Sunday, September 24, 2017

கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி.

அண்ணா நான் மிகவும் மதிக்க கூடியவர். தமிழ் (திராவிடமும் தான்) சமுதாயத்திற்கு அவர் செய்த தொண்டுகள் சொல்லி மாள முடியாது. அவர் புத்திசாலித்தனத்தை பார்த்து யேல் பல்கலைக்கழகமே எழுந்து நின்று கை தட்டி பாராட்டியது.

இப்படி மிகவும் அறிவார்ந்த அண்ணா அவர்கள் தமிழனுக்கு ஒரு மன்னிக்க முடியாத தவறை செய்து விட்டார்.
பட உபயம் : கூகிள் 

அது என்ன?

கூத்தாடிகளை அரசியலில் கோர்த்து விட்டது தான்.

”ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்த்துக் கனிகிற நெல்லிக்கனி தான் எம்.ஜி.ஆர். அந்தக் கனி யார் மடியில் விழும் என்று எல்லா அரசியல்வாதிகளும் காத்திருந்தார்கள். அது என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். பல லட்ச ரூபாய் தேர்தல் நிதி தருவதாகச் சொன்னார் எம்.ஜி.ஆர். பணம் முக்கியமல்ல. அவர் முகத்தைக் காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டு கிடைக்கும்"



என்று தன் கட்சிக்கு ஒட்டு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்க்காக கூத்தாடியை அரசியலில் நுழைத்தார்.

அன்று பிடித்த சனியன்.. இன்று வரை..

திரையுலகில் காலடி எடுத்து வைத்த உடனே அரசியல் பற்றி பேச்சு! MGR  ல் ஆரம்பித்த அது இன்று கமலஹாசன் வரை.

தமிழன் நிலை நிஜம் என்று நம்பியதால்.. MGR - கமலஹாசனை விடுங்கள்.. CR சரஸ்வதி கூட அரசியல் தலைவி  - நட்சத்திர பேச்சாளர்.

குடும்பத்தில் உள்ளவர்களின் ஒட்டு கூட வாங்க முடியாத TR - சரத்குமார் -பாக்யராஜ்  போன்றவர்கள் கட்சி ஆரம்பித்தது தமிழனின் முட்டாள் தனத்தை சுட்டி காட்டியது.

விஜயகாந்த் நிலையோ பரிதாபம். பிறர் சொல்லுவதை கேட்க்கையில் அவர் நல்ல மனிதர் போல தான் தெரிகின்றார். இருந்தாலும் ஒரு மாநிலத்தை ஆளும் தகுதி அவருக்கு இருக்கின்றதா என்று கணக்கு போட்டால் கிடைக்கும் விடை பூஜ்யம் தான்.

சரி தலைப்பிற்கு வருவோம்.

கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு எதற்கு நன்றியா?

MGR மறைவிற்கு பின் உடனடியாக அழிந்து இருக்க வேண்டிய அதிமுக, திமுகாவின் முட்டாள்தனத்தினால்  உயிர் பெற்றது. தேவையில்லாமல் சேலை இழுப்பு என்பதை போல் சில சில்லறை காரியங்களை செய்தது மட்டும் இல்லாமல் கையில் இருந்த ஆட்சியை சரியாக செய்யாதலால் ஜெயலலிதாவின் கை ஓங்கியது.

மரணம் மட்டும் வந்து இல்லாவிடில் ஜெயாவை திமுக இன்னொருமுறை வென்று இருக்குமா என்பதே சந்தேகம். தன்னுடைய சர்வாரிகார தரத்தினால் ஜெயலலிதா எதிர் கட்சி - தன் கட்சியின் ஆட்கள் - காவல் துறை - நீதி துறை  ஏன் பொது மக்கள் அனைவரையும் பயத்தில் வைத்து இருந்தார்கள்.

இன்று வாய் கிழிய பேசும் 90 % மக்களும் ஜெயாவை கண்டு தொடை நடுங்கினார்கள் என்பது நாடறிந்த உண்மை.

சரி.. இந்த கொள்ளைக்காரிக்கு எதற்கு நன்றியா?

அதிமுக கட்சி இன்றைய நிலைமைக்கு கொள்ளைக்காரிக்கு நன்றி. அடுத்த தலைமுறை தலைவர்கள் என்று யாரையும் உருவாக்காமல், குறிப்பாக எந்த ஒரு கூத்தாடியையும் அருகில் சேர்க்காமல் இந்த கட்சி தன் மறைவிற்கு பின் சின்னாபின்னமாகி போக வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளன போல தெரிகின்றது.

கொஞ்சம் அதிமுக அடிமைகளின் தலைமைகளை  பாருங்கள். எல்லாம் அடிமை நாய்கள். டயர் நக்கிகள். முதுகெலும்பு இல்லா முண்டங்கள்.

இவர்களின் அறிவு திறமை.. சொல்லி மாளாது..

காவேரியில் தெர்மாகோல்
நொய்யலில் சோப்...
சுதா _________?

 என்று பக்கத்தை பார்த்தும் படிக்க முடியவில்லை.

அவர்களை மேடையில் வைத்து கொண்டு நீங்க பரதநாட்டியம் தானே என்று கேட்க்கும் அளவிற்கு அறிவு.

நாங்கள் இட்லி  என்று பொய் சொன்னோம் என்று மன்னிப்பு...

இந்த முட்டாள்களை தான் இந்த கொள்ளைகாரி அமைச்சர் பதிவில் வைத்து இருந்து இருக்கின்றார்கள்.

தேர்தல் என்று ஒன்று இன்று வந்தால்.. இன்றைய நிலையில் அதிமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

இந்த மாதிரி ஆட்களை அமைச்சரவையில் அமர்த்தி விட்டு சென்ற ஜெயலலிதாவிற்கு நாம் நன்றி சொல்லி தானே ஆகா வேண்டும்.

RIP - ஜெயலலிதா! RIP

பின் குறிப்பு : சோ ராமசாமியோடு சேர்ந்து அங்கேயும் அனைவரையும் காலில் விழும் நிலைக்கு எடுத்துவந்துவிடாதீர்கள். பாவம் அவர்கள்.

19 comments:

  1. அண்ணா செய்த இன்னொரு தவறு
    கருணாநிதி போன்ற திருடர்களையும் தலைவர்கள் ஆக்கியது

    ReplyDelete
  2. இதையெல்லாம் பார்க்கனும்ன்னு தலையெழுத்து நமக்கு

    ReplyDelete
  3. //அவர் புத்திசாலித்தனத்தை பார்த்து யேல் பல்கலைக்கழகமே எழுந்து நின்று கை தட்டி பாராட்டியது.//

    எண்ணானே, நேர்ல பார்த்தா மாரியே அடிச்சு உடுற? யேலில் உரையாற்ற பலரையும் அழைக்கிறார்கள் அப்படி அண்ணாவும் போய் பேசிவிட்டு வந்தார். இதே போல ஷாருக்கானும் போய் பேசினார், பலரும் பேசுகிறார்கள்.ஷாருக்கானுக்கு பெசலாக வெப்பேஜ்கூட குடுத்துருக்கானுக- அண்ணாவின் உரைகூட அங்கு இல்லை!

    "அவரை (அண்ணாவை) அறிஞர் என்பர் மூடர்கள், பேரறிஞர் என்பர் பெருமூடர்கள்" என்றார் ஜெயகாந்தன்- இதைபோட்டு உங்க பதிவை படித்தால் கணக்கு சரியாவரும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பக்தா வாங்க! இம்புட்டு சுவாரஸ்யமா பேசுறீங்களோ ஆனா பேரை போட்டு சொல்லுற அளவுக்கு தைரியம் வரல பாருங்க..அங்கே தான் நிக்குறீங்க.

      ஒரே வாரத்தில் இதே பல்கலை கழகத்தில் டிகிரி வாங்கிய ஸ்மிரிதி இரானியின் ரசிகர் மன்ற தலைவர் நீங்க தானோ.

      அது சரி! உங்களை போல பக்தாள் எப்ப இருந்து ஜெயகாந்தனை படிக்க ஆரம்பிச்சீங்க?

      அன்னானை பத்தி நீ இம்புட்டு வயித்தெரிச்சல் படுற பாரு.. அங்கே தான் அண்ணா ஜெயிச்சாரு.

      நீ மட்டும் ஒரு உண்மையான பக்தாவா இருந்தா... அடுத்த கம்மெண்ட்டில் உன் நிஜ பெயரோடு வா... பாக்கலாம்.

      Delete
    2. ஏதோ அந்தம்மா மாடலா இருந்தப்ப பார்த்து ஜொள்ளு விட்டிருக்கலாம், அதுக்காக ரசிகர் மன்ற தலைவருங்கறது ஓவர் சாரே!

      பெரியாரை/அண்ணாவை/கருணாநிதியை எதிர்த்தால் பக்தாள் இல்லைனா பார்ப்பான் இதுதானே உங்க கணக்கு? அண்ணாவை பார்த்து எனகென்ன வயித்தெரிச்சல்? பிற ஆட்களுக்கு அண்ணா தேவலைதான். ஆனால் அவரு பெரிய மேதை என பில்ட்அப் கொடுப்பதுதான் எரிச்சலூட்டுகிறது. அவரு யேலில் டாக்டர் பட்டம் வாங்குனார்ன்னு பலகாலம் பீலா விட்டார்கள்.

      அதென்னா ஆனாஊன்னா பேரை சொல்லு, பால்கார்டை கொண்டா, ஆதார் கார்டை கொண்டா, SSN நெம்பர் சொல்லுன்னு டிரைவர் லைசென்சு கொடுன்னு ஆரம்பிச்சடுறது....நான் பெயரை சொன்னால் மட்டும் உமக்கு என்னை தெரியவா போவுது?. கருத்தை கவனி சாரே, ஆள் எவனா இருந்தா என்ன?

      ஆனா ஒரு விசயத்துக்கு சல்யூட்டு சாரே.. இந்த பின்னூட்டமே குப்பைக்குதான் போகும்னு நெனச்சேன். ஆனா கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்கறவரு சாரே நீ!

      இப்படிக்கு
      சிவா.

      Delete
    3. It is true, Tamil nadu down failed because of this motor mouth but no action people.

      Delete
  4. மிகச்சரியான குற்றச்சாட்டு அண்ணாதுரை மீது நான் இதனைக்குறித்து எழுத வேண்டும் என்று நினைத்த விடயங்கள் உங்கள் தளத்தில் அருமை நண்பரே...

    ReplyDelete
  5. சங்கர ராமன் புகழ் இருள் நீக்கி சுப்பிரமணியனை 'ஜெயேந்திரர் 'என்று அழைக்கும் போது..........அண்ணாவை அறிஞர் என்று அழைத்தால் குடியா மூழ்கிவிடப்போகிறது?.........

    ReplyDelete
    Replies
    1. ஏனப்பா .. பெயர் இல்லாமல் வருகின்றீர்... பெயரோடு வாருங்கள்.

      Delete
    2. //பெரியாரை/அண்ணாவை/கருணாநிதியை எதிர்த்தால் பக்தாள் //

      என்னை பொறுத்தவரை அது உண்மை தான். மற்ற படி எந்த ஒரு சமூதாயத்தை பற்றியும் நான் பேச போவதில்லை.

      ஆள் என்வனா இருந்தாலும் பரவாயில்லை .. கருத்து சொல்லு என்பதை நான் ஏற்க மாட்டேன். இரு ஆக்க பூரவமான விவாதத்திற்கு முகம் வேண்டும்.

      அண்ணா ஒரு சிறந்த அறிவாளி, அதில் எனக்கு ஒன்றும் சம்மந்தம் இல்லை. அவர் ஏன் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் என்று இன்று வரை நான் எங்கேயும் படித்தது இல்லை. நீங்கள் சொன்னது தான் செய்தி.

      கருத்து சுதந்திரம்.. .அதையும் நான் மதிக்காவிட்டால் எனக்கும் பக்தாசுக்கும் என்ன வித்தியாசம்?


      ஆனா ஒன்னுங்க.. ஒரு விஷயத்துல நீங்க நம்ம ஆளு. நாசூக்கா ஒரு மேட்டர் போட்டீங்களே... அந்த அம்மா மாடெலா இருக்கும் போது... ன்னு.. செம டச்சு...

      Delete
  6. தஞ்சாவூர் தமிழ்பல்கலை இளநிலை (தமிழியல்) - B.A. (Tamilology) பாடம் இது... //அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, யேல் (Yale) பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.// http://www.tamilvu.org/courses/degree/p102/p1022/html/p10222l1.htm

    இப்போது நீர் ஏன் அண்ணாவை மேதை என்கிறீர் என எனக்கு நன்றாக விளங்கிவிட்டது.

    எந்த "நாசூ"க்காவும் அந்த மேட்டரை எழுதவில்லை. அந்தம்மா மாடலாக இருந்த படத்தை பார்த்திருப்பதால் எழுதினேன், அவ்வளவுதான். மற்றபடி இந்தி நண்பர்களின் கூற்றின்படி அந்தம்மா அமைச்சராக மட்டுமல்ல நடிகையாகவும் தேறாது என தெரிந்து கொண்டேன். மற்றபடி மாடல்/நடிகையா இருப்பது ஒரு தொழில், அதை கேவலப்படுத்த எதையும் எழுதவில்லை.தமிழன் தாய்குலத்தை என்றுமே மதிப்பவன் ;)

    ReplyDelete
  7. http://www.tamilvu.org/courses/degree/p102/p1022/html/p10222l1.htm

    தொடர்பு இணையவில்லை. சரி பார்த்து மீண்டும் தரவும். அறிந்தது கைஅளவு .. .அண்ணாவின் ஏன் டாக்டர் கௌரவ பட்டம் அறியாது தான்.செய்திக்கு மீண்டும் நன்றி.

    தொடர்பை சரிபார்த்து மீண்டும் தரவும். நன்றி.

    தங்களின் தாய் குலத்திற்கான மரியாதை பாராட்டவேண்டியதே..

    ReplyDelete
  8. சார், அண்ணாவுக்கு யேல் டாக்டர் பட்டம் கொடுத்தது என்பது தவறான தகவல். இது புரளியாக பரப்பப்பட்டு பின்பு கைவிடப்பட்டது. ஆனால் இப்போது பாடபுத்தங்களிலும் இடம் பெற்றுவிட்டது. இவ்வளவு திறமையாக தமிழக ஆசிரியர்கள், கல்வியாளர் இயங்குவதை நினைத்தால் கண்ணு கலங்குது. அண்ணா ஷாருக்கான் எல்லாம் யேல் வந்தது chubb fellowship மூலம் உரையாற்றத்தான். மேலதிக விபரங்களுக்கு அந்த பெலோஷிப் வெப்சைட்டை பார்க்கவும். அந்த பெலோஷிப் பெற்ற முதல் வெளிநாட்டவர் அண்ணாதான். அண்ணாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தது யேல் அல்ல, அண்ணாமலை பல்கலைதான்.

    நான் கொடுத்த இணைப்பு வேலை செய்கிறது. ஆனால் சிலரால் தமிழ் பல்கலைகழக இணையதளத்தினை திறக்க முடிவதில்லை. நேற்றுக்கூட எழுத்தாளர் பிஏ கிருஷ்ணன் பேஸ்புக்கில் திட்டியிருந்தார். வேறு கருவி மூலம் முயற்சிக்கவும் அல்லது அந்த வரிகளை கூகிள் செய்யவும். உத்தமானது என்னவெனில் இதை கண்டுகாம விடுவதுதான். அண்ணா குறித்த அந்த பிஏ பாடத்தில் நாம் பள்ளி தமிழ்பாடத்தில் படித்ததை டிங்கரிங் பார்த்து ரோமாபுரி ராணி, கம்பரசம் இதெல்லாம் சேர்த்தடித்திருகிறார்கள், தேடிப் படிக்கும் அளவு வொர்த் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வேறு கருவியின் மூலம் முயற்சிக்கிறேன். நன்றி.

      Delete
  9. அய்யா ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள், ஒரு விஷயம் சொல்லும் போது அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதற்கு விளக்கம் அளித்து உங்களது தலையங்கத்தின் போக்கையே மாற்றி கொண்டு போவது என்பது எதார்த்தம்தான்!

    நீங்கள் கொள்ளைக்காரி, கூத்தாடிகளுக்கு என்று விமர்சனம் செய்யும் போது அவர் அண்ணாவை பற்றிய விமர்சனத்திற்கு சென்று விட்டார். அண்ணா உண்மையில் ஒரு பேரறிஞர்தான், அதற்கு மாற்றுக்கருத்து இல்லை, அவர் இந்த பல்கலையில் பட்டம் வாங்கினாரா, இல்லையா அது நமக்கு தேவையில்லை, ஆனால் அவர் கூத்தாடிகளை அரசியலுக்குள் கொண்டு வந்து விட்டார் என்பதே அவசியமானதாகிறது. கேள்வியின் நோக்கத்தை விட்டு விட்டு வேறு திசைக்கு கொண்டு செல்வது என்பது ஒரு சில மேதைகளின் திறமை.

    இது எப்படி இருக்கிறது தெரியுமா? கணவன், மனைவி முதலிரவு, மனைவி ஆங்கில பேராசிரியை, கணவன் 12ஆம் வகுப்பு முடித்தவன், எப்படியோ இருவருக்கும் திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்து விட்டார்கள், அவள் புது மனைவியின் பேரழகில் மயங்கி அவளை ஆங்கிலத்தில் வர்ணிக்கும் போது மனைவி அதை ரசித்தால் அடுத்து அவர்களுக்குள் இன்பம் மட்டுமே கிடைக்கும், அதை விட்டுவிட்டு நீங்கள் சொல்லியது பாஸ்ட் டென்ஸ், நாம இப்போ பிரெஸெண்ட் டென்சில் இருக்கிறோம், ஸ்ஸ்ஸ் என்று உச்ச்சரிக்க வேண்டும், நீங்க தப்பா சொல்றீங்க என்று சொன்னால் அன்றைய இரவு எப்படி கழியும், நான் சொல்வது சற்று ஆபாசம்தான், இருந்தாலும், கட்டுரையின் நோக்கம் உங்களது எண்ணங்களை பிரபலியுங்கள், தவறில்லை, விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அண்ணா யேல் பல்கலையில் பேசி கைதட்டல் பெற்றார் என்று சொல்வதில் ஒன்றும் தவறில்லையே, அது என்னவோ தேசிய குற்றம் போல விமர்சிப்பவர்களுக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை.

    ReplyDelete
  10. Visu,

    Good analysis on TN politics. From stories, I heard, Annadorai was skeptical of actors even though he relied on MGR. To his credit, MGR groomed leaders such as Nedunchelian, Panruty Ramachandran, Thirunaavukarasar, JCD prabakar etc.
    Only fault of MGR was to bring JJ to limelight (or she and uncle Venkataraman played backdoor politics as well).

    Facts aside, DMK should take the blame for the birth of ADMK and its leaders. If Mu.Ka had groomed successors like Vaiko things would have beeb different. Even now, their family politics puts well deserving educated candidates away from politics. Only God knows how TN politics will turn out to be. Hope Sahayam, Anbumani, Seeman (controlled seeman) step up their game and putdown Kamal, Rajani and other actors in politics. Just my 2 paisas bro!

    ReplyDelete
  11. கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு... என்ற தலைப்பை பார்த்தவுடன்,தமிழ் பதிவர் தானே அப்படி சொல்லிவிட்டு இதயத்தை கொள்ளை கொண்ட தலைவியே என்று ஜெயலலிதா ஜல்ரா பதிவாக தான் இருக்கும் என்று நினைத்தேன்.
    ஆனால் உண்மையை பேசும் பதிவு.

    ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...