சனி, 28 ஜூன், 2014

சுவாரஸ் இல்லாமல் சுவாரசியமே இல்ல .


எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே மனதில் பட்ட கதை ஆதாம் ஏவாள் மற்றும் அவள் அந்த பழத்தை கடித்த "கடி"! இந்த கடியை நினைத்து நொந்து கொண்டு இருக்கையில் நம்ப உருகுவேவை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் "சில்லினோ" எனும் இத்தாலிய வீரரை "சில்லி சிக்கன்" என்று நினைத்து கடித்து வைத்து விட்டார்.

அவர் கடித்த பின்பு அவரும் சரி மற்ற வீர்களும் சரி போட்ட நாடகம் 3வது படிக்கும் போது  நான் போட்ட ஒரு சண்டையை தான் நினைவுபடுத்தியது.
சரி, அதை விடுங்கள், கதைக்கு வருவோம். இப்போது கால்பந்து அதிகாரிகள் அவருக்கு 9 ஆட்டங்கில் தடை விதித்ததால் உருகுவே அணி இவர் இல்லாமல் ஆடவேண்டிய நிர்பந்தம்.
ஒரு கடிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? ஒருவர் தவறுக்கு ஒரு நாட்டை தண்டிப்பதா? என்னை பொறுத்தவரை இது பிக் பாகெட் அடித்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது போல்.
சுவாரஸ் ஒரு தலை (கெட்ட) சிறந்த வீரர். அவரின் சேவை கால்பந்திர்க்கு தேவை.



வேண்டும் ஆனால் இப்படி செய்யலாமே. அடிக்"கடி" மற்றவர்களை "கடித்து" வரும் இவரின் 32 பல்லையும் புடுங்கி விட்டு இவரை ஆட்ட களத்தில் இறக்கலாமே! இப்படி செய்வதின் மூலம் இவரும் ஆடலாம், உருகுவே நாட்டிற்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.
என்ன சரிதானே?

3 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...