ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எனக்கு ஒரு மகன் பிறப்பான்...

என்ன விசு... எப்பவும் ரொம்ப ஜாலியா இருப்ப.. சில  நாளாவே கொஞ்சம் "பீலிங்கா" இருக்க மாதிரி தெரியுதே..

அப்படியெல்லாம் இல்ல சாரதி.. அப்படியே தான் இருக்கேன்...

வாத்தியாரே... நானும் கேட்கவேண்டும் என்று யோசித்தேன்... நீ கொஞ்சம் "பீலிங்கா" தான் இருக்க.. இந்த மாதிரி நேரத்தில் நண்பர்களிடம் மனம் திறந்து பேசவேண்டும்.. சொல்லு வாத்தியாரே..

டேய்.. தண்டபாணி...நம்ம எல்லாம் தமிழன்கள். மனம் திறந்து பேசுன்னு சொல்லுவோம். பேசிய ரெண்டு நிமிஷத்தில்... கதை கந்தல் ஆகிடும்... ஆளை விடுங்க.



வாத்தியாரே.. வீட்டில் மாமி ஏதாவது சத்தம் போட்டாங்களா?

டேய்.. தண்டம் .. நீ உண்மையாவே இவ்வளவு பெரிய முட்டாளா இல்லை அப்படி நடிக்கிறியா?

என்ன தப்பா கேட்டுட்டேன் .. அதுக்கு போய் முட்டாள் அது இதுன்னு.

"பீலிங்" ஆகாத தண்டம்.. மாமியும் சரி.. உன் மனைவி சுந்தரியும் சரி...ஏன்... சாரதி மனைவியும் சரி.. கணவனை சத்தம் போடுறது தங்கள் கடமை போல் செய்வாங்க.. மனைவி சத்தம் போடுதேன்னு கணவன் பீலிங் ஆனா .. இந்த உலகம் முழுக்க ஒரே "பீலிங்" ஆனா ஆம்பிளைகளை தான் பார்க்க வேண்டும்.

வாத்தியாரே.. நீ சொல்றதே பாத்தா "ஆம்பிளை என்று பிறந்தால் மனைவியிடம் திட்டு வாங்கியே ஆகவேண்டும் என்பது.. காலத்தின் கட்டாயம் போல் இருக்கே/"

சரியா சொன்ன தண்டம்...

சரி விசு.. பிறகு ஏன் "பீலிங்கா" இருக்க.. நீ தானே விசு.. எங்களுக்கு எல்லாம் சந்தோசமா இருக்க சொல்லுவ.. நீயே இப்படி ஆனா எங்க நிலைமைய யோசித்து பாரு.

அது ஒரு சோக கதை சாரதி.. அதை விட்டு தொலை..

அப்ப எதோ கதை இருக்குனு சொல்லவர..சொல்லு வாத்தியாரே..

சொல்லு விசு..

ஒன்னும் இல்ல சாரதி.. உன்னை மாதிரி ஆட்களை பார்த்தல் கொஞ்சம் பொறாமையா இருக்கு..

என்ன விசு.. என்னை பார்த்த பொறாமையா? எதை வச்சி சொல்ற?
ஒன்னும் இல்ல. எனக்கும் சரி தண்டபாணிக்கும் சரி ரெண்டு பெண் பிள்ளைகள். உனக்கு ஒரே பையன் , அதை பார்த்தால் கொஞ்சம் பொறாமை தான்.

வாத்தியாரே.. பையன் இல்லையேன்னு நான் கவலைப்பட்டு கொண்டு இருந்த நேரத்தில், நீதானே அது ஒரு முட்டாள்தனம். பெண்கள் ஒரு அப்பாவின் கண்கள் .. மற்றும் வயதான காலத்தில் ஒரு மகளை போல் தன தாய் தந்தையாரை அன்போடு ஒரு மகனால் கவனிக்க முடியாது (அவன் தான் மாமனா மாமியாரை கவனித்து கொண்டு இருப்பானே) .. என்றெல்லாம் சொல்லி என்னை திருத்தின.. இப்ப நீயே இந்த மாதிரி பேசுனா?
Picture Courtesy : Google

டேய் தண்டம்.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லல.. "என் ரெண்டு ராசாதிக்களும் என் கண்கள் போல தண்டம்.. யு நோ தட்.."

பின்ன என்னை பார்த்து ஏன் பொறாமை விசு? டௌரி தொலை எனக்கு இல்லை ,, உனக்கு மட்டும் என்றா?

சாரதி.. இந்த டௌரி.. வரதட்சணை எல்லாம் எங்கே வீட்டில் "கெட்ட கனவில்" கூட வராது. நான் பெண் பார்க்கபோகும் பொது உள்ளே நுழையும் போதே பெண் வீட்டில் (யாரும் இல்லை .. என் வருங்கால மனைவி தான்) வரதட்சணை வேண்டும் என்றால் வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

பின்னே ஏன் விசு என் மேலே பொறாமை?

இத பாரு சாரதி. என் ராசாதிக்களும் சரி.. நம்ம தண்டபாணி ராசாதிக்களும் சரி.. இப்ப உயர்நிலை பள்ளிக்கு போக ஆரம்பித்து விட்டார்கள்.

ஆமா வாத்தியாரே... தினந்தோறும் காலையில் அவர்களை பள்ளியில் இறக்கி விட்டு வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் போகிறேன்.

என்ன விசு.. சாரதி.. நீங்க என்ன சொல்றீங்க? ஒண்ணுமே புரியல..

உனக்கு புரியாது சாரதி.. எங்க பிரச்சனை எங்கள் பிரச்சனை எங்களுக்கு தான்.

அப்படி சொன்னா எப்படி விசு.. நீ சொல்றத பாத்தா .. ஆண் பிள்ளையை பெத்த யாருக்கும் கவலை இல்லாத மாதிரி இல்ல பேசுற..எங்களுக்கும் கவலை இருக்கு விசு .. நானும் என் பையனை பத்தி கவலை படுறேன்.

அதுதான் சாரதி எனக்கு பொறாமை..

நான் என் பையனை பத்தி கவலை படுவதில் உனக்கு என்ன பொறாமை?

நல்லா கவனி சாரதி.. " நீ கவலைப்பட வேண்டியது எல்லாம் உன் ஒரே பையனை பத்தி தான். நானும் சரி, தண்டமும் சரி, நாங்க ரெண்டு பெரும்எவன் பையன பார்த்தாலும் இல்ல கவலை பட வேண்டியதாய் இருக்கு.."

சரியா சொன்ன வாத்தியாரே..

WWW.VISUAWESOME.COM

7 கருத்துகள்:

  1. அடடே.... இந்த பிரச்சனை உங்களுக்கு இப்பத்தான் தொடங்கி இருக்கா.. எனக்கு எப்பவோ தொடங்கிடுச்சு தலைவா...என்ன செய்யறது...? பொண்ண (ராசாத்தி) பெத்துட்டோம். எப்படியாவது சமாளிப்போம்

    பதிலளிநீக்கு
  2. சரியா சொன்னீங்க! பெண்ணுங்களை பத்தி கவலைப்படாம மத்தவங்க பையனுங்களை பத்தி கவலைப்படற கஷ்டம் பொண்ணுங்களை பெத்தவங்களுக்குத்தான் தெரியும்!

    பதிலளிநீக்கு
  3. நண்பரே தாங்கள் குறிப்பிடும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண் பிள்ளைகளுக்கும்தான்.
    பிள்ளையோ, பெண்ணோ பெற்றோர்கள் நிம்மதியிழந்துதான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹ்ஹ் செம நண்பரே! ரொம்பவே ரசிச்சோம்..நண்பரே! கரெக்க்டுதான் இல்ல..?!!!!

    பதிலளிநீக்கு
  5. வலைசர ஆசிரியராக பொறுபேற்று இரண்டாம் நாளாக வெற்றிநடை போடும் நண்பர் கில்லர் ஜீக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  6. விசு,
    உன் கவலை எனக்கு புரிகின்றது, மரம் வச்சவன் தண்ணி ஊத்த மறக்கமாட்டான்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...