புதன், 12 ஆகஸ்ட், 2015

சொன்னது நீ தானா . சொல் ! Cell ! செல்! ...

வா வாத்தியாரே.. ஐரோப்பா பயணம் எல்லாம் எப்படி ?

நல்ல போச்சி தண்டம்... நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க.

நல்லா இருக்கோம் வாத்தியாரே..

என்று பேசி கொண்டே இருக்கும் போதே.. தண்டபாணியின் மனைவி திருபுரசுந்தரி அங்கே வந்து சேர்ந்தார்கள்.

ஹலோ சுந்தரி.. எப்படி இருக்கீங்க ..?

நல்லா இருக்கோம் .. அண்ணா.. நீங்க, அக்கா ராசாத்திங்க எப்படி?

எல்லாம் நல்லா இருக்கோம்.

இந்தா,சுந்தரி ஐரோப்பா மில்க் சாக்லேட்...


ஏன் வாத்தியாரே .. உங்க ஆபிசில் கொண்டு போய் வைச்சியே .. அதுல ரெண்டு பேக்கட் எனக்கு வாங்க வேண்டியது தானே..

ரொம்ப அவசியம் பாணி..அங்கே நான் பட்ட அவஸ்த்தை போதாதா ? (அதை படிக்க இங்கே சொடுக்கவும்...ஒரு கோப்பையிலே என் ....)

அப்படி பேசி கொண்டு இருக்கும் போதே...சுந்தரி,,

ஏன் அண்ணே,, ஐரோப்பாவில் விடுமுறைக்கு போறீங்க..அங்கே இருந்து இவருக்கு மணிக்கு ஒரு முறை SMS டெக்ஸ்ட் அனுப்புனம்ன்னு அவசியமா ?

புரியல, சுந்தரி..

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை டெக்ஸ்ட் அனுப்பினிங்களே அதை சொன்னேன்.

தண்டபாணி நடுவில் புகுந்து..

சுந்தரி.. உள்ளே போய் வாத்தியாருக்கு டீ ஏதாவது எடுத்துன்னு வா...

என்று சொல்ல.. சுந்தரி உள்ளே போக... நானோ..

தண்டம் ... நான் உனக்கு எப்ப "SMS - டெக்ஸ்ட்" அனுப்புனேன்.. உன் தொல்லையே வேண்டாம்னு தானே 3 வாரம் ஐரோப்பா போனேன்.. இங்கே என்னடானா ...SMS  - டெக்ஸ்ட் .. லொட்டு லொசுக்குன்னு .. என்ன நடக்குது இங்கே..?

வாத்தியாரே.. அந்த விஷயத்த பத்தி அப்புறம் பேசலாம்.. நீ சுந்தரி சொல்றதுக்கெல்லாம் சும்மா தலைய மட்டும் ஆட்டு.. அது போதும்..

என்னை வண்டி தள்ள வைச்சிட்டிடே தண்டம்....

டீ எடுத்து கொண்டு வந்த சுந்தரி...

போன சனி கிழமை .. "லாஸ் அன்ஜெல்ஸ்" போய் உங்க வண்டிக்கு எதோ கண்ணாடி மாத்தனும்ன்னு காலையில் போனார்... அப்புறம் சாயங்காலம் தான் வந்தார்..

நானோ தயங்கி கொண்டே..

ஆமா சுந்தரி... என்ன பண்றது.. அந்த கடைக்காரன் உடனே வந்தா கண்ணாடியை மாத்தி கொடுக்குறேன்னு சொன்னான்.. அதுதான் தண்டபாணி உதவி தேவை பட்டது ..

அப்புறம் ரெண்டு நாளுக்கு ஒருமுறை தினமும் உங்க வீட்டத் தோட்டத்திற்கு  தண்ணீர் பாய்ச்ச போய்டுவார். அதுக்கு ஏன் அண்ணா தினமும் " டெக்ஸ்ட் " பண்ணிங்க.. ஒரே முறை பண்ணி இருந்தா போதும் இல்ல...

இல்ல,, சுந்தரி .. பாணி மறந்துட்டாருன்னா.. செடி காஞ்சிடும் இல்ல ... அதுதான்..

அப்புறம் ஒரு நாள் இரவு .. எதோ உங்க பக்கத்து வீட்டுக்கார் ஏதோ அவசரமா கூப்பிட்டார்ன்னு, இவரை போய் பார்க்க சொல்லி ஒரு SMS  அனுப்பினிங்க இல்ல ..  அன்னிக்கு இரவு 10 மணி போய்ட்டு காலையில் தான் வந்தார்..

(தயங்கி கொண்டே... பொறாமையோடு... ) ஆமா சுந்தரி.. எங்க வீடு திருடன் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டதாம்... அதுதான் .. அங்கே போய் போலிஸ் வரவரைக்கும் தண்டம் காத்துன்னு   இருக்க வேண்டியாதாச்சி..

என்னமோ போங்க அண்ணா.. இருந்தாலும் "சுவிஸ் நாட்டில்" இருக்கும் போது எங்களை எல்லாம் காலாய்த்து ஒரு போட்டோ அனுப்பினிங்களே  .. அது சூப்பர்...

எந்த போட்டோ..?

அது தான் அண்ணே,, அந்த "ஆத்தோரமா .."

ஒ , அதுவா.. சும்மா தமாசுக்கு ...

அது சரி அண்ணே..இவரிடம் நேர பேசும் போது மட்டும் தண்டம் .. தண்டபானின்னு கூப்பிட்ரிங்க .. ஆனா SMS  ல் மட்டும் .. மிஸ்டர் தண்டபானின்னு எழுதுறிங்க .. அது ஏன்..

சும்மா மரியாதைக்கு தான்..

சரி, அதை விடுங்க.. ..   . நீங்க இல்லாத போது இவரை நிறைய வேலை வாங்கிடீங்கோ.. அடுத்த முறை இவர் ஊருக்கு போகும் போது.. இவரும் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்ப்பார்..(என்று தன் மனதில் வந்த ஆசையை சுந்தரி, கணவன் பெயரை வைத்து சொல்லி முடித்தார் )

என்று சொல்லி கொண்டே சுந்தரி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள் .

என்ன தண்டம்.. நான் உனக்கு ஒரு SMS கூட அனுப்பலையே.. என் பெயரை சொல்லி வீட்டிலே நீ தங்கல போல.. இது எப்படி..?

விடு வாத்தியாரே..

பாணி... இது தானே வேண்டாம்.. விஷயத்த சொல்லு.. நான் எழுதின டெக்ஸ்ட் எல்லாம் அவங்க படிச்ச மாதிரி சொல்றாங்க..

அவங்க படிச்சதினால் தான் சொல்றாங்க..

நான் தான் SMS அனுப்பலையே.. அனுப்பாத SMSசை எப்படி படிச்சாங்க..

உனக்கு பதிலா அதையெல்லாம் நானே அனுப்பினேன்..

அனுப்புன சரி.. என் போன் என் கிட்டதானே இருந்தது.. அதுல இருந்து எப்படி அனுப்புன.?

என்ன வாத்தியாரே .. புரியாத மாதிரி நடிக்கிற ?

டேய்.. உண்மையாகவே புரியலே.. விளக்கமா சொல்லு..

வாத்தியாரே.. என்னிடம் ஒரு "ஸ்பேர்  - எக்ஸ்ட்ரா "அலை பேசி இருக்கு

இருக்கட்டும், அதுக்கு என்ன  இப்ப ?

பதறாத வாத்தியாரே.. பொறுமை .. இந்த ஸ்பேர் அலை பேசி நம்பரை .. "விசு வாத்தியார் "ன்னு  பேரை போட்டு,உன் புகை படத்தையும் போட்டு அடுத்த போன்ல சேவ் பண்ணிட்டேன்..

அப்புறம்..

அந்த போன்ல இருந்து எந்த SMS அனுப்பினாலும்..உன் போட்டோவோட " மெசேஜ் ப்ரம் விசு வாத்தியார்" ன்னு வரும்.. எனக்கு எப்ப எப்ப வெளியே போகணுமோ.. அப்ப அப்ப உன்னிடம் இருந்து ஒரு SMS வரும். நானும் ஜாலியா கிளம்பிடுவேன்..

டேய்.. நடுவில் நான் சுவிஸ் நாட்டில் ஆத்தோரம் இருந்த போட்டோ..?

 நீ தான் முகநூலில் சில படங்கள் போட்டியே.. அதுல இருந்து எடுத்து அனுப்பினேன்..

அட பாவி... எப்படி தண்டம்.. இப்படியெல்லாம் யோசிக்க முடியுது...

எல்லாம் அவன் செயல்...

அட பாவி.. போன மூணு வாரம் என்னை தள்ள வச்சி உன் வண்டிய ஒட்டிகினியே.. நல்லா இரு.. நல்லா இரு..

பின் குறிப்பு :

அன்று இரவு..

தண்டம்..

சொல்லு வாத்தியாரே..

எனக்கு அவசரமா ஒரு உதவி, தேவை படுது..

மூணு வாரமா என் வயித்துல  பால வார்த்த.. உனக்கா இல்லைன்னு சொல்ல போறேன்.. என்ன வேணும் சொல்லு..

அந்த "எக்ஸ்ட்ரா" அலை பேசி ஒரு ரெண்டு வாரம் கடனா தர முடியுமா ?

இப்ப முடியாது வாத்தியாரே.. வேணும்னா அடுத்த மாசம் வாங்கிக்கோ..

இப்ப ஏன் முடியாது..?

நம்ம "பிள்ளைவாள்" நேத்து தான் குடும்பத்தோடு இந்தியா போய் இருக்கான்.. அடிக்கடி SMS பண்ணுவான்.. அது சரி.. உனக்கு ஏன் திடீர்னு இந்த போன் தேவை படுது..?

இப்ப தான் எனக்கும் "பிள்ளைவாள்" ஊருக்கு போன விஷயம் தெரிஞ்சது.. அதுதான்..

புள்ளி வைக்க கூடாதே.. நீ ரோடே போட்டுருவியே ... வாத்தியாரே..

டேய் அது .. புள்ளி இல்ல... கோடு..

 கோடு போட கூடாதே ... நீ கோலம் போட்டுரிவியே ..

தண்டம் அது புள்ளி..

இப்படின்னா .. அப்படி .. அப்படின்னா இப்படி.. புள்ளியும் கோடும் தான் இப்ப ரொம்ப முக்கியம்...அடுத்த மாசம் நான் ஊருக்கு போறேன் இல்ல, அப்ப உனக்கு அந்த போன் தரேன். அதுவரைக்கும் குடும்பத்த ஒழுங்கா கவனி.. உடம்பை கெடுத்துக்காத, வாத்தியாரே!


www.visuawesome.com


12 கருத்துகள்:

  1. மதுரை தமிழா ....அமைதியா.. சாந்தாமா .. நிதானமா.. படித்திட்டு... சமத்தா ஏதாவது சொல்லணும். உங்க ரெண்டு பேரு வீட்டில் " பூரி கட்டை " இல்லையான்னு கேட்ட்க படாது..

    பதிலளிநீக்கு
  2. ( ------------------------------------ ) <------------------அமைதியாக இங்கே கருத்து போட்டுருக்கேன்

    பதிலளிநீக்கு
  3. உங்க புத்தக வெளியிட்டு விழா அப்ப நீங்க அடிக்கடி உங்க செல்போனை செக்க செய்து கொண்டிருந்தீர்கள் அப்போது நான் யார் உங்களை இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணுகிறது என்று கேட்டதற்கு நீங்கள் என் மனைவிதான் என்று செல்போனை காண்பித்தீர்களே அதுவும் இந்த மாதிரி ஏமாத்து வேலையா? உங்க கல்லூரி கால காதலிதானே உங்களை அடிக்கடி போன் செய்து தொந்தரவு பண்ணியது...

    (அப்பாடி இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது இதை நிச்சயம் விசுவின் மனைவி படிப்பார் அதன் பின் விசுவிற்கு பூரிக்கட்டை அடிதான்... நாம் மட்டும் எவ்வளவு நாள் அடி வாங்கிட்டு இருப்பது...ஹும்ம்ம்ம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா... கல்லூரி நேரத்தில் எனக்கு படிக்கவே நேரம் போதவில்லை.. இதில் காதலாவது ... கத்திரிக்காயாவது ... கருமமே கண்ணாயிரம் என்று இருந்தவன் நான்....

      நீக்கு
  4. ஹா.. ஹா... ஸ்பேர் அலை பேசி - கில்லாடி தண்டபானி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க .. தனபாலன்.. இந்த மாதிரி நண்பர்களை வைத்து கொண்டு நான் படும் பாடு இருக்கே....

      நீக்கு
  5. எப்படியெல்லாம் யோசிக்கிறார் உங்க நண்பர்! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  6. உங்க மனைவிகிட்ட இத சொல்லிட்டா அவங்க யார் யார்ட்ட சொல்லனுமோ சொல்லிடுவாங்க இல்ல? :-)

    பதிலளிநீக்கு
  7. ஹஹஹஹ் செம தண்டம் வந்துட்டாலே களை கட்டுது....செம....ரொம்பவே ரசிச்சோம்...

    ஹஹஹஹஹ்...மதுரைத்தமிழனின் கலகம் நன்மையில் முடியட்டும்...அடப்பாவி இப்பதான் வெல்லூர் விஷயமே வெளில வருது....டண்டணக்கா டண்டணக்காதான்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...