சனி, 12 ஜூலை, 2014

கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்!


ஏன் சொல்லுறன்? நிதானமா கேளுங்கோ. இயக்குனர் சிகரத்தின் பரம ரசிகனாக இருந்த நான், நடுவில் சில நாட்கள் அவர் எடுத்த படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். ஏன் தெரியுமா? வீட்டில் உள்ள பெண்களிடம் வாங்கும் திட்டே தாங்கமுடியாது, அதை மறக்க படம் பார்க்க போகலாம் என்றால், இவர் சரிதாவையும், சுகாசினியையும் வைத்து நம்மை நம் சொந்த செலவிலே திட்டி வைப்பார். சரி, அதற்க்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம்? நிதானம் ப்ளீஸ்..

நான் இங்கே எழுத போவது "நினைத்தாலே இனிக்கும்" என்ற படம் தான். அது விஸ்வநாதன் அவர்களின் 1000மாவது படம் என்று கூட நினைக்கிறேன்   (எங்கேயோ, எப்போதோ படித்த நினைவு, ஆனால் கண்டிப்பாக கூறமுடியாது). அருமையான கதை, அட்டகாசமான நடிகர்கள், வெளி நாட்டு ஷூட்டிங், சூப்பர் காமடி, இதை எல்லாம் விட அருமையான இசை.

சில நாட்களுக்கு முன்னால் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை காணும் வாய்ப்பு கிடைத்தது.  அதை பார்த்து முடித்தவுடன் வந்தது தான் இந்த நினைப்பு " கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்"!சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த படம் இந்நாளில் எடுக்க பட்டு இருந்தால் இது ரீலீசே ஆகி இருக்காது என்று நான் நினைத்தேன். ஏன் என்று சில கருத்துக்களை அலசி எடுப்போம்.

 இந்த படத்தின் மிக சிறந்த காமடியே, ரஜினி காந்த், பூர்ணம் விஸ்வநாதனிடம் சவால் விட்டு சிகரெட்டை  பத்து முறை தூக்கி போட்டு வாயில் பிடிக்க முயல்வது. வெறும் வாயில் மெல்லும் இக்கால அரசியல் வாதிகளுக்கு இந்த காட்சி.. அவல் அல்ல, பபிள் கம் போட்டது போல்...இந்த காட்சியை வைத்தே ஒரு 6 தடை வாங்கி இருப்பார்கள். இந்த காட்சி படம் பார்ப்பவர்களை சிகரெட் பிடிக்க ஊக்குவிக்கும் மற்றும், சிகரெட் மட்டும் இல்லாமல் மற்றும் பிஸ்கட், பீடா, வாழைபழம் எல்லாவற்றையும் மக்கள் இந்த மாதிரி தூக்கி போட்டு பிடித்தால் நம் தமிழ் கலாச்சாரம் என்ன ஆகும் என்பாடு தான் இவர்களின் விவாதம்.

அடுத்து, இந்த சாவலுக்கான பரிசே டொயோடா கார். இந்த டொயோடா காரை பூரணம் விஸ்வநாதன் மீண்டும் மீண்டும் சொல்வதால், அவர் அந்நிய நாட்டு சாதனங்களை மறைமுறமாக ஆதரிக்கிறார் என்று அடுத்த கூட்டம் கிளம்பி அடுத்த தடை.

"முக்கா பாட்டில் விஸ்கி, அரை பிராண்டி, கொட்டர் ரம் எல்லாம் கலக்கி காக்டைல்" இந்த வசனத்திற்கு அடுத்த கட்சி மற்றும்  பல தடைகள். பள்ளிகூட கல்லூரி மாணவர்  இந்த காட்சியை பார்த்தால் தவறான வழியில் செல்வார்கள். இதனால் அடுத்த பரம்பரைக்கே கேடு என்ற அடுத்த வாதம்.

"குடிச்சிட்டு பேசறன்னு நினைக்காத? கல்யாணம் மட்டும் பண்ணிக்காத..' இந்த காட்சி -  வசனத்தின் மூலம் தமிழ் கலாசார பரம்பாரியமான திருமணம் வேண்டாம் என்றும், ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் இல்லாமல் வாழலாம் என்று வாலிபரை உற்சாக படுத்துவதால் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இந்திய நாட்டில் பல நல்ல இடங்கள் இருக்க சிங்கப்பூரில் இதை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை, இதனால் அந்நிய செலவாணி மதிப்பு குறைந்து நாட்டின் பொருளாதாரமே சீர் குலைய வாய்ப்புள்ளது என்று மற்றொரு கட்சியின் வாதம்.

தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை பார்த்தவுடன் ரஜினி, "சிங்கப்பூரில் வந்து நான் சாமியாராக வேண்டுமா" ? என்ற கேள்வி சாமியார்களின் பெயரையே கெடுத்து விட்டது. சாமீர்யார்கள் என்றால் என்ன "எடுப்பார் கை பிள்ளையா"? அவர்கள் என்ன அழகான பெண்களிடம் தான் பழகுவார்கள் என்ற தவறனா கருத்தை இது மக்களின் மேல் புகுத்துகிறது என்று அடுத்த குற்ற சாட்டு..மேலும் பல குற்ற சாட்டுகள்.

அதனால் தான் சொல்லுகிறன்,  ரொம்ப ராசியானவர் K.Balachander. இந்த படம் இந்த காலத்தில் எடுத்து இருந்தால் " பிரேமாலய பிலிம்ஸ் " போண்டி ஆகி இருக்கும்.

இந்த படத்தை பார்த்த மற்ற இடுகையர்கள், மற்ற குற்றசாட்டுக்களை பின்னோட்டத்தில் போட்டால் மகிழ்வேன்.

பின் குறிப்பு:

என் வாலிப வயதிலே இந்த படத்தை பார்த்து ரசித்தவன் நான். அன்றும் ரசித்தேன், இன்றும் ரசிக்கிறேன். ஆனால்  புகை-குடி-குட்டி என்று என்று இந்த படத்தை பார்த்து என் வாழ்கையை அழித்துகொள்ளவில்லை. ரசித்தேன்..அவ்வளவு தான்!

http://www.visuawesome.com/

5 கருத்துகள்:

  1. படத்திற்கு குத்து பாட்டு அவசியம் என்று சொன்னதால் எனக்கும் அவர் ராசியானவராகி விட்டார்,விசு ஜி !
    த ம ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பின்னோடத்திற்கும் நன்றி. விசு என்று அழைத்தாலே போதும்.. ஜி அவசியம் இல்லை.

      நீக்கு
    2. சரிங்க ஜி இல்லை , இல்லை விசு !

      நீக்கு
  2. நன்றி தனபாலன். உங்கள் ஊக்கத்திற்கு .....

    பதிலளிநீக்கு
  3. இந்த விசுஜியும் பகவான்ஜி யும் விவாதம் பண்ணும்போது இந்த பரதேஜிக்கு இங்கு என்ன வேலைஜி

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...