புதன், 30 செப்டம்பர், 2015

பேய் திருநாள் வித் பி ஜே பி..

அக்டோபர் மாதம் வந்தவுடன் அமெரிக்காவில் அனைவரும் நினைப்பது " "ஹலோவீன் " என்ற நாளை தான். பலர் தங்கள் வீடுகளை கல்லறை தொட்டால் போல அலங்கரித்து கொள்வார்கள். சிலர் வீடு எதிரில் உள்ள மரங்களில் பிளாஸ்டிக்கினால் ஆனா எலும்பு கூடு தொங்கும்.

விஜய்யின் புலி - லாரன்சின் "Black Knight"? கன்புயுசன் !

அட பாவி.. இப்ப தான் புலி படத்து " கதை"யை படித்தேன். இந்த கதை 2001ல் ஹாலிவுட்டில் வெளி வந்த " Black  Knight " கதை போலவே இருக்கே.

சரி, புலி கதையை விடுவோம். Black  Knight கதையை கொஞ்சம் கேட்போம். கதாநாயகன் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பணி புரிபவர். ஒரு லூட்டியான மனிதர். நிறைய காலாய்ப்பவர். வேலையில் இருக்கும் போது ஒரு நாள் மண்டையில் எதோ அடிபட மயங்கி விழுகின்றார். மயக்கத்தில் இருப்பவர் சிறிது நேரத்தில் விழித்து கொள்ள அவர் இருக்கும் இடமோ ..

"புலி - "தல"ய காப்பாற்றவே முடியாதா ?

காலையில் எழுந்து செய்தித்தாளை இணைய தளத்தில் திறந்தவுடன் அகப்பட்ட முதல் காணொளி  " மாட்டிகொண்ட சிறுத்தை" . அது சரி, அகப்பட்டது சிறுத்தை தானே, தலைப்பில் எப்படி புலி வந்தது? நல்ல கேள்வி தான். அதற்கான பதிலை பிறகு தருகிறேன்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பாக்யராஜின் "தில்" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா?

சில மாதங்களுக்கு "கத்தி" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் திறமை மேல் சந்தேகம் வந்தது அனைவரும் அறிந்ததே.

அது மட்டும் அல்லாமல் அப்படத்தில் வந்த சில காட்சிகள் , ஏற்கனவே ஆங்கில படத்தில் வந்த  காட்சிகளின் அப்பட்டமான நகல் என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் இசை அமைப்பாளரும் சில ராகங்களை காப்பி அடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மொத்தமாக சொல்லபோனால் இந்த படமே "சுட்ட பழம்" என்று தான் நான் நினைத்தேன்.

அதன் பின் வந்த "லிங்கா" பென்னி என்ற உத்தமனின் உண்மை கதை என்றும் கேள்வி பட்டோம். "லிங்கா"வில் வந்த சாவி திருடும் காட்சியும் ஆங்கில படத்தில் இருந்து சுடப்பட்டதை பார்த்தோம்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

கலைஞரை கலாய்த்த கண்ணதாசன் !

 நான் மற்ற தளத்தில் எழுதி கொண்டு இருந்தபோது எழுதிய பதிவு. ஏற்கனவே படிகாதவர்கள் ஒரு முறை படியுங்கள். படித்தவர்கள் மீண்டும் படியுங்கள்.

சிறு வயதிலேயும் சரி, பள்ளி காலத்திலேயும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, ஏன் கடந்த சில மாதங்களாக நான் மகிழ்ந்து வரும் பதிவுலகிலும் சரி .. என் “பேச்சை – எழுத்தை” “கேட்பவர்கள் – படிப்பவர்கள்” பொதுவாக கூறும் ஓர் பின்னோட்டம் ..

“விசு, உனக்கு ரொம்ப குசும்பு. யார பார்த்தாலும் ரொம்ப கலாய்க்கின்றாய்”
இந்த குசும்பு என்பது உப்பை போல். அதை சரியான அளவாக உபயோகபடித்தினால் நாம் பரிமாற்ற போகும் படைப்பு ருசியாக  இருக்கும். அதை சற்று குறைவாக போட்டால் … குப்பையில் தான் போட வேண்டும்  (உப்பில்லா பண்டம்… வேறு என்ன செய்வது .. ) அதை அதிகமாக போட்டால் … தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும்  (உப்பு தின்னவன் …. கதை தான்).

திங்கள், 21 செப்டம்பர், 2015

ஐந்தில் இருந்து ஐம்பது வரை..

எப்போதும் இல்லாத அளவு வெயில். என்னடா இது , கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் ( நமக்கு எப்பவுமே மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தாங்க.. இந்த சென்னை வெண்ணை எல்லாம் வேலைக்கு ஆகாது)  போன மாதிரி இருக்கே.. என்று நினைத்து கொண்டு இருக்கையில், இளைய ராசாத்தி அருகில் வந்து...

டாடி ..ரொம்ப வெயில் இல்ல ..

அதுக்கு என்ன இப்ப.. ஐஸ் கிரீம் வாங்க வழி பண்றியா...

ஐஸ் கிரீம் எங்களோடு உங்களுக்கு தானே டாடி பிடிக்கும், வாங்க போய்
ஆளுக்கு ஒன்னு வாங்கி சில்லுன்னு சாப்பிடலாம்.

சனி, 19 செப்டம்பர், 2015

விசுAwesomeமின் 'புதுமை பெண்"



கள்ளி என்று கொஞ்சுவான் பாப்பா, அயர்ந்தால் கள்ளி பால் ஊத்துவான் பாப்பா
துவக்கமே துயரமடி பாப்பா, நீ துவண்டு விடாதே என் செல்ல பாப்பா ..

ஆறு வயதினிலே பாப்பா .. மடை ஆறு போல் புரண்டோடு பாப்பா...
அடக்க நினைப்பான் பாப்பா..நீ ஆர்ப்பரித்து ஆட்டம் போடு பாப்பா

விவரம் தெரியா  வயதில்   பாப்பா, விவேகமற்ற விவாகம் என்பான் பாப்பா..
விதி என்று சதி செய்வான் பாப்பா, நீ மதியால் மிதித்து விடு பாப்பா...

"வானம் பார்த்த விவசாயி"...!


காலை 4 மணிக்கு எழுந்து  நேற்றைய மிச்ச மீதியை "பழையது" என்ற பெயரில் உப்பை மட்டும் சேர்த்து பருகிவிட்டு , தன் கால்நடைகளோடு கால்நடையாக மொத்த நாளையும் வெயிலிலே தாரை வார்த்து விட்டு, தூவிய விதைகளால் வரும் விளைச்சலை கனவில் கொண்டு தூங்க செல்கிறான்.
பட உபயம் :புவனா கருணாகரன் 

தூக்கம் வரவில்லை .எப்படி வரும்? முகத்தில் அடிக்கும் காற்றை வைத்தே மனது சொல்லுகின்றது ... நாளை மழை வராது.  இரவு இரண்டு மணி, அருகில் இருந்த பசு, கன்று ஈனுகையில் உயிரை விட அதையும் தோண்டி புதைத்து விட்டு, ஐயகோ நாளையில் இருந்து பிள்ளைகளுக்கு பால் இல்லையே என்ற துக்கத்தோடு பெருமூச்சு விட... அருகில் இருந்த மனைவி கேட்கின்றாள்..

என்னங்க தூங்கலையா?

வியாழன், 17 செப்டம்பர், 2015

ரஜினியின் கபாலி "சுட்ட பழமா"

தலைப்பிற்கு செல்லும் முன் ஒரு சிறிய விளக்கம்.

ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படமான "கபாலி" யின் ஸ்டில் நேற்று வெளியிடப்பட்டது.  அதை பார்த்தவுடன்.. அடே டே, நம் நெடுநாள்  ஆசை நிறைவேற போகின்றது என்ற ஒரு நப்பாசை வந்தது.

அது என்ன நப்பாசை...? இதோ சொல்கிறேன்..

ரஜினி அவர்களின் பரம ரசிகனாக வளர்ந்து வாழ்ந்து வந்த நான் "பாபா" படம் பார்க்கும் போது பாதியில் எழுந்து வந்த நான், அதன் பின் வந்த ரஜினியின் படங்கள் எதுவும் பார்க்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெளிவரும் படங்களின் ஸ்டில்லை பார்த்தவுடன் இதுவும் நமக்கு வேலைக்கு ஆகாது என்று பார்க்காமல் விட்டுவிடுவேன். பாபா படத்தின் தாக்கத்தினால் ரஜினிகாந்த் படம் மட்டும் அல்லாமால் அதற்கு பிறகு வந்த தமிழ் படங்களில் ஐந்து அல்ல ஆறு தான் பார்த்து இருப்பேன். இருந்தாலும் விமரிசனம், கதை, இசை என்பவற்றை அங்கே இங்கே என்று எங்கேயாவது கேள்விபடுவேன்.

புதன், 16 செப்டம்பர், 2015

ஈ ரோடு போய் திருச்சி வருமோ ....?

இன்று காலை அருமை நண்பன் குஞ்சு குஞ்சுவிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.

சொல்லுங்க குஞ்சு...நம்ம பேசி வருடக்கணக்கில் ஆச்சி. நீங்க இந்தியா போய் செட்டில் ஆகிடிங்கன்னு கேள்வி பட்டேன். எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் விசு. விஷயத்த கேள்வி பட்டிங்களா?

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சரத்குமாருக்கு ஒரு மனம் திறந்த கடிதம்!

மன்னிக்க வேண்டும், திரு சரத்குமார்  அவர்கள் இப்போது எல்லாம் அதிகமாக ஆங்கிலம் தான் பேசுகின்றார். அதனால் அவருக்கு புரியும் படி ஆங்கில பதிவு.  இது தமிழ் நடிகர் - சினிமா சேர்ந்த பதிவு என்பதால் தமிழ் மணத்தில் இணைத்தேன்.

Mr. Sarath Kumar,

Just happen to watch one of your press meet. You are just blabbering! You should be opening your "So Called" Pandora Box, and let the secrets out , if you care about the welfare of actors. You keep talking about "Respect" and if you have any respect left out, just get out of your box and face the reality.

திங்கள், 7 செப்டம்பர், 2015

சிரிக்க , சிந்திக்க ... சீரியஸ்ஸாக ...

வாரத்திற்கு குறைந்த பட்சம் நான்கு அல்ல ஐந்து பதிவுகளை எழுதி கொண்டு இருந்த நான், கடந்த இரண்டு வாரங்களாக  எதுவும் எழுத முடியாத நிலையில் இருக்கின்றேன்.

புதன், 2 செப்டம்பர், 2015

ஓரம் போ .. ஓரம் போ...

நண்பர் ஒருவர் இல்லத்தில் அமர்ந்து மற்ற நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது வாயெல்லாம் பல்லோடு நுழைந்தான் அருமை நண்பன் ஆருயிர் தோழன் தண்டபாணி...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்..

சொன்னா நம்ப மாட்ட...

அப்ப சொல்லாத...

என்னா வாத்தியாரே.. பேச்சுக்கு சொன்னா...

சரி சொல்லு...

நேத்து காலையில் ஒரு 6 மணி போல் ... சொன்னா நம்ப மாட்ட ...?

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...