சனி, 16 மே, 2020

பிஜேபி யின் ஆசிர்வாதம் ஆச்சாரி மற்றும் வலதுசாரி ஸ்ரீராம் சேஷாத்திரி மற்றும் சிலர் கவனத்திற்கு.

மேலே படிக்கும் முன் இணைப்பில் உள்ள காணொளியை ஒரு முறை பாருங்கள். ப்ளீஸ்!


                                             குஜராத்தில் தவிக்கும் தமிழர்கள்! 



திரு ஆச்சாரி அவர்களே..

நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தாம் ... புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எல்லாம் வழியெங்கிலும் சுட சுட சாப்பாடு வழங்கப்பட்டது உள்ளது என்றீர்கள்.


திரு சேஷாத்திரி அவர்களே


இன்று ஒரு விவாதத்தில் பட்டினியால் யாராவது இருந்தார்களா?  புள்ளிவிவரம் தர இயலுமா என்று சவால்விடீர்கள். (இந்த காணொளியை பார்த்து விட்டு இவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்களே என்று புலம்பாதீர்கள். இந்த வாழ்க்கைக்கு மேல் சாவதே மேல்.)

பிரதமர் மோடி அவர்களே..

தங்களின் குஜராத் மாடல் சந்தி  சிரிக்கிறது. மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் வந்து மாயாஜால வார்த்தைகளை அள்ளி  விடுவதை விட்டு விட்டு ஒரு குடும்பத்தையாவது காப்பாற்றுங்கள்.

எஸ் வீ சேகர் அவர்களே..

பதிமூணு பாக்கெட் பால் . என் பணம், நான் நான் வாங்கினேன். நீங்க யாரு கேக்குறதுக்கு ?  உங்க பணம் தான் நீங்க வாங்கினீங்க தான்.  அந்த பணம் இல்லாமல் பலர் பச்சிளங்குழந்தைகளை கையில் வைத்து கொண்டு படும் பாடுகளை  கொச்சை படுத்தாதீர்கள்.

2 கருத்துகள்:


  1. இதையெல்லாம் இங்க பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை தம்பி , நமக்கு ரத்த அழுத்தம் கூடிப்போவதுதான் நடக்கிறது

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...