ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

The Untouchables.....


“Dad, Whats our caste?” asked my little princess as she got in the car. I was taken aback.
“What did you ask?”
“What is our caste dad?”
“Why do you want to know?”
“No, they asked me in school.”
“Oh dear. I came 9000 miles away and am sending you school so that you will not be touched by this caste, religion and creed stuff. It is sad to see it is catching up so fast. Why does your school wants to know which caste you belong to?”
“Daddy, we are learning about the caste structure in India in our history classes. My teacher knows that I am an Indian. So I was asked to tell my caste”
“Oh! I was afraid if the segmentation has come to schools in the USA as well”
“Now tell me”
“Just tell them you don’t believe in caste and stuff.”
“At least tell me what caste mean”
“I honestly don’t know dear”
“How do you determine one’s caste?”
“I don’t”
“Our teacher said the caste is determined by the work they do. Is that true?”
“We can’t be sure”
“She said the barber belongs to one caste, the carpenter to another and business people belong to a different caste. She said that is how they determine the caste”
“I am not sure. But I know this. It is very cheap and silly to segment people based on their caste. Just let them know my concern”
“Will you or will you not tell your caste?”
“I won’t”
“Can I ask mother?”
“No. That would be a mistake. She is a Tamil from Yazhpanam. They are really short tempered”
“Is that a caste too?”
“No, it is a race”
“I am totally confused”
Next day, after school she got into the car...
“We had a skit today in school based on the caste. They asked us to choose a caste ourselves and each one can be of a caste”
“Oh,” I said uninterested.
“Can you guess my caste?
“Dear, We do not talk about caste even if it is for a game”
“Chill Dad. It was just a skit”
“There are thousands of things one can learn from India. All they chose was caste”
“Listen. There was a big fight while selecting the caste”
“No surprise there dear. When caste intervenes, fights follow. But what was the fight about?”
“We needed four boys to pick the caste of Untouchables”
“Nobody volunteered, is it?”
“No, all 40 boys wanted to be untouchables”
I resisted the urge to slam the brake and listen to the whole story. “But why?”
“They all wanted to be untouchables. They are so unique and strong. Nobody will be able to touch them or mess with them, they are like some kind of Superman".
I smiled. I never thought untouchables in that way.

திங்கள், 12 செப்டம்பர், 2016

அமெரிக்க தமிழனும் - தமிழ் ரத்னாவும்.

நேற்று இரவு உறங்கும் முன் நண்பர் ஒருவரின் அழைப்பு வந்தது.


சொல்லுங்க...

விசு அமெரிக்க தமிழர் யார்?

ஆமா.. இவ்வளவு நாள் தமிழர் யாருன்னு கேட்டுனு இருந்திங்க? இப்ப அமெரிக்க தமிழர் யாரு? ரொம்ப முக்கியம்.

சீரியஸ் ..அமெரிக்க தமிழர் யார்?

அப்படி ஒரு ரகமே இல்லை. தமிழை தாய்மொழியாக கொண்டோர் இடம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வசிப்பவர்கள் என்று வைத்து கொள்ளலாம்.

சரி...சந்தோசம்.

தமிழருக்காக நீங்க என்ன செய்து இருக்கீங்க.

இந்த விஷமம் தானே வேண்டாகுன்றது. தமிழருக்குஆகா தமிழநாட்டில் நீங்க தேர்ந்தெடுத்த தலைகளையே ஒன்னும் செய்யல ..
நாங்க என்னாத்த செய்ய போறோம்?

அப்புறம் "தமிழ் ரத்னா " என்ற ஒரு விருதை உருவாக்கி அதை கொடுக்கறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?
உலக தமிழரின் கௌரவத்திற்கு உழைத்ததற்காக ... 
(இப்பவும் இந்தியா தானே.. இதுல என்ன Former?)

டேய்.. இந்த தமிழ் ரத்னா எல்லாம் எனக்கு தெரியாது. நான் கொடுக்குறது " நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்வோர் விருது" அதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. இருந்தாலும் வேறே வேறே விருது...

சீரியஸ் விசு.. அமெரிக்க்கா தமிழ் சங்கத்தில் இருந்து .. தமிழ் ரத்னா என்ற விருதை சுபராமணிய ஸ்வாமிக்கு தந்து இருக்காங்க.

தமிழ் ரத்னா ... .சுனா சானாக்கா? எதுக்கு ?

."For his Service to enhance the Prestige of Global Tamils:......."

நீ சும்மா தமாஷ் பண்ற? எனக்கு வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்.

விசு, எனக்கு வர கோவத்துக்கு... நீ  தப்பிக்க பாக்குற!

எனக்கு .. சரி.. கேக்க ... ள்ளைன்னு நானே விட்டு விட்டு பேசி தொடர்ப்பை துண்டித்து... விசாரித்தேன்.

உண்மையாகவே தான் இவருக்கு அமெரிக்க தமிழ் சங்கம் என்ற ஒரு அமைப்பில் இருந்து இந்த விருதை தந்து இருக்கின்றார்கள்.

இந்த அமைப்பிற்கு இப்படி ஒரு விருதை தர யார் உரிமை தந்தார்கள் என்று தெரியவில்லை.

யு டுயூப் சென்று இந்த நிகழ்ச்சியை  கண்டேன். மூன்று பேர் மேடையில் உள்ளார்கள்.

மொத்த நிகழ்ச்சியும்  ஆங்கிலத்தில் நடந்தது. அந்த பகுதியில் வாழும் அறிந்த  நண்பர் ஒருவரை அழைத்து, நீங்க சென்று இருந்தீர்களா என்றேன்?

அவரோ..

ஏதோ கலந்துருடையாடல் என்று கூறினார்கள். இருந்தாலும் நான் செல்லவில்லை. மொத்தமே 15-20 பேர் தான் சென்று இருப்பார்கள்.. என்றார்.

இதனால் என் இனிய தமிழ் மக்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால்... இந்த விருதுக்கும் அமெரிக்க வாழ் தமிழ் மகனாகிய எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.  இந்த விருதை பற்றி அடியேனின் கருத்துக்களை முக நூலில் இட்டு இருந்தேன்... அதை கீழே படிக்கலாம்.


************************
அமெரிக்க தமிழ் சங்கத்தில் இருந்து தமிழ் ரத்னா விருது பெற்ற சுனா சானாவிற்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கமும் உடனடியாக இலங்கை தமிழ் ரத்னா என்ற விருதை வழங்குமாறு...

நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் சங்கம் சார்பாக பணிவோடு கேட்டு கொள்கிறோம் .
                                                                 ************************
நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் விருதில் ஒரு இன்ப அதிர்ச்சி .
இவ்வளவு நாளாக இந்த விருதை நாம் நமக்கு தெரிந்தோர்க்கு அளித்து வந்தோம். இம்முறை.. இந்த விருதை ஒரு விருதுக்கு கொடுக்கும் வாய்ப்பை பெற்று இருக்கின்றோம்.
இந்த வாரத்திற்க்கான விருது ... தமிழ் ரத்னா விருதுக்கு ..

                                                        ************************
அமெரிக்காவில் பொது இடத்தில குப்பையை போட்டதால் சுப்ரமணிய ஸ்வாமிக்கு அபராதம்.
குப்பையை எடுத்து பார்த்ததில்... ஒரு கட்டையினால் செய்த சட்டத்தில் "தமிழ் ரத்னா " என்று எழுதி இருந்தது.

                                                            ************************


இதுதாங்க அந்த தமிழ் ரத்னா மொமெண்ட்...
எல்லாரும் எழுந்து நின்னு ஒரு முறை " நீராரும் கடலெடுத்த" பாடிட்டு ... புளியோதரை இனமா தரங்களாம் சாப்பிட்டு போங்க..
By the Way ... அமெரிக்காவில் இந்த விருதை ஆர்டர் பண்ண 8 டாலர் ஆகியிருக்கும். ஒரு வேளை இந்தியாவில் 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பாங்களா?
                                                           ************************
சரி.. நம்ம தகுதிக்கு நாமும் ஏதாவது செய்து வைப்போம்.
அமெரிக்க தமிழ் வழிவந்தோர் சங்கத்தில் இருந்து தமிழ் ரத்னா விருது வழங்க போகின்றோம்.
தமிழே தெரியாத.. தமிழுக்கு சம்மந்தம் இல்லாதா ஆட்கள் யாராவது இருந்தா சொல்லுங்க..
இந்த விருதை அனுப்பி வைக்கிறோம்.
                                                           ************************
அட பாவிகளே..
கொஞ்சம் பெருமையா அமெரிக்க வாழ் தமிழன் என்று வண்டிய ஒட்டின்னு இருந்தேன்.
அதுக்கு இந்த அமெரிக்க தமிழ் சங்கம் வைச்சாண்டா ஆப்பு.
உண்மையா சொல்றேங்க.. யாராவது இந்த அமைப்பை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
எந்த தகுதியில் சுனா சானாவிற்கு தமிழ் ரத்னா என்ற விருதை கொடுத்தாங்கன்னு கேக்கவேணும்.
                                                           ************************
இன்னாபா நடக்குது உங்க ஏரியாவில் .... தமிழ் ரத்னா ன்னு வைச்சு தாக்குறீங்களாமே..
இந்த விருதுக்கான கலிபோர்னியா உரிமையை எங்களுக்கு தர முடியுமா?
நானும் இதை ரெண்டு மூணு பேருக்கு தரலாம்னு இருக்கேன்.

                                                           ************************

புதுக்கோட்டையில் மொத்தம் எத்தனை பேர் இருக்கீங்க.. ஒன்னும் இல்ல ... தமிழ் ரத்னா விருது ஆர்டர் பண்ணனும்.. மொத்தமா பண்ண சீப்பா இருக்கும் இல்ல ... அதுதான்,

                                                           ************************
On a serious note.... American Tamil Sangam has awarded Tamil Ratna ... to Dr. Subramaniya Swami..."For his Service to enhance the Prestige of Global Tamils:.......
Wow.. I am flabbergasted... More like Conked to the Gills and Blown to the Lungs...

                                                           ************************

சனி, 10 செப்டம்பர், 2016

காவேரி கரை இருக்கு, கரை மேல மணல் இருக்கு

கருநாகம் போல் கருநாடக
அரசியல் வியாதி நேற்று கூறுகிறான்...

எங்கள் ஊரில் பாயும் வரை தான்
காவேரி ஆறு..
எல்லையை கடந்ததும்..
சுடுகாடு.. .பாலைவனம்.. குப்பை.

சொன்னது வியாதி என்றாலும் சொல்ல பட்ட விஷயம்
தொழுநோய் பற்றி அல்லவா

சற்றே யோசித்தேன்.

உண்மை தான்.

அவன் ஊரில் உள்ளவரை அது ஆறு தான்..
இங்கே தான் அது நாறி போய் உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில்
தமிழனாக நாம்  செய்த ஒரு உறுப்புடியான காரியம் என்ன?

மீண்டும் வந்தோரை வாழவைத்தோம் என்றால்
காலனி பிய்ந்து விடும்.

கூத்தாடிகளை தூக்கிவைத்து
கூத்தையே மந்திரம் என்றல்லவா
செய்தோம்.

நேற்று வரை மறப்போம். மன்னிப்போம்.

இன்று .. இன்று நம் தலைமைகளை பாருங்கள்.

மாண்புமிகு என்று ஆரம்பித்து அம்மையை
கூம்முட்டைகள் அறிமுகப்படுத்தும்   நேரத்தில்
கோடிமூட்டை மணல் கொள்ளை.

அது சரி..

இந்த மணல் எல்லாம் எங்கே போகிறது.
அண்டை மாநிலத்தில் அணை கட்டத்தான்.

ஒரு .. ஒரு .... தலைமை
பகுத்தறிவோடு இருக்கின்றதா?

பெரியவர் பறந்து கொண்டு.
மூத்தவரோ உருட்டு வண்டியில்.
ஆள்பவரோ .. பாடலை ரசித்து...

நாம்  தேர்ந்து எடுத்து அனுப்பி உள்ளோமே
234 பேர்..

அதில் ஒருதனுக்காவதுகாவேரியில் நீர் வரவில்லை என்றால்
ஏதாவது பாதிப்பு?
ஒன்றுமே இல்லை.

அவனுக்கும் காவேரியினால் பாதிப்பு உண்டு
ஆனால் நீருக்காக அல்ல..

மணலுக்காக...
அங்கே கட்டின - கட்டிக்கொண்டுள்ள -  நாளை கட்டப்போகும்
கல்லூரிக்காக..

நாம் நாசமா போவது நிச்சயம்.

கொட்டும் வரத்தை கட்டிக்காக்க
குளத்தை சீர் செய்யாமால் ..

சென்ற வருடம் கிடைத்த வரத்தை
சரியாக வைத்து இருந்தால்...

கருநாடக நண்பர்களே..

காவேரி "பேடா" குரு....
நீயே வைச்சிக்கோ.

எத்தனை  அணை கட்டவேண்டும்னு மட்டும்
முன்கூட்டியே சொன்னா.
எங்களுக்கு மணல் வாரி அனுப்ப வசதியா இருக்கும்.

எங்களுக்கு புரியாது..
மணலின் அருமை எங்களுக்கு புரியாது.
அது எங்களுக்கு புரியவும் வேண்டாம்.

ஏன்னா..
பொங்கல் கொண்டாட கூட வக்கு இல்லாமல்
அரசாங்கம் தர 500 ரூபாய்க்கும் அடி  கரும்புக்கும்அடிச்சி பிடிச்சிட்டு
நிற்க நாங்கள் தயார்.

இனிமேல் எங்களால் சுயமரியாதையாக
ஒன்றுமே செய்ய  முடியாது!


எங்களை நிரந்தரமா பிச்சைகாரனாக்கி
வைக்க  நீங்க அனுப்பி வைச்ச
தலைகளும் தயார்.

என்னது? நீங்க அனுப்பி வைச்ச தலையா?
கூட்டி கழித்து பாருங்கள் புரியும்.

அது சரி..
எங்கள் தலையை விடுங்க.. உங்கள் தலைகள்
என்னாச்சுன்னு கேட்பது
விழுகிறது...

தருதலைக்கு ஏது தலை.?

நாங்க,,

காஷ்மீர் பீடிபுல் காஷ்மீர்.. ன்னு ஆரம்பிச்சு..
நீங்க நல்லா  இருக்கனும்.. ன்னு
பாட தெரிந்த நாதாரிகளை தானே
தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கோம்.

வேண்டாம் ஐயா
 காவேரி.
பத்திரமா பாதுகாப்பா வைச்சி
உங்க விவசாயிகளை காப்பாத்துங்க.

எங்க தலைகளின் சாயமான போக்கால்..
எங்கள் விவசாயம் எப்பவோ செத்தாச்சி.
இப்ப விவசாயி தான் பாக்கி.

அவனையும் உங்க ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்..

மணல் வந்து இறங்கியவுடன்
அதை வச்சி அணை கட்ட..
எங்க விவசாயியை விட எவனும்
சீப்பா கிடைக்க  மாட்டான்.

மீண்டும் சொல்றேன் வேண்டாமையா
உங்கள் காவேரி..

கசப்பான உண்மை தான்.

அவன் ஊரில் இருக்கிற வரை தான்
காவேரி ஆறு.

எல்லையை தாண்டியவுடன்... 

வியாழன், 8 செப்டம்பர், 2016

ஏன் பிறந்தாய் மகனே…

பாம்பாயில் செம்பூர் பகுதியில் வண்டியை ஒட்டி கொண்டு இருந்த நாட்கள்.  ஜெயகுமார் என்ற நண்பர் ஒருவர் எங்கள் அறையில் இருந்தார். Fiat நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிந்து கொண்டு இருந்தார். வார இறுதி ஒரு நாளில் என்ன ஜெயகுமார் உங்கள் பொழுது போக்கிற்கு என்ன செய்வீர்கள் என்று நான் கேட்ட போது கதை எழுதுவேன் என்றார். எங்கே நீங்கே எழுதிய கதையில் ஒன்றை சொல்லுங்கள் என்று நான் கேட்க அவர் கூறிய கதை இது. வருடங்கள் பல ஆகினும் மனதில் தங்கி விட்டது.என்னை போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்



டேய் சேகரு…
சொல்லு முத்து
உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?
என்ன சொல்ல வர?

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சேரனின் அருவருப்பிற்கு கோடி நன்றி ...

சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் அவர்கள் பேசிய ஒரு பேச்சு பிரச்சனைக்கு உள்ளானது.

முதலில் இயக்குனர் சேரனின் திரைப்படைப்பை பற்றி என் கருத்து. ஆண்டவன் புண்ணியத்தில் இவர் இயக்கிய படமோ நடித்த படமோ இதில் எதையும் அடியேன் கண்டதில்லை.

ஆட்டோகிராப் என்ற படம் நல்ல படம் ... நம் ஒவ்வொருவருக்கும் நடந்ததை போல் ஒரு கதை, அதை மிகவும் அழகாக சித்தரித்து உள்ளார் என்று கேள்வி பட்டேன். இருந்தாலும் என் நல்ல காலம் அதையும்  பார்க்கவில்லை.

சரி இவரின் பேச்சுக்கு வருவோம்.

திருட்டு டிவிடி மற்றும் இணைய தலத்தில் தமிழ் படங்களை தருவது ஈழ தமிழர்களே ..

இது நம்ம ஆளு .....

நம் வாழ்வில் நாம் சில நபர்களை தற்செயலாக சந்திக்க நேரிடும். முகநூலின் வரவிற்கு பின் இந்த தற்செயல் அடியேனுக்கு அடிக்கடி நடக்கின்றது. 

அப்படி நான் சந்தித்த ஒரு நபர் தான்... சுரேஷ் சீனு!

அது என்னமோ தெரியல.. ஏனோ தெரியல.. விட்ட குறை தொட்ட  குறை போல.. முதல் முறையாக இவரின் ஸ்டேட்டஸ் பார்த்தவுடன் பிடித்து விட்டது.

யார் இவர் என்று விசாரிக்கையில்... இவர் நம்ம ஆளு தான்.... என்று அறிந்து எனக்குள் ஒரு சந்தோசம்.

பொறுமை.. நம்ம ஆளுன்னு சொன்னவுடன்.. கூட்டி பெருக்கி கழிக்காதீங்க... நான் சொல்ல வந்ததே...

 வரும் நம்மை போலவே கூட்டி பெருக்கி கழிப்பவர் தான்... புரியல..?

தணிக்கையாளர். 

ஒரு தணிக்கையாளருக்கு இம்புட்டு க்ரியேட்டிவிட்டி இருக்க கூடாது தான் . அம்புட்டு கிரியேட்டிவிட்டி.

இவர் எழுத்து மூலமா ஸ்டேட்டஸ் அவ்வளவு எதுவும் போடமாட்டார். ஆனால் வரைஞ்சி தள்ளிடுவார்.

மனுஷன் என்னமா வரையிறாரு? அட்டகாசம் போங்க. 

சில நாட்களில் நம்ம அனைவருக்கும் வாழ்க்கையில் சிலரை பார்த்தவுடனே ஒரு சிறிய பொறாமை வரும். இப்படியான பொறாமையை எனக்கு வர வைச்சவர் தான் நண்பர் சுரேஷ் சீனு .

அவரோட முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் அவங்க பிறந்த நாள் அன்று ஒரு படம் போட்டு வாழ்த்து சொல்வார்.

இவருடைய வரையும் திறனை பார்த்து வியந்து கொண்டு இருந்த எனக்கு  சென்ற வாரம் ஒரு இன்ப அதிர்ச்சி.

ஆசிரியர் தினத்தன்று இவரோட ஸ்டேட்டஸ்.. ரொம்ப அருமையா எழுதி இருந்தார். ஆசிரியர் என்பது வகுப்பில் மட்டும் அமைவது அல்ல.. வாழ்க்கையிலும்  அமையும்  என்பதை மிகவும் அருமையாக சொல்லியுள்ளார். 

இவரின் வார்த்தைகள் நூல் பிடித்தது போல் செல்கின்றது. இம்மாதிரியான பல திறமைகள் கொண்டோர் பதிவுலத்திற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

என் சார்பில் நான் அவரை கேட்டு கொண்டேன்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நாளை நமதே ....

ஆசிரியர் தினத்திற்காக.. 

பழைய பதிவுதான்.. இருந்தாலும் பிடித்த பதிவு...


விசு ….
சொல்லுங்க சார்…
நாளைக்கு காலையில் 5 மணிக்கு பஸ்… எல்லா ப்ளேயர்சும் 4:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடனும். மேட்ச் கரெக்டா 7:30மணிக்கு ஆரம்பிச்சிடும். அந்த 5 மணி வண்டிய மிஸ் பண்ணா அடுத்த வண்டி பிடிச்சி போக நேரமாயிடும்… ஓ கே …
எங்கள் பள்ளியின் ஹாக்கி அணி … மற்ற சில அணிகளுடன் மோத சீர்காழியில் இருந்து பொறையார் என்ற ஊரூக்கு செல்ல வேண்டும்.
இரண்டு ஊருக்கும் கூட்டி கழித்து பார்த்தால் கிட்ட தட்ட 40- 50 கிலோ மீட்டர் தான் என்று நினைக்கின்றேன் .. (சரியாக நினைவு இல்லை ). இவ்வளவு அருகில் உள்ள இடத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னாள் கிளம்பினோமா என்று யோசித்தால் இப்போது சிரிப்பு தான் வருகின்றது .

கோபத்தில் மனைவி கத்தியை கையில் எடுத்தால்….

நீள வார இறுதி... திங்களுக்காக ஒரு மீள் பதிவு...

கணவன்மார்களே  (“ஜாக்கிரதை” – வெண்ணிறாடை மூர்த்தி ஸ்டைல்). எப்போதுமே வீட்டில் பேச்சு- வாக்குவாதம் என்று   வரும் போது உடனடியாக சமையல் அறையில் இருந்து வெளியே வந்து விடுவது புத்திசாலித்தனம். இதனால் பல நன்மைகள் உண்டு.
இந்த மாதிரி சண்டை சச்சரவுகள் வரும் போது, கணவன்மார்கள் உடனடியாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம், இது “ஓர் முனை போராட்டம்”. நாம் என்ன செய்தாலும் – சொல்லினாலும் இந்த வாக்குவாதத்தில் வெற்றி பெற முடியாது என்று அறிந்த கொண்டீர்கள் என்றால், இதனால் வரும் “நாளைய பாதிப்பு” சிறுக வாய்ப்புள்ளது.

வியாழன், 1 செப்டம்பர், 2016

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்

டாடி .... நம்ம என்ன ஜாதி ?

கேட்டு கொண்டே வாகனத்தில் ஏறினாள்  இளைய ராசாத்தி..

அலறியே விட்டேன் நான்...

என்ன கேட்ட?

வாட் ஐஸ் அவர் கேஸ்ட்... நம்ம என்ன ஜாதி?

அது இப்ப உனக்கு எதுக்கு?

இல்ல பள்ளிக்கூடத்தில் கேட்டாங்க.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...