வெள்ளி, 27 மே, 2016

ஒண்ணுமே தெரியாம இருக்கீங்களே.. : இனியவள் - இளையவளின் ஒப்பாரி.

உங்களுக்கு இந்தியா பத்தி எதுவுமே தெரியல டாடி...

இரண்டு வாரம் இந்தியாவிற்கு சென்று திரும்பிய என் இளைய ராசாத்தி வீம்பாக பேச்சை ஆரம்பித்தாள்....

என்னது? எனக்கு இந்தியா பத்தி எதுவும் தெரியாதா? மகளே.. கலிபோர்னியாவில், ஏன் ? அமெரிக்காவிலே யாருக்கும் இந்தியாவை பத்தி என்னை போல் தெரியாது. ஒவ்வொரு தொகுதியையும் விலாவாரியா தெரியும்.

சும்மா பேசுங்க! ஆனா உண்மைய சொல்ல போனா உங்களுக்கு இந்தியா பத்தி ஒன்னும் தெரியாது..

ஏன் அப்படி சொல்ற..?

ஓகே.. ஒருவேளை அரசியல் கொஞ்சம் தெரியும்.. தமிழில் கொஞ்சம்  எழுத தெரியும் .. கொஞ்சம் மேடை பேச்சு தெரியும் .. மத்த படி எதுவும் தெரியாது.

எனக்கு எதுவும் தெரியாதுன்னு உங்க  அம்மா மாதிரி பொதுவா சொல்ல கூடாது. என்ன தெரியாதுன்னு சரியா சொல்லணும்.

சரி, விஷயத்துக்கு நேர வரேன். உங்களுக்கு இந்திய உணவை பத்தி ஒன்னும் தெரியாது.

அட பாவி மகளே.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகி இல்லாட்டி சமையல் காரன் தான்னு ஊரெல்லாம் பெருமையா சொல்லினு வரேன். நீ என் வீட்டுக்குளே இருந்தே என்னை இப்படி பேசிட்டியே.. உனக்கு இந்திய சாப்பாடு என்ன வேனும்ம்னு சொல்லு, அடுத்த அரை மணி நேரத்தில் செஞ்சி எடுத்துன்னு வரேன்.


சமையல் எல்லாம் செய்வீங்க.. ஆனால் உங்களுக்கு இந்திய இனிப்பு வகைய பத்தி ஒண்ணுமே தெரியாது.

இனிப்பா.. அது நமக்கு செய்ய வராது.. இருந்தாலும் என்ன வேணும்னு சொல்லு வாங்கி தரேன்.

இந்த முறை பெரியம்மா ஒரு இனிப்பு வாங்கி தந்தாங்க.. அந்த மாதிரி இனிப்பை நான் இது வரை சாப்பிட்டதே இல்லை.

திங்கள், 23 மே, 2016

நாக்குல தூக்கு போட்டுன்னு...

வா தண்டம்... எப்ப வந்த?

நேத்து தான் வாத்தியார..

இந்தியா ட்ரிப் எப்படி இருந்தது...

சூப்பர் வாத்தியாரே.. கிட்ட தட்ட 20 வருஷம் கழிச்சு தமிழ் நாட்டில் தேர்தல் நேரத்தில் போய் இருந்தேன், ஒரு வித்தியாசமான அனுபவம்.

சரி, வோட்ட யாருக்கு போட்ட?

நான் எங்க போட்டேன் ...எனக்கு பதிலா எந்த படுபாவியோ போட்டு இருக்கான்.

ஐயோ பாவம்..  நீ ஊருல இல்லன்னு தெரிஞ்சிட்டு உனக்காக நல்ல காரியம் செஞ்சி இருக்காங்க.. அதுக்கு நன்றியா இல்லாம...

சரி.. மீண்டும் அம்மா வந்துட்டாங்களே.. அதை பத்தி..

வாத்தியாரே.. உனக்கே தெரியும் நான் எந்த கட்சியையும் சேராதவன்..

டேய்..நீ தி மு க வா?

ஏன் அப்படி கேக்குற?

எப்பவுமே, தோத்தவங்க தான் "நான் எந்த கட்சியையும் சாராதவங்கன்னு' சொல்லுவாங்க.

இல்ல வாத்தியாரே. நான் ஊற விட்டு வந்து 20 வருஷம் ஆச்சி.. கட்சி கொடி லொட்டு லொசுக்குன்னு ஒன்னும் கிடையாது.



புதன், 18 மே, 2016

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்... சுட சுட...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்... சுட சுட...

வாக்காள பெருமக்கழே....

தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. இதோ அதன் முடிவுகள். ஆயுத எழுத்து நேர்பட பேசு நீயா நானா என்ற நிகழ்ச்சிகளை எல்லாம் தள்ளி விட்டு .. இதோ அந்த முடிவுகள்..




தொகுத்து அளிப்பவர் ....



விசுAwesome

திங்கள், 16 மே, 2016

சாப்பாட்டை தவிர எதுக்கும் வாயை..!?

"தயவு செய்து நான் பக்கத்துல இல்லாதபோது சாப்பாட்டை தவிர எதுக்கும் வாய திறக்காதிங்க...!"

அன்பான  சர்வாதிகாரத்துடன்  அம்மணி அருகில் வந்து காதை கடித்தார்கள்.

"அதுக்கு கூட ஏன் வாயை திறக்கனும். உங்கள் ஹாஸ்பிடல் ஆபெரசன் ரூமுக்கு  வரேன். உன் கையாலே தொண்டையில் ஒரு ஓட்டை போட்டு "டுயுப்" வைச்சி  சாப்பாட்டை அரைச்சி ஊத்திடுங்க.."

"நான் எவ்வளவு சீரியஸா பேசின்னு இருக்கேன். உங்களுக்கு எல்லாமே விளையாட்டு"?

"இப்ப நான் யாரிடம் என்ன பேசிட்டேன் ...இப்படி கொந்தளிக்கிற ?"


"நீங்க என்ன தப்பா பேசினீங்கன்னு உங்களுக்கு தெரியாது ?"

"உண்மையா தெரியாது .. நீயே சொல்லு.!!!"

"ஒரு ரெண்டு காரியம் தப்பா பேசினா எது தப்புன்னு தெரியும்.. வாய திறந்தா வரது எல்லாமே தப்பா இருந்தா எப்படி தெரியும்?"

ஞாயிறு, 15 மே, 2016

தங்கமணி தங்கமணி.. வா வா நீ..

ரெண்டு வாரம் இந்தியா சென்ற அம்மணி மீண்டும் திரும்பும் நாள்.இல்லத்தில் உள்ள வாகனம் முதல் குண்டூசி வரை சீராக வைத்து பழகியவர்கள்.இந்தியா செல்லும் போதே.. வீட்டை கொஞ்சம் கவனமா பாத்துக்குங்கோன்னு ஒரு அன்பான எச்சரிக்கை விட்டு தான் சென்றார்கள்.

இரண்டு வாரம் அது இது அங்கு இங்கு இருந்தாலும் அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்னால் வாகனம் முதல் குண்டூசி வரை சீராக வைக்க முயற்சி செய்தேன்.

கிட்ட தட்ட நான்கு மணி நேரம் இடையில்லாமல் வேலை செய்து அனைத்தையும் சீர் படுத்தி விட்டு அடுத்த நாள் அம்மணி வரும் விமான நேரத்தை உறுதி செய்து விட்டு ( பல வருடங்களுக்கு முன் தவறான விமானநிலையத்தில் தவறான நேரத்தில் காத்து இருந்து அவர்களை தவற விட்டது என் நினைவில் இருந்து தவறாது)  உறங்க சென்றேன்.

இரவு 11 மணிக்கு நினைவு வந்தது.. ஐயகோ.. சென்ற வியாழன் குப்பை போடும் நாளன்று குப்பையை வெளியே வைக்க மறந்துவிட்டேனே.. இப்போது என்ன செய்வது...

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சொந்த செலவில் சூனியம்... I Dont know Why...?




தமிழக அரசியலை சித்தரிக்கும் அடியேனின் பாடல்... (மேலே சொடுக்குங்கள்))


மே மாதம் 17ஂ தேதி தேர்தல்... கடந்த ஐம்பது வருடமாக அடுப்பில் இருந்து நெருப்பு .. நெருப்பில் இருந்து அடுப்பு...என்று காலத்தை தள்ளு விட்டோம்... 

நாம் என்ன செய்வோம். நம்மக்கு வாய்த்தது, அப்படி! டெல்லியை பார்த்தால் பொறாமையாக உள்ளது. உன்னால நான் கேட்டேன் என்னாலே நீ கெட்ட என்று சொல்லி கொண்டு இருந்தவர்களுக்கு "அம் ஆத்மி" என்ற விமோசனம் கிடைத்தது. 

ஆரம்பத்தில் அரசியல் நிர்வாக அனுபவம் இல்லாமல் அவர்கள் தடுமாறினாலும், நாட்க்கள் செல்ல செல்ல இவர்களுடைய ஆட்சி சிறப்பாக அமைந்ததே என்று சொல்லலாம்.

அடுத்த வருடம் பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலில் .. அம ஆத்மி கட்சிக்கு அனைத்து இடங்களும் இவர்களுக்கே என்ற ஒரு பேச்சு அடி படுகின்றது.

நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.  ஒரு காரியம் பண்ணலாம். நம் தொகுதியில் நிற்பவர்களிலே சிறந்தவரை நல்லவரை தேர்ந்தெடுங்கள். 

இந்த ஒரு முறை கட்சியை பார்த்து வாகு அளிக்காதிருங்கள். வேட்ப்பாலர்களை பார்த்து வாக்குகளை அளியுங்கள். அணியாது தொகுதிகளிலேயும் கண்டிப்பாக ஒரு நல்ல வேட்பாளர் இருப்பார். அவரை அறிந்து ஆதரியுங்கள். இதுவே இம்முறை நாம் நமக்கு செய்யும் பெரிய உதவி...




செய்வீங்களா ... செய்வீங்களா .....



வந்தோரை வாழவைத்தாய்  உன் பெருமை

வாடியதை கண்டதும் வாடினாய்  உன் தன்மை.
வள்ளுவனின் வம்சமே உன் மொழி வாய்மை.
இப்ப பிச்ச்சகாரனாகிவிட்டாய்  ..  ஐ டோன்ட் நோ வொய்....


அடுக்குமொழி பேசிக்கிட்டே ஆப்பு வைச்சாள் ஒய்

ஆடவந்த கூத்தாடி  ஆள வைச்சோம் ஒய்
மருத்துவரு வந்தவுடன்  மரத்த காணோம் ஒய்
கேனையங்க   ஊருக்குள கேப்டன்   நாட்டாமை.


ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

சொந்த செலவில் ஒய் ... சூனியம்  தான் ஒய்.
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
கையில வெண்ணை ..ஐ டோன்ட் நோ வொய்.


உடன் பிறப்புகளே...

வாக்கா பெருமக்களே..
மக்க்களே.. மக்களே...
உங்கள் பொன்னான வாக்குகளை...

கருப்பு பணம் காட்டிடிச்சு டாடா பை பை.
கொண்டு வரேன்னு சொன்னவர் ஆல்வேஸ் இன் தி ஸ்கை
இல்லத்துக்கு பல  லட்சம் அது தேர்தல் பொய்.
மல்லையாக்கு நல்ல நேரம் வைச்சான் பீச்சாங்கை..


ஆதினமும் சொல்லூராரு அம்மாதானு   ஒய்

மே தினமும் கும்பலோடு தள்ளாடுது ஒய்
சாதிகொரு கட்சி வச்சி கொல்லுறாங்க ஒய்.
மீதி உள்ள அல்பங்களும்  அள்ளுராங்க ஒய்.


ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

பேய்க்கு பயந்தோம் ஒய். இப்ப பிசாசாடோ   ஒய்..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
ஈயத்த பாத்து  ஒய் ...ஐ டோன்ட் நோ வொய்.

அம்மாவின் ஆணை படி 
மாப்பிள்ளை அவருதான் ஆனா அவரு போட்டு இருக்க டிரஸ் பத்தி நான் மறந்துட்டேன்.
அப்புறம் எதுக்கு டா ஷார்ட் நேம் சூப்பி?

மூணு மாசம் முன்னாலே பெஞ்சது மழை.
திறந்து விட்ட ஏறினால எத்தனை கொலை.
வெள்ளம் காஞ்சி நிலம் வறண்டு வெயில் வந்த வேளை
அம்மாவோட மீட்டிங் போனா பாடையில்  மாலை .


90 க்கும் மேலே ஆச்சி இன்னும் பேராச ...

கே ந கு தலைவருக்கு முடியல பேச
இலவசம்ன்னு சொல்லி காட்டுவான் ஆச
பரதேசியாகிடுவான் வாங்காத காச



ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

ஏறி ஆத்தா  ஒய் ஏரிடிச்சி ஒய் .
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
அடுப்பில பூனை ... .ஐ டோன்ட் நோ வொய்.


தொங்கு சட்டசபை வந்தால் ...

எந்த கட்சியும் யாரோடும் சேர வாய்ப்பு உள்ளது.
கூட்டணியில் ஏதுங்க கொள்கை, கோட்பாடு..
அம்மா வரட்டும்ம்னு காத்துன்னு இருக்கோம்...


2ஜியில்  2லட்சம் கோடி கொள்ளை

போட் ஹௌச்சில் போன் எக்சென்ஜ் இல்லை எல்லை.
சொத்து குவிப்பு வழக்குல கொஞ்சம் நாள் உள்ள
செய்வீங்களா .. செய்வீங்களா .. எனக்கு இல்ல பிள்ளை.


மணல் இல்லாமல்  காஞ்சி போச்சு   பாரு ஆறை

மலையெல்லாம் பேத்துட்டாங்க காணோம் பாறை
அரசாங்க ஆபிசில்   ஊருது சாரை
போனது போச்சி, போடு  புதிய பாதை.. 



ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....

கட்டை விரலில் மை...டாஸ்மாக் கடை..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
வெந்தத  தின்னு ஒய் ....ஐ டோன்ட் நோ வொய்.


உலகிலேயே சிறந்த ஜனாயக நாடு பாரதம் என்று ஜப்பானிய பிரதமர் கூறினார்.

உடன் பிறப்புகளே...
மாண்புமிகு அம்மாவின் ஆணை படி... இந்த பாட்ட இப்ப முடிச்சிடறேன்..


இன்றுடனே ஒழித்திடுவோம்i  இந்த சுடுகாட்டை

நல்ல ஆளா பாத்து  போடு உன்னோட   வோட்டை
நல்லவர் வென்றால் அது நம்மோட  கோட்டை..


நம்  வாழ்க்கை நம்  கையில்...

இருக்கையில், இதுவரையில்..
தடம் மாறி தடுமாறி....
ஐ டோண்ட் நோ வொய்...

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பங்கஜவல்லி ...தீர்க்க சுமங்கலி ..

முகநூல் நண்பர் அமுதன் சாந்தி அவர்கள் தன் முக நூல் சுவற்றில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார், இதோ அந்த ஸ்டேட்டஸ் ..

//முந்தா நேத்து ஒரு எடத்துல கார்டுக்கு பதிலா கேஷா செலவழிச்சதை மறந்துட்டேன்...

பர்ஸுல பணம் கம்மியா இருக்கவும்
ஒய்ஃப் கிட்ட (தைரியமா),
"எதுக்காச்சும் பணம் எடுத்தியா?" ன்னு கேட்டுட்டேன்...

"இல்லை, சாயங்காலம் வூட்டுக்கு வாங்க பேசிக்கலாம்!"ன்னுட்டாக ஒய்ஃபு...
கஞ்சியா உப்புமாவா இல்ல கரண்டியான்னு தெரியாம டென்ஷனாருக்கு...//


இதை படித்ததில் இருந்தே நான் பலவிதங்களில் குழம்பிவிட்டேன். உலகில் இப்படியும் நடக்குமா?

இதோ என் குழப்பதிர்க்கான கேள்விகள்..

முதலில்.. "கார்டுக்கு பதிலா கேஷா"

இதை என்னால் நம்பவே முடியல. திருமணம் ஆனா ஒரு மனிதனிடம் "கார்ட் -கேஷ்" இரண்டும் உள்ளதா? நான் இதை ரெண்டையும் சேர்த்து ஒன்றாக பார்த்த கடைசி நாளை என்னால் மறக்கவே முடியாது.

ஒன்றும் இல்லை, அன்று தான் என் திருமண நாள்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

காதுல ஈயத்த காச்சி ஊத்த .....

ஞாயிறும் அதுவுமாய் கோயில் வழிபாட்டில் நான் உண்டு என் வேலை உண்டு என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டு இருக்கையில், இருக்கையில்... எல்லாம் வல்லவனால் எனக்கு அளிக்க பட்ட அன்பு மனைவி மெதுவாக காதை கடித்தார்கள்.

என்னங்க...?

நீ கொடுத்த காணிக்கைய உண்டியலில் போட்டுட்டேன்.

அது இல்ல...

பின்ன என்ன?

அங்கே முன்னால இருக்காங்களே .. அவங்க தான் நம்ம ரமேசுடைய புது பொண்டாட்டி.

என்னாது/? ரமேசுக்கு ரெண்டு சம்சாரமா?

ச்சே .. போய் வாயை கழுவுங்க? ஏன் அப்படி கேக்கறிங்க?

இல்லையே, புது பொண்டாட்டின்னு சொன்னீயே.. புது பொண்டாட்டின்னு ஒருத்தங்க இருந்தா, பழைய பொண்டாட்டி ஒருத்தர் இருக்கணும் இல்ல, அதுதான்.

உங்க வாயிலே..

ஈயத்த காச்சி ஊத்த போறியா?

சனி, 9 ஏப்ரல், 2016

கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுகள்

வணக்கம் . கலாய்க்க  போவது யார் என்ற தலைப்பில் நடந்த ஏப்ரல் மாதத்திற்கான போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த போட்டிக்கான கார்ட்டூன் இங்கே.. 



மயங்கி விழற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?



முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அரசியல் வாசனையே அதிகம் வீசியது . தேர்தல் வரபோகின்றதல்லவா? அதனால் என்று நினைக்கின்றேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

வாசமில்லா மலரிது .....

டாடி வேலைக்கு போகலையா?

என்ற அலறல் சத்தம் மூத்த ராசாத்தியின் அறையில் இருந்து வந்தது.

நீ முதலில் கிளம்பு, ஒரு அஞ்சு நிமிஷம் கழித்து நான் கிளம்புறேன்

என்ற பதிலை தந்து விட்டு மனிதனாக பிறந்த எவனும் விரும்பும் அந்த அஞ்சு நிமிடம் கூடுதல் நேர தூக்கத்திற்கு போர்வையில் அடைக்கலமாகும் முன்..

நான் எங்கே போக போறேன் ... இந்த வாரம் முழுக்க பள்ளிக்கூடம் விடுமுறை, மறந்துடீங்களா?

பொதுவாக பள்ளி நாட்களில் 5:30 போல் எழுப்புவாள், இருவரும் தயாராகி செல்வோம். இந்த வாரம் பள்ளி கூடம் இல்லையே.. அதனால் அவள் எழவில்லை, நானும் அலாரம் வைக்கவில்லை..

ஆமா இல்ல., சுத்தமா மறந்துட்டேன், மணி என்ன ஆச்சி?

8:15.

அட பாவி. 9 மணிக்கு அலுவலகத்தில் ஒரு  முக்கியமான மீட்டிங் இருக்கே,
சீக்கிரம் எழுப்பி இருக்க வேணாமா?

உங்க மீட்டிங் எனக்கு எப்படி தெரியும்?

சரி, மீட்டிங்கை விடு, வழக்கம் போல் எழுப்பி விடவேண்டியது தானே?

சனி, 2 ஏப்ரல், 2016

ஆம்லெட்டும் அப்பளமும்...

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...



இந்த பதிவை படிக்கும்முன் பயணங்கள் முடிவதில்லை .. ஆமாங்கோ என்ற தலைப்பில் வந்த என் முந்தைய பதிவை படித்து விட்டு வாருங்கள். அதை படித்து விட்டு வந்தால் இது ஒரு மாலையாக மாறும். இல்லாவிடில் இது ஒரு மொட்டாக மட்டுமே தெரியும்.


திரும்பி வர 40 பேருக்கும் டிக்கட் எடுத்துடிங்களா ?

ஏன்.. டாடி.. இந்த டிக்கட்டை பத்தியே பேசுறிங்க.. எனி ப்ராப்ளம்?

தஞ்சாவூரில் இருந்து சீர்காழிக்கு திரும்ப வருகையில் ரயிலில் நடந்த அசம்பாவிதத்தை அவளிடம் சொல்லவா முடியும் ?

இப்படி தான் அந்த பதிவு முடிந்தது..

சனி இரவு..

என்னங்க இவ்வளவு சீக்கிரம் ..

தூங்க போறேனா?

அதே தான்..

காலையில் 4 மணிக்கு எல்லாம் எழனும் இல்ல, அதுதான்?


4 மணிக்கு ஏன்?

நாளைக்கு ஞாயிறு தானே.. மூத்தவ சீயாட்டில் (Seattle) நிகழ்சிகள் முடிந்து வரா  இல்ல, விமான நிலையம் போய் கூட்டினு வரணும்.. அதுதான்.

எல்லாம் சரி.. அஞ்சு மணிக்கு வர விமானத்துக்கு ஏன் 4 மணிக்கு போறீங்க.

போற வழியில் ஒரு காபி வாங்கின்னு போக சரியா இருக்கும்.

காலையில் 4 மணிக்கு .. காலையில்  நாலு மணிக்கு நீங்க கிளம்பி போனா.. காபிக்கு மட்டும் இல்ல. நாஸ்டா, 10:30 டிப்பன், 1 மணிக்கு லஞ்ச் ,, சாயங்காலம் 3 மணிக்கு டீ எல்லாத்துக்கும் நேரம் இருக்கும்.

பொடி  வச்சி பேசுறே...புரியல..

ஆமா. இப்ப எல்லாரும் தட்டுல் தோசைய வச்சினு இருக்கீங்க தானே..  பொடி வச்சி பேச?

புரியல.

வியாழன், 31 மார்ச், 2016

April 1 : கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி

ஏப்ரல் 1 என்றவுடனே எனக்கு நினைவில் வரும் நிகழ்ச்சி. பெங்களூரில் வேலை பார்த்துகொண்டு இருந்த நாட்கள். ஒரு நாள் மாலை வேலை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இன் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது என் தாயாரும் என் மூத்த சகோதரியும் நாங்கள் வெளியே கடைக்கு செல்கிறோம் "வயசு பையன் தனியா இருக்க, கதவை பூட்டி கொள்"என்றார்கள்.


அவர்களை அனுப்பிவிட்டு கதவை பூட்டி கொண்டு இளையராஜாவிடம் தஞ்சம் புகுந்தேன்.  இரண்டு நிமிடத்தில் வீட்டு அழைப்பு மணி அலறியது. கதவை திறந்து வெளியே பார்த்தால் ஒரு 13-14 வயது பெண், தலையில் மல்லிகை பூ கூடையோடு. நான் எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவளே ஆரம்பித்தாள். இப்ப போனாங்களே அந்த அம்மாவும் அவங்க பொண்ணும், உன்னை 4 முழம் வாங்கி வீட்டிலே கைக்குட்டை ஈரமாக்கி அதிலே சுத்தி வைக்க சொன்னாங்க. முழம் 2 ருபீஸ் என்று சொல்லி என்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொண்டாள். மீண்டும் ஒருமுறை மறக்காமல் ஈர துணில சுத்தி வை என்று சொல்லிவிட்டு போனாள்.

புதன், 30 மார்ச், 2016

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...

டாடி.. சீக்கிரம் தூங்க போங்க.. நாளை காலை 4 மணிக்கு எழுனு ..

நாலு மணிக்கு நீ தானே எழுனும், அதுக்கு நான் ஏன் சீக்கிரம் தூங்க போகணும்?

என்று கேட்க பதிலோ அம்மணியிடம் இருந்து வந்தது.

யாராவது ஏதாவது சொன்னா அவங்க சொல்ல வந்தத ..

நான் முடிச்சிவைக்கிறேனா?

அதே தான்.. உங்களுக்கு கொஞ்சம்..

பொறுமை தேவையா?

ஏங்க.. நான் சொல்ல வந்ததே..

வேறயா?


ஐயோ... எனக்குன்னு வந்து...

வாச்சி இருக்கா?

என்று என் அம்மணி பேசி கொண்டே இருக்கையில்...

ஓய் டாடி.. ஒய் டூ யு கம்ப்ளீட் அதர் பீபெல்ஸ்...

செண்டன்ஸா..

கொஞ்சம் .. ஒரு நிமிஷம் அமைதியா...

இருக்கேன் .. சொல்லு..

நாளை காலையில் நாலு மணிக்கு எழுனும்.. சீக்கிரம் தூங்க போங்க..

சொல்லுறத நான் சொல்லிபுட்டேன்னா ....

வளரும் கவிதையில் அடியேனின் நேர்காணல்....

வணக்கம்....

மதிப்பிற்குரிய சக பதிவாளர், நாம் அனைவரும் நன்கு அறிந்த கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தன்னுடைய வலைபக்கத்தில் மற்ற பதிவர்களை நேர்காணல் கொண்டு பதிவு செய்கின்றார்.

அந்த தொடரில் இம்முறை அடியேன் வந்துள்ளேன். என் நேர்காணலை காண இங்கே சொடுக்கவும்....



இணைய தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (3) நகைச்சுவையில் கலக்கும் விசு.

அடியேனை அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி ஐயா. 

செவ்வாய், 29 மார்ச், 2016

பெண்களின் கூந்தலில் .....

டாடி..அஞ்சு மணி அடிச்சாசி.. எங்கே ஆளே  காணோம் ..

என்று இளையவள் அலை பேசியில்  அதட்ட அருகில் நேரத்தை பார்த்தேன் 5:00:34.

ஒரு ஆணின் வாழ்க்கை தான் எவ்வளவு சோகமானது. பிறந்ததில் இருந்து பாட்டி- அம்மாவின் அதிகாரம், வளருகையில் அக்கா-தங்கச்சி அதிகாரம், வளர்ந்தபின் காதலி-மனைவியின் அதிகாரம், அது முடிந்தவுடன் பெத்த மகளின் அதிகாரம், இதிலேயும் சில நல்ல ராசிகாரர்களுக்கு ...அம்மா -மனைவி-மகள் என்ற மூவரின் அதிகாரமும் ஒன்றாய் வரும், நம்ம அந்த ராசி தானே என்று நொந்து கொண்டே...

இப்ப தான ராசாத்தி அஞ்சு ஆச்சி, வரேன்..

சீக்கிரம் கிளம்புங்க டாடி..வந்தவுடன் என்னை வெளியே கூட்டினு போகணும்.

எங்க?

பீயுட்டி  பார்லர் .

ஒன்னும் இல்ல .. செவ்வாய் தோஷம் .



திங்கள், 28 மார்ச், 2016

எழுத படிக்க கொத்தில்லா!

இந்த வாரம் வலைசரத்தில் சகோதரி க்ரேஸ் அவர்கள் என்னை அறிமுகபடுத்தி இருந்தார்கள். அவர்களுக்கு முதற்கண் வணக்கம். நான் எழுதிய சில பதிவுகளை குறிப்பிட்டு எழுதிய இருந்த அவர்கள்.. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு என்ற பதிவையும் அங்கே சுட்டி  காட்டி இருந்தார்கள்.
மேலே போகும் முன் அந்த பதிவை படித்து விட்டு வந்தால் இந்த பதிவிற்கான அர்த்தம் தெரியும். அந்த பதிவில் 15வயதாகிய என் மூத்த ராசாத்தி, தான் கார் ஓட்டத் தயாராகிவிட்டேன் என்று பேச ஆரம்பித்ததை பற்றி எழுதி இருந்தேன்.
அது மட்டும் இல்லாமல் இங்கே 15 வயது பிள்ளைகளுக்கு லைசென்ஸ் எப்படி வாங்குவது என்றும் எழுதி இருந்தேன். அந்த பேச்சை முடிக்கையில்  “டாடி, நீங்கள் எப்படி லைசென்ஸ் வாங்கினீர்கள்” என்று கேட்ட கேள்விக்கு .. இந்தியாவில் வாங்கியதாயிற்றே, அதை எப்படி வாங்கினேன் என்று சொல்ல முடியுமா ? என்று முடித்தேன்.

அன்றும் சரி , இன்றும் சரி , அதை எப்படி வாங்கினாய் என்று நிறைய கேள்வி வந்துள்ளது.
அந்த கதையை இதோ சொல்கிறேன். 21 வயதானவுடன் முதல் சம்பளம் வாங்கி ஒரே மாதத்தில் முதல் வேலையாக வீட்டில் மிகவும் தொந்தரவு பண்ணி KB 100 (KAWASAKI பஜாஜ்) என்ற வாகனத்தை வாங்கி விட்டேன்.  வண்டி வாங்கி நாலு மாதம் கழித்து தான்  ஊரில்இருந்து வந்த போலிஸ்கார மாமா , வண்டி இருக்கட்டும் ,எங்கே லைசென்ஸ் காட்டு என்றார் .
லைசென்ஸ் .. அது எதுக்கு ?
படவா ராஸ்கல், லைசென்ஸ் இல்லாமலா வண்டி ஓட்டுற ? முதலில் போய்  லைசென்ஸ் வாங்கி வா என்று சொல்லி வண்டியின் சாவியை எடுத்து கொண்டார் .

ஞாயிறு, 27 மார்ச், 2016

கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.

வணக்கம் பதிவர்களே...சென்ற மாதம் அடியேன் ஆரம்பித்து வைத்த "கலாய்க்க போவது யார் ?என்ற போட்டியின் முடிவு அனைவரும் அறிந்ததே.  அடியேன் ஒரு கார்டூன் போட்டு அதில் வாசகர்களை ஒரு வசனத்தை எழுத அழைத்து இருந்தேன். அநேகர் பங்கேற்ற இந்த போட்டியில் நண்பர் மலர்வண்ணன் அளித்த கார்ட்டூன் வெற்றி பெற்றது.

இந்த போட்டியை நான் ஆரம்பிக்கும் போது என் மனதில் வந்த ஒரே எண்ணம்     "பதிவர்களாக இருக்கும் நமக்கு இந்த பதிவுகளினால் வரும் ஒரே வருமானம் ஒரு மகிழ்ச்சி தான்". இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி நம் குடும்பத்தோடு பகிர்ந்து  கொள்ள போகிறோம்.

அதனால் தான் இந்த போட்டியை உருவாக்கி வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவகத்தில் இருந்து 2,500 ருபாய்க்கு  கிப்ட் கார்ட் கொடுத்து அதை அவர்கள் தம் குடும்பத்தோடு சேர்ந்து மகிழும் படி அமைத்தேன்.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற மலர்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றார். அவர் அதை எப்படி கொண்டாடினார் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார் .அதை படிக்க இங்கே சொடுக்கவும்.


சரி, இந்த போட்டியை மாதம் ஒரு முறை வைக்கலாம் என்று முடிவு பண்ணியுள்ளேன். அடுத்த போட்டிக்கான கார்ட்டூன் இது தான்.

மயங்கி விழுற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?


அப்படி அவர் கேட்ட செய்தி என்னவாய் இருக்கும்? 

உங்கள் காலாய்ப்பை பின்னூட்டத்தில் தாருங்கள்...போட்டிக்கு வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 

போட்டியை பற்றி சில விதிமுறைகள்.

மொத்த பரிசு தொகை ருபாய் 2,500. 

  • உணவகத்தின் "கிப்ட் கார்டாக" மட்டுமே வழங்கப்படும். பணமாக அளிக்க படமாட்டாது.
  • ஏற்கனவே வென்றவர்களும் பங்கேற்கலாம்.
  • ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
  • ஏப்ரல் மாதத்தின் போட்டி இன்று (மார்ச் 27) துவங்குகின்றது.
  • முடிவுகள் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரும்.
நண்பர்கள் சிலரின் யோசனையால் போட்டியின் நாட்கள் மாற்ற பட்டுள்ளது. 
மார்ச் 27ம் தேதி ஆரம்பித்த இந்த போட்டி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும். இவ்வாறு செய்வதின் மூலம் போட்டியின் முடிவிற்காக பங்கேற்பவர்கள் ஆவலோடு இருக்கும் போதே அறிவிக்க படும் வாய்ப்பு. இந்த யோசனை சரியாக பட்டதால் போட்டியின் முடிவு ஏப்ரல் 9ம் தேதி மாலை 7 மணி (இந்திய நேரப்படி) அறிவிக்கப்படும்.

தங்கள் புரிதலுக்கு நன்றி. 

பின் குறிப்பு :

இது ஒரு சராசரி மனிதனால் இன்னொரு சராசரி குடும்பத்திற்காக நடத்தபடும் சராசரி போட்டி. வரும் பின்னூட்டங்களில் எனக்கு பிடித்ததை தேர்வு செய்கிறேன்.

தங்களில் யாரவது இந்த முறையில் வெற்றியை தீர்மானம் செய்வதை விட, வேறு மாதிரியாக வெற்றியை தீர்மானித்தால்  நலமாக இருக்கும் என்று நினைத்தால், எனக்கு தெரிவியுங்கள்.

மற்றும்.. ஒரே ஒரு பரிசிற்கு பதிலாக முதல் மூன்று பரிசு தரலாமே என்ற ஒரு எண்ணமும் சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்டது. அதை பற்றி உங்களின் கருத்தையும் கூறுங்கள்.


கடந்த போட்டியில் மலர் வண்ணன் அவர்களின் வெற்றி பெற்ற கார்ட்டூன், இதோ...


வியாழன், 24 மார்ச், 2016

ஹூஸ்டன் ... வி ஹேவ் எ ப்ராப்ளம் ....

படிப்பு.. படிப்பு.. என்று இல்லாமல் ராசாத்திக்கள் அனைத்து துறையையும் அறிய வேண்டும் என்று நினைப்பவன் அடியேன். என்னதான் பள்ளி படிப்பு முக்கியமாய் இருந்தாலும் ..ராசாத்திக்கள் இருவரும் தினந்தோறும் பியானோ அல்லது கிட்டார் வாசித்து சில நிமிடங்கள் கழிக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை. இசை மட்டும் இல்லாமல் வாரத்தில் குறைந்த பட்சம் 4 நாளாவாது வெளியே சென்று "கோல்ப்" ஆட வேண்டும். இவர்கள் படிக்கும் பள்ளியில் கோல்ப் அணியில் சேருவது  குதிரை கொம்பு.

இருந்தாலும் வருட கணக்கில் செலவு செய்த நேரத்தினாலும் சரியான பயிற்ச்சியினாலும் அடியேனின் மூத்த ராசாத்தி தான் இந்த வருடம் பள்ளியின் கோல்ப் அணியின்  கேப்டன். இளையவள் அடுத்த வருடம் தான் உயர்நிலை பள்ளி போகின்றாள். எப்படியும் முதல் வருடத்திலேயே அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற பிடிவாதம். இப்படி படிப்பு-பியானோ-விளையாட்டு என்று காலம் போய் கொண்டு இருகின்றது.

சரி, தலைப்பிற்கும்  இதற்கும் என்ன சம்பந்தம்? பொறுமை.

இவர்கள் இருவரும் பயிலும் பியானோ வகுப்பிற்கு வருடா வருடம் தேர்வு உள்ளது. மொத்தம் 9 வருடம் அதை முடித்த  பின் ஒரு அட்வான்ஸ்ட் தேர்வு. மூத்தவள் 9வது தேர்விற்கும் இளையவள் 7வது தேர்விற்கும் செல்லும் நேரம்.

தேர்வு சாலையை அடைந்தவுடன், அங்கு இருந்த பியானோ ஆசிரியை .. அடியேனை பார்த்து...

வேர் ஆர் யு ப்ரம்?

என்று கேட்க.. அடியேனோ.. இந்தியா என்று சொல்ல.. அதற்கு பதிலாக அவர்கள்.. .நீ பார்க்க இந்தியனை போல் தான் இருகின்றாய் .. ஆனால் பிள்ளைகள் இருவரும் இலங்கை போல் இருகின்றார்கள் என்று சொல்ல..

நானோ பேய் அறைந்தவன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக) மற்றொரு நாள் சொல்கிறேன்) போல் ஆனேன்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...