வியாழன், 27 மார்ச், 2014

கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி


ஏப்ரல் 1 என்றவுடனே எனக்கு நினைவில் வரும் நிகழ்ச்சி. பெங்களூரில் வேலை பார்த்துகொண்டு இருந்த நாட்கள். ஒரு நாள் மாலை வேலை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இன் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது என் தாயாரும் என் மூத்த சகோதரியும் நாங்கள் வெளியே கடைக்கு செல்கிறோம் "வயசு பையன் தனியா இருக்க, கதவை பூட்டி கொள்"என்றார்கள்.

திங்கள், 24 மார்ச், 2014

மீண்டும் ஒரு கால் கதை...

"என்னோடு வா துபாய் ஏராளம் தான் ருபாய்" என்ற பாட்டுகேற்ப துபாய் நாடு சென்ற நான் என் ஆத்தா செய்த புண்ணியத்தினால்  டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒரு பல நாட்டு நிறுவனத்தின் தணிக்கையாளராக பொறுப்பேற்றேன். அருமையான வேலை, அட்டகாசமான வரியற்ற சம்பளம், அதற்க்கும் மேல் நல்ல வாகனம். சிவாஜி கணேசன் பாடியது போல் ஆண்டவன் படைத்தான் என்கிட்ட கொடுத்தான் என்ற வாழ்க்கை.

வியாழன், 13 மார்ச், 2014

சரவணபவ சாம்பாரும், சங்கரா மீனும்...


மும்பை வாழ்வின் மற்றொரு நாள். வார இறுதி, கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே கிங் சர்க்கிளில் உள்ள அரோரா தியேட்டரில் வந்துள்ளது என்று கேள்வி பட்டவுடன் நாங்கள் கிளம்பிவிட்டோம். இந்த நாட்களில் கமல் படங்களை தமிழர்கள் அதிகம் பார்த்தாலும் "ஏக் துஜே கே லியே" படத்தில் அறிமுகம் ஆனாதால் சில வடஇந்தியரும் கமல்ஹாசன் படத்தை பார்க்க விரும்புவார்கள். நான் மற்றும் அறையில் இருந்த மற்ற நண்பர்களும் மேட்னி காட்சிக்கு கிளம்பி விட்டோம். எங்கள் இல்லத்தில் இருந்து அரோரா தியேட்டர் ஒரு 30 நிமிட நடை. போகின்ற வழியிலேயே மதிய உணவை அங்கே அருகே உள்ள ஐயங்கார் உணவகத்தில் முடித்து கொண்டு போகலாம் என்று ஒரு திட்டம்.

திங்கள், 10 மார்ச், 2014

தொடர்ச்சி .....இது என்ன உணவெறி?

சென்ற வாரம் நான் எழுதிய நிறவெரி  இன வெறி சரி, இது என்ன உணவெறி என்ற இடுக்கை படித்து விட்டு அதற்க்கு கருத்து கூறுகையில் அன்பு அண்ணன் அல்ப்ரெட் அந்த பெண் டொமினிக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டதா என்று கேட்டார். அவருக்கு பதில் தரும் வகையில் இந்த தொடர்ச்சி இடுகை. இதை படிக்குமுன் இதற்கு முன் எழுதிய இடுகையை ஒரு முறை மேய்ந்து விட்டு  வந்தால் நன்றாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து  கொள்கிறேன்.

அதை படிக்க இங்கே சொடுக்கவும்.

http://vishcornelius.blogspot.com/2014/03/blog-post.html

அந்த முட்டை தோசையை டொமினிக் முடித்த பின் நாங்கள் மூவரும் புனே ரயில்நிலையம் நோக்கி நடந்தோம். நானும் ரமேசும் மிகவும் ஆவலுடன் டொமினிக்கிடம் பெண் எப்படி இருந்தது ? என்ன சொன்னார்கள் என்று கேட்டோம். பெண் எல்லாம் சரி, ஆனால் எனக்கு என்னமோ இது நடக்காது போல் உள்ளது என்றான். ஏன்,நீ ஏதாவது உன் முன் கோபத்தை காட்டிவிட்டாயா என்றோம்? இல்லை நான் சாப்பாட்டை தவிர வேறு எதற்கும் வாயை திறக்கவில்லை என்றான்.
ரயில் நிலையத்தை அடைந்த நாங்கள் அங்கே இருந்த டிக்கட் பரிசோகதரிடம் பம்பாய்க்கு மூன்று டிக்கெட் கிடைக்குமா என்றோம்? அவர் கிடைக்கும் ஆனால்  கிடைக்காது என்று பொறி வைத்து பேசியவுடன், நாங்கள் அவரை விட்டு விலகி எங்களுக்கே உரிய ரயில் தந்திரத்தை கையாள முடுவு எடுத்தோம்.

எங்கள் தந்திரம் என்ன வென்று விளக்கி சொல்கிறேன், கவனமாக கேளுங்கள். நாம்  போகவேண்டிய ரயிலில் உள்ள ரிசெரவ்ட் பெட்டியின் கதவு அருகில் அந்த பெட்டியில் செல்லும் அனைவரின் பெயரும் இருக்கை என்னும் போட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்த பட்சம் 4-5 சீட் யார் பெயரும் இல்லாமல் இருக்கும்.  இந்த சீட்ஸ் "வைடிங்க் லிஸ்டில்" இருபவர்களுக்கு பொதுவாக வழங்க படும். அப்படி இல்லாவிடில் யார் முதலில் ஏறி அமர்கிரார்களோ அவர்களுக்கு வழங்கப்படும். நாங்கள் ஒவ்வொரு பெட்டியாக பார்த்து கொண்டு போகையில் ஒரு பெட்டியில் எங்களுக்கே வைத்த மாதிரி மூன்று சீட் யார் பெயரும் இல்லாமல் இருந்தது. நாங்கள் உள்ளே சென்று அமரலாம் என்று அருகில் சென்றால் எங்களுக்கும் முன்பே மூன்று ஆசாமிகள் அதில் அமர்ந்து இருந்தனர்.



இப்போது எங்கள் தந்திரத்தின் இரண்டாம் பாகம் துவங்கியது. நண்பன் டொமினிக் நேராக அவர்களிடம் சென்று "ரிசர்வெட்" என்று ஒரே ஒரு வார்த்தையை சொன்னான்? அவன் சொல்லும் போதே அது கேள்வியை போலவும் இல்லாமல் ஒரு சந்தேகம் போல் தான் கேட்டான். உடனே அவர்கள் மூவரும் பேய் அறைந்ததை போல் முழித்து (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் எழுதுகிறேன்)அந்த சீட்டை விட்டு எழுந்தார்கள். நாங்கள் மூவரும் அமர்ந்தோம். பிறகு ஒரு 10 நிமிடம் கழித்து டொமினிக் அவர்களிடம் முன்னால் உள்ள மூன்றாவது பெட்டியில் சில சீட்கள் காலியாக இருப்பதாக கேள்வி பட்டேன் என்றான். அவர்கள் மூவரும் எங்களுக்கு நன்றி கூறிவிட்டு அந்த பெட்டியை நோக்கி சென்றனர்.

அவர்கள் சென்றவுடன் ரமேஸ்  டொமினிக்கிடம் அது சரி, முன்னால் மூன்றாவது பெட்டியில் இடம் இருப்பதாக சொன்னாயே, நாமே அங்கு போய் இருக்கலாமே, அமர்ந்து இருப்பவர்களை ஏன் எழுப்பினாய் என்றான்? அதற்க்கு டொமினிக் அங்கே அப்படி எதுவும் இல்லை. டிக்கெட் பரிசோதகர் வரும் வேளையிலே இவர்கள் இங்கே இருந்தால் நாம் ரிசர்வ் பண்ண வில்லை என்று இவர்களுக்கு தெரிந்து விடும், அதனால் தான் அவர்களை வேறு ஒரு பெட்டிக்கு அனுப்பிவிட்டேன் என்றான். நான் அவன் அறிவை கண்டு அதிர்ந்துவிட்டேன்.

இரவு முழுவதும் நன்றாக தூங்கிவிட்டு காலை 7 மணிக்கு தாதர் நிலையத்திற்கு வந்து சேர்ந்து அங்கு இருந்து இன்னொரு வண்டி பிடித்து மட்டுங்கா வந்து சேர்ந்தோம். பெண் வீட்டில் இருந்து வரும் பதிலுக்காக நாங்கள் மூவரும் காத்து கொண்டு இருந்தோம்.



ஒரு வாரம் ஆனது, பெண் வீட்டில் இருந்து பதில் வந்தது...அதில் ...

டொமினிக் அவர்களுக்கு,

புனேவில் இருந்து நாங்கள் எழுதும் மடல். தங்கள் எங்கள் வீ ட்டு பெண்ணை பார்க்க வந்தது எங்கள் அனைவர்க்கும், மகிழ்ச்சியே. இருந்தாலும் சில "தவிர்க்க முடிந்த-தவிர்க்க வேண்டிய" காரியங்களை தாம் தவிர்க்காதலால் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்று நீங்கள் கேட்காவிட்டாலும் சொல்லவேண்டியது எங்கள் கடமை அல்லவா?

நீங்கள் வரும் போதே மற்றும் இரண்டு நண்பர்களோடு வந்ததை கேள்வி பட்டதும் உங்கள் சிறு குழந்தை மனது எங்களுக்கு புரிந்தது, ஆனாலும் ஒரு பிழைக்க தெரியாத நபராக தான் நீங்கள் எங்களுக்கு தென்பட்டீர்கள். அது மட்டும் இல்லாமல் நாங்கள் "வடை பஜ்ஜி சட்டினி" வைத்தவுடன், நீங்கள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உங்கள் பாக்கெட்டில் கைவிட்டு நான்கு இட்லி  எடுத்து எங்கள் வீட்டு   சட்டினியை தொட்டு தொட்டு சாப்பிட்டது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.  பெண் பார்க்க செல்லும் இடத்தில நீங்கள் ஏன் இட்லி எடுத்து வந்தீர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் புரியாத புதிர். அது கூட பரவாயில்லை, நாங்கள் அனைவரும் பிசியாக இருக்கும் நேரத்தில் நீங்கள் எங்கள் ப்ரிட்ஜை திறந்து ஒரு முட்டையை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டது எங்கள் அனைவரையும், ஒரு வேலை நீங்கள் "ஒரு முட்டை மந்திரவாதி" என்று நினைக்க வைத்தது. இந்த மூன்று காரியங்களினால் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம்.




மற்றும் புனே-பம்பாய் ரயிலில் உங்களுக்கு முன்னே சீட்டில் அமர்ந்து இருந்த மூன்று பேரில் இருவர் என் சகோதரியின் பிள்ளைகள். பம்பாயில் வேலைக்கான நேர்முக தேர்வில் சென்று கொண்டு இருந்தவர்களை நீங்கள் ஏமாற்றி அவர்கள் இருக்கையில் அமர்ந்தீர்கள் என்று கேள்வி பட்டோம். இவ்வாறான தவற்றை திருத்தி வாழும்படி கேட்டு கொள்கிறோம். எங்கிருந்தாலும் வாழ்க.

பின் குறிப்பு:
தாங்கள் அழைத்து வந்த நண்பர்களில் ஒருவரான அந்த "பால் வடியும் முகத்தை கொண்ட கணக்கு பிள்ளையின்" பெற்றோர்களின் விலாசம் இருந்தால் எங்களுக்கு அனுப்பவும்.


Dear Dominic,
Not a day goes without us thinking of you my friend. I keep saying, Heaven is full of laughter cos you are there. You have left too soon, RIP my friend... RIP.

வெள்ளி, 7 மார்ச், 2014

நிற வெறி, இன வெறி, சரி! இது என்ன உண வெறி?


மும்பை நகர வாழ்க்கை, நாட்கள் நொடிகள் போல ஓடும் நாட்கள் அவை. "மட்டுங்கா" என்னும் தமிழர் வாழ் பகுதியில் நான் நண்பன் டொமினிக் மற்றும் ரமேஷ் ஒரு சிறு அறையில் வாழ்ந்து வந்தோம். நீங்கள் எல்லாம் அறிந்தது போல் நான் ஒரு கணக்கு பிள்ளை, ரமேஷ் ஒரு தொழிலதிபர், டொமினிக் ஒரு வங்கி அதிகாரி. கஷ்டமோ நஷ்டமோ ஒருவருக்கு ஒருவர்  தான் எல்லாமே. பெற்றோர் மற்றோர் எல்லாம் தமிழ்நாட்டில், என்றாவது ஒரு நாள் கடிதம் வரும். தொலை பேசி மிகவும் அபூர்வம். தினமும் காலை எழுந்து கிளம்பி மூன்று பெறும் அருகில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்து கொண்டு வேலைக்கு கிளம்புவோம். அதோடு, வேலை முடித்து மாலை 6 மணி போல் சந்திப்போம். இவ்வாறாக நாட்கள் போய் கொண்டு இருக்கையில், திடீர் என்று ஒரு நாள் நண்பன் டொமினிக் ஒரு கடிதம் எடுத்து வந்தான். அதில் உனக்கு திருமணம் செய்ய போகிறோம், உடனடியாக  ஒரு குறிப்பிட்ட விலாசத்தில் சென்று அந்த பெண்ணை பார்த்து வரும்படி எழுதி இருந்தது.  உடனடியாக, நான், ரமேஷ், டோமொனிக் "அமர் அக்பர் அந்தோனி" போல பெண் பார்க்க புனே கிளம்பினோம். இரவு முழுதும் ரயில் பயணம் செய்து காலை ஒரு 7 மணி போல் புனே சென்று அடைந்தோம்.


அங்கே நடந்தது தான் இந்த உண வெறி நிகழ்ச்சி.அந்த புனே நகரில் எங்களுக்கு எதுவும் தெரியாது. அருகில் இருந்த உணவகத்திற்கு சென்று காலை உணவிற்காக அமர்ந்தோம். அங்கே வந்த சர்வர் எங்கள் மூவரிடமும் ஒன்றுமே கேட்க்காமல் நேராக ஆளுக்கு நாலு இட்லியும் சாம்பாரும் சட்டினியும் பரிமாற்ற ஆரம்பித்தான். எங்கள் மூவரில் நண்பன் டொமினிக் சிறிது கோபக்காரன். அந்த சர்வரை அழைத்து, ஹிந்தியில், நாங்கள் எதுவுமே கேட்கவே இல்லையே, எங்களை கேட்காமல் ஏன் இட்லியை வைத்தாய் என்றான். அவன் அதற்கு பதிலாக சத்தமாக சிரித்து, நீங்கள் மூவரும் "மதராசி தானே" என்றான். ஆம் என்றோம். பிறகு இட்லி சாப்பிடாமல் உனக்கு வேற என்ன வேண்டும் என்றான். டொமினிக் சிறிது கோபமாக நாங்கள் "மதராசி" என்ற ஒரே காரணத்திற்க்காக இட்லி தான் சாப்பிடலாம் என்று நீ எப்படி நினைக்கலாம் என்று கேட்டான்.  அங்கே இருந்த மற்ற மாநில மக்கள் அனைவரும் எங்களை ஏதோ "இட்லி சாப்பிடும் வேற்று கிரக மனிதர்கள்" போல் பார்க்க ஆரம்பித்தார்கள்.



இவ்வளவு நேரமாக இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த கல்லா பெட்டி பெரியவர் எங்கள் அருகில் வந்து, "ஹிந்தியில்" மன்னிக்க வேண்டும் , அவன் செய்தது தவறு தான், ஆனாலும், நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் நானும் சரி, சர்வரும் சரி, ஏன் இங்கே உள்ள மற்ற எல்லோரும் நீங்கள் மூவரும் இட்லிதான் கேட்ப்பீர்கள் என்று பேசி கொண்டோம் என்றார். அவர் இந்த வார்த்தைகளை சொல்லியவுடனே அருகில் இருந்த அனைவரும் தம் தம் தலையை ஆட்டி வழி மொழிந்தனர். இதை பார்த்தவுடன் எனக்கு கெட்ட கோபம் வந்து விட்டது. எனக்கே கோபம் என்றால் டொமினிக் நிலைமையை யோசித்து பாருங்கள்.

அந்த சர்வரை சத்தம் போட்டு கூப்பிட்டு உடனே இந்த இட்லியை எங்கள் மேசையில் இருந்து அகற்றுமாறு ஆணையிட்டான். பூப்போல் இருந்த இட்லி எங்கள் மேசையை விட்டு பிரியும் போது எனக்கு உள்ளே ஒரு துக்கம். சில நிமிடங்கள் கழித்து அந்த "கல்லா பெட்டி பெரியவர்"  வேறு ஒரு சர்வரை எங்கள் மேசைக்கு அனுப்பினார். அந்த சர்வர் எங்கள் அருகில் வந்து என்ன சாப்பிட போறீர்கள் என்று கேட்டவுடன் நானும் ரமேசும் ஒன்றாக சேர்ந்து ஆளுக்கு நாலு இட்லி, கூடவே சாம்பார், சட்டினி என்றோம். இதை கேட்டவுடன் மற்றவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இன்று தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது, அந்நாள் வரை இட்லி என்பது ஒரு "நல்ல உணவு. ருசியான உணவு" என்று எண்ணிக்கொண்டு இருந்த நான் அன்று தான், அடடே இட்லிக்கும் தமிழனுக்கும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை போல் உள்ளது. தமிழனுக்கு உடல் ரீதியாக, மன  ரீதியாக ஏதோ பாதிப்பு. அதை ஏதோ ஒரு விதத்தில் இட்லி நிவர்த்தி செய்கிறது என்ற முடிவிற்கு வந்தேன். அந்த சர்வர் டொமினிகிடம் நீ ஏதும் சாப்பிடவில்லையா என்றான். டொமினிக் உடனடியாக இட்லியை தவிர வேறு என்ன உள்ளது என்றான். அதற்கு அவன் "தோசை" என்று சொல்ல டொமினிக் இரண்டு தோசை ஆர்டர் செய்தான்.  தோசை வரும் முன் எங்கள் இட்லி வந்து விட்டது. அதை பார்த்த டொமினிக், அடடே என்னாப்பா பூ போல் இருக்கிறதே, எனக்கு ஒரு உதவி செய், ஒரு நாலு இட்லி பார்சல் வாங்கி கொள், நான் வெளியே போய் சாப்பிட்டு கொள்கிறேன் என்றான். சற்று நேரம் கழித்து தோசை வந்தது. ஒரு தோசை எவ்வளவு என்று டொமினிக் கேட்டான் அதற்கு 2:50 என்று பதில் வந்தது. சரி எனக்கு ஒரு "முட்டை தோசை" கொடு என்றான். அந்த சர்வர் அதற்கு "முட்டை தோசை" ஒன்றுக்கு 4 ருபீஸ் என்றான். என்னப்பா? ஒரு முட்டை 75 பைசாதானே சாதா தோசை 2:50 அதற்கு மேல் நீ முட்டைக்கான 75 பைசாவை சேர்த்தாலும் 3:25 தானே இதற்க்கு ஏன் 4 ருப்பீஸ் என்று சொல்ல மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியது.

கடைசியாக அந்த தோசை சுட்டு கொண்டு இருந்த மலையாள நண்பர் "அந்த ஏழு நாட்கள்"  பாக்யராஜ் பாணியில், வேண்டும் என்றால் சாப்பிடு, இல்லாவிடில் நடையை கட்டு, இங்கே ஏன் தேவையற்ற விவாதம் என்றார்.  ஒருவேளையாக சாப்பிட்டு முடித்து பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். பெண் வீட்டின் உள்நுழையும் முன்பே அங்கு வந்த  தரகர் எங்கள் மூவரை பார்த்தவுடன் பேய் அறைந்தவர்  போல் மாறினார் (அந்த பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் சொல்லுகிறேன்) , பெண் பார்க்க வந்துள்ளாய், இதற்க்கு தனியாக வர வேண்டும் என்று தெரியாதா? ஏன் நண்பர்களை அழைத்துவந்தாய் என்று டொமினிகை கடிந்து கொண்டார். இவர் ஏன் இப்படி சொல்லுகின்றார் என்று புரியாத டொமினிக்,  நண்பர்கள் ஏன் வரகூடாது என்றான். அதற்கு அந்த தரகர், அந்த பெண் இவர்கள் ரெண்டு பேரில் ஒருவரின் மேல் ஆசை பட்டு விட்டால் உன் கதி அதோ கதி என்றார். அதற்கு டொமினிக், எங்கள் மூவரில் அந்த பெண் யாரை விரும்பி திருமணம் ஆனாலும் உம்முடைய பீஸ் வந்து விடும் என்று சொன்னான். அதை கேட்டவுடன் அந்த தரகர் அப்படியானால் இன்னும் ரெண்டு பேரை அழைத்து வந்து இருக்கலாமே என்றார். இந்த பேச்சை கேட்டவுடன் நானும் ரமேசும் மெதுவாக அங்கே இருந்தது வெட்டி கொண்டோம். நீ பெண் பார்த்துவிட்டு வா,  நாம் ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து அந்த இட்லி கடையில் சந்திப்போம் என்று சொல்லி கிளம்பினோம்.

நாங்கள் அங்கு இருந்து கிளம்பும் போது டொமினிக் மறக்காமல் அந்த இட்லி பார்சலை வாங்கி  கொண்டான். நாங்கள் இருவரும் அங்கு இருந்து கிளம்பி பொடி நடையாக அந்த கடையை வந்து சேர்ந்து அதே மேசையில் அமர, அதே சர்வர் அதே ஸ்டைலில் எங்கள் இருவரிடம் எதுவும் கேட்காமல் ஆளுக்கு நாலு இட்லி வைத்தான். மனதில் சிறித்து கொண்டே நாங்கள் உண்டு கொண்டு இருக்கையில் நண்பன் டொமினிக் ஆட்டோவில் வந்து இறங்கினான். உள்ளே வந்த அவன் அந்த மலையாள நண்பரிடம், ஒரு தோசை என்று சொல்லி அவர் அருகிலேயே நின்று கொண்டு அவர் சுடும் அழகை பார்த்து கொண்டு இருக்கும் போதே நான் நினைத்தது நடந்து விட்டது. அவர் தோசையை திருப்பும் வேளையில் டொமினிக் தன சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு முட்டையை எடுத்து உடைத்து அந்த தோசை மேல் ஊற்றி "நீ திருப்பி மட்டும் போட்டு கொடு" என்று சொன்னவுடன் அந்த தோசை சுடும் மலையாள நண்பனும் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டான்.


பின் குறிப்பு : பேய் அறைந்த கதையை பின் ஒரு நாள் கண்டிப்பாக சொல்லுகிறேன், பொறுமை ப்ளீஸ்.

தொடர்ச்சி .....இது என்ன உணவெறி?



அதை படிக்க இங்கே சொடுக்கவும்.


செவ்வாய், 4 மார்ச், 2014

Alice , Alice நானும் டேவிட்டும்.....

பெங்களூர் நகரில் வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் அது. அப்போது என் வயதோ 21. என்னை வாரந்தோறும் காலையில் இருந்து மாலை வரை இங்குள்ள ஒரு புகழ்பெற்ற மகளிர் கல்லூரியின் அருகில் தான் பார்க்க முடியும். தவறாக நினைக்காதீர்கள். இந்த கல்லூரியில் தான் நான் பணியாற்றி வந்தேன். முதுகலை முடிந்து தேர்வு முடிவு வருமுன்னே கிடைத்த வேலை, தவற விடுவேனா? ஒரே ஒரு பிரச்னை. இங்கே படிக்கும் பல மாணவியர்களுக்கு என்னை விட வயது கூட, அதனால் சில நேரங்களில் என்னையும் மீறி அவர்களை அக்கா என்று தவறாக அழைத்தது உண்டு.


எனக்கு இந்த கல்லூரியில் வேலை கிடைத்த ராசியோ என்னவோ, என் நண்பர்களின் எண்ணிக்கை பல மடங்கு ஆகிவிட்டது. ஊரில் உள்ள அத்தனை வாலிபர்களும் என்னிடம் மிகவும் அன்பாக பழக ஆரம்பித்தார்கள். நானும் என்னுள் உள்ள ஏதோ ஒரு நல்ல குணம் இவர்களுக்கு பிடித்துள்ளது என்று நினைத்து வாழ்கையை ஒட்டி கொண்டு இருந்தேன். தினமும் காலையில் என் KAWASAKI BAJAJ  எடுத்து கொண்டு போய் கல்லூரியின் உள்ள போகும் போதே அங்குள்ள பாதுகாவலர் "ஐயா தங்களின் நண்பர்கள் உள்ளே கல்லூரி உணவகத்தில் உமக்காக காத்து கொண்டு உள்ளனர் என்று". அவர்களுக்கு என் மேல் கொள்ளை பிரியம் என்று தான் நான் நம்பி இருந்தேன். சில வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது, இந்த நட்பு எனக்காக இல்லை, இவர்கள் கதையே (கடலையே)வேறு என்று.



இந்த இனிமையான நண்பர்களில் இருவர் தான் "சேகரும் டேவிட்டும்" இந்த இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தனர். ஒரே பள்ளி , ஒரே கிரிகெட் டீம், ஒரே சிகரெட், இருவரின் பெற்றோரும் நன்கு அறிந்தவர்கள். இவன் சோடா குடித்தால் அவன் ஏப்பம் விடுவான் அவன் சிகரெட் பிடித்தால் இவன் புகை விடுவான் அவ்வளவு நெருக்கம். இவ்வாறாக பகலில் கல்லூரி, மாலை நண்பர்கள் என்றும் வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் எங்கள் வாழ்கையில் ஒரு திருப்பம்.

 எங்கள் தெருவிற்கு ஒரு புதிய ஆங்கில -இந்திய குடும்பம் வந்தது. என் வீட்டில் என் அறையில் அமர்ந்து சன்னல் வழியாக நானும் நண்பர்கள் அனைவரும்  அந்த புதிய வரவை பார்த்து கொண்டு இருந்தோம். எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது போல் "இன்று போய் நாளை வா ராதிகா போல் "ஒரு ஆங்கிலோ இந்திய பெண் Alice. அடடே, பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போல் இருக்கிறதே என்று நினைத்தே எங்கள் அனைவர் முகத்திலும் வாயெல்லாம் பல்.

சரி, என்னோமோ ஏதோ, சிறிய வயதில் இருந்தே எனக்குள் ஒரு பழக்கம். ஒரு விஷயத்தை கண்டவுடனே அது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று சரியாக கணக்கு போட்டு அந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நடந்து கொள்ளுபவன் நான். இந்த Alice பார்த்தவுடன் திருவிளையாடல் தருமி பாணியில் "இது ந(மக்கு) இல்லை என்பதை புரிந்து கொண்டு என் நேரத்தை வீணடிக்காமல் வாழ்ந்து வந்தேன். எனக்கே ஏன் என்று தெரியவில்லை  , இந்த Alice என் வீட்டின் எதிரே குடியேறிய பின் என் நண்பர்களின் எண்ணிக்கை மீண்டும் வளர்ந்து கொண்டே போனது. அடிக்கடி இவர்கள் வந்து கதவை தட்டியதால் என் வீட்டின் பெரியோர்கள் என்னை கண்டித்து விட்டார்கள், அதனால் என் நண்பர்களை இனி வீட்டிற்க்கு வராதீர்கள் வெளியில் தெருமுனையில் சந்திப்போம் என்றேன். நான் இந்த வார்த்தைகளை சொன்னவுடனே நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

மற்ற நண்பர்கள் வருவது நின்றாலும் சேகரும் டேவிட்டும் எங்கள் பக்கத்துக்கு வீடு தானே. அதனால் நாங்கள் மூவரும் என் அறையில் கூடுவோம். இப்படியாக நாட்கள் ஓடும் வேளையில் சேகர் ஒருநாள் துண்டை காணோம் துணியை காணோம் என்று என்னிடம் ஓடி வந்தான்.  என்ன ஆகியது  நண்பா என்று கேட்ட எனக்கு அவன் கொடுத்த பதில் அதிர்ச்சியை விட ஆச்சரியத்தை கொடுத்தது. மாம்ஸ் நான் Alice  மனமார காதலிக்கேறேன் என்றான். அட பாவி, இது அவளுக்கு தெரியுமா என்றேன். இல்லை மாம்ஸ். என் காதலை எப்படி சொல்வது என்று தெரியவில்லை அதனால் தான் உன்னிடம் வந்தேன் என்றான். இப்படி நாங்கள் பேசி கொண்டு இருக்கையிலே டேவிட்  மூச்சு தெறிக்க ஓடி வந்தான். அவன் முகத்தில் ஏதோ டைடானிக் கப்பலின்  டிக்கெட்டை தவற விட்டது போல் ஒரு பரபரப்பு. என் அறையில் அமர்ந்த இருந்த சேகரையும் பார்த்து "சேகர் நீயும் இங்கே தான் இருக்கியா? நல்லதா போச்சு "கும்பிட போன தெய்வம் குறுக்குல தான் மட்டும் வராம பூசாரியையும் கூட்டி  வந்தது போல்" என்று சொல்லி அமர்ந்தான்.
சரி வந்த விஷயத்தை சொல் என்று டேவிட்டிடம் கேட்டவுடன், அவன் தயங்கி தயங்கி சொன்னான். மாம்ஸ், நான் Alice மனதார காதலிக்கேறேன் என்று. நான் உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி "நீயுமா"? என்றேன், அவன் உடனே , நீயுமான்னு ஏன் கேட்ட, வேற எவனாவது அவளை காதலிக்கிறானா என்றான். சிறிது சுதாரித்து சாரி, நீயா என்பதற்கு பதிலாக "நாக்கு வழுக்கி" நீயுமா என்றேன், வேறு  ஒன்றும் இல்லை என்றேன்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த சேகரின் முகம் பேய் அறைந்ததை  (பேய் அறைந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்) போல் ஆகிவிட்டது. அதை கண்டுகொண்ட டேவிட், "டேய் சேகர், காதலித்து டென்சனில் இறுக்க வேண்டியது நான், நீ ஏன்டா பீல் பண்ற என்றான். இதை சொல்லி கொண்டே இருக்கையில் எதிர் வீட்டு அம்மணியின் அம்மா  ஆட்டோ பிடிக்க நிற்ப்பதை கவனித்த டேவிட், உடனே என் வண்டியை கடன் வாங்கி கொண்டு அவர்கள் ஆட்டோவை ஏற்பாடு செய்ய கிளம்பிவிட்டான்.
இப்போது சேகரும் நானும் தனியே இந்த அறையில், நான் மெதுவாக சேகரிடம், என்னப்பா? காதலா-நட்ப்பா என்று கேட்டேன். அடுத்த அரை மணிநேரத்தில் சேகர் அந்த சிறு அறையில் கையில் புகையுடன் மேலேயும் கீழேயும் மாறி மாறி பார்த்து கிட்டதட்ட 18 கிலோ மீட்டர் நடந்து விட்டு,  நான் ஒரு முடுவுக்கு வந்துவிட்டேன். நண்பனுக்காக காதலை தியாகம் பண்ணிவிட்டேன் என்றான். நான் நெஞ்சு நெகிழ்ந்து, "மாப்பு உன்னை போல் ஒரு நண்பன் கிடைக்க ஒருவன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்" என்றேன்.


சிறிது நேரம் கழித்து வந்த டேவிட்டிடம், உன் காதல் மேட்டர் அந்த பெண்ணுக்கு தெரியுமா என்றேன்? அவன் அதற்க்கு இல்லை, அதற்க்குதான் நேரம் பார்த்து கொண்டு இருக்கிறேன், என்றான். பிறகு சில சிறு சிறு வேலைகளை பேசி முடிக்கும் போது டேவிட் சேகரிடம்,  "நீதான் என் காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என்றான்". நான் இடையில் தலையிட்டு உன் காதலை நீ போய் சொல்லுவது தான் ஆண்மைக்கு அழகு, அவனை அனுப்பாதே என்றேன். ஆனால் சேகரோ இடையே வந்து , பரவாயில்லை நானே நாளை அவளை நேராக சந்தித்து உன் காதலை வெளிப்படுத்துகிறேன் என்றான். இருவரும் கை குலுக்கி விட்டு ஷோலே படத்தில் வரும் "யே தோஸ்த்து கி" என்ற பாடலை பாடி கொண்டே கிளம்பி விட்டனர்.
மறுநாள் நான் வேலை முடிந்து வீட்டிற்க்கு திரும்பும் வேளையில் என் வீட்டின் எதிரில் போலீஸ் ஜீப், இரண்டு - மூன்று போலீஸ்காரர்கள் மற்றும் எதிர் வீடு குடும்பம் அனைவரும் நின்றுகொண்டு இருந்தனர். அருகில் இருந்த கடையில் போலீஸ் எனக்கு இல்லை என்று உறுதி செய்து விட்டு ஜீப் அருகே சென்ற எனக்கு ஒரே அதிர்ச்சி.



அந்த ஜீப்பின் உள்ளே சேகரும் டேவிட்டும் (ஆனால் அந்த பாடல் மிஸ்ஸிங்). என்னடா விஷயம் என்று கேட்டவுடன், டேவிட் வாய் திறந்து, "மாம்ஸ், இந்த பொறம்போக்கு சேகர் என்னை திட்டம் போட்டு உள்ள தள்ளிட்டான் என்றான். கொஞ்சம் விவரமாய் சொல்லு என்றேன். இதை என் வாயல எப்படி சொல்லுவது, அவனையே கேள் என்றான். சேகர், விஷயத்த சொல்லுடா என்றேன். அவன் அதற்க்கு பதிலாக, நான் எதுவும் தவறாக செய்யவில்லை. இவன் காதலை அவளிடம் சொல்லலாம் என்று சற்று நேரம் முன்பு அவளின் இல்லத்திற்கு சென்றேன். அப்போது அவள் தேவதை போல் வந்த காட்சியை பார்த்ததும் நான் சற்று தடுமாறி விட்டேன். அது சரி, போலீஸ் வர மாதிரி அப்படி என்னதாண்டா செய்த என்று கேட்டேன். நான் ஒன்னும் செய்யவில்லை மாம்ஸ். அவள் அழகில் என்னையும் மறந்து, "Alice , Alice  நானும் டேவிட்டும் We both Love you" என்று சொல்லிவிட்டேன் என்றான். 

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...