வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

விடிந்ததை அறிந்தேன்!

குடுகுப்புக்காரன்
நல்ல காலம் என்று
சொல்லும்
முன்னே..

சூரியன் மேகத்தை
கிழித்து கொண்டு
வெளிவரும்
முன்னே..

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

நந்தவனத்தில் ஒரு "அயோக்கியா"

கற்பனை தான்..

இதை படிக்கும் அனைவரும் தமக்கு அறிந்த ஒரு சிற்றூர் அல்லது கிராமத்தை மனதில்  ஏற்றி கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். அடியேனின் மனதில் பருகூர் !

பெரியவரின் இல்லத்தில் நல்ல காரியம். ஆறு வருடத்திற்கு முன் பெரியவரின் மூத்த மகளின் திருமணம் நடந்ததை ஊரில் யார் தான் மறப்பார். அப்படி ஒரு  திருமணம்.

ஊரின் எல்லையில் இருக்கும் காட்டில் இருந்து விறகு பொறுக்குபவர்கள் துவங்கி உள்ளே இருக்கும் ரெட்டி குடும்பத்தாரின் தங்க நகை வியாபாரிகள் வரை மகிழ்ந்த திருமணம்.

ஆறு வருடம் கழித்து பெரியவரின் இரண்டாம் மகளுக்கு  நிச்சயதார்த்தம் சென்ற வாரம். ஊரே மீண்டும் மகிழ்ந்தது. இன்னும் நான்கு மாதத்தில் கல்யாணமாம். அதுவும் பருகூரிலே கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பெரிய படிப்பு படித்து இருந்தாலும், ஊரிலேயே செட்டில் ஆகி பெரியவரோட நஞ்சை புஞ்சையை சமாளிக்க போறாராம்.

ஊரே களை கட்டியது.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சோம்பேறி பலகாரம்- பெயர் வந்த கதை.

வேலை முடிந்து இல்லம் வந்து சேருகையில், இளையவள் அலறினாள்..

ரொம்ப பசிக்குது. ரொம்ப பசிக்குது...

நம்ம ராசி, இல்லத்தில் அம்மணி இருந்ததால்...

எனக்கும் தான் பசி.. உங்க அம்மாட்ட சொல்லி ஏதாவது மாலை டிபன் செஞ்சா எனக்கும் ரெண்டு வாய் செய்ய சொல்லு..

என்று சொல்லி விட்டு...

அடே டே.. இந்தியாவில் இருக்கும்  போது இப்படி "மாலை பசி" வந்தால், அப்படியே  பக்கத்துல இருக்க கடைக்கு போய் , ஒரு பஜ்ஜி, போண்டான்னு ஏதாவது வாங்கி சாப்பிடலமாமேனு நினைத்து கொண்டே, கணினியை தட்டி,  இசை உலகில் இறங்கி விட்டு, மின்னஞ்சலையும் முகநூலையும் பார்த்து கொண்டு  இருக்கையில், அம்மணி மேசைக்கு அருகில் வந்து அமர..இளையவளோ..

புதன், 8 ஆகஸ்ட், 2018

கருணாநிதி நல்லவரா, கெட்டவரா?


என்னங்க கருணாநிதி இறந்துட்டாராமே..
அடக்கம் முடிந்தவுடன் என் இல்லத்து அம்மணி அடித்து பிடித்து வந்து சொன்னார்கள்.

அவர்களுக்கு அரசியலில் அம்புட்டு விருப்பம் இல்லை.
ஆமாம் நேற்று இரவு?
என்ன ஆச்சி..
சுகவீனம் தான்!
வருத்தமா ? அவருக்கு 90 க்கும் மேலே இருக்கணுமே.
ஆமா..

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

காற்று வாங்க வந்தேன்.. கதை தான்!

ஐம்பதை தாண்டிய ஆண்மகன் பலருக்கு கொடுத்து வைக்காத அதிர்ஷ்டத்தை ஆண்டவன் அடியேனுக்கு கொடுத்துள்ளான். இன்னும் எத்தனை நாளுக்கு என்று தெரியாது, இருந்தாலும் இருக்கும் வரை அதை சீராக வைப்போம் என்று நினைத்து கொண்டே தலை முடியை கோதினேன்.

வாலிப வயதில் இருந்ததில் பாதி இருந்தாலும் பாதியாவது இருக்கிறதே  என்று எண்ணுகையில்.... இளையவள் அலறினாள்...

ரொம்ப வளந்துடிச்சி .. இந்த வாரம் ஒரு மீட்டிங்கில் பேச போறீங்க, போய் நல்லா கட் பண்ணிட்டு வாங்க...

நமக்கு எப்பவுமே இந்த வேலை, சனி காலையில் தான்..

எழுந்தேன் ... அருகில் உள்ள "சூப்பர் கட்" என்ற இடத்திற்கு சென்றேன். எட்டு மணிக்கு திறக்கும் என்ற பலகை இருக்க... எனக்கும் முன்னால் ஒரு வெள்ளைகாரர்.

அவருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ...அலை பேசியில் நுழைய.. அவரோ..

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

என்ன சத்தம் இந்த நேரம்?

என்ன டாடா?  இப்ப எல்லாம் நீங்களும் அம்மாவும் வீட்டுல சண்டையே போடறதில்லையாமே..

சிரிப்போடு கேட்டாள் வார இறுதிக்கு  இல்லம் வந்த மூத்தவள்.

என்னது... நானும் அம்மாவும் சண்டை போட்டோமா? நாங்க எங்க வாழ்க்கையில் இது வரை சண்டை போட்டதே இல்லை... நீ என்ன புது கதை சொல்ற?

வாவ்... நீங்க சண்டை போட்டதே இல்லை!?  நான் வீட்டுல இருக்கும் போது ஒரு நாளைக்கு அஞ்சு முறையாவது அம்மா உங்களை சத்தம் போடுவாங்களே..

ஆமா ... அதுக்கு என்ன இப்ப?

அப்புறம் சண்டை போடுறதே இல்லைனு சொன்னீங்க...?

நான் பெத்த ராசாத்தி.. ஒரு சண்டை போடணும்னா அதுக்கு ரெண்டு பேரும் சத்தம் போட்டு பேசணும். இங்கே அம்மா மட்டும் தான் என்னை சத்தம் போடுவாங்க.. இதுக்கு பேர் சண்டை இல்ல.."Domestic  Violence ".நீ பிறந்து உன்னை முதல் முதலா தூக்குனனே..அப்ப தான் உங்க அம்மா என்னை சத்தம் போட  ஆறாம்பிச்சாங்க ..

சரி,..அப்படியே இருக்கட்டும்.. இப்ப எல்லாம் அம்மா உங்களை சத்தம் போடறதில்லையாமே.. சின்னவ சொல்றா?

நான் நோட் பண்ணவே இல்லை.. நீ சொன்னவுடன் தான் கூட்டி கழிச்சி பார்த்தேன். கொஞ்சம் கம்மியாகி இருக்கு.

அது தான் ஏன்.. எப்படி.. எதுக்கு... நான் காலேஜ் போகிறதுக்கு முன்னாலே வீட்டிலே இருக்கும் போது எப்போதும் சத்தம் போடுவாங்களே.. என்ன ஆச்சி..

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...