராவது ஏதாவது பதிவு செய்தால் அவர்கள் கைது செய்ய பட்டு நாட்டை விட்டு அனுப்ப படுவார்கள் என்று சொல்லி இருந்தார்கள். நான் அறிந்தவரை சில BJP ஆட்கள் வளைகுடா பகுதியில் வசித்து  கொண்டு இவ்வாறான பதிவுகளை போட்டு வந்தனர்.  சரி, இந்த இளவரசியின் அறிவிப்பிற்கு பிறகு இவர்கள் என்ன பதிவு போடுகின்றார்கள் என்று விசாரிக்கையில்.. அனைவரும் .. வேலை பளுவின்   காரணத்தினால்  முக நூலில் இனி வரமுடியாது. அதனால்  மீண்டும் சந்திக்கும் வரை  முகநூலை டீ ஆக்டிவேட் செய்து விட்டு போகிறோம்  என்று அடித்து பிடித்து ஓடி இருக்கின்றார்கள்.

வேலை பளு .புரிகின்றது.. அதற்கு அப்படியே விட்டு சென்று இருக்கலாமே.. அதை ஏன் டீ ஆக்ட்டிவேட் செய்ய வேண்டும்? யாராவது பழைய பதிவுகளை நொண்டி எடுத்து புகார் செய்து விட்டால்?

இந்த அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் நீங்கள் எப்போதெல்லாம் இம்மாதிரியான விஷத்தை கக்குகின்றீர்களோ.. அதை யாரோ ஒரு புண்ணியவான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து இருப்பான். அதனால் நீங்கள் டீ ஆக்டிவேட் செய்வதால் எந்த பயனும் இல்லை. உப்பை தின்னவன் தண்ணியை குடித்ததை போல்.. நீங்களும் பயனை அனுபவிக்க வேண்டும்.

இந்த இளவரசி அறிக்கையின் பிறகு.. இன்னொருவர் பங்களூர் BJP  MP  சூர்யா அவர்கள் அரபி மகளிரை மிகவும் தரந்தாழ்த்தி எழுதிய பதிவை மீண்டும் பகிர... விஷயம் இன்னும் கொந்தளித்து கொண்டு இருக்கின்றது.

பல வளைகுடா நாடுகள் காலத்தில் குதிக்க .. நேற்று பல இந்தியாவில் இதுவரை இஸ்லாமியரை தர்ம தாழ்த்தி வந்த  முத்திய பக்திகள், இஸ்லாமியரை திடீரென்று  போற்றி புகழ்ந்து சில பதிவுகளை பகிர..அதனால் வந்த மீம்ஸ் தான் அடியேனின் சிரிப்புக்கு காரணம்.

4 கருத்துகள்:

  1. வடிவேலு இல்லையென்றால் ஏதுமில்லை என்கிற நிலை எப்போதோ ஆகிவிட்டது...

    பதிலளிநீக்கு
  2. ///வேலை பளு .புரிகின்றது.. அதற்கு அப்படியே விட்டு சென்று இருக்கலாமே..///

    அப்படியே அவர் விட்டு சென்றால் அவர் வேலை அப்படியே இருக்காதே என்ற பயம்தான்.....

    நிறைய பேருக்கு டீஅக்டிவ் பண்ணிவிட்டால் அவர் எழுதிய தகவலை பெற முடியாது என நினைக்கிறர்கள் அரசாங்கம் நினைத்தால் எல்லாவற்றையும் நோண்டி எடுக்க முடியும் என்பது அந்த அறிவு ஜீவிக்கு தெரியாமல் போய்விட்டது

    பதிலளிநீக்கு
  3. வடிவேலும் காமெடியை மிகவும் ரசிப்பதுண்டு. 23 ஆம் புலிகேசி பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..நல்ல பாடி லேங்குவேன் டயலாக் டெலிவரி...அஃப்கோர்ஸ் எல்லா காமெடியிலுமே டயலாக் டெலிவரி அண்ட் அவரது பாடிலேங்குவேஜ் அதற்கு அப்புறம் வந்த காமெடியன்கள் கூட அவ்வளவாக ரசிக்க வில்லை. நுழலும் தன் வாயால் கெடும்..கெடுத்துக் கொண்டார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. Geetha
    //23 ஆம் புலிகேசி பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்//

    Nope. I heard that Vadivel did the the heroes role in that movie. I could only enjoy his comedy for few minutes not hours!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...