சனி, 2 ஆகஸ்ட், 2014

இன்றைய வார்த்தை: " கலாய்த்தல்"


டோக்கியோ நகரில் தமிழ் கற்று வரும் ஜப்பானிய நண்பர் "நிக்கிமோ நிக்காதோ" என்பவர் நமக்கு அனுப்பிய கேள்வி. " கலாய்த்தல்" என்றால் என்ன? அந்த வார்த்தையின் பூர்வீகம் எது?

உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே. இப்போது பதிலுக்கு வருவோம்.கலாய்த்தல் என்பது வழிப்பறி சொல். அதாவது, போற வழியில் என்ன என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே சுட்டு கொண்டு செல்லுதல்.கலாய்த்தல் என்பதிற்கு கிண்டல், ...நக்கல், உடையல் என்ற மற்ற அர்த்தங்களும் உண்டு. 

பூர்வீகம்:

"கலாய்த்தல்" என்ற வார்த்தை சுத்தமான தமிழ் வார்த்தை. இந்த வார்த்தையை பிரித்து எழுதினால் "கலந்து + ஆலோசித்தல்" என்றாகும். கலைக்கிறாயா "கலந்து+ ஆலோசிக்கிறாயா" என்று அர்த்தமாகும். இப்போது இந்த வார்த்தையை வாழ்வின் நடைமுறையில் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தந்தை மகனை கலாய்த்தல் "உன் வயசில் ஆபிரகாம் லிங்கன் ஆங்கில இலக்கியத்த கரைச்சி குடித்தார்".
மகனின் பதில் கலாய்த்தல் " உன் வயசில் அதே லிங்கன் என்னவா இருந்தார்னு தெரியுமா?
காதலனின் கலாய்த்தல் "உனக்காக நான் வானவில்லை வளைக்கட்டுமா"?

காதலியின் பதில் "கூரை ஏறி கோழி புடிக்க தெரியில, வானத்தில ஏறி வைகுண்டம் போனாராம்"
ஆசிரியர் கலாய்த்தல் "கஸ்துரி பாய் பற்றி சிறு குறிப்பு வரை (out of syllabus question)"
மாணவனின் பதில் " கஸ்துரி பாயே இல்ல அவ கேர்ள்"
மனைவியின் "இந்த புடவையில நான் அழகா இருக்கேன்ன?
கணவன் பதில் " இந்த புடவையினால தான் நீ அழகா இருக்கே"

இந்த "கலாய்த்தல்" பற்றி கேட்ட நண்பர் நிக்கிமோ நிக்காதோ அவர்களுக்கு இந்த வார பரிசு " தினம் ஒரு வார்த்தை கோனார் உரை" நீங்களும் ஒரு வார்த்தை கேட்டு இப்பரிசை கலாய்க்கலாம்.

7 கருத்துகள்:

  1. கலாய்த்தல்
    கலந்து ஆலோசித்தல்
    அருமையான விளக்கம் நண்பரே
    இதுவரை அறியாதது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. நன்றாகவே கலாய்த்தீர்கள் !

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    கலாய்த்தல்பற்றியவிளக்கம் நன்றாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. ஆனால் இப்போ நாம கலந்து ஆலோசிக்காமல் நாமாகவே கிண்டல் செய்வதைத்தானே கலாய்த்தல் என்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கவுரைக்கு நன்றி வாத்தியாரே!

    பதிலளிநீக்கு
  6. நீங்களாவே ஒரு விளக்கம் போட்டு அதை வேற எல்லாரையும் நம்ப வெச்சு, தமிழை கலாய்ச்சுட்டீங்க ! 'கலந்து ஆய்தல்'னாலாவது கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்.....

    Sujatha

    பதிலளிநீக்கு
  7. நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
    நிச்சய மேஇது திண்ணம்
    மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
    மெய்ப்பொரு ளன்றி யுணரேன்
    பண்டங் கிலங்கையர் கோனைப்
    பருவரைக் கீழடர்த் திட்ட
    அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர் (73:8)

    சுந்தரர் தேவாரத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதைக் காண்க.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...