வெள்ளி, 3 அக்டோபர், 2014

தாயின் Money கோடி பாரீர்!

66 கோடி ஊழலிற்கு 100 கோடி அபராதமா? என்ன ஒரு அநியாயம் இது என்று அம்மையாருக்கு வேண்டியவர்கள் பேசி கொண்டு இருகின்றார்கள், குறிப்பாக சினிமா ஆட்கள். சினிமா ஆட்களிடம் இருந்து எந்த நல்ல காரியம் வருவது கல்லில் நார் உரிப்பது மற்றும் மணல் கயிறு திரிப்பது  என்று அறிவேன், ஆனால் அதற்காக அவர்கள் இவ்வளவு தரம் தாழ்வது, இவர்களை நம் மக்கள் தொழுது கொண்டு  இருக்கின்றார்களே என்று  நினைக்கையில் ஒரு வருத்தம்.

இப்போது கணக்கிற்கு வருவோம்.



66 கோடிக்கு 100 கோடி அபராதமா? அடே அப்பரன்டிஸ்களே  இந்த 66 கோடி (மாட்டினது அவ்வளவு தான்)  களவாடியது 1991ல். 18 வருஷத்தில் அது எவ்வளவு ஆகி இருக்கும் என்று கூட்டி கழிச்சி பாருங்க தெரியும். இதில் இன்னொரு விஷயம், இவர்கள் இந்த கேள்வியை கேட்க்கும் போதே, இவர்களை அறியாமலே, அம்மையார் 66 கோடி திருடினார்கள் என்று ஒத்து கொள்கின்றனர்.

இவர்களின் அடுத்த கேள்வி.

அம்மையார் அவர்கள் அரசியலிற்கு வருமுன்னே மிக பெரிய நடிகை, அவர்களிடம் இல்லாத பணமா? அடே அப்பரன்டிஸ்களே, 1991ல் இவர்கள் சமர்பித்த வருமான வரி துறை கணக்கிலும் சரி, வேட்பு மனு தாக்கலிலும் சரி, தன்னிடம் உள்ளது மொத்தமே 3 கோடி என்றும், அதிலும் சில கடன்கள் உண்டு என்றும் என்று எழுதி உள்ளார்கள். வாய் உள்ளதால் பேசுவோம் என்று நீங்கள் அறிவு கெட்ட தனமாக பேசினால் உங்களால் அம்மையாருக்கு வேறு சில பிரச்சனைகள் வரும்.

உங்கள் ராசி, நீங்கள் பேசியதை இன்னும் டாக்டர்.சுப்பிரமணி சுவாமி கேட்க்க வில்லை. அவர் மட்டும் கேட்டு இருந்தால் உங்களுக்கும் மணி அடித்தால் தான் சோறு.

இவர்களின் இன்னொரு கேள்வி.

மற்றவர்கள் செய்யாத ஊழலா? மற்றவர்கள் பண்ணாத திருட்டா? நகரம் சுற்றி தொலை பேசி துறையின் செலவில் தன் வீட்டையே  "டெலிபோன் எக்ஸ்செஞ்" போல பண்ணவர்கள் எல்லாம் வெளியே இருக்கும் போது , அம்மையார் மட்டும் ஏன் உள்ளே?

இது என்ன ஒரு முட்டாள் தனமான வாதம். இந்த கருத்தை இவர்கள் பேச வேண்டும் என்றால் இவர்கள் கேள்வி இப்படி அல்லவா இருக்க வேண்டும்.

அம்மையார் உள்ளே இருக்கும் போது அவரை விட அநியாயம் - திருட்டு-கொள்ளை செய்தவர்கள் எல்லாம் வெளியே இருக்கின்றார்களே?

இவர்கள் இவ்வாறு கேட்டால் அதில் அர்த்தம் உள்ளது.

சரி, சுய புத்தி இல்லாமல் இவர்கள் கேட்க்க மறந்த கேள்விக்கு நாம் பதில் தருவோம்.

வருவார்கள், மற்ற திருடர்களும் வருவார்கள், ஒரு நாள். அது வரை உண்ணாவிரதம், போராட்டம், லொட்டு, லொசுக்கு என்று எதுவும்  செய்யாமல் பிழைக்கும்  வழியை பார்ப்போம்.

கடைசியாக இவர்களின் இன்னொரு கேள்வி.

இந்த தீர்ப்பு தவறானது என்று நாங்கள் சொல்லவில்லை. மூத்த லாயர் ராம் ஜெத்மலானி சொன்னார் என்பது. அவர் சொன்னால் எப்படி தவறாக இருக்கும்?
இதைவிட முட்டாள் தனமான கேள்வியை யாராவது கேட்க்க முடியுமா? ராம் ஜெத்மலானி ஒரு வக்கீல். அடுத்தவன் தவறில் தான் இவர் பிழைப்பு. அவர் அப்படி தான் சொல்லுவார். அதற்கு தான் அவருக்கு மணிக்கு இவ்வளவு என்று பணம்.

அடே  அப்பரன்டிஸ்களே, இதே ராம் ஜெத்மலானி தான் சில நாட்களுக்கு முன் "கருணாநிதியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தான் கனிமொழியை குற்றம் சாற்றி உள்ளார்கள் என்று வாதாடினார். இவர் இப்போது கேட்பது சரி என்றால், அப்போது  கேட்டது?

நம் சுயநலத்திற்காக தவறு செய்தவர்களை ஆதரிப்பது மிகவும் தவறு. திருந்துவோம்.

வந்தே மாதரம்.

www.visuawesome.com

4 கருத்துகள்:

  1. Bunch of crooks making comedy. Pl allow them make a day happy

    Seshan dubai

    பதிலளிநீக்கு
  2. என்ன செய்வது சார்....

    ஃபிலிங் போர் எங்கு பார்த்தாலும் இந்த செய்தியா படிச்சு படிச்சு நமக்கு மண்ட காஞ்சதுதான் மிச்சம்

    அடுத்த வாரம் கூட பெயில் கிடைக்காட்டி என்ன பேசுவாங்கலோ?

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் காமெடி பண்றாங்க .அவங்க செய்றதை அவங்களே மறுக்கிறாங்க மறக்கறாங்க :)
    2011 இல் அன்னா ஹசாரேக்கு ஆதரவா விரதம் இருந்தாங்க இப்போ :)
    என்னத்தை சொல்ல சிரிப்பு சிரிப்பா வருது

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...