வியாழன், 26 நவம்பர், 2015

பங்கஜ"வலி" அம்புஜ நேத்திரி ...

அடுத்த நான்கு  நாள் "நன்றி திருநாள்" ஆயிற்றே.. அதனால் புதனும் அதுவுமாய் அருமை நண்பர் பரதேசிக்கு ஒரு போன் போட்டேன்.

ஹலோ...

அல்பி ...

அண்ணே.. விசு..

சொல்லு..

புதன், 25 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள்.. பகுதி 5 (என்னத்த சொல்லுவேன்)

இந்த "பரதேசியின் காதலிகள்"  தொடரை எழுத ஆரம்பித்ததில் இருந்தே.. பல பின்னூட்டங்கள்.. கருத்துக்கள்.. அலை பேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் ...



அனைத்துமே..

"விசு, பரதேசியின் கதை முடிந்த பின் உன் கதையை எழுது.."

வைத்துகொண்டா விளங்கம் பன்னுகிறேன். அதற்கு எல்லாம் ராசி வேண்டுமே. நமக்காவது காதலாவது .. கத்திரிக்காயாவது ..

பின்னர் எங்கே இருந்து வந்தது ரெண்டு ராசாதிக்கள்.. நல்ல கேள்வி தான். இதோ என் க(வி)தை ..

செவ்வாய், 24 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பாலும் தமிழனும் ... )

சில நாட்களுக்கு முன்  சக பதிவர் பரதேசி அவர்கள்...


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது. 
முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள் 
பரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் "சதி"ஜாவும் )

இரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.பரதேசியின் காதலிகள் - பகுதி  (பரதேசியும்பரட்டையும்)

நான்காம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.
பரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பகுதி 4 ( பாலும் தமிழனும் ...  ) 


ராதிகாவிடம் பிரியாவிடை பெற்று அல்பி தன வீட்டை நோக்கி ஓடினான். டைப்பிங் முதல் வகுப்பில் பொன்னுத்தாயிடம் பழகலாம் என்று வந்தவனுக்கு ராதிகாவின் அன்பு.


 தன் அதிஷ்டத்தை அவனால் நம்பவே முடியவில்லை.நோண்டி தின்ன வந்தவனுக்கு நொங்கு கிடைத்த கதை. 

திங்கள், 23 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் அண்ணாவும் )

சில நாட்களுக்கு முன்  சக பதிவர் பரதேசி அவர்கள்...


"கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!"


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது. 

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள் 


இரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.

மூன்றாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.
பரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் அண்ணாவும் )

பேய் அறைந்ததை போல் ஆனா பரதேசி சில நொடிகளில் சுதாரித்து ...

இந்த பெயர் வித்தியாசமா இருக்கே.. எங்கேயோ கேட்டு இருக்கோமே.. எங்கேயோ கேட்டு இருக்கோமே.. என்று நினைக்கையிலே ..

"பூவரசம் பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு.." என்று கிராமத்து மின்னல் "ராதிகா" கிழக்கே போகும் ரயிலில் பாடி கொண்டே வந்தார்கள்.

இந்த ராதிகாவிற்கும் அந்த ராதிகாவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம். அந்த ராதிகா "அப்பா வேட்டி -அம்மா சேலை" பாணியில் கிராமத்து பெண்ணாக இருந்தார்கள். இந்த ராதிகா " அப்பா  டை -அம்மா கௌன்" பாணியில் .. ஜீன்சும் பனியனுமாய் இருந்தார்கள்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டையும் )

சில நாட்களுக்கு முன்  சக பதிவர் பரதேசி அவர்கள்...

"கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!"


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது. 

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள் 


"பரட்டை But சுருட்டை"  தலை, பர்மா பஜார் பனியன், துவைக்காத ஜீன்ஸ்...

பரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் "சதி"ஜாவும் )



இரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.

பரதேசியின் காதலிகள் - பகுதி  (பரதேசியும்பரட்டையும்)

அடுத்த இரண்டு வருடங்கள் எப்படி போயின என்றே ராசாவிருக்கு புரியவில்லை.  "மதிப்பெண்ணை" மறந்துவிட்டு "பெண்ணின் மதிப்பிற்காக" நேரத்தை செலவிட்டான் ராசா என்ற பரதேசி.அந்த நேரமும் வீணாகவில்லை.


நாட்கள் கடந்தன, சில வருடங்களுக்கு முன் ஐந்தாவது படிக்கையில் "சதி" செய்த "கதிஜாவை" சில நேரம் நினைப்பான். கதிஜாமேல் இருந்தது ஒரு விதமான ஈர்ப்பு.

ஆனால், பொன்னுத்தாய்... அது ஏன்னோ தெரியல .. என்னமோ தெரியல.. வார்த்தைகள் வரமாடேங்குது. இது ஈர்ப்புக்கும் மேலே, ஒரு அன்பு கலந்த பாசம் போல் அவனுக்கு தெரிந்தது.

வெள்ளி, 20 நவம்பர், 2015

"நல்லதொரு குடும்பம்.... பல்கலைக்கழகம்"

மற்றும் ஒரு நாள் காலை வேலை. குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. பரதேசி மற்றும் மதுரை தமிழன் வாழும் இடங்களை போல் இங்கே பனி பெய்யாது. ஆனாலும் சற்று குளிரும். காலை 5: 30 க்கு எழுந்து மூத்த ராசாத்தியும் நானும்

பள்ளிக்கும் வேலைக்கும் கிளம்பினோம்.

வண்டியில் ஏறி அமர்ந்ததும்..

அம்மாடி.. ரொம்ப குளுருது... அந்த ஹீட்டர் போடு..

டாடி... அவ்வளவு குளிர் இல்ல. அப்படியே ஓட்டுங்க..

நீ இளங்கன்று மா.. குளிர் அறியாது. தயவு செய்து போடு.

எனக்கு இது நல்லா இருக்கு. வேணும்னா உங்களுக்கு மட்டும் போட்டுக்குங்க.

எனக்கு மட்டுமா?

டாடி.. உங்க சீட்டை மட்டும் சூடு பண்ணி கொள்ளுங்கள்.

அப்ப உனக்கு?

வியாழன், 19 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் "சதி"ஜாவும் )

சென்றவாரம்..சக பதிவர் பரதேசி அவர்கள்...

"கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!"


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் முதல் அத்தியாயம் தான் இது.

 கதிஜாவும்   "சதி"ஜாவும்

ராசா.. வா.. வந்து சாப்பிடு...

இதோ வரேன்..

என்று சொன்ன பரதேசி ... அரை மணி நேரம் கழித்தும் சாப்பாடிற்கு வரவில்லை.

வா ராசா..

புதன், 18 நவம்பர், 2015

மீண்டும் "ரத்த கண்ணீர்"

சென்ற வாரம் தீபாவளி.. இந்தியா போல் விடுமுறை இல்லாவிடிலும், அதுவும் இந்த முறை செவ்வாய் அன்று வந்ததாலும் நண்பர்கள் யாரோடும் சேர்ந்து கொண்டாட முடியாமல் போனது.

இருந்தாலும் வார இறுதியில் தீபாவளியை கொண்டாட வருமாறு தென் கலிபோர்னியா சங்கத்தில் இருந்தும் மற்றும் நண்பர் ஒருவர் இல்லத்தில் இருந்தும் விண்ணப்பம் வர, இரண்டும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இருக்க, முதலில் அழைத்த ஒரே காரணத்தினால் நண்பர் இல்லத்திற்கு சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடன், பழகிய முகங்கள் பல. நண்பனின் மனைவி வாயெல்லாம் பல்லோடு..

என்ன விசு. அக்கா எங்கே?

செவ்வாய், 17 நவம்பர், 2015

பரதேசியும் நானும்...

திங்களும் அதுவுமா  வாரவாரம் ஒரு காரியம் செய்வேன்.ஒன்னும் பெருசா இல்ல. நம்மளை பதிவுலகத்திற்கு இழுத்து வந்து விட்ட அண்ணன் பரதேசிக்கு காலை வேளையில் வேலைக்கு போகும் போதுஒரு காலை போட்டு  காலை வணக்கம் சொல்லிட்டு, அவர் போன "வார இறுதிய" எப்படி கொண்டாடினார்னு கேட்பேன்.

இங்கே நண்பர்கள் சிலர்.. .என்ன உங்களை பரதேசி தான் பதிவு உலகத்திற்கு அழைத்து வந்தாரா ? என்று ஆச்சரியபடுவது தெரிகின்றது. பதிவு உலகத்திற்கு மட்டும் இல்லங்க. வளைகுடா பகுதியில் "எண்ணை" கிணற்றில் ஒரு நாளைக்கு 200 பக்கெட் "எண்ணை" சேந்தி கொண்டு இருந்த "என்னை",  என் அண்ணனிடம் என் தொலை பேசி "எண்ணை"வாங்கி அமெரிக்காவில் ஒரு வேலையும் போட்டு கொடுத்து இங்கே அழைத்து வந்ததும் அண்ணன் "பரதேசி"அவர்கள் தான்.

திங்கள், 16 நவம்பர், 2015

"இதுவும் கடந்து போகும்"

என்ன பாணி.. ரொம்ப பீலிங்கா  இருக்கே!

ஒன்னும் இல்ல வாத்தியாரே..

சரி சொல்ல விருப்பம் இல்லாட்டி பரவாயில்லை. வாட்டெவர் இட் மே  பி, டோன்ட் வொர்ரி அபௌட் இட் பாணி .. "இதுவும் கடந்து போகும்".

 வெந்த புண்ணில் வேலை பாச்சாத வாத்தியார்..

டேய் .. யு வான்ட் டு டாக், ஐ அம் ஆல் ஈயர்ஸ் .. மீண்டும் சொல்றேன்..அதிகமா கவலை படாதே .. "இதுவும் கடந்து போகும்".

சும்மா இரு வாத்தியாரே.. "இதுவும் கடந்து போகும்".. "இதுவும் கடந்து போகும்"னு ஒரு வாரத்துக்கு மேலே அதையே சொல்லிட்டு இருக்காங்க,. இது கடந்து போறமாதிரி தெரியில..

வியாழன், 12 நவம்பர், 2015

"நான் சமைச்சா தீராவலி "

ரிங் ..ரிங் ... ரிங்...அலை பேசி அலறியது...

விஷ் ஸ்பீக்கிங்...

வாத்தியாரே தண்டம் பேசுறேன்...

தண்டம் பேசுறியா ? தண்டமா பேசுறியா?

என்ன வாத்தியாரே.. நக்கலா?

இல்ல தண்டம்.. இது கிண்டல்...

வாத்தியாரே, அவசரமா  ஒரு விஷயம் பேசணும் . அம்மணிக்கு தெரியாம! உடனே போனே எடுத்துன்னு பாத்ரூம் போ.

டேய். முந்தி எல்லாம் அவசரத்துக்கு தான் பாத்ரூம் போவோம். இப்ப உன் புண்ணியம் அவசரமான போன்க்கு கூட பாத்ரூம் போக வேண்டி இருக்கு..ஒரு நிமிஷம் இரு.. அம்மணி ஒர கண்ணால் பாக்குறாங்க..

ரொம்ப நாளா ஒரு விஷயம் கேக்கனும்னு யோசித்தேன்.

நீ என்ன கேக்க போறேன்னு நானே சொல்லட்டா...

புதன், 11 நவம்பர், 2015

புகழ்ச்சி வஞ்ச அணி ""இல்லத்து உறவு"

வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதை நாம் அனைவரும் ஆரம்ப பள்ளியில் திருக்குறளை கற்று கொண்டு இருக்கையில் அறிந்தோம். இது என்ன புகழ்ச்சி வஞ்ச அணி ?

இதோ சொல்கிறேன்...கேளுங்கள் .

முதலில் வஞ்சப்புகழ்ச்சி அணியை பற்றி சற்று பார்ப்போம்.

வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது "புகழ்வது போல் இகழ்தல்" அம்புட்டுதேன் ...

செவ்வாய், 10 நவம்பர், 2015

பாப்பையா அவர்களின் சிங்கப்பூர் தீபாவளி பட்டிமன்றம்...."அரைத்த மாவே"

தீபாவளி அன்று வேலைக்கு சென்று மீண்டும் இல்லத்திற்கு திரும்பி வந்து சேரும் போது மனமும் உடலும் சோர்ந்து விட்டது.  ராசாதிக்கள் இருவருக்கும் நாளை விடுமுறை (தீபாவளிக்கு அல்ல ... ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தினம்  Veterans Day). இருவருக்கும் வீட்டுபாடம் இல்லாததால் சீக்கிரம் உறங்க செல்ல, நானோ கணினியை தட்டி தீபாவளி பட்டிமன்றம் பார்க்கலாம் என்று அமர்ந்தேன்.

முதலில் எதிரில் வந்தது...பாப்பையா அவர்களின் சிங்கப்பூர் பட்டிமன்றம் , தலைப்போ .. இன்றைய வாழ்வில் பெரிதும் நிம்மதி தருவது "சொத்து சுகமே - சொந்த பந்தமே".

சனி, 7 நவம்பர், 2015

அடுத்த தீபாவளிக்கு ....“உன் கண்ணில் நீர் வழிந்தால்…”

பள்ளி காலத்தின் இறுதி ஆண்டு ….என் அருமை தங்கை புற்றுநோயோடு நான்கு வருடங்கள் போராடி பின்னர் போராட சக்தி இல்லாமல் இறைவனடி சேர்ந்த வருடம்…
குடியரசு தினமான ஜன 26ம் தேதி பிறந்து  சுதந்திர நாளானா ஆகஸ்ட் 15ம் தேதி தன் 14ம் வயதில் உயிர் நீத்த நாள்.  அவள் பிரிந்து 4 மாதம் தானே ஆகின்றது. கிறிஸ்மஸ் எப்படி கொண்டாட முடியும்? வீட்டில் அலங்காரமும் இல்லை, தின்பண்டங்களும் இல்லை, சிரிப்பும் இல்லை மற்றும் வழக்கமாக இருக்கும் உறவினர் வருகையும் இல்லை.
சென்ற வருடம் இருந்த மகள் – தங்கை இப்போது இல்லையே என்று ஏங்கி அழுது கொண்டே வீட்டில் உள்ள அனைவரும்  டிசம்பர் 24ம் தேதி இரவு உறங்க சென்றோம்.

செவ்வாய், 3 நவம்பர், 2015

நாளை நமதே.

விசு ….
சொல்லுங்க சார்…
நாளைக்கு காலையில் 5 மணிக்கு பஸ்… எல்லா ப்ளேயர்சும் 4:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடனும். மேட்ச் கரெக்டா 7:30மணிக்கு ஆரம்பிச்சிடும். அந்த 5 மணி வண்டிய மிஸ் பண்ணா அடுத்த வண்டி பிடிச்சி போக நேரமாயிடும்… ஓ கே …
எங்கள் பள்ளியின் ஹாக்கி அணி … மற்ற சில அணிகளுடன் மோத சீர்காழியில் இருந்து பொறையார் என்ற ஊரூக்கு செல்ல வேண்டும்.
இரண்டு ஊருக்கும் கூட்டி கழித்து பார்த்தால் கிட்ட தட்ட 40- 50 கிலோ மீட்டர் தான் என்று நினைக்கின்றேன் .. (சரியாக நினைவு இல்லை ). இவ்வளவு அருகில் உள்ள இடத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னாள் கிளம்பினோமா என்று யோசித்தால் இப்போது சிரிப்பு தான் வருகின்றது .

திங்கள், 2 நவம்பர், 2015

இறைவன் அமைவதெல்லாம் ...

ஒரு பங்குனி மாதம், எங்கும் பனி கொட்டி கொண்டுஇருக்கும் வேளை. குளிர் காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே விடை பெற இருட்டு எங்கேயும் சூழ்ந்து கொண்டு இருக்கும் படியான மாலை நேரம்.

 அருகில் இருந்த தொழிற்சாலையில் வெலை முடித்து விட்டு,வெள்ளி கிழமை என்பதால் அந்த வார கூலியையும் பெற்று கொண்டு தன் இல்லத்தை நோக்கி நடந்து சென்றார் அந்த ஐம்பது வயது தகப்பன்.

வீட்டில் வயதான தாயார். தனக்காகவும் தன் கூலிக்காகவும் காத்து கொண்டு இருக்கும் அருமை மனைவி, கல்லூரிக்கு செல்லும் மூத்த ராசாத்தி, மற்றும் ஆறாவது படிக்கும் இளைய ராசாத்தி, இவர்களின் நடுவில் இல்லாத ஆஸ்திக்கு மூன்று  இளவரசர்கள் வேறு.

“மவேம்பேர் மீசை’

  ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கே  “மொவெம்பெர் மீசை”  என்ற ஒரு காரியம் நடைபெறும் (அதே போல் ஒவ்வொரு நவம்பர் மாதமும் இது மீள் பதிவாக வரும்.இந்தியாவில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை).  இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் விழிப்புணர்வுக்காக நடத்த படும். இந்த நாட்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் முகத்தில் மீசை வைத்து கொள்வார்கள். தவறாக நினைக்க வேண்டாம்.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஆறு மனமே ஆறு.. அந்த ஆறுதல் பரிசு வரும் ஆறு...


பதிவுலகில் எழுத ஆரம்பித்து எவ்வளவோ எழுதியாகிவிட்டது. அதில் ஒன்று தான் இந்த படைப்பு. இதை புதுகை போட்டிக்காக அனுப்பி இருந்தேன். கூடவே குறைகளுக்கான தொகையை கழித்து விட்டு மீதியை அனுப்புமாறு அன்போடு கேட்டுகொண்டேன்.. ஒரு ஆறுதல் பரிசுக்கு அலைந்து கொண்டு மீண்டும் தருகின்றேன்...


என் பதிவில் எனக்கு பிடித்தது ...

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...