புதன், 28 அக்டோபர், 2015

"பராசக்தி"யில் இருந்து "படையப்பா" வரை...

இது ஓர் தொடர் பதிவு ..

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."



இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் .

(ரஜினியின் "முரட்டுகாளை" &  கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!)


மூன்றாம் பாகம் .... கீழே தொடருகின்றது..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான்,

விசு சார் ...எப்படி இருக்கீங்க ..?

நல்லா இருக்கேன்.

என்று சொல்லி நான் திரும்பி பார்க்கையில்.. எதிரில்..

மீண்டும் பேய் அறைந்தவனை போலானேன் ..

என்று சொன்னேன் அல்லவா .. ஏன் என்று பார்ப்போம்.

விசு என்று அழைத்தவுடன், அடே டே, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நம்மை பெயர் சொல்லி அழைக்கவும் யாரோ இருகின்றார்கள் என்று திரும்பி பார்த்தால் அங்கே சினிமா இயக்குனர் -கதை வசனகர்த்தா விசு நின்று கொண்டு இருந்தார். அவரை யாரோ எப்படி இருக்கீங்க என்று கேட்க்க... நான் பதிலை சொல்ல..

மன்னிக்கவும் .. என் பெயரும் விசு தான் .. அதுதான் உங்கள் கேள்விக்கு நான்  பதில் சொல்லிட்டேன்.


உங்கள் பெயர் என்னவா இருந்தா எனக்கு என்ன.. கொஞ்சம் நகருங்கள் என்று என்னை தள்ளி விட்டு... அந்த நபர் இயக்குனர் விசு அவர்களை பார்த்து..

விசு சார் .. சௌக்கியமா .. ? சாப்பிட்டிங்களா  என்று கேட்க்க..

என் மனதிலோ.. அட பாவி.. எந்த ஒரு ஆறறிவு உள்ளவனும் இயக்குனர் விசு அவர்களிடம் "சௌக்கியமா .. ? சாப்பிட்டிங்களா என்று கேட்ப்பானா ? மவனே நீ மாட்டினே என்று நினைக்கையில்.. விசு  அவர்களோ! ......

அடுத்த ஐந்து நிமிடத்திற்கு  இயக்குனர் விசு பதிலை சொல்லி முடிக்கையில் கேள்வி கேட்டவர் அலறி அடித்து ஓட.. நானோ..

விசு சார்? உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்? இங்கே எப்படி..?

ஒன்னும் இல்லேங்க. இங்கே கடந்த ரெண்டு வருஷமா  "நாடக பயிற்சி முகாம்" வைச்சி நடத்துறாங்க. அதில் பேசுவதற்காக நாடக துறையில் இருந்த என்னை மாதிரி ஆளை கூப்பிடுவாங்க. அதுதான்.

சூப்பர் சார்.. ரொம்ப சந்தோசம். நாடக கலை அழியாமால் இருக்கணும்னா இந்தா மாதிரி நடவடிக்கைகள் ரொம்ப முக்கியம் சார்..

என்று நான் சொலும் போதே..  

டாடி.. அங்கே என்ன பேச்சு .. 80-90 தானே தமிழ் உலகின் பொற்காலம் என்று சொன்னீர்கள்.. வந்து கொஞ்சம் விவரமா சொல்லுங்க.. என்ற போது.. 16 வயதில் இருந்து ஆரம்பித்து .. படையப்பா வரை வந்தது..

நடுவில் .. டாடி... இந்த ஆடியோ வேலை செய்யல .. கொஞ்சம் சரி பண்ணி தாங்க...

மகள்.. இது பேசும்படம்.. கமலின் " புஷ்பகவிமானம்" இந்த படத்தில் யாருமே பேச மாட்டாங்க.

ஓ.. குட் கிரியடிவ்  திங்கிங்..

அடுத்த திரையில் மணிரத்தினம் அவர்களின் படத்தின் சில காட்சிகளை பார்த்து கொண்டு இருந்த மூத்தவள்.. டாடி.. இதுல கூட யாரும் பேசல..

இது மணிரத்தினம் படம் மகள். யாரும் பேச மாட்டாங்க..

என்று சொல்லி கொண்டே 2000த்தை   நோக்கி செல்ல., நானோ..

ராசாத்தி.. நேரமாகி விட்டது. கிளம்பலாம்.

இல்ல டாடி.. இதை பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க..

2000ல் இருந்து ஒன்னும் தெரியாது மகள். அதுக்கு அப்புறம் படம் பாக்குறத நிறுத்திட்டேன்.

ஏன்?

பல காரணங்கள்..

அதில் முக்கிய கரணம் மட்டும் சொல்லுங்க..

நீங்க ரெண்டு பேரும் தான் பிறந்துடிங்களே, உங்கள கவனிப்பதர்க்கே நேரம் இல்லை..

என்று சொல்லி.. தமிழ் படங்களை நான் மீண்டும் பார்க்கும் நாள்களும்
வருமோ என்று வியந்து கொண்டே பார்க்கிங் நோக்கி நடந்தேன்.

வழியில்.. என்ன டாடி.. இங்கே சூப்பர் கார் நிறைய நிக்குது.

ஓ..சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடைய அலுவலகம் அந்த கட்டிடத்தில் இருக்கு.

அதை ஏன் இங்கே வைச்சி இருக்காங்க.

ராசாத்தி.. நல்ல பாதுக்காப்பான இடம். மற்றும் இவர்கள் எல்லாரும் இந்த மாதிரி ஆபிஸ்க்கு வாடகை கட்ட வேண்டும் என்றால் மற்ற ஆட்களுக்கு லட்ச கணக்கில் வாடகை.

நல்ல ஐடியா .. டாடி..



பின் குறிப்பு :

இது உண்மையாக சாத்தியம் இருக்கா?

கண்டிப்பாக! இந்த இடத்தில் இவ்வாறான ஒரு பூங்கா கட்ட இயலுமா, அதற்கு அனுமதி கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால் இதற்கு ஒரு  வாய்ப்பு இருந்தால்.. சங்கத்திற்கு வருமானம் கிடைக்கும். நடிகர்களுக்கு நல்ல வசதியான அலுவலகம். படபிடிப்பிற்க்கு ஒரு சிறிய இடம். ஒரு கல்யாண மண்டபம். ஒரு நாடக அரங்கம் - சிறப்பு காட்சிக்கான ஒரு சிறிய திரை அரங்கம்.

சரியா தான் சொன்னார் ..ரஜினிகாந்த்.. தங்க தட்டில் தேங்காய் விற்க கூடாது என்று..

இந்த மாதிரி ஒரு பிளான் தானே சரத்குமார் சொன்னார்.. 30 வருஷதுக்கு மாசத்துக்கு 24 லட்சம் பிளான்..

அட அப்ரண்டிச்களே.. 108 கோடி மதிப்பான இடத்திற்கு இப்ப வேணும்ன்னா  24 லட்சம் பெருசா தெரியும். 10 வருஷம் கழித்து, 20 வருஷம் கழித்து, 30 வருஷம் கழித்துஇந்த இடத்திற்கு 24 லட்சம் .. எங்கேயோ இடிக்குதே..

அதுமட்டும் அல்லாமால்.. சரத்குமார் ஒப்பந்தத்தின் பிரச்சனையே ...அதில் வெளிப்பாடு இல்லை என்பது தான்.

சரி.. இது எல்லாம் பண்ணா, சங்கத்துக்கு எவ்வளவு வரும்.

கூட்டி கழித்து பாருங்க.. "நிறையவே வரும். இட்ஸ் எ வின் வின் "

பின் குறிப்பிற்க்கு  பின் குறிப்பு :
இந்த பதிவோட நடிகர் சங்கத்தை மறந்து விடலாம் என்று நினைக்கையில் "கும்பகோண தீ விபத்து - மறைந்த 94 மழலைகளும் 60 லட்சமும்" என்ற செய்தி வந்து விட்டதே.... என்னத்த செய்வேன் இப்ப?

9 கருத்துகள்:

  1. உடன் பயணித்தேன்
    வேகம் கொஞ்சம் கூடுதலாகப் பட்டது
    இரசித்து மகிழும்படியாக பதிவுப் பயணம் இருக்கிறது
    கொஞ்சம் மெதுவாகப் பயணிக்கலாமே ?
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவாக பயணிக்க நிறைய விஷயம் வேண்டும் ஐயா.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்... வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

      நீக்கு
  2. கூட்டி கழித்து பார்த்தால் சரியாத்தான் வருது...

    ஆமா... தொடரும் தானே...?

    பதிலளிநீக்கு
  3. விசு சார்? உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்? இங்கே எப்படி..?#கலக்குறீங்க சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழைக்கேத்த எள்ளுருண்டை நண்பரே...ஆலையில்லாத ஊரின் இல்லுப்பபூ என்று கூட சொல்லலாம்.

      நீக்கு
  4. கனவுப் பயணம் இனிதே நிறைந்ததில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல வேளை கைவசம் இருக்கு.
    அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்கனவு நன்றாகத்தான் இருக்கின்றது. நடக்குமா? நடந்தால் நடந்தால்?!! உலகமே தலைகீழாகிவிடுமோ...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...