Wednesday, November 2, 2022

Prof. Dr. Arunachalam, HOD - A Gentle Threat

Prof. Dr. Arunachalam, HOD - A Gentle Threat

The year was 1982 and it was the most exciting for me yet. I passed my +2 exams and got my admission to do B.Com in Voorhees College, Vellore and I just couldn't wait for the college to start. And it started! First day at college and I along with a few of my high school friends reached the College Entrance the only thing that stood out was, right in front of the college there we two movie theatres Taj and Apsara. All I had in mind was “Wow, this is good, I could go to movies any time I want” and don't even have to plan for it!


We walked into the classroom and found our own seats and came our office attendant and yelled, “ HOD is on the way, keep quiet”!

I asked him, “what is HOD” and learned that the answer was “Head of the Department”! Then he walked in”.  Prof. Arunachalam.



A neatly combed hairstyle and clean shaved face, thick spectacles, and an untucked shirt with a smile that would anytime change into anger.


We all stood up and wished him and after asking us to introduce ourselves he moved a few of our seatings and for some reason “yours faithfully” got moved as well.


I can still remember his introduction speech,


“Students, those of you who walked through my main entrance must have noticed these two theatres with big movie posters. Let me advise you, make sure to keep yourself away from those two theatres and you can graduate and get away from college. Otherwise, you'd be coming back to write arrears, forever!”


“Any one of you know what is an arrear?”


There was no reply and he continued. 


“Arrears is something that you don't want to know about. When you fail a subject you need to write again until you pass and these failed subjects are called Arrears”.


He continued,


“If you all be regular to your classes and complete the assignments on time, then you don't need to worry about arrears”!


“Does any one of you know what is an Assignment”?


Again there was no reply and he continued,

“It's what you called “homework” at school”


He was there for a few more minutes and instructed us on “Dos and Donts”, and my first impression of him was” Don't mess with him, he means business”


The next three years couldn't have gone faster and developed I had a “Love-hate” relationship with him and I didn't have to cross paths with him as I” kept avoiding a direct encounter with him.


During those three years, I realized that Prof. Arunachalam was a “Nallavanukku Nallavan” and you wouldn't want to be in his bad books. He went out of the way to help the students who were interested in their studies and went even further to discipline those who didn't.


My favorite attire those days was “Jeans and T-shirts” and he couldn't stand that. Many a time he picked on me and said, “antha koni paiyai thooki pottuttu nalla iron panna pant shirt pottunu vaango” in his own Telugu-flavored Tamil.


When most of the other Professors started driving their own “Bajaj Chetak”, Prof Arunachalam was still walking to college, and years later I realized that he never learned to ride a bicycle.


I passed the B Com course and applied for M Com and I was asked to go and meet him one on one which I dreaded. He pretty much said there were so many other deserving students who take their studies seriously and given a choice he would rather give the seat to someone else, not me.


I hated him for that but still came out respecting him for shooting straight and not sugarcoating. He was teaching us “Business Law” during our MCom classes and at the time, I had pretty much changed my lifestyle and study pattern and was more regular in classes.


I was really surprised when he suggested my name for the Commerce Dept Secretary post and while introducing he did say that, “ I always knew something about this student and if only he takes his life seriously, he will go places”.  I was really taken aback by hearing that and worked even harder to get his attention. I also started admiring Prof Arunachalam more, when I learned many of my other young professors were his students and how well he treated those students as his colleagues and fellow lecturers.


In short, Prof Arunachalam was a man with tough love and wanted the best for every deserving student. I have been a beneficiary of his discipline, and wealth of knowledge.


Years later, when I heard he unexpectedly died of a heart attack, I couldn't help but cry. He was a good man and gone too soon.


Thank you HOD Prof . Arunachalam, you played an important role in my life and shaped me to be a better person and become what I am today. I am always indebted to you for that.


About me: My name is Visuvasam Titus Cornelius and I did BCom and Mcom in Voorhees (1983-1987 Batch). I now reside in California, USA, and work as a CPA.


vishcornelius@gmail.com

Tuesday, June 21, 2022

கெட்டி மேளம் கெட்டி மேளம், மோதிரத்தை மாத்துங்கோ!

 கெட்டி மேளம் கெட்டி மேளம், மோதிரத்தை மாத்துங்கோ!

அலை பேசி அலறியது...

சனியும் அதுவுமா மதியம் மூணு மணிக்கு  நாம ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு இருக்கையில் அலை பேசி அலறுதுன்னா அது நம்ம தண்டபாணியா தான் இருக்கும், என்ன அவசரமோ ?

"சொல்லு தண்டம்!!"

"என்னத்த சொல்லுவேன்” வாத்தியாரே"

"சரி, சொல்லாத, அப்புறம் பாக்கலாம்"

"வாத்தியாரே, எம் பொண்ணு கல்யாணத்தை பத்தி  முக்கியமான விஷயம்"

"தண்டம், ஈஸ்வரி கல்யாணத்தை பத்தி இன்னும் ஏன் டென்ஷன் ஆகுற? இட்ஸ்  ஓகே டு மேரி எ வொய்ட்  பாய், அவன் நல்லவனா, நம்ம பொண்ணை நல்லா வைச்சி காப்பாத்துவானான்னு நம்ம ரெண்டு பெரும் பிரிச்சி ஆரஞ்சிட்டோம், அவனும் பாஸ் ஆகிட்டான்"

"வாத்தியாரே, மனசுல இனம் இனத்தோட சேரணும்ன்னு எனக்கு ஒரு ஆசை, இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே ஈஸ்வரி கேட்ட எதுக்குமே நான் இல்லனு சொன்னது இல்ல"

"தண்டம், கொஞ்சம் மாத்தி யோசி! இதுவரைக்கும் நீ முடியாதுன்னு சொல்ற எதையுமே ஈஸ்வரி உன்கிட்ட கேட்டது இல்ல, ஈஸ்வரி உலகம் அறிஞ்சவ, நல்ல பையனைத்தான் பாத்து இருக்கா, சும்மா கண்டதையும் போட்டு மண்டை காயாத. என்ஜாய் தி மொமெண்ட், தண்டம்."

"ஐயோ,வாத்தியாரே, நான் தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேனே"

"அப்புறம் என்ன முக்கியமான விஷயம், கெட்டி மேளம் கொட்டி மோதிரத்தை மாத்த வேண்டியதுதானே"!"

"கெட்டி மேளம், மோதிரம், நல்ல  சொன்ன வாத்தியாரே, நான் இப்ப சொல்ல வந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல.."

Monday, August 23, 2021

பாவாணர் வாரிசின் பரிதாபம்.

//நேற்று  இதை படிக்க நேர்ந்தது. சென்னையில் வசிக்கும் உங்களில் யாராவது உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில், இங்கே அதை வெளியிடுகிறேன்..///



பாவாணர் வாரிசின் பரிதாபம்.
நெஞ்சம் கொதிக்கின்றது உறவுகளே!

படிக்கவும் பரப்பவும் உதவவும்.
++++++++++++++++++++++++++++++++++

இன்று பிற்பகல் ECR இஞ்சம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்றேன். கொரோனா wave 2 க்கு பிறகு பிள்ளைகளை பொது இடத்துக்கு இப்போது தான் கூட்டி செல்கிறேன், அதுவும் இன்று பெரிய மகள் தமிழிசை பிறந்த நாள் என்பதால்.
ஹோட்டலுக்குள் ஒரு ஊரே இருந்தது வெளியிலும் கூட்டம். நேரம் இரண்டு மணி ஆனதால், வேறெங்கும் செல்ல முடியாது, இந்த கூட்டத்திலும் நிற்பதா என இருவேறு எண்ணங்கள் எங்களுக்குள். கிளம்பி விடுவோம் என ஏதோ சொல்ல சற்று தள்ளி நிறுத்தப் பட்டுருக்கும் காரை நோக்கி நடந்தோம்.

காரில் நான் ஏறி உடகார, பின்னர் வந்த மனைவி ஏறும் போது ஒரு அம்மா பாவமா நம்ம கார பார்த்துகிட்டே இருக்காங்க என்றார்.

அதற்குள் கார் கண்ணாடி அருகே அந்த அம்மா வந்து நின்றார்.

கண்ணாடியை நான் கீழே இறக்க..

ஐயா கொஞ்சம் காசு கிடைக்குமா என உடைந்த குரலில் சொன்னார்... ப..ஸ்...ஸுக்கு இல்ல... என்றார் உடைந்த குரலில் தயங்கி தயங்கி!

ஆளை பார்த்தவுடன் வாழ்ந்த குடும்பம் என்றே பட்டது... எழுபது வயது க்கு மேல வயது.....சீரான உடை.... கையில் பழைய handbag... மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு... கையேந்துவது பற்றி உள்ள குமுறல்..

நான் சட்டென ஒரு நோட்டை எடுத்து நீட்டினேன்... வாழ்ந்து கெட்டவர் வலி மிக கொடியது ... அதுவும் முதுமையின் இயலாமையில் ஏழ்மை மிக மிக கொடியது.

வாங்கி கொண்டு கையெடுத்து கும்பிட்டார்..

கண்ணாடியை ஏற்றினேன்...

ஏதோ சொல்வது அறிந்து கண்ணாடியை மீண்டும் இறக்கினேன்...

"நான் தேவநேயப் பாவாணர் பேத்தி.... யார் கிட்டயும் கேட்க கூச்சமா இருந்தது... உங்க கார் பின்னாடி நல்ல தமிழ் எழுதி இருந்தது அதான் உங்க கிட்ட கேட்கணும் ன்னு தோனுச்சு" என முடித்தார்

"என்னது தேவநேயப் பாவாணர் பேத்தியா நீங்க??!?" என்றேன் அதிர்ச்சியுடன்

"ஆமாம் சார்" என கண்ணில் நீர் வழிந்தது..
_______

தேவநேயப் பாவாணர் தற்கால தமிழ் சமூகம் மறந்த, எக்கால தமிழ் சமூகமும் மறக்க கூடாத மிகச்சிறந்த தமிழறிஞர் சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். 
இன்று பலர் நடத்தும் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆணிவேராய் இருந்தவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று வந்த முதல் குரல்களில் ஒன்று அவருடையது‌. குமரிக்கண்டம் ஆராய்ச்சி கட்டுரைகள், இலக்கணம் இலக்கியம் என அவருடைய எழுத்துக்கள் சொல்லி மாளாது.
 இவரது ஒப்பற்ற தமிழறிவும் பன்மொழியியல் அறிவும்   "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்கிற பட்டம் இவருக்கு பெற்று தந்தது... இந்திய அரசு தபால் தலை வெளியிடும் அளவுக்கு மிக முக்கியமான நம் மொழி பாட்டன் ஐயா.

________

தேவநேயப் பாவாணர் பற்றி அறிந்த எனக்கு அவரின் உயரம் அறிந்த எனக்கு பெரும் அதிர்ச்சி தான் தந்தது அந்த அம்மாவின் கண்ணீர்

தொடர்ந்த அவர்...
"சார்... எனக்கு ன்னு யாரும் இல்ல ‌.... சர்கார் எனக்கு தந்த வீட்டையும் என் பையன் புடுங்கிட்டு துரத்திட்டான்..." என அழுதபடியே இந்த படத்தில் இருக்கும் செர்டிஃபிகேட்டை நீட்டினார்...
படித்தபடியே காரை விட்டு இறங்கினேன்..

"என்னம்மா பண்ணுறீங்க ‌‌.... எங்க இருக்கீங்க..."

"பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டுல வாடகைக்கு இருக்கேன்..."

"வேற செலவுக்கு...?"

"எங்க சர்ச் பாஸ்டர் வீட்டு வாடகை ரெண்டாயிரம் குடுத்துடுறாரு... முதியோர் பென்ஷன் ஆயிரம் ரூபாய் வருது.... சோழிங்கநல்லூர் government Libraryல வேலைக்கு இருந்தேன்.. இப்ப கொரோனா க்கு அப்பறம் அதுவும் இல்ல...ரொம்ப சிரமமா இருக்கு..." என்றார் கண்ணீர் மல்க.

"பையன் ஏன் உங்கள வீட்ட விட்டு துரத்துனார்?" 

"அவன் ஒரு மாதிரி ஆயிட்டான் சார்... என்ன அடிக்க வருவான்...வீட்டுல இருக்க கூடாது ன்னு சொல்லிட்டான் ‌.."

"Government குடுத்த வீடு எங்க இருக்கு.."

"அது தாம்பரம்ல"

பேசும்போதே...
இந்த படத்தை எடுத்து காட்டினார்...
"எங்க தாத்தா நினைவு நாளுக்கு பிறந்தநாளுக்கு கூப்பிட்டு அனுப்பவாங்க...சிலை க்கு முன் ஃபோட்டோ எடுப்பாங்க..."

"அம்மா இப்ப யாருமே உங்களுக்கு இல்லையா... சாப்பாட்டுக்கு..?."

"ஆயிர ரூபாய் மாச பென்ஷன் வெச்சு... தண்ணீர் செலவு போக சாப்பாட்டு க்கே கஷ்டம்... மருந்து மாத்திரை வேற... கோவிலுக்கு போக வர பஸ்ஸுக்கு கூட இருக்காது... ரொம்ப கஷ்டமா இருக்கு ய்யா...."

"அம்மா உங்க கஷ்டத்தை நான் எழுதட்டுமா... இந்த மாதிரி உங்க பையன் செஞ்சுட்டாரு... பாவாணர் பேத்தி இப்படி கஷ்ட படுறாங்க ன்னு"

"தாராளமாக எழுதுங்க சார்... "

"இப்ப இங்க எதுக்கு வந்தீங்க..."

"ஒருத்தங்க காசு தரேன் ன்னு சொன்னாங்க... "

"தந்தாங்களா... எவ்வளவு"

"தரல சார்.... அப்பறம் வா ன்னு சொல்லிட்டாங்க...அத வெச்சு தான் இந்த மாசம் சாப்பிடலாம் ன்னு இருந்தேன்... ___ரூபாய் " என்றார்

என்னிடம் அந்த தொகை இருந்தது அதை எடுத்து குடுத்தேன்..

கண்ணீர் அதிகமாகி அழுதார்...

"நீங்க நல்லாருக்கணும் சார்" என்றார்

"உங்க நம்பர் குடுங்க மா...இதை வெச்சு பதிவு போடலாம் ல... உங்களை யாராவது அழைத்து பேசுவாங்க உதவி வரும் ன்னு நம்புறேன்" 

"செய்யுங்க சார்... செய்யுங்க...."

"என் பெயர் ராஜகோபாலன் ‌...." என்று சொல்லி என் நம்பர் தந்தேன்

"உங்களுடைய தேவை என்ன ம்மா?" 

"எனக்கு வேலை போயிடுச்சு...ஒரு வேலை வேணும்...எது இருந்தாலும் செய்வேன்"
இந்த வயதில் காசு வந்தால் போதும் என சொல்லவில்லை...பையனை விரட்டி வீட்ட மீட்டு தாங்க என சொல்லவில்லை ... உழைத்து சாப்பிட வேண்டும் என்கிற தீர்க்கம் இருந்தது... கொஞ்சம் விரக்தி தொட்டு.
அந்த குரலில் விரக்தியில் நனைந்து நஞ்சுப்போன துளி நம்பிக்கை இருந்தது

நம் நாட்டின் விடுதலை போர் மொழி வளர்ப்பு தியாகிகள் தலைவர்களின் வாரிசுகளுக்கு இத்தகைய நிலைமை புதிதல்ல ‌....
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்றான் வள்ளுவன்

 அதனால் தான் என்னவோ நம்மை சுற்றி இப்படி புது புது வியாதிகள் வந்து வாட்டுகிறது..

பல பல நன்றிகளை எளிதாக மறந்து விடுகிறோம்

இந்த அம்மா கேட்பது ஒரு சிறிய வேலை... அதன்மூலம் மாதம் சாப்பாட்டு க்கும் மருத்துவ செலவுக்கும் கையேந்தா நிலை.... கேட்பது நம் மொழியின் மிகப்பெரும் ஆளுமையின் வாரிசு...இதை கூட நாம் ஒரு சமுதாயமாக செய்ய முடியாதா...?

இந்த பதிவை பார்க்கும் அதிகாரிகள், அரசு இயந்திரத்தில் இருப்பவர்கள் அந்த அம்மாவின் குறைந்தபட்ச உதவியை நிறைவேற்றி தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
பெரும் கஷ்டத்தில் இருக்கும் நம்மொழியின் பெரும் ஆளுமையின் வாரிசு க்காக.... தமிழுக்காக...மனிதத்து க்காக.

(திருமதி. ரச்சேல், 7358431059 )

முடிந்தவரை இந்த பதிவை பகிருங்கள்

பேச்சுக்கு இடையில் என் மகளை அழைத்து, இன்னைக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள்... உங்க ப்ளெஸ்ஸிங் வேண்டும் என்றேன்

உடனே ஜெபம் செய்து, நூறு வயது வாழ்வ குழந்தை என்றார்

லாக் டவுன் சட்டத்தால் எப்போதும் மகளின் பிறந்தநாளுக்கு சென்று தரிசனம் செய்யும் திருவேற்காடு கருமாரி அம்மனை இன்று தரிசனம் செய்ய முடியவில்லையே என இருந்தேன்

கருமாரியம்மனுடன் மேரி மாதா ஆசியும் சேர்ந்தே கிடைத்தது என் மகளுக்கு.

- இரா. இராஜகோபாலன்
ரா. ராஜகோபாலன்

Thursday, July 8, 2021

சரணம் சரணம் சரணம்....

 







இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே

2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே

3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்

Tuesday, May 11, 2021

கவி பாடி ஆட்டையை போடும் கலாச்சாரம்








நம் முன்னோர்கள் காலத்தில் புலவர்கள் அரண்மனைக்கு சென்று அரசனை பாராட்டி கவிதை பாடி பொற்காசுகளோடு இல்லம் திரும்பார்கள் என்று கேள்வி.


அதே பாணி இன்றும் தொடருகின்றது. இந்த காலத்தில் யார் ஆட்சிக்குவந்தாலும் அவர்களை பாராட்டி ஒரு கவிதை எழுதி சென்னைக்கு அருகே  சில பல கிரௌண்ட் நிலத்தை புலவர் ஒருவர் சிறிது கொண்டே பெறுவார் என்றும் கேள்வி.


நாமும் சராசரி மனிதன் தானே.. ஸ்டாலினை பாராட்டி ஒரு கவிதை எழுதுவோம்.






Friday, May 7, 2021

"அம்மாவுக்கு தாலி அறுக்க போறாங்க "




தவழும் நாட்கள் முடிந்து

தடுமாறி நடக்கையில் 

யாரோ சொல்ல கேட்டேன்..

அவங்க அம்மாவுக்கு தாலி 

அறுக்க போறாங்க என்று.


அர்த்தம் புரியாமல் 

அம்மாவின் அருகில் செல்ல

அனைத்தையும் கண்டு 

என்னை 

அணைத்து கொண்டு 

அழுதார்கள்.

Monday, April 12, 2021

திருக்குறளில் நகைச்சுவை .

 


https://www.youtube.com/watch?v=j8-z2EHhOXY&t=7s


நியூயார்க் தமிழ் சங்கத்தில் இலக்கிய குழு சார்பாக நடைபெற்ற "இலக்கியத்தில் நகைச்சுவை " என்ற தலைப்பில் "திருக்குறளில் நகைச்சுவை  " என்று பேசினேன்.   நேரமிருப்போர் கண்டு நிறை குறை கூறவும்.

அமுதன் சாந்தி - போய் வா நண்பா...




அமுதன் சாந்தி என்ற நண்பர். விட்ட குறை தோட்ட குறை என்று ஒன்றும் இல்லை. முக நூலில் பொது நண்பர்கள் மூலம் என் சுவரை தொட பரிச்சயமானார்

ஆரம்ப நட்ப்பு எப்போதும் போல குதுகூலமாக இருந்தது. அவர் வாழ்ந்த மாடுங்க நகரில் நகரில் நானும் சில வருடங்கள் வசித்ததால் அடிக்கடி அதை பற்றி பேசி வந்தோம். 

Saturday, March 20, 2021

கண்ணதாசன் கவியில் காதல் !!!?

நியூயார்க் தமிழ் சங்கத்தின் இலக்கிய பிரிவில்


கண்ணதாசன் பாடல்களில் அதிகம் காணப்படுவது காதல் சுவையே ,கவி சுவையே என்ற ஒரு பாட்டுமன்றத்தில்  பாட / பேச அழைப்பு வந்தது.


பாடினேன்/பேசினேன்.


இதோ அந்த நிகழ்ச்சிக்கான லிங்க்.


https://www.youtube.com/watch?v=we4k7GXAk94

Sunday, February 7, 2021

வாழ்த்துக்கள் வருண் Winner - NFL POOL

 Congrats Varun! The winner of our First ever pool.


You have also won the one on one against me.



Here is the final results



The game failed to live upto its expectations as Buccs defense destroyed Chiefs. The only silver lining on the cloud for me is "This game would make people forget the RAMS-PATS game".


BRADY IS THE GOAT. Trust me.


See you all next year.


PS :


Varun,

Please let us know the logistics to get your "Dining Details" 

Superbowl - என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி

 Alright Guys...


Here we go...






Everyone has picked CHIEFS but for Varun.

Total points wouldnt matter as we are going to have a sole winner. Its either going to be Varun or Prince.

All the best.

Theres an add on bet happening with Varun and myself (which started this whole pool).


May the best man win.

PS: 

Myself and my daughters have bought few squares for the bowl Find below the numbers. Let me know if we win anything. The numbers are for every quarter and the Grand Prize is 3,400$.




I am sure you'd all know how the squares works. I am explaining the "Workings" for the benefit for those who dont know.



Lets take the first line.

We paid 25 Dollar to buy that square. And if any of the Quarters ends with the score line
with 

Tampa Bay at 3


KC at 6

We win.

The scores can be 

for Tampa 3, 13,23,33,43 or 53

and KC 6,16,26,36,46, 56

The last digit must match the scorelines at the end of any quarters.

Gimmie a shout if the scoreline is

TB 30
and KC is 38

That would make me Happy ( Check the last line)

As we know, the winners get to go a fine restaurant for a nice dinner for FOUR. 

All the best again.




Wednesday, January 27, 2021

Sir மற்றும் The White Tiger

 காது முழுக்க சார் .. சார் .. Sir !

கடந்த பல வருடங்களாகவே சில பல காரணங்களினால் சினிமா பார்ப்பதை தவிர்த்து வந்தேன். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலமும் சேர்த்து தான். ஹிந்தி சினிமாவா? அதை பார்த்து ரசிக்கும் அளவிற்கு நமக்கு அறிவு கிடையாது. அதனால் அதை எப்போதும் பார்ப்பதில்லை.


கொரோனா காலம் துவங்கி இல்லத்திலேயே இருப்பதால் நேரம் சற்று கிடைப்பது மட்டுமல்லாமல் ராசாதிக்கள் இருவரும் தம் தம் சொந்த கால்களில் நிற்க துவங்கியதால் இன்னும் சற்று நேரம் கிடைக்க, சில மாதங்களாக இந்த சினிமா பார்க்கும் பழக்கம் மீண்டும் துவங்கியுள்ளது.

சென்ற வாரம் அலுவலகம் செல்ல, அங்கே இருந்த அமெரிக்க சக பணியாளர்கள் சிலர்.. 

" எங்க போன விசு, முக்கியமான விஷயம் பேசணும், வா" 

என்று அழைக்க , 

Sunday, January 24, 2021

( Superbowl Part) என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி

 Alright Guys...


Iẗs 4th Qtr, and Chiefs are demolishing Bills and knowing the outcome of the game, here we go with the points table after the Championships.

Super bowl gets 6 points. (We need to enter the Total points for the Superbowl games as well, to decide the WINNER in case of a Tie)

Good to know all of us still have a shot at winning (Dinner for four) and wishing you all the best. Its going to be another two weeks and I can tell you now itself what my picks gonna be.


All the best.

Saturday, January 23, 2021

என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி ( 4th Part)

 



Alright..

Here is the table after Divisional Rounds and Conference Picks.

We have Varun leading the table with 11 points and  and still catchable.

Its Conference time and it is looking pretty awesome. Green Bay hosing Tampa is mouth watering.


Aaron VS Brady.  

All of you have picked Packers except yours faithfully. And this pick would make me co leader after that game. 


The next one Bills VS Chiefs 


We have 5 of us picking Chiefs and 2 of us going with Bills.


All the best guys. 


Sunday, January 17, 2021

இல்லத்தில் பிக் பாஸ் கணவனா ? மனைவியா?

போன வாரம் ஒரு போன் கால்! சிகாகோ நகரில் வாழும் என் அருமை நண்பன் மணி ..

நலம் விசாரித்த பின் ..


"விசு, பொங்கலுக்கு  டல்லாஸ் தமிழ் சங்கத்தில் ஒரு பட்டிமன்றம் தயார் பன்றாங்க, பேச முடியுமா?¨

"தலை இருக்கும் பொது வால் ஆடக்கூடாது மணி, நீங்க பேசுங்க!!

"இல்ல, நான் கொஞ்சம் பிசி, நீங்க பேசுங்க, உங்க கான்டக்ட் நம்பரை அவங்களுக்கு அனுப்பறேன்

அனுப்பினார், டல்லாஸில் இருந்து கால் வந்தது.

நலம் விசாரித்த பின்...மேலே போகும் முன் இரண்டே கேள்வி..

யார் நடுவர்..!!?

டெல்லி கணேஷ்..

மனதில்.. ஓகே.. ஹார்ம்லெஸ். 

"தலைப்பு என்ன? ¨

வீட்டில் "பிக் பாஸ் ¨ கணவனா? மனைவியா? 

"நான் யாருக்காக பேசணும்!!¨

¨மனைவி"

 ஓகே, நம்ம வீட்டிலும்  அதுதானே உண்மை.

இதோ அந்த பட்டி மன்றத்தின் யூடுப் லிங்க். விருப்பப்பட்டோர் காணலாம்.



Friday, January 15, 2021

என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி ( Third Part)

 Nice.



We are on guys. Looks like it is going to be a great weekend.


We have seven of us sweating it out and why am I thinking that I am going to smoke you all.


Cos' I am the only one who picked RAMS over PACKERS and BROWNS over CHIEFS.


So long all.


All the best!


Here is the points table along with the Divisional Picks.


Bring it on!



Alright Gentlemen,

Here is the updated Scores, results, and Points.

Congrats to Varun and Chandra for getting all four Correct.  The difference between the leader and the bottom is only couple of games. 



Let's play the conference ...


Conference finals every games a 3 points. A total of 6 points again.

Super bowl gets 6 points. (We need to enter the Total points for the Superbowl games as well, to decide the WINNER in case of a Tie)

The points will accumulate as we mentioned earlier.

Find below the schedule:

Jan 24 

Tampa Bay Bucs at  Greenbay Packers  12.05 (PST)

Buffalo Bills at Kansan City Chiefs (03:40 PST)

If anyone wants to join from now on, you are given 6 points (minimum points carried at the end of the divisionals, ie 6)

Friday, January 8, 2021

"கணக்குக்கு எதுக்கு வாக்சின்"

சென்ற வாரம் முதல் இங்கே மக்களுக்கு வாக்சின் போட ஆரம்பித்துள்ளார்கள்.

என் குடும்பத்தில் என் அம்மா (வயதானோர் என்ற காரணத்தினால்) அம்மணி (மருத்துவ துறை) அண்ணன்   ( மருத்துவ துறை) அக்கா (மருத்துவ துறை ) என்ற காரணத்தினால்  முன்னுரிமை பெற்று வாக்சின் பெற்று கொண்டார்கள்.


பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் இரண்டு வாரத்தில் மூத்தவளுக்கு  அத்தியாவசிய துறை என்பதாலும் இளையவளுக்கு விளையிட்டு துறை என்பதாலும் வாக்சின் அளிக்கபடுமாம். இப்படி இருக்கையில் நேற்று, இல்லத்தில் அம்மணியிடம் ..

"வாக்சின் போட்டியே, ஏதாவது சைட் எபெக்ட், வந்ததா""

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, கொஞ்சம் அதிகமா தூக்கம் வந்துச்சி"

மனதில்...

அதுக்கு எதுக்கு வாக்சின். நமக்கெல்லாம் வாக்சின் போடாமலே ஏன் இன்னும் சொல்ல போனால் பொங்கல் சாப்பிடாமலே கூட அதிகமா தூக்கம் வரும்.

Thursday, January 7, 2021

புது மாப்பிள்ளைக்கு ... பா பா ஒப்பாரி...

 ஒரு மாசத்துக்கு முன்னால நல்ல ஒரு நாளா பார்த்து வீட்டுல இருக்க நாலு பெரும் சேர்ந்து குளிருக்கு  தலையில் இருந்து கால் வரை கம்பிளியை போத்திக்குனு மகிழ்ச்சியா கிளம்பினோம்.

வருசா வருஷம் பண்ற காரியம் தானே. இது ஒரு Family Tradition.


இந்த வருஷம் மூத்த ராசாத்தி வர கொஞ்சம் தாமதமானதால், இளையவளிடம்,

Tuesday, January 5, 2021

இலவசத்திலேயே வாழ பழகிய இந்திய கிரிக்கெட்டர்கள்.

இன்று ஒரு செய்தி படித்தேன். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட சென்ற இந்திய அணியை சார்ந்த ஐந்து வீரர்கள் ஏதோ ஒரு உணவகத்தில் கோவிட்  கட்டுப்பாட்டை மீறி உணவருந்தியதாகவும் அதற்காக அணியோடு சேர்ந்து பயிற்சில் ஈடுபடுவதை தவிர்த்து தனியாக பயிற்சி செய்யவும் அறிவுறுத்த பட்டுளார்கள்.


இவர்கள் அந்த உணவகத்தில் அமர்ந்து இருந்த செய்தியை வெளியிட்டது எந்த ஒரு செய்தி நிறுவனமும் அல்ல. இதை ஒரு கிரிக்கெட் விசிறி தன் சமூக வலைதளத்தில் "இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இமேஜ் நான் இருக்கும் உணவகத்தில் தான் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தேன். அவர்களுக்கான மொத்த செலவையும் நான் தான் கட்டினேன்" என்று எழுதியிருந்தார்.

என்ன  ஒரு முட்டா பய மருமகன் இந்த ரசிகன்!

இந்த ஐந்து கிரிக்கெட்டர்களும் கோடி கணக்கில் பணத்தை ஈடுபவர்கள். அவர்கள் ஐந்து பேர் சாப்பிட்ட தொகையை இவர் ஏன் அதிக பிரசங்கியாக தர வேண்டும். எல்லாம் ஒரு அற்ப சந்தோசம்தான்.

Monday, January 4, 2021

என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி.

 When in Rome,

Make Rome (RAMS) the Home.



கொரோனாவின் தாக்கத்தினால் இந்த வருடம் NFL போட்டிகள் இருக்குமா இருக்காதா என்ற அச்சத்தையெல்லாம் நீக்கி சென்ற வாரத்தோடு Regular Season  ஆட்டங்கள் முடிந்தவடைந்தன.

Thursday, December 31, 2020

2020 டேக் இட் ஈஸி..

தங்களில் அநேகருக்கு இந்த 2020 பெரிய சவாலாக அமைந்து இருந்தாலும், எனக்கும் என் குடும்பத்திற்கும் இந்த வருடம் ஒரு சுவாரஸ்யமான படிப்பினையாக தான் இருந்தது.

இங்கே அமெரிக்காவில் பல துறைகள் கோவிட் காரணத்தினால் மூட பட்டு அந்நிறுவனத்தில் பணிபுரிவோர்களின் நிதிநிலைமை பாதிக்க பட்டு இருந்த போதிலும் அம்மணியின் மருத்துவ துறை மற்றும் என் நிதி துறை இரண்டும் "அத்தியாவாசியதுறையாக " நிர்ணயிக்க பட்டதால் இருவரின் வேலைகளின் சில சிறிய மாற்றங்கள் இருந்தாலும் பெரிதான பாதிப்பு ஒன்றும் ஏற்பாவிலை,

Sunday, December 27, 2020

Losing our Way... :( Varun!!!!!

 



What an embarrassing loss Man. It was awful. 


Hope the Packers put one across Bears next week, for I think it's not working out well for us against the Cardinals next Sunday.


Just want to make the play off and from then on its anyone's game.


Still Hoping....


Thursday, December 10, 2020

Dr. அன்டர்சன் அமலன் குமார் (1971 -2020)

 "வரும் போது மறக்காம சமையலுக்கு காய்கறி ஏதாவது வாங்கின்னு   வந்துடுங்க!!"

அலை பேசியில் கணவனிடம் கூறினார் அம்மணி.

அம்மணி மருத்துவர் தானே, கண்டிப்பாக கணவனும் மருத்துவராக தான் இருப்பார் என்று நினைத்தால் தவறே இல்லை.

அருமையான குடும்பம். அம்மணி திருச்சியில் ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.. ஆஸ்தி, ஆசை இரண்டிற்கும் சேர்த்து ஒரே ஒரு செல்ல மகன்.


Anderson Amalan Kumar
கணவன் மருத்துவர் அல்ல, மருத்துவ துறைக்கு தேர்ச்சி பெரும் அறிவும் ஆற்றலும் இருந்தாலும் விவசாய துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்று பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.

Friday, December 4, 2020

மூன்று வாரம் முன்னதாக வெளிவந்த - ரஜினியின் டிசம்பர் 31 ம் தேதி அறிவிப்பு!

டிஸ்கி:

இது முற்றிலும் என் கற்பனையே. ரஜினி என்ற ஒரு நடிகனை நான் மிகவும் ரசித்து கொண்டாடி இருக்கின்றேன்.  ஒரு எளிமையான ஆரம்பத்தில் இருந்த வந்தவர் தன் நம்பிக்கையாலும் விடா முயற்சியினாலும் சற்றும் பின் வாங்காமல் தன் இலட்சியத்தை நோக்கி பல முறை எதிர் நீச்சல் போட்டு திரை உலகத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார்- திகழ்கின்றார்-திகழுவார்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...