செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

முடவனின் கொம்புத்தேன்....

என்ன விசு? இந்த காவேரி ஆற்று படுகையில் மீத்தேன் எடுப்பதை பற்றி உன் அபிப்ராயம் என்ன?

தேவை இல்லா கேள்வியை கேட்டான் நண்பன் பாணி...

பாணி, என்னத்த சொல்ல இருக்கு?
நிதானமா யோசித்து சட்டு புட்டுன்னு சொல்லு..

எடுக்கலாமா, வேண்டாமா? ஒரே வார்த்தை ப்ளீஸ்..

பாணி.. இது நிதானமா யோசித்து செய்ய வேண்டிய வேலை. சட்டுபுட்டுனு சொல்ல முடியாது?

சரி.. நிதானமா யோசித்து சட்டு புட்டுன்னு பதிலை சொல்லுன்னு தன்
 பாணியில் குழப்பி விட்டு கிளம்பினான், தண்டபாணி.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

அதோ அந்த பறவை போல...

மற்றொரு சராசரி நாள் தான் அன்றும்..

எழுந்தவுடனே எத்தனை எண்ணங்கள்...

காப்பிக்கு பால் இருக்கா?
தோசைக்கு மாவு உண்டா?
வங்கியில் பணமுண்டா?
வாகனத்தில் எண்ணையுண்டா?
ராசாத்திக்களின்  பள்ளி...
அம்மணியின் வேலை..
அடியேனின் வேலை..

சாலையில் செல்கையில்..
அங்கே ஒரு விபத்து..
என் வயது சார்ந்த ஒருவர் இறந்து விட்டாராம்..
அவருக்கும் இரண்டு ராசாதிக்கள் உண்டாம்.

வியாழன், 23 பிப்ரவரி, 2017

இன்னாத்த எழுதி தொலைப்பது..!

இந்த வருடம் துவங்கியதில் இருந்தே.. இன்னாத்த எழுத போறோம் என்கிற ஒரு நினைப்பு.

எழுத துவங்கி மூன்று வருடமாயிற்று. வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதி முடித்தாகிவிட்டது.

மொத்த சம்பவமே இம்புட்டு தானா ? நல்ல கேள்வி.

மற்ற சம்பவங்களை எழுத முடியாதே. அதனால தான்.

சரி..

இங்கே அமெரிக்க வாழும்  முறை பற்றி எழுதினா.. இதோ வந்துட்டாரு
"பீட்டர்ன்னு" பின்னூட்டம்.

இந்திய நிலைமையை எழுதினா .. நீ தான் இது எல்லாம் வேண்டாம்னு கிளம்பிட்டியே .. இப்ப எதுக்கு எங்களை பற்றி என்ற பின்னூட்டம்...

தமிழக அரசியல் பற்றி எழுத மனமும் இல்ல.. இனிமேல் அதைப்பற்றி எழுத குணமும் இல்லை. சொன்னா வெக்க கேடு சொல்லாக்கட்டி மானக்கேடு.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...