சனி, 5 ஜூலை, 2014

பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !

இது கோடை விடுமுறை, இந்தியாவில் வாழும் உங்களுக்கு அல்ல, கடல் தாண்டி இங்கே அமெரிக்காவில் வாழும் எங்களுக்கு. இந்தியாவில் கோடை விடுமுறை  மார்ச்ல் ஆரம்பித்து மே மாத கடைசியில் முடிந்து விடும். ஆனா இங்கே இந்த விடுமுறை ஜூன் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் வரை போகும்.



கோடை விடுமுறை எப்போது என்பது முக்கியம் அல்ல, ஆனால் அதை பிள்ளைகள் எப்படி கழிக்கின்றனர் என்பது தான் முக்கியம். இந்த விஷயத்தில் இந்தியாவிலும் இங்கேயும் சிலபெரிய வித்தியாசங்களை பார்க்கின்றேன். நான் இங்கே தொடர்ந்து எழுதும் கருத்துக்கள் என் குடும்பதிலும் என்னை சார்ந்தவர்களையும் பற்றி. ஆதலால் இதை எல்லோருடைய வாழ்க்கையிலேயும் என்று எண்ணி பார்க்காதீர்கள்.

என்னை பொறுத்தவரை "விடுமுறை" என்பது, நாம் மற்ற நாட்களில் செய்யும் தினசரி காரியங்களை 'விடும் முறை". இந்நாட்களில் நாம் நன்றாக ஓய்வு பெற்று வரும் நாட்களில் ஒழுங்காக படிக்க-வேலை செய்ய நம்மை தயார் செய்து கொள்ளவேண்டும். ஆனால் நான் கண்டவரை இந்தியாவில் பள்ளி நாட்களை விட விடுமுறை நாட்களில் தான் பிள்ளைகள் மிகவும் கடினமாக படிக்கின்றனர். இந்த பிள்ளைகளை பார்கையில் மனம் நொந்து விடுகிறது. விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ், இது தேவையா? என்னை பொறுத்தவரை என் பிள்ளைகள் கோடை விடுமுறையை விளையாட்டிலேயும் இசை பயிற்சியிலும் தான் செலவு செய்வார்கள். மற்றபடி இந்த சிறப்பு வகுப்பு எல்லாம் இல்லை.

சரி இந்த வருட  கோடை விடுமுறையை எப்படி கழிக்கின்றோம் என்று இப்போது பார்ப்போம்.ஒன்றும் இல்லை, இந்த வருடம் என் வீட்டு அம்மணியும் என் இரண்டு கண்மணியும் உற்றார் உறவினரோடு பார்த்து பேசி பழக மூன்று வாரத்திற்கு இந்தியா சென்று உள்ளனர். நான் இங்கே தனியாக தான் உள்ளேன்.

நான் அவர்களை விமான நிலையத்தில் ஏற்றி விட்டு வரும் வழியிலேயே நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.


சித்தப்பு, அது எப்படி உன்னால மட்டும் இப்படி யோசித்து காரியத்த செய்ய முடியுது?

மாப்பு, நீ என்ன சொல்ல வர என்றே புரியில்ல.

இல்ல சித்தப்பு, 4 வருஷத்திற்கு ஒரு முறை வர உலக கால்பந்து போட்டி நேரத்தில் இவ்வளவு அழகா பிளான் பண்ணி இவங்க மூணு பேரை அனுப்பி வைச்சிட்டியே, நீ படா கில்லாடி பா.

மாப்புஅப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, இது பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை போல்

என்னாது? காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை என்று தானே சொல்லுவார்கள், நீ என் மாத்தி சொல்லுர?

பழமொழி சொன்னா ரசிக்கனும், கூட கூட கேள்வி கேட்க கூடாது. இது எல்லாம் பிளான் பண்ணி பண்ற விஷயம் இல்ல மாப்பு, மனசு நல்லா வைச்சி இருந்தா இது எல்லாம் தானா நடக்கும்.

அது சரி சித்தப்பு, மூணு பெரும் எப்ப திரும்புறாங்க?

உலக கோப்பை  இறுதி ஆட்டம் முடிந்த அடுத்த நாள் .

அதை   கேட்டவுடன் அவனுக்கு பொறாமையில் மயக்கமே வந்து விட்டது.
அந்த மயக்கத்திலும் கூட அவன் 'நோ தங்கமணி என்சாய்னு' சொல்லி போனை வைச்சான்.

இதை படிச்ச நீங்களே சொல்லுங்களேன்.. நான் என்ன பிளான் பண்ணியா இவர்களை அனுப்பி வைச்சேன்?

தொடரும்...


செலவு எட்டணா... வரவு எப்படியண்ணா?

2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...