திங்கள், 12 மார்ச், 2018

பஞ்சாபி மசாலா வடை - ஆபத்வந்தவன்..

அம்மணியும் இளையவளும் (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே) சனி மதியம் எங்கேயோ போறோம்னு கிளம்ப..

கிளம்ப போற  நேரத்தில்.. ஏங்க, நீங்க சும்மாதானே இருப்பீங்க.. ( அது எப்படி.. வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்து சனிக்கிழமை ஒரு நாள் வீட்டுல இருந்தா.. நீங்க சும்மாதானே இருப்பீங்கன்னு சொல்றாங்க )

சும்மாதானே இருப்பீங்கன்னு ஆரம்பிக்கும் போதே..

எனக்கு இன்னைக்கு பின்னாடி தோட்டத்தில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு..

நீங்க கிளம்புங்க.. அப்புறம் பார்க்கலாம்...

கிளம்பினார்கள்..

வீட்டில் தனியா இருந்தா நம்ம பண்ற முதல் வேலையே பாட்டு தானே.. இசையை  திருப்பி விட்டு... அப்படியே ரிலாக்ஸ் பண்ணுகையில்..

தொலை  பேசி அலறியது...

ஏங்க..

ஞாயிறு, 11 மார்ச், 2018

கீரை வாங்கலையோ.. கீரை!

சுனாமியோ பூகம்பமோ  வெள்ளமோ. காட்டு தீயோ.. நாட்டுல என்ன நடந்தாலும் ஞாயிறு காலை 7  மணிக்கு நம்ம கோயிலுக்கு போக தயாரா இல்லாட்டி..  அடியேனின் வீட்டில் இந்த நாலுல ஏதாவது ஒன்னு ஆரம்பிச்சிடும்.

ஆரம்பிச்ச அது ஞாயிறு காலையோடு  நிக்காது.. சனி இரவு வரை போகும். இத அறிந்ததால்.. நானும் சரி  இளையவளும் சரி (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே).. "I am a Complan Boy  - I am a Complan Girl" ன்னு கோரஸ் பாடினே பைபிளோடு காரில் காத்திருப்போம்.

இன்றும் அப்படி தான்.

காரில் ஏற வந்த  அம்மணி ஒரு ஷாப்பிங் பையோட வர..

அது எதுக்கு. இந்த வார காணிக்கையை உனக்கு தரேன்னு சொல்லிட்டாங்களா?

வேணாம்.. வாயை கிளறாதிங்க..

பின்ன எதுக்கு?

கோயில்களில் இருந்து அப்படியே உழவர் சந்தைக்கு போறோம்.

உழவர் சந்தையான்னு நான் அலற..

வெள்ளி, 9 மார்ச், 2018

என் கண்ணுக்குள் 100 நிலவா...

நண்பர் ஒருவர் ... பார்வையற்றவருக்கு  பரீட்சை எழுதுவதை பற்றிய பதிவு ஒன்றை போட்டார்..

படித்தவுடன் நினைவு கடந்த காலத்திற்க்கு சென்றது..

சில நேரங்களில்  நாம் செய்யும் ஒரே காரியம்  நம்மை எல்லையில்லா இன்பத்திற்கும் மன நிம்மதிக்கும்.. அதே நேரத்தில் அதே காரியம் நம்மை சில நாட்களிலே எண்ணற்ற துன்பத்திற்கும் துயரத்திற்கும் தள்ளும்

 உதாரணம்..ஒரே காரியம்..

அடியேனின் அம்மா நடத்தி கொண்டு இருந்த பார்வையற்ற பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு பத்தாவது பொது தேர்வு எழுத உதவி தேவை என்று அழைப்பு வர..

நானும் சென்றேன்..   நான் தான் பள்ளி தலைமை ஆசிரியையின் பிள்ளையாயிற்றே.. அது மட்டும் இல்லாமல், படிப்பிலும் நான் ரொம்ப  கெட்டி என்று எனக்கு நானே ஏற்றி வைத்த  ரெப்புட்டேஷனும்   சேர்ந்து கொள்ள...

அந்த பார்வையற்ற பள்ளி மாணவர்களில் மிகவும் அறிவான மாணவனுக்கு பரீட்சை எழுத என்னை அழைத்தார்கள்.

விசு.. பார்த்திபன்.. நல்லா படிப்பான்.. ரொம்ப சமத்து... அவனுக்காக நீ பரீட்சை எழுதினா.. அவன் சொல்ற பதிலை நீ எழுதினா.. அவன் பள்ளி கூட முதல் மதிப்பெண் வர கூட வாய்ப்புள்ளது.. அதுவும் கணக்குல.. அவன் பிரில்லியண்ட்.. எதிர் காலத்தில் வங்கியில் தான் வேலை செய்யனும்ம்னு  அவன் கனவு.. ஆல் தி பெஸ்ட்.

புதன், 7 மார்ச், 2018

டாக்டர் .. என் பிரெண்டுக்கு என்று ஆரம்பித்தால்!

டாக்டர்...

சொல்லுங்க .. உடம்புக்கு என்ன?

என்னத்த சொல்வேன்..

அப்ப சொல்லாதீங்க.. வெளியே பீஸ் மட்டும் கட்டிட்டு போங்க..

டாக்டர்..

சொல்லுங்க...

உடம்பு OK .. மனசு தான் சரியில்லை..

அதுக்கு இங்கே ஏன் வந்திங்க...அதுக்கு வேற டாக்டர் இருக்காங்க..

அது இல்லை டாக்டர்..

சரி சொல்லுங்க..

என் பிரென்ட் ஒருத்தருக்கு..

இதுல பொய் எதுக்கு... அதுக்கெல்லாம் இப்ப புது புது ஊசி வந்து இருக்கு..இனிமேல் அந்த மாதிரி தவறு செய்யாதீங்க..

டாக்டர்... என்ன சொல்றீங்க..?

நீங்க தானே சொன்னீங்க.. என் பிரென்ட் ஒருத்தருக்குன்னு...

அப்படி சொன்னா ?

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...