வியாழன், 3 டிசம்பர், 2015

ஆறு மனமே ஆறு ...

இன்று என் முகநூலில்  ஒரு கருத்து வந்தது. அதில் அமெரிக்காவில் வசிக்கும் முகநூல் நண்பர் ஒருவர் ..

I see only negative posts from you .. U even commented negatively in my posts. This is a time for positivity. We have to leave our personal agenda and make people feel good about next minute .. U can change ur attitude or unfriend me...

என்று எழுதி இருந்தார். அதற்கு பதிலாக நான் ...

I respect your feelings and am not going to change my attitude or the way I think and speak. Please note that I am "Unfriending" you, per your wish. Appreciate your tolerance so far and God Bless...

என்று எழுதி அவர் ஆசைக்கு இணங்கி அவரை என் நண்பர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டேன்.

அதை தொடர்ந்து முகநூல் படிக்கையில் ..

நடிகர் பிரதாப் போதன் அவர்கள் முகநூலில்..

"சென்னைவாசிகளை நினைத்து நான் பெருமைபடுகிறேன். இவ்வளவு சேதம் நடந்தும் அமெரிக்காவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் நடந்ததை போல் கொள்ளை எதுவும் நடக்கவில்லை. நாம் எவ்வளவு நல்லவர்கள்"
என்று போட்டு இருந்தார்.

நடிகருக்கு.. நம்முடைய பிரச்சனையே இது தான். தலைக்கு மேல் வெள்ளம், இந்த நேரத்திலும் நாங்கள் அவனைவிட மேல்.. இவனை விட மேல்.. என்று கூவுவது.

நம்மவர்கள் வருடக்கணக்கில் செய்த கொள்ளையினால் தானே இந்த அவல நிலையே நமக்கு வந்தது.

அடுத்து ... சில பேர்  இந்த நேரத்தில் நாம் இப்படி குறை காட்டி எழுத கூடாதாம். 

இங்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

குறை சொல்ல வேண்டும். கண்டிப்பாக குறை சொல்லவேண்டும். இப்போது குறை சொன்னால் தான் நாம் செய்யும் தவறுகளை திருத்தி கொள்ள ஒரு சிறு வாய்ப்பாவது உண்டு.

ஏறக்குறைய ஐம்பது வருடங்களில் ஒரு நகரத்தை நரகமாக்கிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், இலவசதிர்க்காக தன்மானத்தை விற்ற நம்மையும் நாமே இப்போது குறை சொன்னால் தான் கொஞ்சமாவது உரைக்கும்.

இன்னும் நான்கு மாதத்தில் காவிரியை திற என்றும், மழைக்காக வருண பகவானுக்கு வேண்டுதல் என்றும் குடிநீருக்காக வரிசையில் நிற்கும் போதும் நாம் இதை மறந்துவிடுவோம்.

குறை சொல்லட்டும்.. அதை பார்த்து ஒருவராவது திருந்தட்டும்.


கடைசியாக ...ஒரு மனிதனின் உளைச்சல்.

சென்னை மக்களின் ஒற்றுமையை பாருங்கள்.. என்னே ஒரு மனிதத்தனம் என்று மெச்சி கொள்ளாமல்.. இந்த அவலநிலை நமக்கு எப்படி வந்தது என்று யோசியுங்கள். இந்த கானொளியில் உள்ள ஒரு வீடு சென்ற வாரம் தான் கோடிகளுக்கு வாங்கப்பட்டு, கிரக பிரவேசத்திற்கு கட்டிய வாழை மரம் இன்னும் இருக்கின்றது. இந்த நிலைமை நமக்கு ஏன் வந்தது? இதை பதிவு செய்தவரின் குரலை கேட்க்கையில் நெஞ்சம் பதறுகின்றது.

இனிமேல் ஒட்டு கேக்க வராதிங்கடா.. செத்து போங்கடா என்று இவர் சொல்கின்றார்.


 கிரக பிரவேசத்திற்கு கட்டிய வாழை மரம் இன்னும் இருக்கின்றது

தயவு செய்து இந்த காணொளியை ஒரு முறை பாருங்கள். உங்களை மன்றாடி கேட்டு கொள்கிறேன். என் குமுறல்களின் அர்த்தங்கள் புரியும். 

10 கருத்துகள்:

  1. நீங்களும் ஒரு மாதம் முன்பாக நடிகர் சங்கத் தேர்தல் பற்றித்தான் எழுதியதாகத்தான் ஞாபகம் இது போன்ற கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அடுத்த மாதம் நடிகை காதலோ அல்லது இன்னொரு பரபரப்பான செய்தியோ பேசுவோம். இப்படி மக்கள் இருக்கையில் அரசை என்ன சொல்ல. ? காணொளியில் சொல்வது போல, நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. தவறுகளை திருத்தி கொள்ள இதைவிட நல்லதொரு வாய்ப்பு கிடையாது என்பது உண்மை தான்...

    பதிலளிநீக்கு
  3. //"சென்னைவாசிகளை நினைத்து நான் பெருமைபடுகிறேன். இவ்வளவு சேதம் நடந்தும் அமெரிக்காவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் நடந்ததை போல் கொள்ளை எதுவும் நடக்கவில்லை. நாம் எவ்வளவு நல்லவர்கள்"
    என்று போட்டு இருந்தார்.//
    இதில் என்ன தவறு என்று நினைக்கிறீர்கள்? உண்மை தானே.

    //நம்மவர்கள் வருடக்கணக்கில் செய்த கொள்ளையினால் தானே இந்த அவல நிலையே நமக்கு வந்தது.//
    உண்மை என்னவென்றால் கொள்ளை அடிப்பவர்கள் சிலர் மட்டுமே. பெரும்பாலானோர் பொது நலம் என்று வரும்போது ஓடி வந்து உதவத் தயாராகவே இருக்கிறார்கள். எத்தனையோ பேர் இலவசமாக போன் பில் ரீசார்ஜ் செய்யவும், இலவசமாக உணவளிக்க தயாராக இருப்பதாக சமூக வலைத் தளங்களில் சொல்கிறார்கள். whatsup குழுக்களில் உதவி செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    இது போன்றவை நியூ ஆர்லின்ஸில் நடந்ததா?

    இது போன்ற இயற்கைப் பேரிடர்களில் எந்த அரசாங்கமும் எதுவும் பண்ண முடியாது. அமெரிக்காவாக இருந்தாலும் சரி. இந்தியாவாக இருந்தாலும் சரி. அந்த சமயங்களில் சக மனிதர்களுக்கு உதவ எத்தனை பேர் முன் வருகிறார்கள் என்பதையே பிரதாப் போத்தனின் பதிவு சொல்லி பெருமை கொள்கிறது என நினைக்கிறேன். அது சரியும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி. நம்மில் எத்தனையோ பேர் உதவி செய்ய தயாராக இருகின்றார்கள். உண்மை. மறுக்கவே இல்லை.. ஆனால்.. அவனை பார்.. கேடு கெட்டவன் , நான் அவனை போல் இல்லை .. என்ன பேச்சு இது? நியூ ஓர்லீன்ஸ் நகரத்தில் நடந்த இன்னல் நேரத்தில் அங்கேயும் மனித நேயம் கொண்ட ஆயிரகணக்கான நலுல்லங்கள் உதவின .ஒரே மாதத்தில் நியூ ஓர்லீன்ஸ் நரகத்தில் இருந்து மீண்டும் நகரமாகியது. அது மட்டும் அல்லாமல்.. சட்ட திட்டங்கள் திருத்தி அமைக்க பட்டு இந்த மாதிரி இழப்புகள் இனிமேல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக பட்டன. அங்கு இருந்த ஆட்சியாளர்கள் அடுத்து நடந்த தேர்தலில் அடித்து துரத்த பட்டனர்.
      சரி அதை விடுங்க. நாம் வாழ்வதில் சந்தோஷ படுவோம். அடுத்தவன் அழிவதில் நமக்கு என்ன சந்தோசம்..

      நீக்கு
    2. கொள்ளை அது ஒன்றுதான் நடந்துகொண்டிருக்கின்றது விசு. வீடியோவில் சொல்லுவது மக்கள் திருந்த வேண்டும். இப்போது 5000 வழங்கப்படுகின்றது. இன்னும் 6 மாதத்தில் தேர்தல். அதற்குத்தான் இத்தனை புகழுரைகள், வழங்கல்கள் எல்லாமே. டிவி ஃபிரிட்ஜ், கம்ப்யூட்டர் எல்லாமே இப்போது கடைகளில் இருக்கின்றன அதாவது அரசு வழங்கியவை பெரும்பான்மையானவை...அதுதான் நம் மக்களின் மன நிலை. மட்டுமல்ல இப்போது உதவிகள் சென்ற இடத்திலும் வழியில் கொள்ளை நடந்திருக்கின்றது. இங்கு இன்னும் டவுன் ப்ளானிங்க், திட்டமிடல் என்றால் என்ன என்றே தெரியாத தலைவர்கள்...அவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள். "தலைவர்" அப்படினு யாராவது இருந்தால் தானே....

      மக்கள் தேர்தலையே புறக்கணிக்க வேண்டும். ஓட்டுப் போட மாட்டோம் என்று சொல்லிப் புரட்சி பண்ண வேண்டும் . அமைதியாக....அப்போது தலைவர்கள் கண்டிப்பாகத் திருந்தியே ஆக வேண்டும் மக்கள் விழிக்க வேண்டும். இது சரியான பாடம் நல்ல தருணம். ஆனால் நாம் இங்கு பேச்வுஅது எல்லாம் பகல் கனவு. அதுதான் வருத்தம்..

      நீக்கு
    3. உங்கள் பதில் மிகவும் சரியே விசு...

      நீக்கு
  4. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு....உங்கள் குமுறலை மதிக்கிறேன்...எல்லோரும் இன்று பற்றியே கவலைப்பட்டால்.. யார்தான் சொல்லுவது?இந்த நாய்களுக்கு மணிகட்டுவது...நீங்கள் செய்யுங்கள்...சொல்லுங்கள்..யார்மனசும் புண்படாமல் இருக்கவே விரும்புகிறோம்...ஆனால் அவர்கள் இருக்கவிட மறுக்கிறார்கள்..
    அமெரிக்காவின் ஒரு இடத்தில் வாழ்க்கையின் எந்த சூழலுக்கும் கவலைப்படாமல் வாழும் தகுதி உங்களுக்கு இருந்தும்,
    இந்த பரிதாபங்களுக்காக கண்ணீர்விட முடிகிறதே...இது போதாதா?செய்யுங்கள்...செய்யுங்கள்...

    பதிலளிநீக்கு
  6. காணொளியில் அவர் சொல்லியிருப்பது அனைத்தும் சரியே. அந்தச் சதுப்பு நிலம் வேண்டாம் விசு என் மனம் கொந்தளித்து விடும்...

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...