ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பாரதி இன்று இருந்தால் ...

பள்ளி - கல்லூரி நாட்களில் வார இறுதி போது நேரம் கிடைத்தால் அருகில் கோயில்பிள்ளையின் இல்லத்திற்கு சென்று அங்கே கிடைக்கும் சில சில்லறை சேகரித்து அருகில் உள்ள டி கடைக்கு சென்று நாட்டு நடப்புகளை விசாரிப்போம் - விவாதிப்போம்.



இன்றோ, வார இறுதி ஆயிற்றே. நான் இங்கே உலகின் கடைசி நுனியில் (உலகம் உருண்டை என்பது எனக்கும் தெரியும்.. ஒரு பேச்சிற்கு சொன்னேன்.) அவனோ அட்லாண்டிக் கடலின் அந்த பக்கத்தில், அன்று போல் ஒன்று சேர முடியாதே, இருந்தாலும் தொலை பேசியில் பேசலாம் என்று அழைத்தேன்.

பேசினோம். அரசியல் -விளையாட்டு-சினிமா- வாழ்க்கை தரம்- உறவு - நடப்பு.
என்ன பிள்ளை ?, எல்லாம் மாறி வருகின்றதே? நீ மறந்தாயா என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால், நான் மறவேன். நாடு செல்லும் நிலையை அன்றே கண்ட நீ " பாரதி இன்று இருந்தால்" என்று ஒரு பாடல் எழுதினாயே, நினைவிற்கு வருகிறதா?

எப்படி மறப்பேன் விசு?, அன்றைய நிலையே மோசம் என்றால் இன்றைய நிலைய நினைத்து பார்.

சரி அந்த பாடல் இன்றைய நிலைக்கு ஒத்து வருமா..?

கண்டிப்பாக விசு, நான் இன்றும் அதை மனதில் பாடி கொண்டு தான் இருக்கின்றேன்.

எனக்கு ஒரு உதவி செய்.  என் நட்ப்புகளும் அந்த பாடலை ரசிக்க வேண்டும், நீ அதை மீண்டும் எழுத முடியுமா?

கண்டிப்பாக, உன் நட்புகளை அனுப்பி வை.

(Picture courtesy : Google)

நட்ப்புகளே,


இதோ என் நண்பன் கோயில் பிள்ளையின் " பாரதி இன்று இருந்தால்' ... யாம் பெற்ற இன்பம். பெருக இவ்வையகம் என்னும் நோக்கத்தோடு...

பாடலை படிக்க இங்கே சொடுக்குங்கள். 


www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. kavithaiyai padithen sir!

    potti nadappatharkku ainthu nimidathukku munpu thalaippu solli ezuthiya kavithaiyaa ena santhekam varukirathu!
    enna avvalvu nalaa irukku athutaan!
    arumaiyaa ezuthi irunthar ko sir!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா

    அருமையாக சொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நண்றி நணப்ரே! ராஜபாட்டை போடும் விசு அவர்களே தங்கள் நண்பரின் வலைத்தளம் சென்று பார்த்து வாசித்து கருத்தும் சொல்லியாயிற்று....

    மிக்க நன்றி அறிமுகத்திற்கு!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு முறையும் வந்து படித்து பின்னோட்டத்தில் ஊக்கவிக்கும் தமக்கு எப்படி சொல்வேன் நன்றி. வருகைக்கு நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...