செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஸ்காட்லாந்தில் கு(ட்)டியுடன் இந்தியனின் சில்மிஷம்!

ரிங் ... ரிங்.. தொலை பேசி ரிங்கியது...

ஹலோ... விசு ஹீயர்.

வாத்தியாரே, தண்டபாணி பேசுறேன்..

அதுதானே பாத்தேன்.. கழுத கெட்டா குட்டி சுவர்..உன்னை தவிர என்னை எவன் கூப்பிட போறான்?



ஏன் வாத்தியாரே நொந்து போய் பேசுற... எவனும் கூப்பிடலன்னு சொல்லி சந்தோஷ படு, இவங்க யாராவது கூப்பிட்டா தான் பிரச்சனை.

சரி விஷயம் என்ன சொல்லு, தண்டம்.

வாத்தியாரே, விளையாட்டு போட்டிகள் என்றாலே சும்மா நிமிந்து உட்காருவியே,  இந்த காமன்வெல்த் போட்டிகளை நீ பாலோ பண்றியா?

கொஞ்சம்.. கொஞ்சம், தண்டம்.. "டெல்லி காமன்வெல்த் கதை கந்தல்" ஆச்சி
இல்ல, அப்ப இருந்தே இது "காமன்வெல்த்" இல்ல, "காமன்தெப்ட்" போல ஆச்சி!

அதுமட்டும் இல்ல வாத்தியாரே.. நான் ஒவ்வொரு முறையும் "களமாடி"ன்னு தமிழில் டைப் பண்ணா, அது தானவே "களவாடி" ன்னு திருத்திக்கிது. ஒரு கோடி வாங்கிகிட்டு... "கடை தெருவில் விக்குது பார் நொங்கு, வாங்கி தரன் உன்னுடைய பங்கு" ஸ்டைலில் AR ரெஹ்மான் ஒரு ட்யுன் போட்டாரே, மறக்க முடியுமா?

என்னாது அந்த ட்யூன் க்கு ஒரு கோடியா? இந்தியா ஏழை நாடுன்னு ஏன்டா சொல்றிங்க? சரி.. சரி கிண்டலை விடு. விஷயத்திற்கு வா.

ஒன்னும் இல்ல வாத்தியாரே..

சரி அப்புறம் பாக்கலாம்.

இரு வாத்தியாரே.. ஒன்னும் இல்லன்னு சொன்னவுடனே, ஓடுறியே...விஷயம் இருக்கு.

அப்ப அதை சொல்லு.

இந்த காமன்வெல்த் பத்தி நிறைய செய்திகள் வந்து கொண்டே இருக்கு..



ஆமா தண்டம், நானும் கவனிச்சேன், நம்ம விளையாட்டு வீரர்கள் கூட மொத்த பதக்க லிஸ்டில் 5வது வந்து இருக்கங்கோன்னு படிச்சேன். ரொம்ப சந்தோசம்..

அதை விடு வாத்தியாரே, நம்ப விளையாட்டு வீரர்கள் படுற கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்.  அவங்களுக்கு ஒதுக்க பட்ட பணத்தை இந்த அரசியவாதிகளும்-அதிகாரிகளும் சாப்பிட்டு, மீதிய ஏதோ பிச்சை போடுற மாதிரி இவங்களுக்கு கொடுப்பாங்க,.


ஆமா, இந்த ஊழல் தான் நம்மை பிடிச்ச சனியன் ஆச்சே. ஆனால் ஒன்னு தண்டம், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிற ஊரில் பயிற்சி எடுத்து, விடாத முயற்சியில் இந்த மாதிரி வெற்றி பேரும் வீரர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்ல, தண்டம்.

"ஒருவாசகம் என்றாலும் திரு வாசகம்" என்பது போல சொன்ன வாத்தியாரே. ஆனால் நான் சொல்ல வந்ததே வேறே.

நீ "நாரதன்" ஆச்சே தண்டம், நல்ல காரியங்களை ஆரம்பிக்க மாட்டியே...
இருந்தாலும் நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்ன்னு சொல்லுவாங்க...

எந்த கழகம் தான் நல்லதில் முடித்து வாத்தியாரே..?

தண்டம் நான் சொல்லுறது கலகம் , நீ சொல்லுறது கழகம்!

என்ன இழவோ, நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடறேன்... காமன் வெல்த் போட்டி நடக்குற ஸ்காட்லாந்தில் நம்ம விளையாட்டு அதிகாரிகள் ரெண்டு பேர் அவர்கள் விளையாட்ட காட்டிடாங்க.

அட பாவிங்க, வெளி நாடு போய் எதையாவது திருடி தொலைச்சாங்களா?

எதை தொலைச்சாங்களோ இல்லையோ, நம்ம மானத்தை தொலைச்சாங்க!

என்ன சொல்லுற தண்டம்.

ரெண்டு பேர் வாத்தியாரே, ஒருத்தன் ஏதோ ஒரு வெள்ளைகார பொண்ணுட்ட "சிலுமிஷம்" பண்ணி இருக்கான்...

அடுத்தவன்...

குட்டி பிரச்சனைக்கு அடுத்த பிரச்சனை என்னாவா இருக்கும் வாத்தியாரே... குடி தான். இன்னொருத்தன் குடிச்சிட்டு ரோட்டில் ஏதோ கலாட்டா பண்ணி இருக்கான்.

இப்ப இவங்க ரெண்டு பெரும் எங்கே...?

1 - 2 -3 ன்னு கம்பி எண்ணிக்கொண்டு இருக்காங்க..

விடு தண்டம், இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் உலக அளவு போட்டியில் நம்ம நாடு கலந்து கொள்ள போகும் போது  கூடவே "அப்பிசியல்ஸ்" ன்னு சொல்லி நம்ப அரசியல்வாதிங்க சொந்தகாரங்க எல்லாம் மாமன் மச்சான் உறவு கொண்டாடி  "ஊரான் வீட்டு நெய்.. என் பொண்டாட்டி கை"ன்னு சொல்லி கிளம்பி விடுவாங்க. இவங்களுக்கு நல்ல அரசியல், பண செல்வாக்கு...எந்த ஊரு சட்டத்தையும் சத்தம் போடாம அமுக்கி விடுவாங்க. சும்மா ரெண்டு நாள் உள்ள இருப்பாங்க,, அப்புறம் முதல் வகுப்பு பிரயாணத்தில் ஊரை வந்து சேருவாங்கோ.

ஏன்னா வாத்தியாரே, இவ்வளவு சுருக்கமா, சுலபமா சொல்லிட்ட... ஸ்காட்லாந்து போலிஸ் வாத்தியாரே..

அட போ தண்டம்.. எவனா இருந்தா என்னா? இதுவே ரெண்டு விளையாட்டு வீரர்கள் ஏதாவது தப்பு தண்டாவில் மாட்டி  இருந்தா நடக்கிற கதையே வேற.. அவனவன் இவனை போட்டு மெதிப்பாங்க. இவங்க ரெண்டு பெரும் ரெண்டு நாள் உள்ள இருப்பதே  பெரிய காரியம். மூணாவது நாள் ஊருக்கு போனை போட்டு "பெரிய தலை" ஏதாவது பேசி வைக்கும், அப்புறம் ஸ்காட்லேன்ட் ஆவது... ஸ்காட்ச் ஆவது.. அரசியலில் இது எல்லாம் சகஜம்  தண்டம்..

இவங்களிடம் இருந்து நமக்கு எப்பதான் விடிவு காலம் வாத்தியாரே..

நீதான் தப்பிச்சி இங்க வந்துட்டியே...விடு..நான் போகணும், அப்புறம் பேசலாம்.

வாத்தியாரே, நீ தான் தமிழில் எல்லாம் எழுதுறியாமே, தமிழில் ஒரு சந்தேகம்..

அப்படி போடு, சொல்லு தண்டம்.

இந்த "சில்மிஷம்"  "சில்மிஷம்" ன்னு சொல்றாங்களே, அது தமிழா?

நல்லா கேட்ட போ தண்டம். அது சுத்தமான நெய்யினால் செய்ய பட்ட தமிழ் வார்த்தை தான். "சில்லறை விஷம்" என்ற சொற்கள் தான் காலபோக்கில் "சில்மிஷம்" ஆகிவிட்டது,



5 கருத்துகள்:

  1. இந்த "சில்மிஷம்" "சில்மிஷம்" ன்னு சொல்றாங்களே,
    அது தமிழா?
    அது பிறமொழி தானே
    அது எந்த மொழி என்று தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சுத்தமான நெய்யினால் செய்ய பட்ட தமிழ் வார்த்தை தான். "சில்லறை விஷம்" என்ற சொற்கள் தான் காலபோக்கில் "சில்மிஷம்" ஆகிவிட்டது,

      நீக்கு
  2. ரெண்டு சில்மிஷமும் வெளியே வந்து ரெண்டுநாளாயிருச்சு! சில்மிஷம் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாவா? ஸ்காட்லாந்து போலீசுக்கே ஆப்பா? வருகைக்கு நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...