புதன், 28 பிப்ரவரி, 2018

முன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..


சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில்  தோழி புவனா கருணாகரன்  ..

"வாஷிங்டன் அருகே வசிக்கும் தமிழர்கள் கவனத்திற்கு" என்று ஒரு அழைப்பிதழ்  அனுப்பி இருந்தார்.

அதில் கார்த்திகேயன் சிவசேனாதிபதியுடன் ஒரு சந்திப்பு என்று அச்சிட பட்டு இருந்தது.

மெரினாவில் ஜல்லி கட்டு போராட்டத்தின் போது கேள்வி பட்ட பெயர், மற்றும் இணைய தளத்தில் இவரின் பேச்சை கேட்ட அனுபவம்., நேரம் இருந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நாள் குறித்து கொண்டேன்.

நடுவில்.. மனதில் சில கேள்விகள்?

இந்த சந்திப்பினால் என்ன சாதிக்க போகின்றோம்?

யாருக்கு பயன்?

என்பது உட்பட...

இருந்தாலும்..  பல ஆயிர டாலரகளை வீணடித்து மார்க்கெட்  போன நடிகை மற்றும் டைரக்டர்களை அழைத்து வைத்து கொண்டு..

உங்கள் இருவரில்.. முதலில் யார் "ஐ லவ் யு" சொன்னார்கள் என்று கேட்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பதில் இது கண்டிப்பாக புதிய முயற்சி என்ற  எண்ணம் மனதில் வந்தது.

நாளும் வந்தது..

வாஷிங்டன் பகுதியில் நமக்கு அறிந்த சில முக நூல் நண்பர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு போவதில் மூலம் அவர்களையும் சந்திக்கலாம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றெண்ணி மாலை நான்கு மணி நிகழ்ச்சிக்கு அந்த அரங்கை சேர்ந்தேன்.

அரங்கில்  நுழைகையில், மணி நான்கை  தாண்டி இருந்தது. யார் கவனத்தையும்  கெடுக்க கூடாதென்று மிகவும் அமைதியாக அரங்கில் நுழைந்த எனக்கு ஒரு அதிர்ச்சியில்லா விடயம் தான் தென் பட்டது.

நிகழ்ச்சிக்கான மேடையையும் மற்றும் ஒளி -  ஒலி வகையாறாக்களையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக சரி செய்து கொண்டு இருந்தனர்.

முகநூல் புகை பட சாயலில் இருந்த நண்பர் ஒருவருடன் நேரே சென்று அறிமுக படுத்தி கொள்ள..

அவரும் ..

இன்ப அதிர்ச்சியில்  மூழ்க  ( அப்படி தான் சொன்னாருங்க ) ..மற்றும் சிலரை அறிமுக படுத்தினார்.   மணி கிட்ட தட்ட ஐந்து ஆக..

நிகழ்ச்சி நான்கு என்று போட்டு இருந்தீர்கள்..ஐந்து ஆகி விட்டதே...?

பனி - மழை - போக்குவரத்து நெரிசல்...

மனதிலோ..

அடே.. அடே.. தமிழகன் எங்கே நிகழ்ச்சி நடத்தினாலும் இந்த மாதிரி எதிர்பாராத பிரச்சனைகள் வந்து அவனை ஒரு நிகழ்ச்சியையும் சரியான நேரத்தில் நடத்த விடமாட்டேங்குதே ..

என்று நினைக்கையில்..,

அவரோ..

இதோ வந்து கொண்டே இருக்கின்றார்..

என்று உறுதி அழைக்க..
'
ஒலி பெருக்கியில்.. தேநீர் மற்றும் பக்கோடா விற்பனைக்கு உள்ளது என்ற அறிவுப்பு வர..

பக்கோடா.... நாட்டின் வேலை வாய்ப்பிருக்கும் சரி.. வயிற்றின் பசிக்கும் சரி  .. என்று நினைத்து கொண்டே...

அங்கே சென்று அவை இரண்டையும் பெற்று கொண்டு வந்து அமருகையில்..


எதிரில் முக நூல் தோழி ஒருவர் இருக்க அவரிடம் நட்ப்பை  பரிமாறி கொண்டு இருக்கையில்..

யாழ்ப்பாணத்தை சார்ந்த அம்மணி ஒருவர்..

அவிக நேரத்துக்கு வெளிக்கிட்டாலும்  போக்குவரத்தில் நெரிசலாகி அங்கே சாலையில் நிக்கிறாங்களாம்.. நாம எதுக்கு நேரத்தை  வீணடிக்கணும்.. யாராவது உங்களுக்கு தெரிஞ்ச ஜல்லிக்கட்டை பத்தி கதையுங்கன்னு .. விண்ணப்பம் தர..

நம்ம தான் வெறுங்காலிலே ஆண்டவர் பாணியில் ஆடுவோமே.. இவங்க வேற சலங்கையை கட்டி விட்டுட்டாங்களே என்றெண்ணி ..

மைக்கை பிடித்து சிறு வயதில் நான் ரசித்த மஞ்சு விரட்டு ( இது ஜல்லி கட்டு அல்ல)  நிகழ்ச்சியை பற்றி  கதைத்தேன்.

என்னை தொடர்ந்து இன்னும் சிலர்...

அவரவர்கள் ஊரில் .. ஜல்லி கட்டு எப்படி இருந்தது என்பதை பற்றியும்,  ஜல்லி கட்டில்தங்களுக்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்பதை பற்றியும் மிகவும் அழகாகவும் நகைசுவையாகவும் எடுத்து சொல்லி கொண்டு இருக்கையில்..

சிறப்பு விருந்தினர் வந்து விட்டார் என்ற செய்தி காதில் எட்ட .. ஐந்து நாற்பத்தி ஐந்திற்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

தமிழ் தாய் வாழ்த்து.. ..

அனைவரும் எழுத்து நிற்க .. தமிழ் தாய் வாழ்த்தை பாடி நிகழ்ச்சி ஆரம்பிக்க .. வாஷிங்டன்  தமிழ் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சால்வைகளை போற்ற.. கார்த்திகேயன் சிவசேனாதிபதி   உரையை ஆரம்பித்தார்,.

அவர் பேசுகையில், நான் குறித்து கொண்ட சில விடயங்கள்..

ஜல்லிகட்டின்  பூர்விகம்..
ஜல்லி கட்டின் அவசியம்..
ஜல்லி கட்டின் நிர்வாகம்..
ஜல்லி கட்டின் எதிர்காலம்..
ஜல்லி கட்டை எதிர்ப்பவர் யார்?
ஜல்லி கட்டை இவர்கள் எதிர்ப்பது ஏன்?

என்று எடுத்துரைத்து மட்டும் அல்லாமல்..

நாளைக்கே அமெரிக்காவை விட்டு தமிழகம் சென்று உடனடியாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு தவறு .. நிதானம் மிகவும் அவசியம் என்பதை மிகவும் சீராக விளக்கினார்.

மற்றும் ....

மெரினா புரட்சியில்  நான் அறியாத பல தகவல்களை சொன்னார். அவர் பேசி முடிந்தது.. கேள்வி நேரம் என்று அறிவிக்க பட..

இது ஆரம்பிக்கும் முன்னர்.. அமெரிக்காவில் ஏதோ  ஒரு இந்தியனுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றெண்ணி இன்னொரு பிளேட் பக்கோடாவை அடித்து பிடித்து வாங்கி கொண்டு வந்து என் இருக்கையில் அமர...

அடேங்கப்பா.. எத்தனை கேள்விகள்.. ஒவ்வொன்றும்.. திருவிளையாடலில் தருமி சிவபெருமானை கேட்ட கேள்விகள்.. பதிலும் அவ்வாறே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்த பாகமே .. இந்த கேள்வி நேரம் தான்..

அதில் சில கேள்விகள்.

ஜல்லி கட்டை காப்பதின்  மூலம் இந்த நாட்டு காளைகளை காப்பது எப்படி சாத்தியம்?

இந்த காளைகள் காப்பதில் மூலம் விவசாயம் எப்படி காப்பாற்ற படுகின்றது?

தமிழகத்தில் .. நிலம் உரிமையில்லா விவசாயிகள் தான் அதிகம், அவர்களால் இந்த காளைகளை எப்படி பராமரிக்க முடியும்?

மெரினா புரட்சியில் தமிழக அடுத்த தலை முறையினரின் ஒழுக்கம் தலை சீர் தூக்கி நின்றது. இதை எப்படி ஆவண படுத்தி  அடுத்த தலை முறைகளுக்கும் எடுத்து செல்வது?

ஜல்லி கட்டிற்கென்று மெரினா சென்ற தமிழர்கள் மற்ற தமிழின பிரச்சனைகளுக்கும் போராடுவார்களா?

ஜல்லி கட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கையை எதிர்க்கின்றார்களே ஏன் ( நான் தான் கேட்டேன்) ?

சிறு விவசாயிகளிடம் இருந்து பணக்கார வியாபாரிகள் நிலத்தை அபகரிக்கின்றார்களே அதை எப்படி தடுப்பது?

என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட.. திரு சிவசேனாதிபதி அவர்கள் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் தகுந்த பதில்களை தந்தார்.

மணி எட்டை தொட. ஒலி பெருக்கியில்.. இரவு உணவு தயார் என்று சொல்ல.. நண்பர்கள் சிலர் விசுவிற்கு நான் தான் வாங்கி தருவேன் என்று தமிழனின் விருந்தோம்பலை காட்ட. .

எனக்கோ...

உறவினர் ஒருவர் எட்டரைக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடு.. என் வூட்டுக்காரி பிரியாணி ( எப்படி ஒவ்வொரு வூட்டு காரும் இதே டயலாக்கை  சொல்றாங்க)  மாதிரி நீ சாப்பிட்டதே இல்லை என்று சொன்னது நினைவிற்கு வர ..

கையோடு  எடுத்து சென்ற கடந்த வருடம் வெளிவந்த "விசுவாசமின் சகவாசம்" என்ற புத்தகத்தின் மூன்று பிரதிகளை அங்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டு கிளம்பினேன்.

நிகழ்ச்சி மிகவும் பிடித்து இருந்தாலும்.. குறையை கண்டிப்பாக சொல்லித்தானே ஆகவேண்டும்..

இம்மாதிரியான நிகழ்ச்சியை தயவு செய்து சொல்லிய நேரத்தில் ஆரம்பிக்கவேண்டும்.

புத்தகத்தை வாங்கி கொண்ட மூவரில் ஒருவராவது.. ஒரு சில பக்ககங்களை படித்து இந்நேரத்திற்கு  நிறை குறைகளை சொல்லி இருக்க வேண்டும்..


பின்குறிப்பு :

கேள்வியை மட்டும் போட்டு இருக்கியே விசு? அவர் என்ன பதில் சொன்னாரு?

அதை எப்படி நான் சொல்வது? நீங்களும் அவரை உங்கள் ஊருக்கு வரவழைத்து கேளுங்கள். மார்க்கெட் போன நாடக காரர்களையும், சினிமா காரர்களையும்,  பட்டிமன்ற நிபுணர்களையும் அழைத்து பணத்தை விரயம் செய்வதற்கு மேல் , இது எம்புட்டோ மேல்.

புதன், 7 பிப்ரவரி, 2018

உங்க பொன்னான கைகள் ....

இந்த வாரம் முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தேன்.. அதற்கான வினையும் எதிர் வினையும் கொஞ்சம் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது...

என் பதிவு

//ஏங்க.....ரெண்டு மூணு பாத்திரம் தான்.. கொஞ்சம் அலசிடுறிங்களா?

பை ஆல் மீன்ஸ்...நீ இங்கே இருந்து கிளம்பு.. கழுவுறேன்.

நான் இங்கே இருந்தா தான் என்ன?

நமக்கு சின்ன வயசில் இருந்தே யாராவது சூப்பர்விஷன் செஞ்சா கை கால் வேலை செய்ய்யாது !

என் இனிய ஆண் குலமே.. உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா? //

இந்த பதிவிற்கு ...  சிவ குமரன் என்ற நண்பர்...

//கரெக்டுதான், பக்கத்துல இருந்து பாத்துகிட்டே, நூத்தியெட்டு நொள்ளை சொல்லுவாங்க. தேநீர்ப் பாத்திரத்துல, அந்த ஓரமா, கருப்பா புள்ளி மாதிரி தெரியுதுன்னு, சொல்லி வெறுப்பேத்துவாங்க. இதுலாம், சகிச்சுக்கிட்டு கழுவுற அளவுக்கு, ஆண் வர்க்கத்துக்கு பொறுமையிருக்காது, யுவர் ஆனர்.....//

என்று பின்னூட்டம் இட்டது.. மனதிற்கு சற்று ஆறுதல் தந்தது.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

டிக் டிக் டிக்... அந்த இறுதி நொடிகள்..

பள்ளி கூட நாட்களில் அடியேனும் சரி அடியேனின் நண்பர்களும் சரி.. ஒரு விடயத்தில் உறுதியாய் இருந்தோம். கூட படிக்கும் மாணவர்களில்  (மாணவிகள் அல்ல) யாராவது விளையாட்டில் விருப்பம் காட்டாவிட்டால் அவனை நம்பாதே...அதுமட்டும் இல்லாமல் விளையாட்டில் ஈடுபாடு உள்ளர்வர்களை எப்போதுமே கூட வைத்து கொள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு  வரை தானே ..இந்த பழக்கம் இன்னும் அடியேனோடு ஒட்டி கொண்டுள்ளது. இப்போது கூட நமக்கு நெருங்கி அமைந்த தோழர்கள் "விளையாட்டு விரும்பிகள்"

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பிறவி பலன் என்பது இது தானோ..

அலை பேசி அலறியது...

டாடி ஹியர்...

டாடா ...யாராவது போன் எடுத்து டாடி ஹியருன்னு சொல்லுவாங்களா... பேர சொல்லுங்க..

போனில் தான் உன் போட்டோ போட்டு வந்ததே அது தான்.. காலேஜ் எப்படி போது?

சென்ற வருடம் செப்டெம்பரில் கல்லூரியில் சேர்ந்த மூத்த ராசாத்தி இந்த ஜனவரியில் கல்லூரியில் ரெண்டாவது செமெஸ்டர் ஆரம்பிக்கிறன்றாள். சிறுவயது முதலே தானும் கணக்கு பிள்ளையாகவேண்டும் என்ற ஒரு எண்ணம்.

11 -  12  வது படிக்கையில்  ..

சனி, 27 ஜனவரி, 2018

ரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை!

மட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2  படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் "வாடி என் கெப்பங்கிழங்கு" மற்றும் ஒரு தலை ராகத்தில் வரும் "நீனா மீனா லீலா ஷீலா ராதா வேதா..."என்ற பாடல்களை முணுமுணுத்து  கொண்டு இருந்த வேளையில் ... அடியேனின் மனதில் குடி இருந்தது..

சிலோன் பாப்பிசை..

சுராங்கனியில் ஆரம்பித்து, சின்ன மாமியே, ஓ மை டார்லிங் ரோஸி, அடிடா சுந்தரலிங்கம், காலேஜ் லைஃப் பைன் என்று பல பாடல்கள் ... என்னே ஒரு ராகம் என்னே ஒரு தாளம் ... இசையோடு நகைசுவை வேறு... சொல்ல வேண்டுமா?

எங்கு போனாலும் நண்பர்கள் மத்தியில் ..

விசு ஒரு பயலா பாட்டு பாடு என்று விண்ணப்பம் வரும். இந்த பாடல்களை நான் அறிந்த ஒரே காரணத்தினால் அறியாதவர்கள் இல்லத்தில் நடக்கும் விழாக்களுக்கும் அடியேனுக்கு அழைப்பிதழ் வரும்.

இப்படி நாட்கள் ஓடி கொண்டு இருக்கையில்...

அருகில் இருந்த ஒரு தியேட்டரில் கமலஹாசனின் "சவால்" என்ற படம் காலை காட்சிக்கு வந்தது. ரிலீஸ் ஆகும் போது அந்த படம் சரியில்லை என்று கேள்வி பட்டதால் தவிர்க்க பட்டது. இப்போது பார்க்க வேற படம் இல்லையே என்று காலை காட்சிக்கு நண்பன் ஒருவருடன் சென்றேன். அங்கே ஒரு சண்டை காட்சியில் .. பேட்டை ரௌடியாக பரட்டை தலை தொங்கு மீசை  வைத்து கொண்டு வந்து ஒருவர் "வூடு  கட்ட" அருகில் இருந்த நண்பன்..

விசு.. இவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கோ...

யாரு இவர்...?

அட பாவி.. பயலா பாடல்கள் பாடுறேன்னு ஊரை ஏமாத்தி சுத்தினு இருக்கியே..

அதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?

அந்த பாடல்கள் பாடியது  இவருதான்.. .. சிலோன் மனோகர்...!

ஓ மை காட்.. உண்மையாகவா.. என்னே அருமையான குரல் என்று நினைக்கையில் அந்த காட்சி மறைய அவரை மீண்டும் காண அடுத்த நாள்  அதே பகல் காட்சிக்கு வந்தேன். படம் மாற்ற பட்டு ரஜினியின் "தீ "என்ற படம் ஓடி கொண்டு இருக்க.. அதே நண்பன்..

நீ என்ன படம் பார்க்கவா வந்த.. மனோகரனை தானே பார்க்க வந்த.. இந்த படத்திலும் இருக்காரு வா..

என்று அழைக்க.. இன்னொரு முறை .. மனோகரன்..

சிலோன் பாப்பிசை ஒரு வித்தியாசமான வகை. அதை பாடுபவர்கள் எனோ தானோ என்று பாட முடியாது.. ரசித்து ருசித்து சிரித்து பாடவேண்டும். AE மனோகரன் அவர்களின் குரல் வளம் மற்றும் ரசிப்பு தன்மை இப்பாடல்களுக்கு மிகவும் பொருந்தியது...


அதற்கு பின்னர் உறவினர் ஒருவர் மனோகரனின் கேசட் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கி அனுப்ப.. இவரின் அணைத்து பாடல்களும் அத்துப்படி..

விட்ட குறையோ தொட்ட குறையோ என்று யாழ்பாணத்து பெட்டையை  மணமுடிக்க.. மணம் முடித்த சில மணி நேரங்களில், நண்பன் ஒருவன், அம்மணியை..

அவர்.. பாப்பிசை பாடல்களை வடிவா பாடுவார்.. அதனால அவர் காதல் வலையில் துள்ளி விழுந்தீர்களோ ..

என்று பகடி பண்ண..

உங்களுக்கு எப்படி இந்த பாடல்கள் தெரியும்?

உனக்காக கற்றுக்கொண்டேன்..

விசிறு கதை கதைக்காதீங்க.. எங்க ஊரில் இந்த பாடல்களை படிக்கும்  பொடியன்களை நாங்கள் தள்ளியே வைப்போம்.. உங்களுக்கு எப்படி?

சரி விடு... அதுவா முக்கியம்...?

ஒரு பாட்டு படிங்க ..

எனக்கு கொஞ்சம் பாட வரும் அதனால படிக்கவேண்டாம் .. வேணும்னா பாடுறேன்..

பாடுறத தான் நாங்க படிக்குறதுன்னு சொல்வோம்..

அப்ப படிக்கிறதை   "பாடு"ன்னு சொல்லுவீங்களா?

அய்யயோ... படிங்க..

யாரு பாட்டு.. மனோஹரனா? நித்தி கனகரத்தினமா?

ஏங்க.. நான் மோசம் போய்ட்டேன் போல இருக்கே.. பாட்டு மட்டும் இல்லாம பாடுனவங்க பேரு கூட தெரியுதே..

சரி வேணா விடு...

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

சொல்லு..

AE மனோகரன் வீடு எங்க தெருவில் தான் இருந்தது..

ரியலி..அவரு எப்படி...

அப்ப நான் ரொம்ப சின்ன பெட்டை .. ஆனா அம்மாவுக்கு அவங்க வீடை நல்லா தெரியும்..

சரி.. அவரை பத்தி கொஞ்சம் சொல்லு!

சின்ன வயசுலே எப்ப பாரு சுருட்டை முடி பரட்டை தலை, அழுக்கு  ஜீன்ஸ் 
கையில் சிகரெட் பாட்டு  .. சினிமானு அலைவாராம்.

என் கதையை விடு. மனோகரனை பத்தி சொல்லு..

அவரு தாங்க..நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? 

அதுவா முக்கியம்.. சொல்லு..

எப்படியாவது இசை மற்றும் சினிமாவில் பெரிய ஆளா வரணும்னு கொலோம்போ கிளமபி போய்ட்டாரு ...

அப்புறம்..எங்க ஊரில் வந்த முதல் தமிழ் படத்துல கதாநாயகனா  நடிச்சார்.. அதுல அவரு நடிச்சத பார்த்து கமல் ரஜினி ரெண்டு பெரும் .. இவரு எங்க படத்துல நடிச்சாதான் அடுத்த படமே நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தார்களாம்..



கமல் - ரஜினி பிடிவாதம்.. அதை யார் சொன்னா?

அதுவா முக்கியம்..?

சினிமா மட்டும் இல்லீங்க.. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மேடையில் சிலோன் பாப்பிசை  பாடல்களை படித்து , தமிழை கடல் கடந்து எடுத்துன்னு போனாரு. உண்மையாவே நல்ல குரல் வளம்..அவரு மட்டும் தலைமயிரை கொஞ்சம் வடிவா வெட்டி இருந்தாரு .. அப்புறம் ரஜினி கமல் எல்லாம் அவுட்.

நீ அவரை பார்த்து இருக்கீயா அவர் பாடி கேட்டு இருக்கீயா?

சத்தியமா...கடைசியா ஒருமுறை நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும் போது  ஒரு நிகழ்ச்சி பண்ண வந்தாரு.. அங்கே இருக்க எல்லாரும் சுராங்கனி .. சுராங்கனின்னு சத்தம் போட இவரோ.. இந்தியாவில் இப்ப இருக்க நம்பர் ஒன் சாங் படிக்கிறேன்னு  சொல்லி .."வாசலில்லா மரமிதுன்னு" ஒரு பாட்ட படிச்சாரு.

அது.. வாசமிலா மலரிது..

ரொம்ப முக்கியம்... நான் பேசும் போது இப்படி திருத்துறது எனக்கு பிடிக்காது.

சரி..அவரை பத்தி மேலே சொல்லு..

வேற என்னத்த சொல்றது.. இங்கே வந்த பிரச்சனையில் தான் நாங்க எல்லாம் ஊரை விட்டு வெளிக்கிட்டோமே.. அப்புறம் அவரை பத்தி ஒன்னும் தெரியல..

தற்போது, அம்மணியோட ஒரு உரையாடல்..

AE மனோஹரன் தவறிட்டாரு...

ஐயோ.. உண்மையாவா.. நல்ல நடிகருங்க.. அந்த காலத்துல..

நினைவு இருக்கு.. அவரோட நடிப்பை கேள்வி பட்டு கமல் ரஜினி ரெண்டு பேரும் பண்ண பிடிவாதம்..

அது எப்படி உங்களுக்கு தெரியும்..?

எங்கேயோ படிச்சேன்..

நல்ல மனுஷன்.. நல்ல பாடகர்.. உலகம் முழுக்க தமிழை பாடி பாடின்னு வந்தார்.. இருந்தாலும் அவரோட திறமையை இந்த உலகம் வெளி கொண்டு வரலைன்னு தான் சொல்லணும்..

கண்டிப்பா..

RIP  .. AE மனோகரன்.. 

தங்களின் இசைக்கு.. விட்டு சென்ற நினைவிற்கு கோடி நன்றி!


இதோ இந்த குறுகிய காணொளியில் இவரின் அட்டகாசமான குரல் வளத்தையும் உச்சரிப்பையும்  கேளுங்கள்.. கூடவே   எங்களின் ஆட்டமும் பாட்டமும் தான்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

பல்ப் வாங்கிய கதை.. Literally!

தண்டம்...

அலை பேசியில் அலறினேன்...

சொல்லு வாத்தியாரே.. என்ன பதறுற..அம்மணி கண்டு பிடிச்சிட்டாங்களா?

என்ன சொல்ற?

பொதுவா சொன்னேன்.. இந்த வாய்ஸில் நீ கூப்பிட்டானா... அம்மணி கண்டி பிடிச்சிட்டாங்கனு தானே அர்த்தம்.

ரொம்ப அவசியம்..

சரி சொல்லு வாத்தியாரே..

உடனே என் வூட்டுக்கு போய் அம்மணியை ஏதாவது சொல்லி  ஒரு அரைமணிநேரத்துக்கு வெளியே கூட்டினு போ.. ப்ளீஸ்..

ஓ... விஷயம் அப்படி போதா? என்ன பண்ண?

டேய் .. தேங்க்ஸ் கிவ்விங் அன்னைக்கு நீ இதே மாதிரி போன் பண்ணும் போது நான் ஏதாவது கேட்டேனா?

ஆர்வ கோளாறுதான்.. என்ன பண்ண?

டேய்..அப்புறம் விவரமா சொல்றேன்.. ப்ளீஸ்.. சீக்கிரம்... ஏதாவது சொல்லி கூட்டினு போ.. பக்கத்துக்கு தெருவில் சட்டி ஒன்னு வாங்கனா.. அகப்பை இலவசம்னு ஏதாவது சொல்லி கூட்டினு போ .. ப்ளீஸ்..

வியாழன், 30 நவம்பர், 2017

மென் பொறியாளனும் மேன்மையான கணக்கு பிள்ளையும்!

ஏங்க.. ஒரு மாசமா கண்ணாலம் - பிறந்தநாள்-லொட்டு லொசுக்குன்னு சொல்லினே ஒரு முக்கியமான காரியத்தை கோட்டை விட்டுடுங்களே...

அலறினே  வந்தார்கள்..  எங்கள் இல்லத்தின் அம்மணி...

இல்லையே.. கல்யாணம் - பிறந்தநாள் - லொட்டு லொசுக்கு எல்லாம் நல்லாதானே போச்சி.

அது நல்லாத்தான் போச்சி.. உங்க எடையை கடைசியா எப்ப செக் பண்ணீங்க?

அதை எதுக்கு செக் பண்ணனும்? தலைவர் பாணியில் எடைக்கு எடை ஏதாவது தரபோறீயா?

நினைப்பு தான் பொழப்ப கெடுத்திச்சான்.

சரி விடு ... எடையை பத்தியே  நினைக்கலே..

பக்கத்துல தான் ஜிம் இருக்கு .. போன மாசம் கூட ஒழுங்கா போனீங்க... இப்ப ஒரு மாசமா போகல.. அங்கே போய் கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டிட்டு அந்த மிசன் மேலே நடந்துட்டு வாங்க..

பேச கூடாது... வெறும் பேச்சில்...?

நான் ஏற்கனவே நிறைய இடத்தில எழுதிய ஒரு விஷயம் தான்..

என்னை வானவில்லை வளைக்க சொல்லு..
பாத்திரத்தை கழுவ சொல்லு..
வீட்டை சுத்தம் படுத்த சொல்லு...
என்ன வேலையினாலும் சொல்லு ..

பாஷாவில் ரஜினி சிரிச்சினே அடிவாங்குவாரே.. அதே பாணியில் செய்யுறேன்.. அனால் கடைக்கு மட்டும் கூப்பிடாத.. அதுக்கு பதிலா என்னை   கொன்னு போட்டுடுன்னு அம்மணியிடம் சொல்லி  வைத்துள்ளேன்.

கடைக்கு போவது அவ்வளவு பிடிக்காத காரியம். அப்படியும் சில நேரங்களில் அம்மணி.. அருகே உள்ள அமெரிக்க சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்ட்கோ போல கடைக்கு போக வேண்டும் என்று அனுப்பி விடுவார்கள். வேறு வழியிலில்லாமல் அவர்கள் தந்த லிஸ்ட்டை எடுத்து கொண்டு கடைக்கு சென்று வாங்கி வருவேன். இந்த அமெரிக்க கடைகளில் பார்கைன் (அதுக்கு தமிழில் என்ன வார்த்தை)  என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நேராக போகிறோம். வேண்டியதை எடுத்து கொண்டு பணத்தை கட்டி விட்டு நேராக வீடு தான்.

புதன், 29 நவம்பர், 2017

நடுவுலே மானே தேனே போட்டுக்குங்க.

அமெரிக்காவில் "Stand Up" என்று ஒரு மேடை பேச்சு உண்டு. நகைச்சுவையோடு பேசும் நபர் ஒருவன் மேடைக்கு வந்து பேச சபையோர் சிறிது கை கொட்டி ஆரவரிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் விரும்பி பார்ப்பவன் நான். இதில் பலரை நான் ரசித்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நபர் George Carlin. என்ன ஒரு பேச்சு? எந்த ஒரு தலைப்பை எடுத்தாலும் நூல் பிடித்தவாறு அவர் சொல்லி கொண்டு போகும் விதம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க செய்யும்!

அரசியல்வாதிகளை பற்றி அவர் பேசியதை இங்கே மொழி பெயர்கிறேன். இதை படிக்கும் பொது .. இதில் ஏது நகைசுவை ? எங்கே சிரிப்பு என்று நினைக்க தோன்றும். படித்து முடித்து விட்டு அந்த காணொளியை காணுங்கள். அரங்கமே அதிரும் அளவிற்கு சிரிப்பு.


திங்கள், 27 நவம்பர், 2017

பால் இருக்கு....

நாலு நாட்கள் தொடரந்து விடுமுறை..

ஆட்டம் பாட்டம் போட்டு விட்டு அசதியினால் ஞாயிறு 7  : 30  உறங்க சென்றவனை .. காலை 5  :45 க்கு அம்மணி எழுப்ப...

இன்னைக்கு திங்கள் அவளுக்கு 7 :30  மணிக்கு பள்ளியில் விட்டா போதும். ஆளை விடு.. இன்னும் அரை மணி நேரம் ப்ளீஸ்.

ஏங்க.. கொஞ்சமா பொறுப்பா இருங்க..

பொறுப்பா  இருக்குறனால தான் இம்புட்டு பொறுமையா பேசினு இருக்கேன்.. இல்லாட்டி நடக்குறதே வேற..

என்ன சொன்னீங்க...?

சொல்லு...

அவளை பாருங்க.. ஒரே கால் வலின்னு முனகின்னு இருக்கா.. கொஞ்சம்.. என்னனு விசாரியுங்க..

அட பாவி.. நேத்து தூங்க போகும் போது எனக்கும் கால் வலின்னு சொன்னேன்னு.. அதுக்கு, இது எல்லாம் வலி இல்ல.. மனபிராந்தி ..விஸ்கி .. ரம்ன்னு சொல்லிட்டு கம்முன்னு இருந்தியே..

ஞாயிறு, 26 நவம்பர், 2017

தக்காளி ... என்கிட்டயேவா?

ஏங்க...

சொல்லுங்க..

மதியம் சாப்பாட்டுக்கு மாதவன் குடும்பத்தை கூப்பிட்டு இருக்கேன்..

சந்தோசம்...நைஸ் கப்பில்.. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அம்புட்டு படிச்சி அம்புட்டு பெரிய வேலையில் இருந்தாலும் என்னே ஒரு தாழ்மை.. என்னே ஒரு பொறுமை.. மேன் மக்கள் மேன் மக்களே..

சூப்பரா சொன்னீங்க.. எனக்கு ஒரு சந்தேகம்?

சொல்லு..

கோச்சிக்க மாட்டீங்களே..

சரி வேணாம் விடு..

இல்ல சொல்றேன்..

சொல்லு..

இப்ப அவங்க ரெண்டு பேரை அம்புட்டு நல்லவங்குன்னு  இம்புட்டு பாராட்டினீங்களே.. நம்மளை யாராவது அப்படி சொல்லுவாங்களா?

தூங்காதே விசு தூங்காதே..

இவரு இப்ப எல்லாம் ரொம்ப சோம்பேறி ஆகிட்டார்..

நன்றி திருவிழா கொண்டாட்டத்தில் தோழி  ஒருவரிடம் அம்மணி முணுமுறுத்தார்.

என்ன சொல்றீங்க?

ரொம்ப சோம்பேறி ஆகிட்டார்.

அப்படினா.. நீங்க தவறிட்டிங்கன்னு  தான் சொல்லணும்...

நான் எங்கே தவறினேன்... அவரு தான் சோம்பேறி ஆகிட்டாரு..

அவரை சோம்பேறி ஆக்க விட்டது நீங்க தானே..

எப்படி?

ஒரு நிமிஷம் உக்கார விடாம தொடர்ந்து வேலை கொடுத்தா எப்படி சோம்பேறி ஆவார்?

புரியல? தொடர்ந்து வேலை? எப்படி? உதாரணத்தோடு சொல்லு..

சனி கிழமை காலையில் எழுந்தவுடன்..

எழுந்தவுடன்...

சனி, 25 நவம்பர், 2017

வியட்நாம் வீடு விசுவாசம்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காம்  வியாழன் அன்று நன்றி திருநாள் (Thanks Giving Day) இங்கே கொண்டாடப்படும்.

வியாழக்கிழமை அன்று இந்நாள் கொண்டாட படுவதால் தொடர்ந்து வரும் வெள்ளியும் சேர்த்து விடுமுறை என்பது எழுத படாத சட்டம். அதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை.

இந்த நாள் எப்படி ஆரம்பிக்க பட்டது என்று ஏராளமான கதைகள் உண்டு. அதில் சோகம் - சந்தோசம் - ஒற்றுமை - வெறுப்பு - சமாதானம் - போர் - கொள்ளை - கொலை என்று பல அம்சங்கள் உண்டு.

கனி இருக்க காய் எதற்கு என்பதை போல்.. நான் இதில் உள்ள நல்ல விடயங்களை கொண்டாடுவேன்.

நன்றி...

இந்நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி.. உணவு மேசையை சுற்றி  அமர்ந்து கடந்த ஒரு வருடத்தில் தங்களுக்கு நேர்ந்த நல்ல காரியங்களை கூறி அதை தமக்கு ஈர்ந்தொருக்கு நன்றி அனைவருக்கு எதிரேலேயும் நன்றி கூறுவார்கள்.

புதன், 22 நவம்பர், 2017

அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே...

அலை பேசி அலறியது..

இரவு 9 :40

காலை ஐந்து மணிக்கு வேலைக்கு சென்று வந்த அசதியோடு அம்மணி தூங்க, அவர்கள் எழுந்துவிட கூடாதே என்று அடித்து பிடித்து எடுத்து வெளியே அடுத்த அறைக்கு போய்..

ஹலோ..

டாடா..

மூத்தவள் தான்.

நன்றி திருநாள்  (Thanks Giving Day) விடுமுறைக்கு வருகின்றேன் என்றாள்.. ஒன்னும் செய்தி வரவில்லையே என்று இருந்தேன்.


மகள்.. எங்க.. வீட்டுக்கு வரேன்னு சொன்னீயே..?

இல்லை டாடா.. ரொம்ப பிசி.. முடியாதுன்னு நினைக்கிறேன்.

அய்யயோ ... உங்க அம்மா ரொம்ப பீலிங் ஆயிடுவாங்க.. ப்ளீஸ் வா..!

அம்மாட்ட சொல்லிட்டேன்.. ஷி அண்டர்ஸ்டாண்ட்ஸ்..

ஐயோ.. உனக்கு பிடிக்கும்னு..

நான் பிசி  டாடா.. அடுத்த மாசம் பாக்கலாம்..

ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஆண்கள் தினமும் முருங்கை மரமும்...

வெள்ளி மாலை  உறவினர் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக நானும் இளையவளும் செல்ல (மூத்தவள் கல்லாரியில் - அம்மணியோ பணியின் நிமித்தம் வெளியில்.. என்ன விசு? எப்ப பாரு அம்மணி பணி  நிமித்தம் வெளியிலன்னு  சொல்றீயா? என்று கேட்பவர்களுக்கு.. Some one has gotta pay the bills you see... )

வீட்டில் உள்ள பென்ரில்யில் (Pantry ) வெள்ளி இரவு சென்று நோட்டமிட்டால் சனி கிழமை மளிகை கடைக்கு போக வேண்டுமா இல்லையா என்று தெரிந்து விடும்.

வெள்ளி மாலை  உள்ளே சென்றேன்.. நோட்டமிட்டேன். கண்டிப்பாக கடைக்கு போக வேண்டிய அவசியம் உள்ளது என்று அறிந்து..

காலையில் எழுந்தவுடன்...

இன்னைக்கு தோட்டத்துல எனக்கு பயங்கர வேலை இருக்கு.. கிட்ட தட்ட நாலு மணி நேரம் வேணும்..

ஐயையோ... மளிகை கடைக்கு போகணுமே.. "தேங்க்ஸ் கிவ்விங்" வருதே..

தயவு செய்து நீயே போய்ட்டு  வா.. இந்த தோட்ட வேலைய இன்னைக்கு முடிச்சே ஆகணும்.. என்று சொல்லி...

வீட்டின் பின்  புறம் செல்ல..

வெள்ளி, 17 நவம்பர், 2017

தலீவர் தலீவர் தான்.. என்னமா ஒரு கவிதை !

இன்னாதான் சொல்லுங்க..

தலீவர் தலீவர் தான்.. என்னமா ஒரு கவிதை!


விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்
அகப்பட்டதை சுருட்டி கொண்டு அகப்படாமல் ஓடியதை போல்
அருப்புக்கோட்டை நெல்லை தொகுதிகளை வென்று விட்டான்...

வியாழன், 16 நவம்பர், 2017

நான் ஒரு முட்டாளுங்க..

ஏங்க...

இன்னாடா இது? சனி கிழமை காலையும் அதுவுமா?  கணவன் புரிந்து கொள்ள இது சாதாரண வாய்ஸ் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது..

என்று நினைத்து கொண்டே...

சொல்லு...

இன்னைக்கு மதியம் மூணு பேமிலி லஞ்சிக்கு வராங்க..

அதுக்கு...

கொஞ்சம் வேலை இருக்கு .. சீக்கிரம் எழுந்து வாங்க..

சனி ஒரு நாளாவது  கொஞ்சம் எக்ஸ்டராவா தூங்க விடமாடியே.. இந்த மாதிரி முன்னே பின்ன சொல்லாம ஏன் விருந்தாளிகளை கூப்பிடுற.. அப்படியே கூப்பிட்டாலும் எனக்கு முன்னமே சொல்ல கூடாதா?

ஹலோ... இவங்கள கூப்பிட்டதே   நீங்க தான். இந்த மாதிரி முன்ன பின்ன சொல்லாம கூப்பிடாந்திங்கன்னு போன வாரம் தான் உங்களுக்கு கிரஷ் கோர்ஸ் எடுத்தேன்.. மறந்துடீங்களா...

சரி.. என்ன வேணும் சொல்லு..

இன்னிக்கு சனி கிழமை.. சீக்கிரம் வந்து டீ போடுங்க.. சொல்றேன்..

திங்கள், 13 நவம்பர், 2017

வீட்டுக்கு வீடு... ஸ்லீப்பர் செல்!

டாடா .. அடுத்த வருஷம் மே மாசம் ஒரு வாரத்துக்கு ஸ்பெயின் போக போறேன்..

ஆர்பரித்தாள்.. மூத்த ராசாத்தி.

நைஸ்.. என்ன விஷயம்?

எங்க காலேஜ் கொயர்.. அங்கே போய் வேற வேற ஊருல இருக்க கோயிலில்  பாட போறோம்.

வாவ்.. சூப்பர்..  அது சரி.. அம்மாட்ட ஓகே வாங்கிட்டியா?

அம்மாட்ட ஓகே  வா, அதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான், எங்களுக்கு எப்ப அவங்க இல்லைனு சொன்னாங்க..

சிறிது நேரம் கழித்து ..

ஏங்க .. அவ என்னமோ ஸ்பெயின் போறாளாமே .. சொன்னாளா?

சொன்னா.. ரொம்ப குஷியா இருக்கிறா? போகட்டும்.

அதை நான் பாத்துக்குறேன்..

சரி.. ஒரு பிளோவில் சொல்லிட்டேன்.. விடு..

நல்ல பெரிய கோயிலாம். கதீட்ரலாம் ..உங்களுக்கு தான் ஊரு சுத்துணும்னா  ரொம்ப ஆசையாச்சே.. நீங்களும் அவ கூட போறீங்களா?

கிண்டல் தானே பண்ற?

வியாழன், 9 நவம்பர், 2017

அவளுக்கென்ன ... !?


அதிகாலை உறங்குகையில்....
அப்பா என்று அலறி அடித்து..
அயர்ன் பண்ணி வையுங்கள் என்று
அதட்டி நீ சொல்லும் போது.

அய்யகோ .. இப்ப தானே
அஞ்சு மணி ஆச்சி...
அதுக்குள்ள எழுப்பிட்டாளே..
அநியாயத்தை கேக்க யாருமில்லையா...

அம்மணியோ..
அவளை கெடுத்து வைச்சி..
அப்புறம் ஏன் இந்த
அங்கலாய்ப்பு என்றாள்..

அலுவலகத்தில் இருக்கையில்
அவசரம் என்று ஒரு டெக்ஸ்ட்..
ஆபிஸ்  கிட்ட  தான் இருக்கேன்..

அதுக்கு?

அதிக பசி...
அருகில் உள்ள ஹோட்டலுக்கு போறேன்..
அநேக வேலை எனக்கிருக்கு..
அத ஏன் என்னுட்டசொல்லுற ....

அது ஒன்னும் இல்ல..
அங்கே தனியா போர்
அடிக்கும், அதனால
அரை மணி நேரம் வாங்களேன்...

ஆஹா..
அலுவலை ஓரம்கட்டி..
அடித்து பிடித்து ஓடி..
ஆர்டர் சில சொல்லி..
அனுபவித்த தருணம்.

செவ்வாய், 7 நவம்பர், 2017

புகையில் வந்த பகை....


பல வருடங்களுக்கு முன்...

(பிளாஷ் பேக்  ரௌண்டு ரெண்டு முறை சுற்றவிட்டு வாங்க).

"மாப்பிளை வந்துட்டாரு" என்று... அடியேன் வண்டியை விட்டு இறங்கும் போது  பெண்ணின் உறவின சிறுவன் ஓட..

நானோ.. பஜ்ஜி - வடை சாப்பிட  போகின்றோம் என்ற ஒரு எண்ணத்தில் தயாரானேன்.

உள்ள நுழையும் போதே .. அடியேனின் இல்லத்தை சார்ந்த அம்மணியிடம் ... நான் சொன்ன விஷயத்தை மறந்துடாதீங்க.. அப்புறம் அது பிரச்சனையாகி விடும் என்று நினைவு படுத்த.. அவர்களும் தலையாட்ட..

இல்லத்தின்  உள்ளே நுழைந்தோம்.

திங்கள், 6 நவம்பர், 2017

கடலோரம் வாங்கிய காற்று..

சரி.. பிறந்தநாள் நாளைக்கு ஆனாலும் பரவயில்லை, சனிக்கிழமையே   பரிசு எதுவும் வேணாம் .. சமையல் போதும்னு அம்மணி சொல்ல.. அதையும் செஞ்சி குடும்பத்தோட டின்னர் முடிச்சிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து  குடும்பத்தோடு கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த பின்னர்..

ரெண்டு ராசாத்திக்களும்    அவங்க வங்கியாந்த பரிசை கொடுக்க.. நானோ விழி பிதுங்கி அமர்ந்து இருக்கையில்...

San Clemente Pier


டாடா.. எங்க உங்க கிப்ட்?

சனி, 4 நவம்பர், 2017

அம்மணியை கவர...கவிழ்க்க ஒரு ஐடியா!

அம்மணியின் பிறந்தநாள் நாளைக்கு... ரெண்டு ராசாதிக்களும் ரகசியமா பிறந்த நாள் பரிசு வாங்கிட்டாளுங்க.. என்ன பரிசுன்னு கேட்டேன் ... "இட்ஸ் எ சீக்ரட்ன்னு" சொல்லி தொரத்திட்டாளுங்க.

கடந்த சில வருடங்களாகவே நம்ம வாங்கி கொடுத்த ஒன்னும் வேலைக்கு ஆகல, அதனால் இந்த வருஷம்.. என்ன வேணும்னு நேராவே கேட்டுட்டேன்.

நல்ல வேளை.. கேட்டீங்க.. நீங்க பாட்டுக்கு ஏதாவது வாங்கினு வந்துடுவீங்களோன்னு பயந்தேன்..

நல்ல மாட்டுக்கு நாலு சூடு.. சொல்லு.. வானவில்லை வளைக்கட்டும்மா.. இல்லாட்டி ....

அடிடா சுந்தரலிங்கம்..

சிறு வயதில் இருந்து நான் மிகவும் ரசித்த ஸ்ரீலங்கா பாப்பிசை பாடல்.. அடிடா சுந்தரலிங்கம்..

அட்டகாசமான ராகம் .. தாளம்..

கேட்டு பாருங்களேன்...


வியாழன், 2 நவம்பர், 2017

முதியோர் வாசலை மிதியாதே..

படித்ததில் பிடித்தது. (எழுதியது :Narayan Ganesan, Coimbatore)


பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.
""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்''
""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''
அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.
""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க''


மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.
புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.
""அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்''
ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், ""என்னடா சொல்றே?'' என்றாள்.
தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், "தைரியமாய் பேசுங்கள்' என்று சைகை காண்பித்தாள்.
கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்...
""இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா''
""பாட்டி நல்லாத் தானே இருக்காங்க அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''
அவன் பதில் சொல்லவில்லை.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...