Showing posts with label nadigar sangam. Show all posts
Showing posts with label nadigar sangam. Show all posts

Thursday, July 28, 2016

கபாலி தோல்வி ... என்ன சொல்லவருகின்றார் வைரமுத்து...


என்ன தான் அனுபவம்  இருந்தாலும் சில நேரங்களில் பொது இடங்களில் மேடை பேச்சுகளில் "ஆனைக்கும் அடி சறுக்கும் " என்பது போல் எவருக்கும் தடுமாற வாய்ப்புண்டு.

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த ஆங்கில பேச்சாளர் .... அவர் திருமண விழாவில் நன்றி அறிவிக்கையில்...

" I thank everyone from the bottom of my heart and my Wifes bottom too...."

என்று நன்றி கூறியதை  எப்படி மறக்க முடியும்?

சில நேரங்களில் பட்டிமன்றத்தில் மற்றும்  பொது இடத்தில் அடியேன் உபயோகித்த தவறான வார்த்தைகள் தான் எத்தனை... எத்தனை..? அதை வைத்து தொடர் பதிவே போடலாம்.

சிலர், பேசுகையில் ... நகைசுவையாக பேசுகின்றோம் என்று நினைத்து சொதப்பி விடுவார்கள்.. நகைச்சுவை என்பது ஒரு உணர்வு. அது அனைவருக்கும் கிடைக்காது. நகைச்சுவையை செயற்கையாக நம் இயல்பான வாழ்க்கையில் சேர்த்தோமானால் அது விவஸ்தையாக  தான் முடியும்.

சரி தலைப்பிற்கு வருவோம்.


கபாலி தோல்வி  என்று வைரமுத்து பொது மேடையில் பேசினார் என்று ஒரு செய்தி வந்தது. இந்த செய்தியை படித்ததும்.. எனக்கு முதலில் உதித்த எண்ணம்...

அட பாவி... ஒரு வேளை இந்த படத்தில் வைரமுத்துவிற்கு பங்கு இல்லையா...மற்றும்.... தமிழின் அடுத்த நம்பிக்கை கார்க்கி வைரமுத்துவுக்கு பங்கு இல்லையா?

இவர்கள் இந்த படத்தில் பணி புரியவில்லை என்று ஊர்ஜிக்கப்படுத்தி கொண்ட பின்னர், ஒரு வேளை ... இது பொறாமையா? அல்ல ஒரு இளம் இயக்குனர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்ற ஒரு வெறுப்பா?

என்று நினைத்தேன்.

பேரரசு ஆயிற்றே.. ஒரு வேளை, இவர் புகழ்ச்சி வஞ்சில் (அதுதாங்க வஞ்புகழ்சசிக்கு எதிர்பதம், இதுக்கு சரியான வார்த்தையை பின்னூட்டத்தில் போடுங்க)  பேச வந்ததை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்களா.. ?

இருக்காதே.. காலையில் கக்கூசுக்கு போனேன் என்பதை கூட பேரரசு நிறுத்தி
 நிதானமாக.... அவருடைய சிம்ம குரலில்...

காலையில் கக்கூசுக்கு போனேன்.....

நான் ...

வாங்காத  கடன் தீர்க்க

காலையில் காகக்கூசுக்கு போனேன் ..

அப்படின்னு நின்னு நிதானமா தானே பேசுவார்..

மக்கள் தவறாக புரிந்துகொள்ள முடியாதே ..

என்று நினைத்து கொண்டு ... காணொளியை தட்டினேன்.

வைரமுத்து பேசி கொண்டு இருந்தார்..

பா ரஞ்சித் ... கோட்.... கபாலி --- என்று ... நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து கொண்டு சொதப்பி கொண்டு இருந்தார். இவர் நகைசுவை என்று நினைத்து பேசி கொண்டு இருந்ததற்கு சிலர் சிரிக்க..  அடுத்து...

புரிந்து கொள்வதை பற்றி பேசினார்,,,

அதை புரிந்து கொண்டேன்.. இதை புரிந்து கொண்டேன் என்று பேசி கொண்டே வந்த பேரரசு ..

"கபாலியின் தோல்வி... காபாலியின் தோல்வி"  என்று இரண்டு முறை
 நிதானமாக பேசினார்.

இந்த செய்தி வெளியே வந்ததும், இப்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் ... நான் இங்கே ஒரு வார்த்தையை விட்டுவிட்டேன்... சொல்ல வந்த்ததே வேறு என்று புலம்ப ஆரம்பித்தார்.

வைரமுத்து அவர்களே....

"சட்டியில் இருப்பது அகப்பையிலே ... புத்தியில் இருப்பது வார்த்தையிலே.."

கவியரசின்  பாடலை தாம் நிச்சயமாக கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த கருத்தையே பயன் படுத்தி... தாம் எழுதிய....

"தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து .."

என்ற வார்த்தைகளும் எவ்வளவு உண்மை.

சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள்.. இப்ப சாக்கு போக்கு எதுக்கு?

பின் குறிப்பு :

இந்த வார நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் விருதை பெறுபவர்... பேரரசு..

இவருக்கு பேரரசுன்னு பெயர் வந்த கதைக்கு இந்த விருதை இவருக்கு வாழ்நாள் விருதா தரலாம்.. அது வேற கதை..

ஒரு வார்த்தையை விட்டுட்டேன்.. ஒரு வார்த்தையை விட்டுட்டேன்னு சொல்றாரே.. ஒரு வேளை அவர் சொல்லவந்தது....

கபாலியின் (படு) தோல்வி... கபாலியின் (படு) தோல்வி...யா..

கூடுதல் செய்தி... 

கபாலி படம் கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் என்று என்னை அறிந்த சில நல்ல உள்ளங்கள் சொன்னதால்..இந்த வார இறுதியில் பார்க்க இருக்கின்றேன்.


அறிந்த நண்பர் ஒருவர் பேரரசின் இந்த பேச்சுக்கான தொடர்பை இணைக்க சொன்னார்.. அவர் விருப்பத்திற்கு இணங்கி... இதோ.... எங்கே பார்த்து விட்டு சொல்லுங்கள் அவர் என்ன வார்த்தையை தவற விட்டார் என்று ..?





Wednesday, October 28, 2015

"பராசக்தி"யில் இருந்து "படையப்பா" வரை...

இது ஓர் தொடர் பதிவு ..

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."



இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் .

(ரஜினியின் "முரட்டுகாளை" &  கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!)


மூன்றாம் பாகம் .... கீழே தொடருகின்றது..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான்,

விசு சார் ...எப்படி இருக்கீங்க ..?

நல்லா இருக்கேன்.

என்று சொல்லி நான் திரும்பி பார்க்கையில்.. எதிரில்..

மீண்டும் பேய் அறைந்தவனை போலானேன் ..

என்று சொன்னேன் அல்லவா .. ஏன் என்று பார்ப்போம்.

விசு என்று அழைத்தவுடன், அடே டே, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நம்மை பெயர் சொல்லி அழைக்கவும் யாரோ இருகின்றார்கள் என்று திரும்பி பார்த்தால் அங்கே சினிமா இயக்குனர் -கதை வசனகர்த்தா விசு நின்று கொண்டு இருந்தார். அவரை யாரோ எப்படி இருக்கீங்க என்று கேட்க்க... நான் பதிலை சொல்ல..

மன்னிக்கவும் .. என் பெயரும் விசு தான் .. அதுதான் உங்கள் கேள்விக்கு நான்  பதில் சொல்லிட்டேன்.

Tuesday, October 27, 2015

ரஜினியின் "முரட்டுகாளை" & கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அந்த பதிவை படித்து விட்டு இங்கே வந்தால் இன்னும் நன்றாக புரியும். அதை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."(தொடர்ச்சி..1)


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான், அப்படி என்ன ஒரு எதிர் பாராத காட்சியை காட்சியை பார்த்தேன்.

திரும்பி பார்த்த நான் அக்காலத்து மாமன்னர்கள் உடையணிந்த இரண்டு மன்னர்களையும் மற்றும் அவர்கள் இருவரின் மத்தியிலும் நடந்து வந்த ஒரு மூதாட்டியும் பார்த்தேன். நான்காம் வகுப்பில் நான் படித்த வரலாற்று நாடகம் நினைவிற்கு வர அந்த மூதாட்டியை அவ்வையார் என்று அறிய நிறைய நேரம் பிடிக்கவில்லை. அம்மை அவ்வையார்... அப்போது அந்த மன்னர்கள்... ஒருவேளை ...அதியமானும் .. தொண்டைமானும்..

Monday, October 26, 2015

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."

என்ன டாடி, காலையில் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றிங்க?

அடியே, நான் பெத்த ராசாத்தி, இன்னைக்கு என்ன தேதி ..

அக்டோபர் 25, 2018, அதுக்கு என்ன இப்ப?

அதுக்கு என்னவா? ரெண்டு வருஷம் கழித்து  இந்தியா வந்து இருக்கோம் . அதுவும் மெட்ராசுக்கு (அது என்னவோ போங்க.. இந்த சென்னை என்ற பெயர் வாயில் நுழைய மாட்டுது), இன்னைக்கு பெரிய பிளான்.

என்ன பிளான்?

மகள், நம்ம ஊரில் ஹாலிவுட்டில் இருக்கிற "யுனிவர்சல் ஸ்டுடியோ" போல், இங்க தமிழ் சினிமாவின் வரலாறை பற்றி எடுத்து சொல்லும் ஸ்டுடியோ ஒன்னு திறந்து இருக்காங்க.

Wednesday, October 7, 2015

கருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி !

கடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு "கருணாஸ்  ஒரு ரெகார்ட் டான்சர்" என்று ஒரு கிண்டல் அடித்தார்.


"கருணாஸ்  ஒரு ரெகார்ட் டான்சர்" என்பது உண்மையா என்று எனக்கு தெரியாது . அப்படியே இருக்கட்டுமே. அது என்ன பெரிய குற்றமா?

தெருவில் ரெகார்ட் டான்ஸ் ஆடி கொண்டு இருந்த ஒருவர் திரை உலகில் தன் திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று நடிகர் சங்கத்து துணை தலைவராக போட்டி இடுகின்றார் என்றால், அது பாராட்டதக்க விஷயமே தவிர, கிண்டல் பண்ண வேண்டிய விஷயம் அல்ல.

Sunday, October 4, 2015

TR & சிம்பு : நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என்ன ஆங்கிலேயரா ?

அன்புள்ள சிம்புவின் அப்பா ..

நான் சொல்லவருவதை நீங்க எடுக்ககூடாது தப்பா ..!

கடந்த பல வருடங்களாக தம்மை கவனித்துவரும் ஒருவனாக இந்த பதிவை  எழுதுகிறேன்.

திறமையில் உங்கள் குடம் "நிறை"
அதில் நாங்கள் பார்க்கவில்லை "குறை'

பின்ன இந்த பதிவு எதற்கா ?.

இதோ சொல்கிறேன், கேளுங்கள்!

எப்போது எங்கே போனாலும் ...

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...