வெள்ளி, 31 ஜூலை, 2015

மூன்றெழுத்தில் ....

சென்ற பதிவில் பெர்லின் நகரில் பெர்லின் சுவர் அருகே இருந்த சில விளக்கங்களை படித்த நான் என் அக்காவிடம் ...

அக்கா.. ஹிட்லர் எப்படி இத்தனை பேரை கவர்ந்தான்?

அதுவா.. இதை படி என்று ஒரு விளக்கத்தை காட்டினார்கள்..

படித்து அதிர்ந்தே விட்டேன்..

என்ன படித்தேன்...

முதல் உலகப்போர் முடிந்ததில் இருந்தே ஜெர்மனி நாடு பொருளாதாரத்திலும் மற்றும் வாழ்க்கை தரத்திலும் மிகவும் பின் தங்கி காணப்பட்டது. இந்நிலையில்.. 1920ல் இருந்து 1930வரை குறைந்த அளவில் வாக்கு வாங்கி வந்த நாசி (ஹிட்லர் கட்சி) 1933ல் நடந்த தேர்தலில்  எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.

வானம் கீழே வந்தால் என்ன ...

ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் ...

பேருந்தை விட்டு இறங்கி என் மூத்த அக்காவின் இல்லத்திற்கு சென்று அடையும் போது மணி 9. தோசை, சாம்பார் மேசையில் பார்த்ததும்... மலரும் நினைவுகள்..

அது சரி... அந்த ஓரத்தில் இருக்கும் பாத்திரத்தில் என்ன?

அது .. நேத்து ராத்திரி ... பிரியாணி.

கறி இருக்க காய் கவர்ந்தற்று ... அதை எடுங்க..

வாய் வழியாக மூக்கு வரை சாப்பிட்டுவிட்டு ... எழுந்தோம்.

மணி 10.. எங்கே செல்லலாம் ?

சில இடங்களை சுற்றி பார்க்கலாம் ... கிளம்புங்கோ..

வண்டியில் ஏறி அனைவரும் கிளம்ப...

ரோட்டின் இரண்டும் பக்கத்தையும் நோட்டமிட்டேன் . ஜெர்மனிக்கு நான் ஏற்கனவே பலமுறை வந்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கிறிஸ்துமஸ் நாளை அக்காவின் வீட்டில் கழிக்க வந்தது தான். ஒவ்வொரு முறையும் பனி அதிகம் இருக்கும் அதனால் அதிகமாக வெளியே போக முடியாது. இந்த முறை தான் பனி இல்லாத நேரத்தில் வந்து உள்ளேன்.

இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று.. இயற்கையான மரம் செடி கொடிகள், நடு நடுவே கட்டிடங்கள். பார்க்க ஒரு அமைதியான நகரம் போல் தெரிந்தது.
இந்நகரில் இருந்து தான் இரண்டு உலக போரும் துவங்கியது என்று நம்ப மனது தயங்கியது.

என்ன தான் அழகாக இருந்தாலும் இதயத்தின் ஆழத்தில்  இரண்டாம் உலக போரின் போது மாண்ட கோடிக்கணக்கான மனிதர்களின் வலி - இழப்பு வந்து போனது.

வண்டியை பெர்லின் சுவர் (Berlin  Wall ) இருந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்த சுவற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த சுவர் இருந்த தடம் தெரிந்தது.


ஒரு கால் கிழக்கு ஜெர்மனியிலும் . ஒரு கால் மேற்கு ஜெர்மனியிலும் .. இது இனிமேல் ஒருகாலும் நடக்க கூடாது...

இந்த ஒரு சுவற்றை வைத்து இந்த சுவற்றினால் வந்த சோகங்களை வைத்து காவியங்களே எழுதலாம்.  இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒரே நாளில் எழுப்பப்பட்ட சுவர்.  கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளை, நண்பர்கள், தோழர்கள்- உற்றார் உறவினரை ஒரே நாளில் இந்த சுவற்றினால் பிரிந்து 50 வருட காலம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் ....

அந்த சுவற்றை சுற்றி நிறைய படங்களும் அதை பற்றிய விளக்கங்களும் இருந்தன. பார்த்து கொண்டே நடக்கையில் அருகே ஒரு "நீல நிற பலூன்"  வானத்தை நோக்கி உயர பறக்க ....

அக்கா .. அது என்ன பலூன்..




ஒ.. அது இங்கே வரும் சுற்றுலா பயணிகளுக்காக .. அதில் ஏறி போனால் பெர்லின் நகரை பத்து நிமிடத்தில் பார்த்து விடலாம்.

அக்கா.. ஜெனீவா மற்றும் பாரிஸ் நகரில் நடந்து நடந்து கால் ரெண்டும் செம வலி. பேசாமல் அதில் ஏறி ஒட்டுமொத்தமாக பெர்லின் நகரை பார்த்து விடலாம்.

ஏங்க.. உங்க சோம்பேறி தனத்திற்கு ஒரு அளவே இல்லையா ?

சோம்பேறித்தனத்த அளக்குற அளவுகோல் இன்னும் கண்டு பிடிக்கலையாம். அது கண்டு பிடித்தவுடன் கண்டிப்பா என் அளவ பத்தி உனக்கு சொல்றேன். இப்ப கிளம்பு.. வானை நோக்கி..

அங்கே சென்று டிக்கட் பற்றி விசாரிக்க ...அமர்ந்து இருந்த அம்மணி..

காற்று மிகவும் பலமாக வீசுவதால், இன்றைக்கு இனிமேல் பலூன் பறக்காது... மன்னிக்கவும்.

அட என்னடா .. கண்ணுக்கு எட்டியது ... காலுக்கு எட்டவில்லை என்று என்னும் போதே...

கேப்டனிடம் பேசினேன்.. இன்னும் ஒரு முறை மட்டும் போகலாம்

 என்று  சொல்ல.. குடும்ப சகிதம் அந்த பலூனில் ஏறினோம்.

மெல்ல மெல்ல அந்த பலூன் மேலே பறக்க ஆரம்பித்தது...

என்ன ஒரு அருமையான காட்சி. பெர்லின் நகரம் முழுவதும் எங்கள் கண்ணுக்கு எதிரில் .கட்டிடங்கள் - கோபுரங்கள் - மரங்கள் - பார்லிமென்ட்  அருமையாக வடிவமைக்க பட்ட தெருக்கள் .. என்று ..

பெர்லின் நகரம் ... 



பாதுகாப்புக்கான ஒரு சிறிய கயிர்வேலி 
அனைவரும் நிறைய புகை படங்கள் எடுக்க, அடியேன் மட்டும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன்..

அந்த அம்மணி கூறியபடியே .. காற்று கொஞ்சம் பலமாக தான் இருந்தது. அதனால் அந்த பலூன் கொஞ்சம் ஆடியபடியே தான் இருந்தது.. பாத்து நிமிடம் போல் மேலே இருந்து பின்னர் கீழே இறங்க ஆரம்பித்தது .


தீப்பெட்டிகள் போல் காட்சியளிக்கும் வாகனங்கள் 
கீழே வந்தவுடன் அந்த அம்மணி..

நீங்கள் ரொம்ப ராசியானவர்கள் .. வானிலை அறிக்கை இப்போது தான் வந்தது. இன்னும் மூன்று நாட்களுக்கு இந்த பலூன் மேலே போகாது..

ரொம்ப நன்றி..

ஒரு நல்ல நினைவு .. நல்ல நாளாக இந்நாட்டில் ஆரம்பித்தது. கீழே இறங்கி வந்ததும்.. என் அக்காவிடம்.. நீங்கள் எல்லாம் .. என்ன வேண்டுமோ அதை செய்யுங்கள். நான் அந்த சுவற்றின் அருகே சென்று சில விளக்கங்களை படிக்க  போகிறேன் என்றேன்..

சரி.. .சீக்கிரம் வந்து விடு...

ஒரு அரை மணி நேரம் தான் இருக்கும்.. கண்ணீரோடு அந்த சுவற்றை விட்டு விலகி வந்தேன்..
அடியேன் அறிந்தவரையில் .. இந்த இரண்டாம் உலகப்போரை போன்ற ஒரு சோகமான நிகழ்ச்சி இனிமேல் எப்போதும் நடக்க கூடாது.

ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதன் தன் வாய் பேச்சு திறமையினால் ஆயிரகணக்கான தொண்டர்களை சேர்த்து கொண்டு கோடி கணக்கான மக்களை கொன்ற கதை...

சரி .. ஹிட்லர் தான் ஒரு கொடூரன்.. ஆனால் அவன் எப்படி தன் தொண்டர்களை கவர்ந்தான் .. என்பது ஒரு கேள்வி குறியாக இருந்தது..

அக்கா.. ஹிட்லர் எப்படி இத்தனை பேரை கவர்ந்தான்?

அதுவா.. இதை படி என்று ஒரு விளக்கத்தை காட்டினார்கள்..

படித்து அதிர்ந்தே விட்டேன்..

தொடரும்..

www.visuawesome.com

புதன், 29 ஜூலை, 2015

ஊரை தெரிஞ்சிகிட்டன் ...

இந்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பா சுற்றுலா என்று முடிவு செய்ததுமே அனேக நண்பர்கள் எல்லா நாட்டிற்க்கும் விமானத்திலேயே போகாதே.. குறைந்த பட்சம் ஒரு பயணமாவாது ரயில் அல்ல பேருந்தில் இருக்கட்டும்  என்றார்கள்.

இவ்வாறான தரை பயணத்தில் ஐரோப்பாவின் நாட்டுபுற பகுதியும் இயற்கை அழகும் காண ஒரு சந்தர்ப்பம் என்றும் கூறினார்கள் . இதை கூறியவர்கள் என்னிடம் கூறி இருந்தால் பரவாயில்லை. அம்மணியிடம் கூறி விட்டார்கள் ... அதனால் பாரிஸ் நகரில் இருந்து பெர்லின் நகரம் பேருந்து பயணம்.

எங்கேயும் நிற்காத பேருந்தில் பயணம் செய்தால் 11-12 மணி நேரத்தில் போய் சேரலாம். ஆனால் கடைசி நிமிடத்தில் நாங்கள் கேட்டதால் மொத்த பயணம் கிட்ட தட்ட 18 மணி நேரம். நடுவில் ஒரு பட்டிணத்தில் பேருந்தை மாற்ற வேண்டும். அங்கே ஒரு 3 மணி நேரம் காக்க வேண்டும் என்ற  நிர்பந்தம்.

திங்கள், 27 ஜூலை, 2015

பாகுபலியும் புலிகேசியும் ....

பாரிஸ் நகரில் இன்னொரு நாள். நேற்று இரவு "Eiffel"  கோபுரம் பார்த்துவிட்டு ஹோட்டல் அறையை வந்து சேரும் போது இரவு பனிரெண்டு மணியாகிவிட்டது. காலையில் ஏழு மணி போல் மீண்டும் கிளம்பி நகர ஊர்வலம் என்ற திட்டம். அனைவரும் அடித்து போட்டதுபோல் ஒரு தூக்கம். காலையில் எழும் போதே 9 ஆகிவிட்டது.

மூத்த ராசாத்தி ஐரோப்பா பயணம் என்று சொன்னவுடனே பாரிஸ் நகரில் உள்ள ராஜ அரண்மனைக்கு போக வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தாள்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

வாழ நினைத்தால் வாழலாம் .

அக்கா, எப்படியாவது உங்க கடவு சீட்ட நான் வாங்கி தரேன்.. நீங்க உங்க அம்மா சொன்ன மாதிரி இந்தியாவிற்கு படிக்க போய்டுங்க ...

அப்பாவும் இறந்துட்டார் .... அம்மாவை எப்படி தனியா விட்டுட்டு...?

அக்கா ..அவங்க படிச்சவங்க .. நாலும் தெரிஞ்சவங்க ..

இருந்தாலும்..

வியாழன், 23 ஜூலை, 2015

காற்று வாங்க போனேன்... ஒரு கவலை ...

மீண்டும் ஒரு நாள் ... சுவிஸ் நாட்டில் !

மறுபடியும் காலை ஏழு மணிக்கு அம்மணி எழுப்பி விட ..

ஏம்மா ... இன்னும் கொஞ்ச நேரம் ... ப்ளீஸ் !

ஏங்க .. புதன் காலை, இங்கே  என் தங்கச்சியோட சேர்ந்து கோயிலுக்கு போகலாம் , கிளம்புங்க ..

நிற்பதும் நிர்மூலமாகததும் அவர் செயல் ஆயிற்றே.. தட்ட முடியாதே...

புதன், 22 ஜூலை, 2015

பொத்திக்கிட்டு ஊத்துதடி ....

நேற்றைய பதிவு முடிக்கையில் ஏரியை பார்த்ததும் பேய் அறைந்ததை போல் ஆனேன் என்று முடித்து ..... தொடரும் என்று எழுதினேன். அந்த கதையை பிறகு எழுதுகிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு இப்போது போகலாம்.

காலை 7 போல் எழுந்து காபியை தேடி சமையல் அறைக்கு செல்ல அங்கே எங்க வீட்டு அம்மணியும் அந்த வீட்டு அம்மணியும் "கதைத்து" கொண்டு இருந்தார்கள்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

பயணங்கள் முடிவதில்லை...

சுவிஸ் நாட்டில் இன்னொரு தினம்.

சுவிஸ் நாட்டில் இரண்டாவது நாள். நேற்று இரவு தூங்கும் போதே காலை 7 மணி போல் கிளம்பி சில இடங்களை பார்க்கலாம் என்ற ஒரு திட்டம். அதன் படியே எழுந்து கிளம்ப நினைக்கையில் வெளியே வெயில் கொளுத்திதள்ளியது. ஒரு நிமிடம் நாம் சுவிசில் இருகின்றோமா அல்ல வேலூர் நகரில் இருகின்றோமா என்ற ஒரு சந்தேகம் வந்து விட்டது.

சரி, வெளியே எங்கேயும் போக இயலாது என்று வீட்டிலேயே இருந்து உறவினரோடு உறவாட ஆரம்பித்தோம்.  நான் அவர்களிடம் "பேச" அவர்கள் என்னிடம் "கதைக்க" நேரம் போனதே தெரியவில்லை.

திங்கள், 20 ஜூலை, 2015

சுவிஸ் நாட்டில் கட்டு கட்டாக .......

சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் உறவினர் ஒருவரின் இல்லத்தில் அமைந்துள்ள தோட்ட பகுதியில் அமர்ந்து கொண்டு மனதில் ஒரு பாரத்தோடு எழுதும் பதிவு.

என்னடா நல்ல ஓர் நாள் அதுவும் ஒரு அருமையான நாடு. இந்நாளில் சந்தோசமாக இருப்பதை விட்டு ஏன் மனதில் ஒரு பாரம்... சொல்கிறேன் கேளுங்கள் .

புதன், 15 ஜூலை, 2015

ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் " சொர்க்கத்தில் கொண்டாட்டம்"

இன்னொரு மீள் பதிவு .. விஸ்வநாதன் அவர்களுக்காக ..

நெஞ்சில் ஒரு ஆலயம்  என்ற திரைப்படம் ஸ்ரீதர் – MSV – கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக  வந்து உள்ளது.
இரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை – திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த படம் அந்த காலத்திலேயே நான்கே வாரங்களில் எடுத்து முடிக்க பட்டது (வெளி நாட்டு கூத்து பாடல் இல்லை என்று நினைக்கின்றேன்).

செவ்வாய், 14 ஜூலை, 2015

முருகதாஸ் ,கௌதம் மேனன் மற்றும் சங்கர் கவனத்திற்கு ....

இரவு 8:52. சிறை கைதிகள் அனைவரும் தம் தம் இரவு உணவை முடித்து விட்டு தூங்க போகும் நேரம். சிறை சாலை பாதுகாவல் அதிகாரிகள் அவர்கள் உணவை முடித்து விட்டு ஒவ்வொரு அறையாக சென்று எல்லா கைதிகளும் இருகின்றார்களா என்று பரிசோதிக்கும் நேரம்.

அதிகபட்ச காவல் கொண்ட முக்கிய கைதிகள் இருக்கும் அறையில்  இருந்த "குள்ளன்" (El  Chapo  என்ற Shorty ) என்று செல்லமாக அழைக்க படும் கைதியை காணவில்லை.

திங்கள், 13 ஜூலை, 2015

கண்ணதாசன் கலாய்த்தது யாரை ....?

ஓர் மீள் பதிவு..
கண்ணதாசன் அவர்கள் ஒரு முறை நண்பர் ஒருவருடன் ஒரு வெளிநாட்டு பயணம் போய் இருந்தார். அங்கே அவருக்கும் அவர் நண்பருக்கும் நடந்த சில நிகழ்ச்சிகள் …. கவுண்டமணியின் பாணியை பல வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் பண்ணி விட்டாரே என்ற எண்ணத்தை தருகின்றது.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

எல்லா சொத்தையும் எழுதி கொடுக்கும் ரஜினிகாந்த் ….



மற்ற தளத்தில் நான் எழுதிய பதிவுகளில் ஒன்று. 

என்ன தண்டபாணி….ரஜினிகாந்த் அவர் படத்தில் தன் மொத்த சொத்தையும் எழுதிகொடுத்துட்டுஒரு லுக் விடுவாரே..அதே மாதிரி பாக்குற?
ஒன்னும் இல்ல வாத்தியாரே.
தண்டம்…சொல்லு…வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் எதையும் வைக்காதே…
சரி, சொல்லுறேன்.. அதுக்கு முன்னாலே… உன்னிடம் ஒன்னு கேக்கணும்.
என்ன ..

சனி, 11 ஜூலை, 2015

புத்தம் புது காலையில் பூந்தளிர் ஆட !

மற்ற தளத்தில் நான் எழுதிய பதிவுகளில் ஒன்று. 
அலைகள் ஓய்வதில்லை – மற்றும் பன்னீர் புஷ்பங்கள் வெளிவந்த நாட்கள். இந்த இரு படத்தின் நாயகர்கள் இருவருக்கும் என் வயது தானே. அப்போது நானும் சரி, என் பள்ளியின் இறுதி ஆண்டில் படிக்கும் நண்பர்களும் சரி …கார்த்திக் அல்லது சுரேஷ் இவர்களில் இருவரில் ஒருவரில் தன்னை தானே பார்த்து கொண்டு … ஊரில் வலம் வந்த காலம் அது.
“நமக்குத்தான் யாது ஊரே யாவரும் கேளிர்” கதையாயிற்றே … பெயர் வேறு விசு.. “அலைகள் ஓய்வதில்லை” படம் வந்ததில் இருந்து பெயரை யார் கேட்டாலும் “விச்சு” என்பேன். அது என்னமோ தெரியல … நமக்கு அப்ப ஒரு ‘மேரி” அமையல ..

வெள்ளி, 10 ஜூலை, 2015

பட்டை-பட்டா-பட்டி

சில மாதங்களாக நான் என்னுடைய மற்ற தளத்தில் எழுதிய பதிவுகளில் ஒன்று.

என்னா வாத்தியாரே … பட்டை கிட்டை போட்டியா ? ஒரு மாதிரி வாசனை வருது …

சொல்லி கொண்டே நுழைந்தான் அருமை நண்பன் தண்டபாணி. இந்த வாரம் நண்பர்கள் சிலர் அடியேனின் இல்லத்திற்கு வர ஒரு சந்தர்ப்பம். அப்படி ஒன்று வாய்த்தால் ஒரே ஆட்டமும் பாட்டமும் சிரிப்பும் தான்..

எப்படி தண்டம் உள்ள நுழையும் போதே இவ்வளவு அழகா வாசனை வைத்தே கண்டுபிடித்த?

வியாழன், 9 ஜூலை, 2015

ரயிலுக்கும் மெய்யிலுக்கும் “கைகாட்டி மரம்”

ஏங்க… நேத்து ஒரு லெட்டெர் கொடுத்து போஸ்ட் பாக்ஸில் போட சொன்னேன்னே … போட்டீங்களா…
உடனே போட்டுடனே..
அது ரொம்ப முக்கியமான லெட்டெருங்க, உண்மையா போட்டீங்களா …
இதுக்கு எல்லாமா பொய் சொல்லுவாங்க.. உங்கப்பரானை, போட்டுட்டேன்
அது போய் சேரலிங்க..
நேத்து தானே போட்டது..இந்த வாரத்தில் போய் சேந்துடும்…
ஐயோ … அது ரொம்ப அவசரமானது.. இன்றைக்கு போய் சேராட்டி பிரச்சனை..
ஒரே நாளில் எப்படி போகும்?
ஒரே மாநிலத்தில் இருந்தா ஒரே நாளில் போகும்னு உங்களுக்கு தெரியாதா…?
அது எல்லாம் சும்மா கதை. ஒரு முறை தமிழ் நாட்டில் இருந்து ஆந்த்ராவிர்க்கு ஒரு லெட்டெர் போட்டேன்.. கிட்ட தட்ட 15 நாள் ஆச்சி.
நான் சொல்றது அந்த மாநிலம் இல்ல.. இங்கே அமெரிக்க மாநிலம். கலிபோர்னியாவில் எங்கே இருந்து எங்கே லெட்டர் போட்டாலும் அடுத்த நாளே போய்டும். உண்மையா சொல்லுங்க போட்டீங்களா ..
உண்மையா சொல்றேன் போட்டேன்.
எந்த போஸ்ட் பாக்ஸில் போட்டீங்க..
நம்ம போஸ்ட் பாக்ஸில் தான்…
மேலே போகும் முன் போஸ்ட் பாக்ஸ் பற்றிய ஒரு குறிப்பு. அமெரிக்காவில் பொதுவாக ஒவ்வொரு இல்லத்திற்கும் அவர்கள் வசிக்கும் தெருவில் 100 மீட்டருக்குள் நமக்கு என்று தனியாக ஒரு போஸ்ட் பாக்ஸ் ஒதுக்க பட்டு இருக்கும்.
தினந்தோறும் நமக்கு வரும் தபாலை தபால்காரர் அந்த பெட்டியில் வைத்து விட்டு போவார். அதே பெட்டியில் நாம் அனுப்ப வேண்டிய தபால்களையும் வைத்து விட்டால் அவர் அதை எடுத்து கொள்வார். எப்போதாவது ஒரு முறை நம்முடைய கை எழுத்து தேவை படும் நேரத்தில் வீட்டு கதவை தட்டுவார்கள் . நாம் கை எழுத்து இட்டு அதை பெறலாம்.
அம்மணி நேற்று கொடுத்த கடிதத்தை நான் எங்களுக்குரிய பெட்டியில் போட்டது நன்றாக நினைவிற்கு வந்தது.
இப்போது தொடர்வோம் …
அங்கே போட்டு இருந்தா கண்டிப்பா தபால்கார் எடுத்து இருப்பாரே..
ஒரு வேளை அவர் வந்து இருக்க மாட்டார்..
இருங்க … ஒரு நிமிஷம் நான் போய் பாக்ஸ பார்த்துட்டு வரேன்…
நீ என்னை நம்ப மாட்டற..
நம்பிக்கை விஷயம் இல்லீங்க… இதில் எதோ தவறு நடந்து இருக்கு, ஒரே நிமிஷம் இருங்க வரேன்..
ஏங்க… நீங்க போட்ட கடிதம் அங்கேயே இருக்கு..
நான் தான் சொன்னேன்னே .. அதை அதில் போட்டேன்னு.
கடிதத்தை போட்டீங்க.. ஆனால் அந்த கைகாட்டியை மேலே தூக்கி வைச்சிங்களா ?
என்னாது கைகாட்டியா…? இது என்ன ரயிலா … கைகாட்டி மேலே ….கீழேன்னு … என்ன சொல்ற..?
train
ஏங்க, அந்த பெட்டியில் வெளியே போற தபால் வைச்சா அந்த கைகாட்டிய மேலே தூக்கி வைக்கணும் என்பது உங்களுக்கு தெரியாதா..?
இது என்ன புதுசா இருக்கு…எப்ப இருந்து இது..?
நூற்றுகணக்கான வருசமா இந்த பழக்கம் இருக்கு .. அது உங்களுக்கு தெரியல…
வெளிய போற தபாலை நம்ம பெட்டியில் வைக்கிறோம்.. கை காட்டிய விடு.. தபால் கார் நம்ம தபாலை உள்ளே போட அந்த பெட்டிய திறக்கும் போது, வெளியே போகும் தபாலை பார்த்து இருப்பார் இல்ல.
கண்டிப்பாக.. அவர் பார்த்தால் எடுத்து இருப்பார்.
சோ … இது அவர் தப்பு.. நாளைக்கு அவரை பார்த்தா சொல்லு.
ஏங்க… உங்களுக்கு இந்த விஷயம் உண்மையிலேயே புரியிலையா… இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்களா?
இந்த விஷயம் புரியிது … ஆனால் நீ என்ன சொல்ல வரேன்னு புரியல..
நேத்து நமக்கு தபால் ஏதாவது வந்து இருந்தா, அந்த பெட்டியை திறந்து இருப்பார்., நம்ம கடிதத்தை பார்த்தவுடன் அதை எடுத்து இருப்பார்.
அப்ப நமக்கு கடிதம் எதுவும் வந்து இல்லாட்டி..
நம்ம பெட்டிய திறக்கவே மாட்டார்.
அப்ப நம்ம அங்கே வைச்ச வெளியே போக வேண்டிய கடிதம்?
அதுக்கு தாங்க .. நம்ம எப்பவுமே வெளியே போக வேண்டிய கடிதத்தை அதில் வைச்சா .. அந்த கைகாட்டிய மேலே தூக்கி வைக்கணும் .
அப்படி மேலே தூக்கி வைச்சா..?
அந்த தபால் காருக்கு நம்ம பெட்டியில் வெளியே போக வேண்டிய கடிதம் இருக்குன்னு தெரியும்..
இது எப்படி எனக்கு இத்தனை வருசமா தெரியாமல் போச்சி..,
அது தான் எனக்கும் புரியலங்க..
சரி.. நாளையில் இருந்து ஜாக்ரதையா இருக்கேன்..
போங்க.. திரும்பவும் போய் அந்த பெட்டியில் போட்டுட்டு அந்த கைகாட்டியை மேலே தூக்கி நிக்க வச்சிட்டு வாங்க…
painted-mailboxes-wallpaper-wallwuzz-hd-wallpaper-20703
சிறிது நேரம் கழித்து….வீட்டின் அழைப்பு மணி கேட்க்க …
வா தண்டம்….
வாத்தியாரே.. சுந்தரி.. இந்த வாழை …
வாழை பஜ்ஜி செஞ்சு கொடுத்தாங்களா…
ஆமா.. சூடு இருக்கும் போதே கொடுத்துட்டு வர சொன்னா..
தண்டம்… இந்த பை சூடாவே இல்ல..
பஜ்ஜி இல்ல வாத்தியாரே…நீ தான் எதோ உடம்பில் …மாணிக்கம் வைரம் வைடூரியம்ன்னு கல் சேத்து வைச்சின்னு இருக்கியாமே,.அதுக்கு வாழை தண்டு சாறு குடிக்கனும்மா.. அதுதான் வாழை தண்டு கொடுத்து அனுப்பினா..
தேங்க்ஸ், தண்டம்..
சரி வாத்தியாரே.. வார இறுதியில் பார்க்கலாம்.. காலையில் சீக்கிரம் வேலைக்கு போகணும்..
பின் குறிப்பு :
காலை .. ஏழு மணி..அலை பேசி ரிங்கியது…
வாத்தியாரே.. நேத்து ராத்திரி உன்னிடம் வாழை தண்டு கொடுத்துட்டு வெளியே வந்தேன் இல்ல.. அப்ப உங்க தெருவில் உள்ள போஸ்ட் பாக்ஸ பார்த்தேன்.. எல்லா பெட்டியிலேயும் அந்த கைகாட்டி கீழே இருக்கு, உங்க வீட்டுது மட்டும் மேலே இருந்தது.. உனக்கு எதுவும் பிரச்சனை வரகூடாதுன்னு நான் உங்க வீட்டுதையும் கீழே திருப்பி வைச்சேன்..
அட பாவி…அது ஏன் மேலே இருக்குதுன்னு உனக்கு தெரியாது..?
சும்மா அழகுக்கு தான்..
அமெரிக்காவில் எத்தனை வருசமா இருக்க..?
15 வருசத்துக்கும் மேல்..
உனக்கு இந்த கை காட்டி விஷயம் உண்மையாகவே தெரியலையா.இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா?
ஆமா … பெரிய ரயில்.. கைகாட்டி.. மேலே ,, கீழன்னு..செஞ்ச உதவிக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு போனை வை வாத்தியாரே..
தேங்க்ஸ்..
என்னங்க..நேத்து அவ்வளவு சொல்லியும் .திரும்பியும் அந்த கைகாட்டிய மேலே வைக்காம வந்து இருக்கீங்க…
அது வந்து.. தண்டம்..
தண்டம் … தண்டம்ன்னு உங்களையே திட்டிக்கிரத நிறுத்திட்டு ….”செய்வன திருந்த செய்யுங்க”…
www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...