சனி, 30 செப்டம்பர், 2017

கெளதம் மேனன்.. நீ ஆம்பிளை I mean You are a Fine Gentleman!

சில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான்  எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. அதே வேகத்தில் நல்ல காரியங்களை பார்க்கும் போது பாராட்ட தவறி விடுகின்றேன்.

அதற்காக தான் இந்த பதிவு.. இதை பல மாதங்களுக்கு (சில வருடங்களுக்கு? ) முன் எழுதி இருக்க வேண்டும். "Shame on me" எழுத தவறி விட்டேன். Then again, its better to be late than never.


பல மாதங்களுக்கு முன் ஒரு திரைப்பட நிகழ்ச்சி. அதில் இயக்குனர் கெளதம் மேனன் , பாடலாசிரியர் தாமரை இன்னும் அநேகர் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

தன்ஷிகாவின் கண்ணீர்...

அடியேனுக்கு இரண்டு ராசாத்திக்கள். மூத்தவளுக்கு 18  வயது கல்லூரியில் முதலாமாண்டு  படிக்கிறாள். இளையவள் 15  வயது பள்ளியில் பத்தாவது படித்து வருகிறாள்.

இருவருமே கோல்ப் (Golf ) ஆடுபவர்கள்.மூத்தவள் கல்லூரிக்காகவும் இளையவள் பள்ளிக்காகவும் ஆடுவாள்.
கேடு கெட்டவனின் காலை தொட்டு.. 

அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த  விஷ்யங்களில் ஒன்று பள்ளிக்கூடங்களும் விளையாட்டு மைதானங்களும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியை பார்க்கவே முடியாது ( off course there are exceptions, but exceptions cant be examples). சரி அதை பற்றி இன்னொரு பதிவில் பாப்போம். இப்போ தலைப்பிற்கு வரலாம்.

மூத்தவள் கல்லூரி அடியேனின் இல்லத்தில் இருந்து 100  மைல் தொலைவு.  அங்கேயே விடுதியில் தங்கி படித்து வருகின்றாள். அவள் கோல்ப் போட்டி ஆட்டத்தை பார்க்க முடியாத சூழ்நிலை.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

என் இனிய BJP நண்பர்களுக்கு ....


என் இனிய BJP நண்பர்களுக்கு ....

நம் நாட்டின் தற்போதைய  பொருளாதார நிலைமை உண்மையாகவே பயமா தான் இருக்கு. எந்த புள்ளி விவரத்தை எடுத்து பார்த்தாலும் சரியான அடிவாங்கி இருக்கோம்.  இது உங்கள் அனைவருக்கும் தெரியும்.


இப்போது தான் நாம் கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும். மத்தியில் உள்ள அரசு is on denial.  தாங்கள் நல்ல நோக்கோடு செய்த சில காரியங்கள் எதிர்பார்த்த முடிவை தரவில்லை. அதனால் இந்த இழப்பு என்பதை ஒத்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த இழப்பு பெரிய இழப்பு இல்லை என்றும் .. சிறிய இழப்பே என்றும் அதுவும் தற்காலிகமானதே என்று சொல்லி கொண்டு வருகின்றார்கள்.

இந்த அணுகுமுறை நம் நாட்டை சீரழித்து விடும். BJP கட்சியை சார்ந்த பொருளாதார நிபுணர்கள் உடனடியாக தங்கள் சுயநலத்தை விட்டு வெளியே வரவேண்டும். தற்போதைய பொருளாதார நிலைமையை பற்றி தங்கள் ஆட்சிக்காரர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.

இப்படியே அமைதியாக.. பொருளாதார நிலைமை தானாகவே சரியாகிவிடும் என்று இருந்தால், அது இவர்கள் நம் நாட்டிற்கு செய்த துரோகமாகிவிடும்.

கடைசி ஆறு குவாட்டர்களில் GDP குறைந்து கொண்டே வருகின்றது. GDP குறைவதை ஏற்று கொள்ளாமல் அதை கணக்கிடும் விதத்தை மாற்றி வைத்து  GDP எதுவும் குறையவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது.

மத்திய அரசு வெளியே, சமாளித்து கொண்டு உள்ளே "இதுவும் கடந்து போகும் " என்று இருந்தால் அதை விட பெரிய தவறு வேறு எதுவும் இல்லை.

இது எல்லாவற்றிக்கும் மேலாக..

ஒருத்தன் டாக்டர்.. கால் வலி தாங்க முடியல டாக்டர் என்று அலறினானாம். உடனே அந்த டாக்டர் அருகில் இருந்த சுத்தியை எடுத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்து... கால் வலி எப்படி இருக்கு என்று கேட்க்கையில் அவனோ..
காலை விடுங்க டாக்டர்.. மண்டை வலி தாங்க முடியல என்றானாம்.

இப்படி எதுவுமாகிவிட கூடாது. இந்த அரசாங்கம் இந்த இழப்பை மறுத்து கொண்டு கொஞ்ச நாள் மறைக்கலாம் . ஆனால் அது  விதையை மண்ணிலும்  விந்தை மடியிலும் மறைப்பதற்கு சமம்.

என் பயம் ஒன்றே ஒன்று தான். இந்த பொருளாதார இழப்பை மக்கள் பேசாமல் இருக்க அந்த டாக்டர் சுத்தியால் மண்டையில் அடித்ததை போல் மக்களை அடித்து விட கூடாது. அது மதம் - ஜாட்ஜி - மொழி சார்ந்த வன்முறையாக இருந்து விட கூடாது.

மற்றும், இந்தியாவில் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கின்றார்கள். கட்சி மதம் தாண்டி அவர்களின்  புத்தியை உபயோகித்து கொள்ளவேண்டும்.
அப்படி செய்தால் இதுவும் கடந்து போகும். அதை விட்டுவிட்டு.. இது ஒரு இழப்பே இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தால்... நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதை தான்.

உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை.... Stop the Bleeding! இரத்த கசிவை  உடனடியாக நிறுத்த வேண்டும்.  புல்லட் ரயில் போன்ற திட்டங்கள் நல்லது தான். ஆனால் அது தற்போது தேவை இல்லை.  முதலில் இருப்பதை திருத்த வேண்டும்.

60  வருட காங்கிரஸ் ஆட்சியானல் தான் என்று சொல்லி கொண்டு உதாசீன படுத்திவிட முடியாது. அப்படியே உதாசீன படுத்தினால்... அந்த 60  வருடம் காங்கிரஸ் ஆட்சி 100  வருட ஆட்சியாக மாறிவிடும்.


இதை படிக்கும் BJP ஆட்கள் சற்று சிந்திக்கவும். Let your People know that we need to block this hole. Otherwise we all are going to sink.

BJP யின் தமிழக பேச்சாளர்கள் நாராயணன் - ராகவன் மற்றும்  தலைவர்கள் தமிழிசை போன்றோருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இவர்கள் மூவரும் அவரர் துறையில் சிறந்தவர்களாக இருக்கலாம் ஆனால் இவர்கள் பொருளாதாரத்தை பற்றி பேசும் போது  நாட்டு மக்களின் பொது அறிவை கேவலப்படுத்துவது போல் உள்ளது. They really insult our intelligence!

இவர்கள் பேசும் பேச்சை கேட்டால்  கடந்த மூன்று ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரம் ஒரு உன்னத நிலைமையை அடைந்தது போல் இருக்கும். நிதி அமைச்சர் ஜட்லீ நம் தற்போதைய  நிலைமையை நன்கு அறிந்து இருக்கின்றார். அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் இந்த இழப்பு தாற்காலிமாகமானது என்று சொல்லி வருகின்றார்.

ஆனால் நம்மூர் BJP பேச்சாளர்களோ இங்கே இழப்பு எதுவும் இல்லை என்கின்றார்கள்.

இதில் ஒருவர் கூறுகிறார்.. GDP 2  % தான் இறங்கிவிட்டதாம். அவருக்கு ஐயோ. GDP ஒரு சதவீதம் இறங்கினால் அது ஒன்னரை லட்சம் கோடி நட்டம். இரண்டு சதவீதம் என்றால் அது மூன்று லட்சம் கோடி நட்டம்.

தயவு செய்து தவறான கருத்துக்களை பகிராதீர்கள். நட்டம் நம் அனைவருக்குமே.

உங்கள் பாணியிலே முடிக்கின்றேன்..

பாரத் மாதாக்கி ஜே..


டி ஆர் & சன் ..சொன்னா வெக்க கேடு சொல்லாக்கட்டி..

சிம்புவின் ஒவ்வொரு நடவடிக்கையை பார்க்கும் போதும் எனக்குள் வரும் ஒரு நினைப்பு

"இவன் வீட்டுல பொண்ணுங்களே இல்லையா? அம்மா - சகோதரி கூடத்தான் வாழறான் ... பின்ன எப்படி இம்புட்டு நாதாரித்தனமா இருக்கான்னு"

 என்ற சந்தேகம் தான்.

அதே போல்.. இவனுடைய அப்பாவை பார்த்தால் ஒரு கேள்வி வரும். தற்பெருமை என்ற கேவலமான  உணர்வை "தன்னம்பிக்கை " என்ற ஒரு  சிறப்பான மனிததன்மையோடு குழப்பி குட்டையில் மட்டை போட்டு வந்தார்.

ஆண்டவனின் அருளால் TR அவர்கள் பல சிறந்த தாலந்துகளை பெற்றவர் என்பது உண்மை தான். இருந்தாலும் .. தானே அனைத்திலும் சிறந்தவன் என்றும் தன்னை விட்டால் வேறு எவனும் இல்லை என்றும் இவர் பேசும் பேச்சு.

இப்போதெல்லாம். இவர் பேச்சை பாருங்கள் .தலை முடியை தடவி கொண்டு .. என் மயிரை பாருங்கள்.. என் மயிர் உண்மையான மயிர்.. என் மயிரை போல எவனுக்கும் இல்லை என்ற அளவிற்கு தான் பேச்சு.

விஷயம் என்னவென்றால்..

வியாழன், 28 செப்டம்பர், 2017

அந்நியனிடம் கற்று கொள்ளவேண்டிய ரகசியம்...

இது சனநாயகம் .. இது கலாச்சாரம்.இது வாழும் முறை.. இது தலைவனுக்கு அடையாளம் !

இந்த ஒரு  படத்தை பாருங்கள் எம்புட்டு விஷயம் சொல்லுது.

பில் கிளின்டன் :

பில் கிளின்டன் டெமோகிராட் கட்சியில் இருந்து ஜனாதிபதியான தேர்ந்தெடுக்க பட்டவர். இவரால் தோற்க அடி க்கப்பட்டவர் அன்றை அதிபர் ஜார்ஜ் புஷ் ( ஜார்ஜ் W புஷ் , நடுவில் இருப்பவரின் தகப்பனார்).  இந்த தேர்தல் 1992 ல் நடந்தது. அதுவரை நடந்த தேர்தல்களை விட மிக அதிகமாக ஜனாதிபதி வேட்ப்பாளர்கள் ஒருவரை ஒருவர் தனிமையில் தாக்கி கொண்ட தேர்தல்.

இந்த பிரசாரத்தின் போது அதிபர் புஷ், கிளிண்ட்டனிற்கு வெளிநாட்டு விவகாரத்தில்   தன் வீட்டில் உள்ள நாய்க்கு  தெரியும் விஷயம் கூட தெரியாது என்றார்.


புதன், 27 செப்டம்பர், 2017

மனைவி அறியா ரகசியமா?

"ஏங்க..!"

"சொல்லு..."

"அடுப்புல டீ வைச்சி இருக்கேன்.. அஞ்சி நிமிஷம் பக்கத்துல கடை வரை போயிட்டு வரேன்... சரியா எடுத்துடுங்க..."

"ஓகே ..!!!"

"திரும்பவும் சொல்றேன்.. கவனமா எடுத்துடுங்க..."

"எனக்கு ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி.. கவலையை விடு..."

"ஜாக்கிரதை.. மறந்துடாந்திங்க..!!"

"அம்மா தாயே.. !நீ கிளம்பு.. நான் அடுத்த அடுப்புல ஏறி உக்கார்ந்து எப்ப கொதிக்குதன்னு பார்த்துனே இருக்கேன்!

"இல்லைங்க.. அது கொதிச்சி கீழே  ஊத்துனா..?!"

"ஊத்துனா.. ?"

"அடுப்பு முழுக்க போயிடும். அதை சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம். அப்புறம் வீடு முழுக்க தீஞ்ச வாசனை.."

"வேற..!"

"பாத்திரம் வெளியே எல்லாம் டீ தூள். கொஞ்ச எக்ஸ்டரா நேரம் விட்டீங்கனா
.. மொத்த பாத்திரமும் டேமேஜ்."

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கொள்ளைக்காரி ஜெயாவின் மரணம் - கணியன் பூங்குன்றனாரின் கேள்வி?

கொலைகாரி ஜெயாவின் மரணத்தில் பல திடுக்கிடும்
 தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் கணியன் கேட்க்கும் சில கேள்வி...

டாக்டர் பீலே.. யார் அவர்? அவர் தான் டாக்டர் பீலே என்று யார் அறிவார்கள்?

இறந்த பிணத்தை பதப்படுத்தும் சிறப்பு நிபுணருக்கு இங்கே என்ன வேலை?

ஜெயலலிதாவிற்கு அவர் என்ன சிகிச்சை அளித்தார்?

மிக முக்கியமான கேள்வி..

ஜெயலலிதாவிற்கு தான் அவர் சிகிச்சை அளித்தாரா? இவர் தான் ஜெயலலிதா என்று அவருக்கு கூறியது யார்?

 இறுதி சடங்கை செய்த  அந்த  ஆசாமி மருத்துவமனையில் சேர்ந்த இரண்டாம் நாளில் அங்கே என்ன ஆணி புடுங்க வந்தார்?

ZED பிரிவு பாதுகாப்பை அகற்றியது யார்? அகற்ற சொன்னது யார்?

அவர்கள் மருத்துவமனையில் இருக்கையில் மூன்றே நாள் தான் சுய நினைவோடு இருந்தார்களாம். அப்படி இருக்கையில் இடை தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கு அவரின் கட்டை விரலை உருட்டியது யார்?

இறந்த அவர் பூதஉடலில் கட்டை விரல் இருந்ததா? ( அதை மறைக்க தான் காலை வெட்டினார்கள் என்ற செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டார்கள? )

அவர் முகத்தில் இருந்த மூன்று புள்ளிகள் எதற்காக ... யாரால்?

75  நாட்களில் இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்ட அவர் ... எப்படி கொஞ்சமும் மெலியாமல் அப்படியே.. .

மருத்துவமனையில் இவர் இருக்கையில் வேறு என்ன என்ன கோப்புகளில் இவரின் கட்டை விரல் வைக்க பட்டுள்ளது? அதனால் பயன் பெற்றோர் யார் யார்?

இவர் இட்லி சாப்பிட்டார் என்று சரசக்காவிற்கு சொன்னது யார்?

அங்கேயே இருந்த வெங்கையா நாயுடுவை விசாரித்தார்களா?

ஒருவரை கேட்டால் அந்த கட்டிடத்தில் ஜெயா இருந்த முழு அடுக்கிலும் வேறு யாரும் இல்லை  என்கிறார். மற்றொருவர் அங்கே மற்ற நோயாளிகளும் இருந்தார்கள் என்கிறார். இதில் எது உண்மை.


பின் குறிப்பு :

இது அனைத்தும் கணியனின் கேள்வி.. அடியேனின் கேள்வி ஒன்றும் உள்ளது.. ஜெயா சாப்பிட்டது இட்லியா? அல்ல இட்லி உப்புமாவா?

அறிந்தவர்கள் கூறவும் .

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி.

அண்ணா நான் மிகவும் மதிக்க கூடியவர். தமிழ் (திராவிடமும் தான்) சமுதாயத்திற்கு அவர் செய்த தொண்டுகள் சொல்லி மாள முடியாது. அவர் புத்திசாலித்தனத்தை பார்த்து யேல் பல்கலைக்கழகமே எழுந்து நின்று கை தட்டி பாராட்டியது.

இப்படி மிகவும் அறிவார்ந்த அண்ணா அவர்கள் தமிழனுக்கு ஒரு மன்னிக்க முடியாத தவறை செய்து விட்டார்.
பட உபயம் : கூகிள் 

அது என்ன?

கூத்தாடிகளை அரசியலில் கோர்த்து விட்டது தான்.

”ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்த்துக் கனிகிற நெல்லிக்கனி தான் எம்.ஜி.ஆர். அந்தக் கனி யார் மடியில் விழும் என்று எல்லா அரசியல்வாதிகளும் காத்திருந்தார்கள். அது என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். பல லட்ச ரூபாய் தேர்தல் நிதி தருவதாகச் சொன்னார் எம்.ஜி.ஆர். பணம் முக்கியமல்ல. அவர் முகத்தைக் காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டு கிடைக்கும்"

சனி, 23 செப்டம்பர், 2017

ட்ரைலர் பார்த்தாலே முறுக்கேறுது.. வச்சி செஞ்சி இருக்காங்க.

நீ எந்த சாதியா இருந்தாலும் சரி.. எந்த மதமா இருந்தாலும் சரி.. பணக்காரன் ஏழை.. எந்த நிறமா இருந்தாலும் சரி.. வாழ்க்கையில் ஒரு முறையாவது உனக்கு அநீதி இழைக்க பட்டு இருக்குனு நினைக்கிறியா? இந்த ஒரு ட்ரைலரை பாரு..

படத்து பெரு.. மார்ஷல் (Marshall) Oct 13, 2017 க்கு ரிலீஸ் ஆகுது.. என்ன ஒரு ட்ரைலர்...

பன்ச் டயலாக்கில் சில..

"If you Want Freedom... You gotta fight for it"!

"Theres only thirteen million Negroes depending on you"

"Does any of you have any confidence in me...?
I say, you have confidence for us all"

"What you've got here..? Cement...!?
Guns..  No Books, Mr. Freeman.. Books..."

"You lied to the Sworn State ...why would you do that...
Because the truth  would get me killed..."

"It takes Hero to make a Hero"

மவனே,  ட்ரைலர் பாக்கும் போதே.. முறுக்கேறுது...வச்சி செஞ்சி இருக்கான் .. ஹாலிவுட் காரன்

கடைசியா ஒரு பன்ச்..

"The only way to get through the Biggest Door is to break it down"!

வாங்க...

"Witness the Rise of the Man Who Changed America"

இதோ அந்த ட்ரைலர் ..

                                                                   மார்ஷல் (Marshall)


Cant wait for Oct 13th...

வியாழன், 21 செப்டம்பர், 2017

திருமணம் வெற்றி பெற சில ரகசியங்கள்....

அலை பேசி அலறியது...

சொல்லு சாரதி..

என்னத்த சொல்றது...சித்தப்பூ..

பின்ன எதுக்கு கூப்பிட்ட...?

சொல்றதுக்கு தான்...

சரி சொல்லு...

ஆபிசில் ஒரு பிரச்சனை...?

கன்டினியூ..

கூட வேளை செய்யுற ஒரு மெக்சிக்கன் அம்மணி என்னிடம்  "டீ  அமோ " ன்னு சொல்லிடிச்சி...

டீ வேணுமான்னு அவங்க மொழியில் கேட்டு இருப்பாங்க... வேணாம்னு சொல்லிடு..

சித்தப்பூ... பி சீரியஸ்... "டீ அமோ " னா "ஐ லவ் யு" ன்னு அர்த்தம்.

எங்க கம்பெனியில் 500 க்கும்   மேலே மெக்சிகன் தான் ..நானும் சொல்ல கேள்வி பட்டு  இருக்கேன்,

சித்தப்பூ... சொல்லவே இல்லையே.. இந்த விஷயம் அண்ணிக்கு
தெரியுமா?

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

MP பென்ஷன் வேண்டாம் - நடிகர் சரத்குமார் !


நெஞ்சு பொறுக்குதில்லையே..

இந்த வாரம் ஒரு செய்தி படித்தேன்.

//எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்.. ராஜ்யசபா செயலருக்கு சரத்குமார் கடிதம்//

இந்த நடிகர் சரத்குமார் 2006 ம் ஆண்டு M P பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2006 ல் இருந்து இன்று வரை நம் வரி பணத்தில் இருந்து ஓய்வூதியம் கொடுக்க பட்டுள்ளது.

சரி.. ஓய்வூதியம் என்பது ஒரு சராசரி ஆள் வயதான காலத்தில் இனிமேல் தன்னால் உழைக்க முடியாது என்ற நிலை வரும் போது இத்தனை
 நாள் செய்த பணிக்காக தரப்படுவது.

திங்கள், 18 செப்டம்பர், 2017

H ராஜா - அமித் ஷா உரையாடல்.(உபயம் விக்கி லீக்)

ஹலோ... அமித்ஷாவா .. ஓவர் ..

அமித்ஷா தான்.. சாரண இயக்க தலைவர் ராஜாவா? ஓவர்..

ராஜா தான் .. ஆனா.. சாரண இயக்கத்த விடுங்க.. சாதாரண இயக்கத்துக்கு கூட தலைவர் ஆக முடியாது போல இருக்கு .. ஓவர்..

பின்ன எதுக்கு கூப்பிட்ட ஓவர்..

அவசரமா பேசணும்.. இல்லாட்டி BJP நிலைமை தமிழ் நாட்டில் ஓவர் .. ஓவர்..

என்னமோ சொல்ல வந்த .. ஆனா அதை சொல்றதுக்கு முன்னாடி ஓவர் ஓவர் ன்னு ரெண்டு முறை சொன்ன ஓவர்..

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம் ( அத்தியாயம் 2 )

அத்தியாயம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்..

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம்! (அத்தியாயம் 1)


மஹேந்திர விளக்கில்லாமலே கிளம்ப.. சுவற்றின் இடுக்கில் மல்லிகாவை புதைத்த இடம் தெரிந்தது...

உன்னை யாரடி வாழ்க்கையில் என்னை சந்திக்க சொன்னது... மனதில் கோபமாக அவளை திட்டினான்..

கனி..

சொல்லு....

சொந்த மகள் ஒருத்தனை காதலிச்சதுக்காக எந்த அப்பனாவது கொலை செய்ய துணிவானா.. என்னால நம்பவே முடியல..

மனோ.. நீ யாரையாவது... லவ் பண்ணி இருக்கியா?

இல்லை...

உன்னை யாராவது?

தெரியல.. ஏன் கேக்குற?

இல்லடா.. மல்லிகா என் மேல விருப்பமா இருந்து இருக்கானு உனக்கு தெரியுது எனக்கு தெரியலை பாரு...

நமக்கு வாழ தெரியல போல இருக்கு கனி...

பேசி கொண்டே வண்டி அண்ணா சாலை வழியாக பாரிஸ் கார்னரை நோக்கி நகர்ந்தது...

மணி 12 போலாக... சாலையோரத்தில் இருந்த கையேந்தி பவனில் ஆளுக்கொரு  முட்டை  தோசை சாப்பிட்டு... வண்டியை பிராட்வே  பகுதியில் நுழைத்தனர் .

இங்கே எங்க வீடு கனி..

பிடாரியார் கோயில் தெரு... வீட்டு நம்பர் 18

நெருப்பெட்டிகள் போல் பல வீடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்க.. 18ம் எண் வீடு மட்டும், வசதியாக காணப்பட்டது.

வீட்டின் எதிரில் பெரிய கேட்.. அதை ஒட்டி ஒரு வாட்ச்மன் அறை .சுடுகாட்டில் பார்த்த அந்த வெளிநாட்டு காரும் உள்ளே இருந்தது.

சனி, 16 செப்டம்பர், 2017

துப்பறிவாளன் - இரண்டாம் பாகம்! ( அத்தியாயம் 1)

ஒரு நாய்க்குட்டியை சுட்டது யார் என்பதை துப்பறிக்க சென்று... ஒரு பெரிய கொள்ளை -  கொலைகார கும்பலை ...

இவ்வளவு துப்பறியும் திறன் இருந்தும்.. "உனக்கு வேண்டிய ஒருவரை சாகடிப்பேன்" என்ற மெசேஜ் வந்தும் அது மல்லிகாவாகவும் இருக்கலாம் என்று அறியாமல் இருந்தேனே...

தன்னை தானே ... வெறுத்து கொண்டான்..

அவ பாட்டுக்கு பிக்பாக்கெட் அடிச்சிட்டு வாழ்ந்து இருந்தா.. என்னை சந்தித்த ஒரே காரணத்தினால் .....

கதவு திறக்க பட.. மனோகர் நுழைந்தான்..

இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே வீட்டை விட்டு வெளியே வராம இருக்க போற?

தெரியல மனோ.. பெரிய தப்பு பன்னிட்டான்டா.. அவளிடம் ஒருமுறை கூட அன்பா இருந்தது இல்ல... ஒரு வார்த்தை நல்லா பேசினது இல்ல. நம்ம கூட இருந்த ஒரே காரணம்.. அந்த ஒரே காரணம் அவ இன்னைக்கு இல்லனு நினைக்கும் போது...

சரி .. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..

அவ சாகும் போது... என்ன மனோ நினைச்சு இருப்பா? ஏன்டா இங்கே வந்தோம்னு, இவனை ஏண்டா சந்திச்சோம்ன்னு...ஏன் மனோ.. ஒரு சின்ன பொண்ணு, அவ மனசை ஏன்டா நம்மனால புரிஞ்சிக்க முடியல..

நம்மனாலேன்னு சொல்லாத.. உன்னாலே.. மல்லிகா உன்னை பார்க்கும் போதே அவ பார்வை வைச்சே அவளுக்கு உன் மேல் கொள்ளை பிரியம்ன்னு எனக்கு தெரியும்.

ஏன்டா சொல்லல.. அது எப்படி உனக்கு தெரியும்?

கனி .. அவ கொடுத்த கிறீன் டீயை நீ கழுதை மூத்திரம்ன்னு திட்டி கொடுத்த இல்ல.. அதை கூட அவ மூணு நாளா வைச்சி குடிச்சின்னு இருந்தா..

ஏன்டா எனக்கு அப்பவே சொல்லல..

அது உன் மண்டைக்கு அது புரியாது.. சொன்னா உடனே அவளை வீட்டை விட்டு அனுப்பிடுவன்னு பயந்து தான் சொல்லல ...

எப்படி மனோ.. அந்த வயசு பொண்ணை கொலை பண்ண ஒருத்தனுக்கு மனசு வருது..

கனி.. நான் சொல்லி உனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல.. கொலை பண்றது ஒரு மன  வியாதி .....சரி, கிளம்பு வெளிய போய் சாப்பிட்டு வரலாம்.

வேணா விடு... எனக்கு பசி இல்லை..

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ஆம்பிளையா பிறக்க கூடாது ..

இன்று முக நூலில் ஒரு சிறு துணுக்கு போட்டு இருந்தேன். மேலே தொடருமுன் முதலில் அதை படிக்கலாமே..

ஜோடியா  ஊர் சுத்த வந்து இருக்கியே...லைசன்ஸை எடு...

இதோ..

இது ஒரிஜினல் இல்ல ....ஒரிஜினல் எங்கே..?

காணமல் போச்சி.

அது கிடைக்குற வரை வண்டிய சீல் பண்ணி உள்ளே வைக்க போறோம்.

சார்.. என் கல்யாண ஒரிஜினல் செர்டிபிகேட் கூட காணாம போச்சி சார்


இப்பொது பதிவிற்கு வருவோம்.

இந்த பதிவை படித்த சிலர் லைக் - சிரிப்பு என்று சொல்லி இருந்தாலும் பலர்... உள் டப்பியில் வந்து சிறிது கோவமாக அறிவுரையை அள்ளி தந்தார்கள்.

இதில் என்ன கோவம்...

ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்து கொள்வது நல்லது தான். இருந்தாலும் அது கையில் இல்லாவிடில் இன்றைய முன்னேற்ற சூழ்நிலையில் தொலைபேசியின் மூலம் காட்டலாம். அல்ல நகல் வைத்து கொள்ளலாம் ... அதை விட்டு விட்டு ஒரிஜினல் இல்லாவிடில் கைது என்பது பெரிய தண்டனை தானே..

அதை தானே சொன்னேன். அதற்கு என்ன கோவம் என்று சொன்னேன்.

அதற்கு பலர்...

நாங்கள் அதை பற்றி பேசவில்லை.. வேறொரு விஷயம் பற்றி பேசினோம் என்று சொல்ல...

நானோ..

ஆமாம்.. இந்த மாதிரி வண்டியை சீல் செய்து ஸ்டேஷனில் வைப்பது வண்டிக்கு நல்லது அல்ல.. மற்றும் வண்டி இல்லாமல் ஒருவன் எப்படி தன் தினந்தோர வேலையை செய்ய முடியும் ...

என்று என் வாதத்தை எடுத்து வைத்தேன்.

இவ்வளவு சொல்லியும் பலரின் கோவம் தணியவில்லை.

கடைசியாக ஒரு அம்மணி..

மனைவி முகநூலில் இல்லை என்ற காரணத்தினால் தானே இம்புட்டு தகிரியமாக எழுதிகின்றீர்கள் என்று போட்டார்களே ஒரு போடு.

அப்போது தான் எனக்கு இவர்களின் கோவத்திற்கான காரணம் புரிந்தது.

என் இனிய தமிழ் மக்களே..

இந்த முழு உரையாடலும் அம்மணிக்கும் - போலீஸ்காருக்கும் நடந்தது தான் என்று நான் சொல்ல வந்தேன்.

இப்போதாவது என் மேல் உள்ள கோவத்தை குறைத்து கொண்டு பரிதாப படுங்கள்.

நன்றி.. 

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

"காலா" தலைவர் மாஸ் இன்ட்ரோ....!

முதல் சீனில்  வானத்தை காட்டுறோம். அப்படியே கமெராவை வானத்துல இருந்து கீழ இறக்குறோம்... நீல வானம் அப்படியே மெதுவா காவியா மாறுது...காவி அப்படியே லாங் ஷாட் போகுது... கமெரா தொடர்ந்து கீழ இறங்க.... வெள்ளை ... பச்சைனு இந்திய தேசிய கொடி ....அந்த கொடியில் நடுவுல இருந்த சக்கரத்தை மட்டும் காணோம்.

அப்படியே காமெராவா.. கொடிக்கம்பத்தில் இருந்து...இறக்கி அருகில் உள்ள பள்ளி கூடத்த காட்டுறோம்.. பள்ளி கூடத்தின் கூரையில் ரெண்டு வெள்ளை புரா...



ரெண்டு புறாவும் பயங்கர சண்டை போட்டுன்னு இருக்கு. இங்கே தான் .. ஹே.... ஹே .. ஹே .. ஹே...ன்னு BGM  ஆரம்பிக்குது...

நான் ஊத்தாத பாலா ...
நான் அடிக்காத கோலா...
நான் நறுக்காத வாலா....

என்று.... தாடியை தடவி கொண்டே தலைவர் பாட... கூட இருந்த நடன கலைஞ்ர்கள்...

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

டேக் இட் ஈஸி பாலிசி...!

அலை பேசி அலறியது...

விசு..

திஸ் இஸ் ஹிம்...

ஓ.. கிரேட்.. இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து கூப்பிடுறேன்...

ஓ.. தேங்க்ஸ் பட் நோ தேங்க்ஸ்.. எனக்கு நல்ல பாலிசி இருக்கு..

ஹே.. திஸ் இஸ்யுவர் பிரென்ட் ... உனக்கு நல்ல பாலிசியை கொடுத்ததே நான் தான்..

ஓ.. சாரி.. ஹொவ் ஆர் யு?

இருக்கேன்.. எனக்கு சில இன்பர்மேஷன் வேணும்.. கொடுத்தீனா... உன் ஆட்டோ பிரீமியம் கம்மி பண்ணுவேன்...

ஆட்டோ பிரீமியம் கம்மி ஆகுதுன்னா... கொஞ்சம் என்ன நிறைய இன்பர்மேஷன் தரேன்... சொல்லுங்க..

நீ என்ன படிச்சி இருக்க?

படிப்புக்கும் பெர்மியத்துக்கும் என்ன சம்மந்தம்...?

சொல்லு.. மாஸ்டர்ஸ் முடிச்சியா?

ஆமா..

அந்த காப்பிய கொஞ்சம் அனுப்பு..

அம்மணி?

அவங்க ரொம்ப ஸ்மார்ட்....

அப்புறம் எப்படி உன்னை  கல்யாணம் பண்ணாங்க..?

விதி.... விஷயத்துக்கு வா.. அவங்களுக்கு என்ன?

மாஸ்டர்ஸ் முடிச்சி இருக்காங்களா?

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

ஆசைக்கு அம்மா.. ஆஸ்திக்கு அப்பா...

அலை பேசி அலறியது..

கிளம்பிட்டீங்களா?

மனதில் .. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...? எங்கேயோ கிளம்பிட்டாயானு கேக்குறாங்க.. நம்ம எங்கேயோ போக வேண்டி இருக்க போல இருக்கு.. எங்கே... எங்கே.. எங்கே..?

இதோ இன்னும் அஞ்சி நிமிசத்துல கிளம்பிடுவேன்..

இன்னும் ஆபிசில் தான் இருக்கீங்களா?

ஆமா. இதோ கிளம்பிட்டேன்..

ஒரு உதவி பண்ணுங்க..

சொல்லு..

டேக்ஸ் ரிட்டர்ன் ஒரு காப்பி பிரிண்ட் பண்ணி எடுத்துன்னு வாங்க..நான் உங்களை அங்கே மீட் பண்றேன்.

சரி.

எங்கே ... எங்கே .. எங்கே.. மனதில் ஒரு நினைவும் இல்லை..

டேக்ஸ் ரிட்டர்ன் எடுத்துனு..?

உடனே அம்மணியின் ஜி மெயில் கணக்கில் நுழைந்து அவர்களின் காலெண்டரை தடவினால்... ஆகஸ்ட் 15 - காலை 10 மணி - லாயர் ஆபிஸ் வித் மூத்தவள் அண்ட் கணவர்.(கூடவே ரிமெம்பர் டு கால் ஹிம் அட் 9 : 15 & Tax return Copy )

படித்தவுடன் சுந்தர் பிச்சைக்கு ஒரு கோடி நமஸ்காரம் போட்டு விட்டு ...


ஓ மை காட்.. நல்ல வேலை 9 : 15 க்கு அம்மணி போன் .. இல்லாட்டி நம்ம நிலைமை...?என்று யோசிச்சு கொண்டே வண்டியை விடுகையில்.. மனதில்...
மூத்தவள் 18 ஆகி விட்டது. இந்த மாதம் கடைசி வாரத்தில் கல்லூரிக்கு போகின்றாள். வீட்டில் இருந்து செல்லவில்லை.. அங்கேயே ஹாஸ்டெலில் தங்கி விடுவாள். அவளுக்கு பத்து வயது இருக்கும் போதே கல்லூரி நாட்கள் இப்படி தான் இருக்கும் என்று தனியாக இருக்க வேண்டி வரும் என்று சொல்லி தான் வளர்த்து வந்தோம். அதற்கான நேரம் வந்து விட்டது.

சரி  அதற்கும் இந்த லாயர் ஆபிசுக்கு என்ன தொடர்பு? ஏன் பெற்றோர்களையும் அவளையும் வர சொல்லி இருக்கின்றார்கள் என்று யோசிக்கும் போது  அந்த அலுவலகம் வந்தது.

காரை நிறுத்திவிட்டு .. 

எங்கே உங்க ரெண்டு பேரையும்  காணோம்?

கொஞ்சம் ட்ராபிக்கில் மாட்டி கொண்டோம்.. அஞ்சு நிமிசத்தில் வந்துடுவோம்.

உங்களுக்கு ஆச்சுன்னா ட்ராபிக் .. எங்களுக்கு ஆச்சுன்னா.. உதாசீனம்.. என்னடா என்று மனதில் மட்டும் நொந்து கொள்ள..

நீங்க உள்ளே போய் உக்காருங்க.. நாங்க வந்து ஜாயின் பண்றோம்.

என்று சொல்ல.. உள்ளே நுழைந்தேன்...

பெரிய - வசதியான அலுவலகம்..

அட பாவி.. ஒரு வாய்தா வேண்டும் என்றால் கூட வீடை  எழுதி வைக்க சொல்லுவாங்க போல இருக்கே என்று நினைக்கையில்.. எதிரில் வந்த கொரியன் பெண் மணி.. 

விவாகரத்து வழக்கா? 

ரைட்டில்போங்க .. என்று சொல்ல.. 

மனதில்.. ரைட்டா போய் இருந்தா விவாகரத்து எதுக்கு என்று நினைத்து கொண்டே ... 

விவாகரத்து இல்லை. ஐ அம் ஹாப்பிலி மாரீட் என்று சொல்ல.. 

அவளோ.. யு ஆர் ஹாப்பிலி மேரீட் .. வாட் அபௌட் யுவர் வைப் ? என்று கேட்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு ..

பின் இங்கே எதற்கு என்று வினவ..

தெரியவில்லை.. அம்மணி மற்றும் 18 வயது மூத்தவளோடு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் என்று சொல்ல..

ஓ.. கல்லூரி விஷயம்..  இரண்டாவது ரூம் என்று சொல்ல.. 

அங்கே சென்று அமர்ந்தேன்..

மனதிலோ.. என்னடா இது.. என்னை பார்த்தவுடனே .. விவாகரத்துன்னு எப்படி அவள் முடிவு பண்ணா .. நம்ம லுக் என்ன நம்பியார் லெவலுக்கு போயிடிச்சானு நினைக்கையில்.. 

குட் மார்னிங்.. என்று இன்னொரு கொரியன் பெண்மணி நுழைய.. 

குட் மார்னிங்..அம்மணியின் மூத்தவளும் இப்ப வந்துடுவாங்க...நம்ம வேணும்ன்னா பேச ஆரம்பிக்கலாம்..

இல்லை.. முக்கியமான குடும்ப விஷயங்கள் பல இருக்கு, அவங்களுக்காக வெயிட் பண்ணலாம்.. 
என்று சொல்லி அவங்க கிளம்ப.. 

மனதில்.. ஆமா .. முக்கியமான குடும்ப விஷயத்தை நம்மக்கிட்ட இதுவரை யாரு பேசுனா ..
என்று நினைக்கையில்..

காப்பி.. டீ... தண்ணீர்.. ஏதாவது ..

காப்பி ப்ளீஸ்.. வித் க்ரீம் அண்ட் சுகர்.. 

இரண்டு நிமிடத்தில் .. காப்பி பிஸ்கட்டோடு வந்தது..

நீங்க இங்கேயே இருங்க.. அவங்க வந்தவுடன் நான் வரேன்.

கிளம்பினார்கள்.

எதிரில் காப்பி .. மற்றும் பிஸ்கட் ..

தமிழனுக்கே உரிய சபலம் மணத்தில் வர.. அறையை சுற்றி கமெரா இல்லை என்று உறுதி செய்து கொண்டவுடன்.. பிஸ்கட்டை காபியில் அமுக்கி உண்டு முடிக்கையில்..

மூவரும் வந்தார்கள்.

இங்கேயே இருங்க.. உங்கள் பைலை எடுத்துன்னு வரேன்னு சொல்லி அந்த கொரியன் அம்மணி கிளம்ப..

மூத்தவளோ..

காப்பி பிஸ்கட்டை ஒன்னா பாத்துட  கூடாதே.. உடனே ஊற வச்சிடுவீங்களே என்று சொல்ல.. 

நானோ.. சே.. சே. தனி தனியாத்தான் சாப்பிட்டேன்.. 

காலரில்  பாருங்க.. கொழ கொழன்னு பிஸ்கட்.. என்று அம்மணி சொல்ல.. 

ஓ.... முதலில் பிஸ்கட்  அங்கே விழுந்தது.. அதுக்கு அப்புறம் காப்பி எதுக்கு மேலே விழுந்து இருக்கும்..

அது எப்படி குறி தவறாம ..

பாட்ட காலரில்  படும் சொல்லுவாங்க தானே அந்த மாதிரி தான். 

கொரியன் அம்மணி வந்தார்கள்..

பெற்றோர்கள் இரண்டு பெரும் பதில் எதுவும் சொல்ல வேண்டாம். பிள்ளை மட்டும் பேசினால் போதும் என்று சொல்லி விட்டு..

உனக்கு தற்போது 18  வயது. இந்த மாத இறுதியில் கல்லூரிக்கு செல்ல போகின்றாய். அதற்க்கு பின் உனக்கு மருத்துவ ரீதியாக - பண ரீதியாக ஏதாவது பிரச்னை வந்தால்...

என்று செல்லுகையில்.. நான்.. என்ன சொல்ல வரீங்க என்று அலற ..

அம்மணி கண்ணாலே.. வாயை கொஞ்சம் மூடுறீங்களானு சொல்ல.. 

அமைதி காத்தேன்..

லாயர் தொடர்ந்தார்கள்..

உன்னுடைய மெடிக்கல் ரெகார்டஸ் உன் பெற்றோர்களுக்கு தர படலாமா..?

ஆம்.

உனக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு நீ நினைவு இல்லாமல் இருந்தால் உன் பெற்றோர்கள் உனக்கான மருத்துவ முடிவுகளை எடுக்கலாமா?

அப்பா வேண்டாம்.. அம்மா மட்டும் எடுத்தால் போதும்.

அப்பா .. வேண்டாம்? எதுக்கு?

அவர் கொஞ்சம் எமோஷனல்.. அம்மா தான் சரி.

உன்னுடைய லேப் ரிப்போர்ட் மற்றும் எக்ஸ் ரே போன்றவை உன் பெற்றோருக்கு தரப்படலாமா? 

ஆம்..

உன்னுடைய வங்கி  கணக்கு விவரங்கள் உன் பெற்றோருக்கு தரலாமா?

அம்மாவுக்கு வேண்டாம்.. அப்பாவுக்கு மட்டும்.
அம்மாவுக்கு ஏன் வேண்டாம்..

அவங்க  கொஞ்சம் எமோஷனல்.. அப்பாதான்  இதுக்கு சரி ..

என்று பொருத்தமான பதிலை அளித்தாள்.

இப்படி பல கேள்விகள் கேட்டு பதில் அளித்து முடிக்கையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிந்தது.

சரி.. அடுத்தவாரம் இதன் அதிகார பூர்வ அறிக்கை உங்களுக்கு வரும் என்று சொல்லி முடிக்கையில்.. 

நான் அவர்களிடம்..

18 வயது பிள்ளைக்கு இந்த மருத்துவம் மற்றும் நிதி பெற்றோர்கள் தானே பார்க்க வேண்டும் 

இதற்க்கு எதற்கு .. அதிகாரபூர்வ அறிக்கை.. ?

என்று கேட்க..

மனைவியோ.. நேரமாச்சு கிளம்புலாம்.. அதை நான் உங்களுக்கு அப்புறம் சொல்றேன் என்று முறைக்க..

வெளியே...

என்ன கணக்கு பிள்ளைங்க நீங்க.. ? யாராவது லாயரிடம் போய் எக்ஸ்டரா கேள்வி கேப்பாங்களா? 

அதுல என்ன தப்பு? சந்தேகம் தானே கேட்டேன்.

நீங்க கேட்பீங்க சரி.. அதுக்கு அவங்க வீடை எழுதி   கொடுக்க சொல்லி பில் அனுப்புவாங்க..  

அதுவும் சரி.. நீ தான் சொல்லு.. இது எல்லாம் எதுக்கு?

எல்லாருக்கும் எல்லாம் நல்லாவே நடக்கணும்னு நாம நினைச்சாலும் சில நேரங்களில் விபத்து..சுகவீனம் அப்படி இப்படின்னு ஏதாவது வந்தா அதுக்கு தயாரா இருக்கணும்.

ஏன் அப்படியெல்லாம் ஆகுதுன்னு யோசிக்கணும்.

அப்படி யோசிக்க தேவை  இல்லை. அப்படி ஆனா என்ன பண்றதுன்னு யோசிக்கணும். அந்த மாதிரி நேரத்தில் நம்ம எல்லாரும் ஒன்னா இருந்து மத்த வேலைகளை கவனிக்கணும். அப்படி நடக்கும் போது அடிச்சி பிடிச்சி லாயரிடம் ஓடுறது.. எல்லாம் ரொம்ப கஷ்டம்.. வருமுன் காப்போம்.. அது தான்.

அம்மணி த்தான் என்னே யோசிக்கிறாங்க..

சரி.. மருத்துவம் ஓ கே.. நிதி..?

மருத்துவம் எவ்வளவு முக்கியமோ.. நிதியும் அவ்வளவு முக்கியம். கல்லூரிக்கு போனவுடன் 

அவளுக்கு தனியா க்ரெடிட் கார்ட் வாங்கி கொடுப்பேன்..

யு மீன் கொடுப்போம்..

ஆமா. கொடுப்போம் தானே.. அதுல என்ன என்ன எங்கே எங்கே எப்ப எப்ப செலவு பண்ரான்னு எனக்கு தெரியணும்..

யு மீன் நமக்கு..

ஆமா.. நமக்கு தெரியணும் இல்ல அதுக்கு தான்.

அடேங்கப்பா... இம்புட்டு விஷயம் இருக்கா..

சரி.. அடுத்தவாரம் இதே நேரத்துக்கு திரும்பவும் வாங்க..

ஏன்.. 

உங்க நிதி விஷயத்தை நான் எப்ப வேணும்னா தெரிஞ்சிக்கணும் .. அதுக்கு ஒரு டாக்குமென்டில் உங்கள் கை எழுத்து வேண்டும்.. அதுக்கு தான்.

மாசத்துக்கு இருபது டாலர் செலவுக்கு  தர.. அதை வேற நான் எப்படி செலவு செஞ்சேன்னு வேற  தெரியனும்மா? 

சிறு துளி பெரு வெள்ளம்..அதனால தான்.

என் சோகமான வாழ்க்கையை நானே யோசித்து அழுததில்   என் கண்ணில் திரண்ட சிறு கண்ணீர் பெரு வெள்ளமாக மாறியது.

பின் குறிப்பு:

அமெரிக்காவில் கல்லூரி வயது பிள்ளைகளை  கொண்டுள்ள பெற்றோர்களே.. இந்த விஷயம் மிகவும் முக்கியமானது.. என் வீடு அம்மணி உங்கள் எல்லாருக்கும் சொல்ல சொன்னார்கள். 

அது எல்லாம் சரி.. டேக்ஸ் ரிட்டர்ன் காப்பி எதுக்குன்னு நீங்க கேக்குறது கேக்குது. எனக்கு தெரியல.. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

சனி, 8 ஜூலை, 2017

வெள்ளிக்கிழமை விஷேஷம் ..

இறக்கி வைச்சிருக்கேன்!   இறக்கி வைச்சிருக்கேன்
!பொன்னாங்கன்னி மிளகாய்  போட்டு  இறக்கி வைச்சிருக்கேன்!. 

இந்த வாரம் செவ்வாய் கிழமை விடுமுறை ஆச்சே.. அதனால வெள்ளி கிழமை வந்ததே தெரியல. வெள்ளி மாலை வந்தவுடன் பொதுவாக அம்மணி வேலையில் இருந்து வர்றதுக்குள்ள வீட்டு பின் புற  தோட்டத்தை சுத்தம் பண்ணிடுவேன்.

ஏன்னு கேக்குறீங்க? நல்ல கேள்வி தான்.

நம்ம சுத்தம் பண்ணும் போது அம்மணி அங்கே இருந்தாங்கனா சுபர்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.. அது நமக்கு ஆகாது. அது மட்டும் இல்லாம.. இப்படி பண்ணுங்கோ.. அப்படி பண்ணுங்கோன்னு ஒரே விஷயத்தை மேஜர் சுந்தராஜன் பாணியில்  இங்கிலிஷ் - தமிழ்ன்னு மாத்தி மாத்தி அறிவுரை வேற..

இந்த வெள்ளியும் அப்படி தான் ஆரம்பிச்சது.. இங்கே இப்ப எல்லாம் ஒரு கான்சப்ட் வந்து இருக்கு.. "Raised Garden Bed" உயர்த்தி அமைக்க பட்ட படுக்கை!

புதுசா ஒன்னு வந்துட கூடாதே.. அம்மணி வாங்கி வந்து அதுல கத்திரி - புதினா - தக்காளி - லொட்டு - லொசுக்குன்னு போட்டுட்டாங்க. அதுக்கும் மேலே ஒரு ஓரத்தில் ஒரு சின்ன தொட்டியில் பொன்னாங்கன்னி கீரை.. அந்த  பொன்னாங்கன்னி கீரை தொட்டிய இந்த உயர்ந்த படுக்கை தோட்டம் மேலே வைக்கணும். வீட்டை சுத்தி நிறைய முயல். எட்டிச்சினா மொத்தத்தையும் கும்பலா சேர்ந்து அரை மணி நேரத்தில் காலி பண்ணிடும்.
உயர்த்தி தோட்ட படுக்கையின் மேல் பொன்னாங்கன்னி.. 

இந்த மாதிரி தான் இந்த வெள்ளியும் ஆரம்பிச்சேன். பொன்னாங்கன்னி தொட்டிய தூக்கி கீழே வைச்சிட்டு மத்த எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு வீட்டுக்குள்வரும் பொது எட்டு மணி.

அம்மணியும் வீட்டை வந்து சேர..

பின்னால சுத்தம் பண்ணிடீங்களா...

எஸ் மேம்...

சூப்பர், பொன்னாங்காணி நல்லா வளந்து இருக்கு... இந்த ஞாயிறு சமைக்கிறேன்..

சூப்பர்.. ஆண்டவன் பொன்னாங்கன்னிய படைச்சதே அம்மணி சமைக்க தான். இவங்க சமையல் அப்படி இருக்கும்.

நினைத்து கொண்டே படுத்தேன்..

காலையில் அம்மணியும் கண்மணிகளும் வெளியே கிளம்ப.. நானும் தோட்டத்து புறம் வந்து பார்க்கையில் ... பேய் அறைந்தது போல் அலறினேன்.

சுத்தம் செய்யும் போது கீழே வைத்த பொன்னாங்கன்னியை மீண்டும் மேலே வைக்க மறந்துவிட்டேன். மொத்த கீரையையும் முயல்  ஸ்வாஹா..

தொட்டியை பார்த்தால்.. ஊரான் காசை கொள்ளையடித்து விட்டு திருப்பதிக்கு மொட்டை போட்ட சேகர் ரெட்டி.. கும்புடுறேன் சாமி OPS இருவரின் தலை போல் இருந்தது..

கண்ணும் மணியுமா அம்மணி காத்து வந்தாங்கா..
அய்யயோ.. என்ன பண்ணுவேன்..


இவர்கள் மூவரும் இல்லம் வருமுன் ...


அடிச்சி புடிச்சி மார்க்கெட் போய்.. பச்சை நிறத்தில் இருந்த அம்புட்டு இலையும் வாங்கியாந்து.. பிரட்டி வைச்சேன்..

பின்னர் :

என்னங்க இது.. வித்தியாசமா இருக்கே?

நம்ம

வீட்டு பொன்னாங்கன்னி தான்.. கூட இந்த ஊர் கீரையும் ஒன்னு போட்டேன்.
உனக்கு பிடிக்கும்னு நானே பிரட்டிட்டேன்...

ஓ..  பொன்னாங்கன்னி நல்லா வளந்து இருந்ததே .. நாளைக்கு நானே கூட்டு  பண்ணலாம்னு யோசித்தேன். இனிமேல் இந்த கீரையை நீங்க சமைக்காதீங்க நானே சமைக்கிறேன்.

பின்குறிப்பு :

இனிமேல் நீங்க இதை சமைக்காதன்னு சொன்னாங்களே.. ஒரு வேளை சமையல் கேவலமா? பொதுவா நல்லா இருக்குன்னு தானே சொல்லுவாங்க..

எது என்னமோ.

மயிரிழையில் தப்பித்தேன். 

திங்கள், 3 ஜூலை, 2017

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்?

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்? - நிர்மலா சீதாராம்.


ஆணவ திமிர் பிடித்த அமைச்சருக்கு...ஒரு விளக்கம்..

இங்கிலாந்து நாட்டில் மேல் படிப்பு படிக்க செலவு செய்யும்
 வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரின் மகனை  காதல் திருமணம் செய்து கொண்டு.. பிறந்த நாளில் இருந்து இன்று வரை பசி - பட்டினி - சமையலறை - கழிவறை இல்லாத பத்து அடி அறை - கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவான கூலி ... என்று எதையும் அறியாத தமக்கு
ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் என்று தான் கேட்க தோன்றும்.


என் வாழ்க்கையில்  24  வயதில் பாம்பாயில் வாழ்ந்து கொண்டு இருந்தேன் .. அன்று ஒரு நாள்..

அலுவலகத்திற்கு சென்ற என்னோடு இன்னும் மூன்று பேர். நால்வருமே தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பாம்பே சென்றவர்கள். தம்மை போல் இங்கிலாந்து சென்று படிக்க எங்கள் பெற்றோர்கள் அரசியல் ஆதாயம் கொண்டவர்களாய் இல்லாவிடினும் . அவர்களின் கடின  உழைப்பால் அவர்கள் செய்த தியாகத்தினால்  நாங்கள் நால்வருமே அவரவர் துறையில் முதுகலை பெற்றவர்கள்.

சம்பளம் .. ஆளுக்கு 2 ,500  மாதத்திற்கு..

தங்கியதோ பத்துக்கு பத்துக்கு என்ற அறை. காலையில் ஆறு மணிக்கு முன்னால் நாங்கள் விளக்கையோ மற்றும் சத்தம் எதுவும் போட கூடாது. வீடு உரிமையாளரின்  எழுதாத சட்டம்.

வெள்ளி, 30 ஜூன், 2017

தண்டத்துடன் ஒரு XXX பதிவு....

வெள்ளி மாலை....

அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வண்டியை  எடுக்கையில்......அலறியது அலை பேசி...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்...

ஜூலை 4  ...இப்பதான் போன மாதிரி இருந்தது வந்துடுச்சி ...

எங்கே இருந்து பேசுற... நவம்பரில் தானே வரேன்னு சொன்ன...

பசங்க தொந்தரவு வாத்தியாரே. பத்து நாள் லீவ் போட்டு வந்து இருக்கேன். ஜூலை 4 க்கு என்ன பண்ற?

இதுவரை ஒன்னும் பிளான் இல்ல .. என்ன பண்ணலாம் சொல்லு?

சுந்தரி வரும் போதே ஒரு கண்டிஷனோடு தான் வந்தா..

என்ன கண்டிஷன்...

இந்த பத்து நாளும் கிச்சனில் நுழைய மாட்டாளாம்..

கொடுத்துவைச்சவன் தண்டம் நீ.. அடுத்த பத்து நாள் உனக்கு ருசியான  சாப்பாடு...

புதன், 28 ஜூன், 2017

எஸ் வீ க்கு சுப வீயின் பதில் என் மூலம்..

சுப வீ அவர்களுக்கு எஸ் வீ சேகர் எழுதிய பதில் கடிதத்தை படித்தேன்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நாடக நடிகரின் IQ என்னவாக இருக்கும் என்று வியந்தேன்.

ஏன் என்று பார்ப்போம்.

செவ்வாய், 27 ஜூன், 2017

அரளி !

அருகில் சென்றேன்
அதிர்ந்து நின்றேன்
அழகின் இலக்கணம்
அயர்ந்தேன் ஒரு கணம் .

அவளும் தமிழா
அசையில் உமிழா
அவளுக்கு என்றேன்
அருகே சென்றேன்

திங்கள், 26 ஜூன், 2017

சிம்புவுக்கு ஒரு ....

சிம்புவுக்கு ஒரு ....

சிலம்பரசன்.. இதை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு உண்மை. இதுவரை நீ நடித்த எந்த படத்தையும் நன் பார்த்ததில்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால் தமிழ் திரை உலகின் பாடல் அல்ல சிரிப்பு காட்சி ஏதாவது பார்க்கலாம் என்று யு டுயூப் பக்கம் சென்று தட்டினால் அங்கே நீ நடித்த படங்களின் காட்சிகளும் வரும். அதில் கூட இதுவரை உன் நடிப்பை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்த்தது இல்லை.

ஏன் பார்ப்பதில்லை?

என்  கல்லூரி நாட்களில் தான் உன் தந்தை கொடி கட்டி பறந்தார். ஆரம்பத்தில் அவரின் இரண்டு படங்களை ரசித்தேன்.. ஆனால், அதன் பின்னால் வந்த படத்தில் படத்தில் அவரின் காட்சிகள் அதிகமாக வருவதால் அவர் படத்தையும் பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.

இனிய தளத்தில்  எங்கே சென்றாலும் டி ராஜேந்தர் அவர்களின் பேச்சை பார்த்தால் முக்கால் சுளிக்க தோன்றும். ஒரு மனிதன் எப்படி கொஞ்சமும் கூச்சமில்லாமல் தன்னை தானே இப்படி போற்றி கொள்ள இயலும் என்று வியந்த  நாட்கள் உண்டு. TR போல் சுயஸ்துதி யாராலும் பாட இயலாது என்ற எண்ணம் உன் பேச்சை  கேட்டதும் தவிடு பொடியாகியது.

வியாழன், 22 ஜூன், 2017

முதல் முதலாக பார்த்த போது...


மூத்தவள் பிறந்த அன்று
முழுமையானேன் என்று இருந்த வேளையில்..
மூன்றே வருடத்தில்
முழுவாம இருக்கேன் என்று

முந்தானையில் முகத்தை துடைத்து கொண்டே
மூச்சு வாங்க
முணுமுணுத்தாள்
மூன்று முடிச்சி வாங்கியவள்..

முழுக்க பொய் தானே
முகத்தை பார்த்து சொல் என்றேன்..
முன்னே வந்தாள் சொல்லவில்லை..
முகத்திலே தெரிந்தது  அகத்தின் அழகு...

முன் ஏற்பாடு எதுவும் இல்லையே
முன்பின் உதவிக்கும் ஆள் இல்லையே
மூன்று பேர் என்று தானே இருந்தோம்
முதலுக்கே என்றேன் .. வாய் அடைத்தாள்..

மும்மாரி பொழிய மாதங்கள் கழிய
முழு கற்பிணியானாள்
முதலில் எனக்கு சொல்லுங்க
மூத்தவள் ஆசைக்கு அடுத்தது  ஆஸ்திக்கா?


மூடினேன்  வாயை
முகர்த்தேன் மூத்தவளை ஆஸ்தி எனக்கெதற்கு
முடிந்தால் ஆசைக்கு இரண்டு கொடு
முனங்கினேன்  அவள் காதில்

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...