திங்கள், 18 ஏப்ரல், 2016

காதுல ஈயத்த காச்சி ஊத்த .....

ஞாயிறும் அதுவுமாய் கோயில் வழிபாட்டில் நான் உண்டு என் வேலை உண்டு என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டு இருக்கையில், இருக்கையில்... எல்லாம் வல்லவனால் எனக்கு அளிக்க பட்ட அன்பு மனைவி மெதுவாக காதை கடித்தார்கள்.

என்னங்க...?

நீ கொடுத்த காணிக்கைய உண்டியலில் போட்டுட்டேன்.

அது இல்ல...

பின்ன என்ன?

அங்கே முன்னால இருக்காங்களே .. அவங்க தான் நம்ம ரமேசுடைய புது பொண்டாட்டி.

என்னாது/? ரமேசுக்கு ரெண்டு சம்சாரமா?

ச்சே .. போய் வாயை கழுவுங்க? ஏன் அப்படி கேக்கறிங்க?

இல்லையே, புது பொண்டாட்டின்னு சொன்னீயே.. புது பொண்டாட்டின்னு ஒருத்தங்க இருந்தா, பழைய பொண்டாட்டி ஒருத்தர் இருக்கணும் இல்ல, அதுதான்.

உங்க வாயிலே..

ஈயத்த காச்சி ஊத்த போறியா?



அதை சரியாய் காது கேக்காதவங்க காதுல தான ஊத்துவாங்க...

அது சரி, ஏற்கனவே அவங்க காது சரியா கேக்கலியே.. இப்ப அதுல ஈயத்த வேற
ஊத்துனிங்கான.. மொத்தம் அவுட் ஆகிடுமே ?

பெரிய கண்டுபிடிப்பு.

யு ஆர் வெல்கம்.

ஏங்க.. எனக்கு ஒரு உதவி பண்ணனுமே..

சொல்லு.

ரமேஸ் மனைவியிடம்  போய், வீட்டுக்கு  சாப்பாட்டுக்கு வர சொல்லுங்க.

நான் எதுக்கு? நீயே போய் சொல்லு.

கோயில் முடிஞ்சதும் .. போய் சொல்லுங்க..

ரமேஸ் எங்க?

அவர் எப்ப பார்த்தாலும் வேலை விசயமா வெளியூர் தான். எங்கேயாவது போய் இருப்பார்?

சரி..

கோயில் முடிந்ததும், அங்கே இங்கே இருந்த கொஞ்சம் பிசி நேரத்தில் ரமேஸ் வீட்டு அம்மணியிடம் இந்த விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன்.

வரும் வழியில் ..

ஏங்க..

நான் காணிக்கையை போட்டேன். உண்மையா.

ச்சே.. நீங்க உண்டியலில் போட்டத நான் பார்த்தேன் .. 

ஒ..

சரி, அவங்கள சாப்பாடுக்கு கூப்பிட்டிங்களா ?

ஒ.. கோயில் முடிஞ்சதும் நேரா அவங்கள தான் கூப்பிடலாம்னு போனேன். 

அப்புறம்.மறந்துடிங்களா .. உங்க....

ஈயத்த காச்சி ஊத்த போறியா?

அது தான் காதுக்குன்னு சொன்னேனே ..உங்க காதுல..

ஈயத்த காச்சி ஊத்த போறீயா ..

இது நடந்து இரண்டு வாரமாகியது.

நேற்று மீண்டும் கோயில்.. அதே இடம்.. இந்தமுறை ரமேஸ் மனைவியிடம்  மறக்காமல் சொல்லிட விட வேண்டும் என்று.. நினைத்து..அவர்களை தேடி சென்றேன்.

தோழி ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்த அவர்களின் அருகில் சென்று.. 

ஹலோ .. என் பேர் விசு .. ரமேஷ் உங்கள நல்லா வைச்சின்னு இருக்காரா?

யார் ரமேஷ்? என்னை வச்சினி இருக்காரா ? என்ன சொல்றீங்க.

நீங்க, ரமேசுடைய ..ஐ அம் சாரி.. நீங்க ரமேசுடைய மனைவின்னு தப்பா ...வெயிட் எ நிமிட் பார் ஒன் நிமிட் ..

என்று இரு வார்த்தை  சொல்லிய பின்பு என் வீட்டு அம்மணியை அவசரமாக தேடி சென்ற என்னை தேடி அவர்கள் வந்து கொண்டு இருந்தார்கள்.

ஏங்க.. 

அவங்கள சாப்பாட்டுக்கு கூப்பிட்டுடிங்களா?

இல்ல, கூப்பிடலாம்னு தான் போனேன் ..ஆனால்..

நல்ல வேளை, கூப்பிடல . அவங்க ரமேஸ் சம்சாரம் இல்லையாம். நான் தான் தப்பா புருஞ்சிக்கிட்டேன்.

நீ மட்டுமா தப்பா புருஞ்சிகிட்ட.. என்ன வேற.. 

சரி விடுங்க.. இது ஒரு விஷயமா?

சரி, ரமேஸ் வந்து இருக்காரு. அவரை வீட்டுக்கு சாப்பாடிற்கு கூப்பிடுங்க...

ஓகே..

என்று சொல்லிவிட்டு ரமேசை தேடி செல்ல.. 

அவனோ என்னை தேடி எதிரில்  வந்தான்..

மாம்ஸ்.. நான் உனக்கு என்ன தப்பு பண்ணேன் .. குடும்பத்தில் குழப்பம் 
பன்றியே..

புரியல..

இங்கே புதுசா வந்த அம்மணியிடம் .. ரமேஷ் உங்கள நல்லா வச்சினு இருக்காரான்னு கேட்டியாமே..?

சாரி ரமேசு.. தப்பாயிடிச்சி.

அது சரி.. நான் அவங்கள அப்படி கேட்டது உனக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் தெரிய வந்தது?

நீ அவங்கள கேக்கும்  போது அவங்க கூட இருந்தது என் சம்சாரம்.

ஒ அப்படியா.. சரி, வா, போ மன்னிப்பு கேட்டுரலாம்.

தப்பு நீ தானே பண்ண மாம்ஸ்.. நீயே போய் மன்னிப்பு கேள்.

ஏங்க.. ஐ அம் சாரி. நான் நீங்க தான் ரமேசுடைய கணவர்ன்னு தப்பா புருஞ்சிக்கிட்டேன். ஐ அம் சாரி.

பரவாயில்லை. உங்க மனைவி எங்க இருக்காங்க.. அவங்கள நான் பாக்கணுமே..

நீங்க அவங்கள பாக்கனும்ம்னு அவசியமே இல்லை. நான் பண்ண தப்ப சொல்லி அவங்களிடம் மன்னிப்பு கேக்குறது எனக்கு தினசரி வழக்கம். நானே கேட்டுக்குறேன்.  

ஓகே.. மீண்டும் ஐ அம் சாரி என்று சொல்லி விட்டு .. பெரு மூச்சு விட்டு 

கொண்டே  வண்டியில் ஏறினேன்.

ஏங்க.. உங்க..

மீண்டும் ஈயமா ?

ரொம்ப முக்கியம்...

என்ன ஆச்சி..

அந்த பிள்ளையிடம் போய் ... என்ன சொன்னீங்க?

நீங்க தான் ரமேசுடைய மனைவியான்னு கேட்டேன்.

பொய் சொல்லாதிங்க.. .ரமேஷ் உங்களை நல்லா  வச்சினு  இருக்காரான்னு கேட்டு இருக்கீங்க.

இறங்கி முழுவனா என்ன .. மொண்டி ஊதிக்கினா என்ன ? ரெண்டும் குளியல் தானே..  

ரொம்ப அவசியம்..

குளியலா ?

எங்க.. எனக்கு வர கோவத்துக்கு உங்க.. 

காதுல ஈயமா?

புதுசா யாரையாவது பார்த்த அப்படியா கேக்குறது?

அட பாவி.. தப்ப எல்லாம் நீ பண்ணிட்டு..

நான் என்ன தப்பு பண்ணேன்?

சும்மா உக்கார்ந்துன்னு "ஏசப்பா என்னை மட்டும் காப்பாத்துப்பா" ன்னு இருந்த என்னிடம் .. இவங்க தான் அவங்கன்னு சொல்லி அநியாயத்துக்கு என் ரெப்புட்டேசனை கெடுத்திட்டியே ...

என்று சொல்லும் போது வண்டியில் சன்னலின் எதிரில் அந்த அம்மணி 
கணவனோடு சிரித்தார்.

கதவை திறந்து நானும் என் வீட்டு அம்மணியும் வெளியே வர..மனதிலோ..

ஐயகோ.. இப்ப இவரிடம் வேற  மன்னிப்பு கேக்கணுமா? கோயிலுக்கு உள்ள மட்டும் தான் பாவமன்னிப்புன்னு சொல்லி கொடுத்தாங்க. இப்ப வெளியிலேயுமா?

என்று எண்ணி கொண்டே...

இவர் தான் சுரேஷ்.. 

ஹலோ சுரேஷ்...

அண்ணே.. நான் தமிழ் பிரியன் அண்ணே.. ரமேஷ் கூடத்தான் வேலை  செய்யுறேன். எனக்கு தமிழ் தான் அண்ணே மூச்சு.. 

சந்தோசம் சுரேசா..

ஐயோ.. அண்ணே.. என்னை அன்பா சுரேஷான்னு கூப்பிட கேட்டு எவ்வளவு நாள் ஆச்சி அண்ணே.. நீங்க பதிவர்ன்னு ரமேஸ் சொன்னான் அண்ணே.. ..உங்க பதிவை எங்கே படிக்கலாம் அண்ணே.. ?

என்று சொல்ல.. நானும்,

இங்க

 என்று சொல்ல..

அவரின் மனைவோ..என்னை பார்க்க.. நானோ..

 ஒ சாரி. இது தான் என் கணவர் 

என்று என் மனைவியை அறிமுக படுத்த.. அவர்களோ...

நீங்க எப்போதுமே இப்படி தான் குழ்ம்பி போய் இருப்பீங்களா என்று கேக்க..

என் வீட்டு அம்மணியோ ..

உங்க காதுல...

என்று சொல்ல..

நானோ..

 ஈயத்த காச்சி ஊத்தபோறியா 

என்று கேட்க்க.. சுரேசாவோ..

அண்ணே, ரொம்ப நாளா யாரிட்டையாவது கேக்கனும்ம்னு யோசித்தேன். அவங்க காது தான் ஏற்கனவே சரியா கேக்கலையே .. அதுல ஈயத்த காச்சி ஊத்துனா சுத்தமா பழுதாகிடாது..? 

என்று குழப்ப ...

இந்த பதிவை எப்படி முடிக்க போறேன்னு தெரியாமல் நான் முழிக்க ...



7 கருத்துகள்:

  1. எப்படிப்பா உங்களுக்கு இப்படி மிகவும் இயல்பா அருமையாக நகைச்சுவையாக எழுத வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர... நான் இங்கே புலம்பிண்டு இருக்கேன்... உமக்கு சிரிப்பா தோன்னுதோ?

      நீக்கு
  2. ரசித்து படித்து சிரித்தேன் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.. தங்களின் உற்சாகமுட்டும் வார்த்தைகளுக்கு..

      நீக்கு
  3. அருமையான பதிவு
    தொடருங்கள்

    http://tebooks.friendhood.net/

    பதிலளிநீக்கு
  4. அய்யா.அசந்துட்டேன்...என்னவோ நேரிலேயே பார்ப்பது போல் இருக்கிறது..ரமேஷோ..சுரேஷோ...ஆனா நல்ல ஷோ..

    ஈயத்தைக்காச்சி ஊத்துறத எழுதுறேன்னு...பாயாசம் காய்ச்சி ஊத்தியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  5. ஹஹாஹஹ்ஹ்ஹ் செம விசு..கொஞ்சநாளைக்கப்புறம் இல்ல? அதுலயும்...//நான் நீங்க தான் ரமேசுடைய கணவர்ன்னு தப்பா புருஞ்சிக்கிட்டேன்// அஹஹஹஹ்ஹஹ்...ரசித்துச் சிரிச்சுட்டோம்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...