வியாழன், 18 ஜூன், 2020

குஜராத்திகளின் நாட்டு பற்றும் ஏனைய இந்தியர்களின் தேச துரோகமும்!

சில நாட்களாக இந்திய சீன பிரச்சனையில் நாடு முழுக்க நிறைய கேள்விகள் சந்தேங்கங்கள் என்று கிளம்பி கொண்டு இருக்கின்ற வேளையில் சில வடஇந்திய சமூக விரோதிகள் தமிழருக்கு நாட்டு பற்று இல்லை என்று கூவி கொண்டு வருகின்றனர்!

அனைத்து வட இந்தியரையும் சொல்லவில்லை, வடஇந்தியாவை சார்ந்த சங்கிகளும் சரி மற்றும் தமிழ் நாட்டை சார்ந்த சங்கிகளும் சரி இப்படி ஒரு புரளியை கிளப்பி கொண்டு வந்து இருக்கின்றார்கள்.

இம்மாதிரியான சங்கிகளுக்கு நாட்டுப்பற்று மற்றும் வீரம் மற்றும் தமிழரின் குணம் வரலாறு என்று எதுவும் தெரியாது அதை தெரிந்து கொள்ள  ஆர்வமும் இல்லை. அவர்களுக்கு தேவை எல்லாம் மோடி மற்றும் பாஜாகவை  பாராட்டி கொண்டு இருப்பதே.

யாரவது மோடி மற்றும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால், உடனே அவர்கள் தேச துரோகி, ஆன்டி இந்தியன், அர்பன் நக்ஸல்ஸ், என்று வாய் கிழிய பேசுவார்கள்.

இவர்கள் மோடியின் ஆட்சியை பாராட்டி பேசுவதற்கு வைக்கும் முதல் காரணம் "குஜராத் மாடல்". இந்த மாடலை பற்றி பேசியே மக்களின் பேராதரவை பெற்றதால் , இந்தியாவில் என்ன நடந்தாலும் குஜராத்தை பற்றியும் குஜராத்திகளை பற்றியும் பேச மாட்டார்கள்.

இப்படி தமிழர்களின் நாட்டுப்பற்று மற்றும் வீரத்தை கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

1971 வருடத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் போர் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த போர் காலத்தில் இந்திய ராணுவத்தை வழி நடத்தி இந்தியாவிற்கு மகத்தான வெற்றியை பெற்று தந்தவர் Field marshall Sam Manekshaw.  போரில் இவரின் நடத்தைக்காகவே இவரின் பெயரே "Sam the Brave" என்று ராணுவத்தினரால் அழைக்கப்பட்டது.

இந்த போர் முடிந்த சில நாட்களில் சாம் ஒரு முறை குஜராத் செல்ல நேரிட்டது. அங்கே ஒரு கூட்டத்தில் பேச அவரை அழைக்க அவரும் அங்கே சென்று ஆங்கிலத்தில் பேச துவங்கினார். கூட்டத்தில் அமர்ந்து இருந்த குஜார்த்திக்கள்

"ஆங்கிலம் வேண்டாம்.. குஜராத்தியில் பேசுங்கள், குஜராத்தியில் பேசுங்கள் "

என்று கூக்குரலிட, சாம் ஆங்கிலத்திலேயே பேச்சை துவங்கினார்.

இதோ அந்த ஆங்கில பேச்சு ..

"Friends, I have fought many a battle in my long career. I have learned Punjabi from men of the Sikh Regiment; Marathi from the Maratha Regiment; Tamil from the men of the Madras Sappers; Bengali from the men of the Bengal Sappers, Hindi from the Bihar Regiment; and even Nepali from the Gurkha Regiment. Unfortunately there was no soldier from Gujarat from whom I could have learned Gujarati.”

தமிழாக்கம்.

நண்பர்களே, என் ராணுவ வாழ்வில் நான் நிறைய போர்களை சந்தித்து இருக்கின்றேன். இந்நாட்களில் நான் பஞ்சாபி வீரர்களிடம் இருந்து பஞ்சாபி கற்றுகொண்டேன். மராத்தியர்களிடம் இருந்து மராத்தி கற்று கொண்டேன், தமிழர்களிடம் இருந்து தமிழை கற்றுக்கொண்டேன் பெங்காளிகளிடம் இருந்து பெங்காளி கற்று கொண்டேன். பீஹாரிகளிடம் இருந்து ஹிந்தி கற்று கொண்டேன். கூர்க்காக்களிடம் இருந்து நேபாளி மொழி கற்று கொண்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக ராணுவத்தில்  குஜராத்திகள் ஒருவரும்  இல்லாதால் குஜராத்தி மொழி கற்று கொள்ளமுடியவில்லை.

இதை சொன்னது யாரோ ஒருவர் அல்ல. முந்தைய இந்திய ராணுவ தலைமை அதிகாரி.

இதை படிக்கும் சங்கிகள் கூட..

அட.. இப்படியா சொன்னார்? இவர் பெயரை பார்த்தால் கிறிஸ்துவ பெயர்  போல் இருக்கின்றதே. இவர் கண்டிப்பாக வெளிநாட்டு கிறிஸ்துவ மிசினரி கைக்கூலியாக தான் இருப்பார் என்றும் சொல்வார்கள். ஏன் என்றால் அவர்களின் அறிவின் அளவு அவ்வளவே.

சரி! இது அந்த காலம், இப்ப எல்லாம் மாறிடிச்சி என்று கூறுபவர்களுக்கு ஒரு  கூடுதல் தகவல். சென்ற வாரம் இந்திய சீன தகராறில் இருபது இந்திய வீரர்கள் இறந்தார்கள் அல்லவா.. அவர்களில் மாநில வாரிய கணக்கு..

1 சந்தோஷ் பாபு - ஹைதராபாத் (தெலுங்கானா)
2 நுணுரம் சோரன் - மயூர்பானிஜ் (ஒடிஷா)
3 மந்திப் சிங் - பாட்டியாலா (பஞ்சாப்)
4 சத்னம் சிங் - குருதேவ் புரதம் (பஞ்சாப்)
5 K.தங்கம் - மதுரை (தமிழ்நாடு)
6 சுனில் குமார் - பாட்னா (பீகார்)
7 பிபுல் ராய் - மிர்சா (உத்திரபிரதேசம்)
8 தீபக் குமார் - (மத்திய பிரதேசம்)
9 ராஜேஷ் முகூர்த்தி - பிர்பாம் (மேற்கு வங்காளம்)
10 சாஹிப் கஞ் (ஜார்கண்ட்)
11 கணேஷ் ராம் - கங்கின் (சத்யா)
12 சந்திரயான் பிரைம் - கந்தமால் (ஒடிஷா)
13 அன்குஷ் தாகூர் - ஹிமாச்சல் பிரதேஷ் (ஹிமாச்சல் பிரதேஷ்)
14 குர்பிந்தர் - சங்க்ருர் (பஞ்சாப்)
15 குருதேஜ் சிங் - மான்சா (பஞ்சாப்)
16 தொடர்புக்கு (பீகார்)
17 குந்தன் குமார் - சர் ' ஹாசா (பீகார்)
18 அமன் குமார் - சமஸ்டிபுரா (பீகார்)
19 ஜெய் கிஷோர் சிங் - வைனாலி (பீகார்)
20 கணேஷ் ஹன்சா - கிழக்கு சிங்பீம் (ஜார்கண்ட்)



இறந்த ஒவ்வொரு வீரருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி மற்றும்  வீரவணக்கம் அவர்தம் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.




இதில் ஒருவர் கூட குஜராத்தி அல்ல. அது சரி, அப்ப குஜராத்திகளுக்கு நாட்டு பற்று  இல்லையான்னு என்னை கேட்பவர்களுக்கு..

கண்டிப்பாக இருக்கின்றது என்று தான் நினைக்கின்றேன்..

இல்லாவிடில்..

பிரதமர்
உள்துறை மந்திரி
CBI தலைமை
RBI  தலைமை
BCCI தலைமை


என்ற பதவியில் எப்படி வந்து இருப்பார்கள்?

1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...