செவ்வாய், 30 டிசம்பர், 2014

பொறுமையின் நிறம் சிவப்பு !

டிசம்பர் 30, மாலை 6:30க்கு...

டாடி...

எப்ப  வீட்டுக்கு வருவிங்க..?

தெரியவில்லை மகளே, அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கு, என்ன விஷயம்?

நாளைக்கு இரவு புத்தாண்டிற்கு கோயிலுக்கு போக வேண்டும் அல்லவா அதற்கு நான் ஒரு டிரஸ் வாங்க வேண்டும்.. எப்ப வருவிங்க?

திங்கள், 29 டிசம்பர், 2014

நலம் தானா? நலம் தானா? ....உடலும் உள்ளமும்....!

வளைகுடா நாட்டின் நாட்கள்....அலுவலத்தில் இன்னொரு நாள்...

மிஸ்டர் விசு...

சொல்லுங்க மிஸ்டர் குஞ்சு குஞ்சு...
(என்னடா இவர் பெயர் வித்தியாசமாக இருகின்றதே என்று நீங்கள் பார்ப்பது புரிங்கின்றது... அதில் பெரிய கதையே உண்டு... அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)

இந்த அரசு அலுவலத்தில் இருந்து நம்ம போன மாச "பில்" இன்னும்  டெபொசிட் பண்ணவில்லை. நான் எத்தனை முறை போன் பண்ணியும் சரியான பதில் கிடைக்கவில்லை, நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

ஓகே ... குஞ்சு குஞ்சு.. ஐ வில் டேக் கேர் ஆப் இட். தேங்க்ஸ்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி!


சென்ற வாரம் தாய்க்கு பின் தாரம் என்ற ஒரு பதிவிட்டு இருந்தேன், அதன் தொடர்ச்சி தான் இது. அந்த பதிவை படித்து விட்டு இதை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அதை படிக்க இங்கே சொடுக்கவும்...தாய்க்கு பின் தாரம்


என்னங்க .... சின்னவ குரல் கொஞ்சம் வித்யாசமா இருக்கே, நீங்க கவனித்தீர்களா?

இல்லையே, அப்படி ஒன்னும் தெரியவில்லையே...

உங்க காதுல... ஈயத்த ....

காலையில் ஈர துணிய தான் நானே காய வச்சிட்டேன்...

ரொம்ப சந்தோசம்ங்க ...சரி, சின்னவளிடம் கொஞ்சம் பேச்சி கொடுத்து குரலில் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா பாருங்க!

ஐந்து நிமிடம் கழித்து....

சனி, 27 டிசம்பர், 2014

புதன் கிழமை சைவம் !

நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் எழுத சிறிது கூட நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் என் நண்பன் கோயில் பிள்ளை இருக்கையில் எனக்கென கவலை.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

"பாட்டுக்கு (பாட்டு) பூட்டு"

பண்டிகை நாட்கள். குடும்பம்-உறவினர்கள்-நட்ப்புகள் என்று ஓடு ஆடி திரிந்து கொண்டு இருக்கையில், பதிவு எழுத நேரம் இல்லையே என்று வருந்தி கொண்டே .. .சரி எழுதாவிட்டாலும் பரவாயில்லை, சில பதிவுகளை படிக்கலாமே என்று நினைத்தேன்.

மனைவியிடமே.... " I Love you" வா? பிச்சி புடுவேன் பிச்சி...

நேரம் இல்லாத காரணத்தினால்  ஓர் மீள் பதிவு.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. "திருமணமான இந்திய தம்பதியருக்கான அறிவுரை" நிகழ்ச்சி. இந்த அறிவுரையை வழங்கியவர் நன்கு படித்த ஓர் பேச்சாளார்.
வெளி நாட்டு ஆட்களை பற்றி தெரியும். கொழம்பில் உப்பு இல்லாவிட்டால் கூட மனைவியும் - புருஷனும், வக்கீல், கௌன்செலர் என்று செல்வார்கள். ஆனால் நாம் இந்தியன் ஆயிற்றே. அதிலும் தமிழன் ஆயிற்றே. நம் வீட்டில் நடப்பது நாலு சுவற்றில் தான் நடக்க வேண்டும் அது வெளியே தெரிய கூடாது என்று நினைப்பவர்கள் ஆயிற்றே.



இந்த அழைப்பு வந்தவுடன், நான் சற்றும் யோசிக்காமல் எங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக போய் கொண்டு இருக்கிறது. இந்த அறிவுரை எல்லாம் எனக்கு தேவை இல்லை என்று சொன்னேன். இருந்தாலும், அது சாத்தியமாகது என்று அவர்கள் சில கேள்வி கேட்க்க ஆரம்பித்தனர். அதில் சில கேள்விகள்.

கடைசியாக எப்போது மனைவியிடம் " I love you " என்று சொன்னாய்?

அட பாவிங்களா! எங்கள் தலைமுறையில் ... நாங்கள் அன்பை செயலில் காட்டுவோம் ஆனால் வார்த்தைகளில் சொல்ல மாட்டோம், அதனால் நான் என் மனைவியிடம் இதுவரை... " I love you" என்று சொன்னது இல்லை.

ஒரு மனைவியிடம் " I love you" என்று சொல்லாத நீ எல்லாம் ஒரு மனிதனா?
இப்படி வாழும் உனக்கு தான் இந்த அறிவுரை தேவை.

நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க. இது வரை அவர்களும் என்னிடம் " I love you" என்று சொன்னது இல்லை. ஆனாலும், அவர்கள் என் மேல் உயிரே வைத்து உள்ளார்கள் என்று எனக்கு தெரியும் என்றேன்.

இருக்கவே முடியாது .. எங்கே உன் மனைவியை எங்கள் எதிரில் தொலை பேசியில் அழைத்து (ஸ்பிகரில்) அவர்களிடம்  " I love you" என்று சொல்.

வேண்டாங்க, அவர்களுக்கு இது எல்லாம் பிடிக்காது.

அது எப்படி அவங்களுக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்?

அட பாவிங்களே, அவங்களோடு 15 வருஷம் குப்பை கொட்டுறனே, இது கூடவா தெரியாது.

இல்லை, எங்களுக்காக ஒரு முறை சொல்லு.


 ரிங்.. ரிங் .. .ரிங்கியது..


ஹலோ..

ஹலோ மா! எங்க இருக்க?

எதனா அவசரமா பேசணுமா? நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்.

அது ஒன்னும் இல்ல...உன்னிடம் " I love you" சொல்லாம்னு தான் போன் பண்ணேன்.

போன் கீழே விழுந்த சத்தம் கேட்டது.

என்ன சொன்னீங்க..

ஒன்னும் இல்ல, நீ பிசிதானே, நான் அப்புறமா கூப்பிடுறன்.

பிசியும் இல்ல, ஒரு இழவும் இல்ல...நீங்க என்ன சொன்னீங்க. எனக்கு சரியா புரியில.

ஒன்னும் இல்ல மா... " I love you" சொல்லாம்னு கூப்பிட்டான்.

நானும் அதை தான் சொன்னீங்கனு நினைச்சேன். என்ன ஆச்சிங்க உங்களுக்கு, எந்த தப்பா இருந்தாலும் சொல்லுங்க நான் மன்னிச்சிடுறேன். ஆனால், உண்மையை மட்டும் சொல்லீடுங்க.

ஐயோ, நான் எந்த தப்பும் பண்ணுல.. சும்மா உன்னிடம் " I love you" சொல்லி என் அன்பை காட்டலாம்னு யோசித்தேன். தயவு செய்து என்னை நம்பு. நான் எந்த தப்பும் பண்ணல.

இல்லங்க. போன வருஷம் நம்ம பக்கத்து தெரு வாசகம் இல்ல... திருவாசகம், இந்த மாதிரி தான் அவர் மனைவிகிட்ட மூணு நாள் தொடர்ந்து " I love you"னு சொல்லி வந்தாராம். நாலாவது நாள் தான் அவருக்கும் அவர் கூட வேலை செய்யற இடத்தில இருக்க யாரோ ஒரு அம்மணிக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி அதை மறைக்க தான் இந்த மாதிரி " I love you" னு சொன்னாருன்னு தெரிய வந்தது.

நான் போய் அப்படி எல்லாம் செய்வேனா? சும்மா தான் தெரியாம சொல்லிட்டேன்.

அது எல்லாம் எனக்கு தெரியாது, இன்னிக்கு எனக்கு இந்த உண்மை தெரிஞ்சே ஆகணும். ஏன் என்னை பார்த்து "I love you"னு சொன்னீங்க.

ஐயோ.. நீ என் மனைவி தானே, அது தான் சொன்னேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடு. இனிமேல் அந்த மாதிரி சொல்ல மாட்டேன்.

நானும் அதே தான் சொல்லுறேன்..நான் உங்க மனைவி தானே, எந்த ஒரு தமிழன் மனைவியிடம் " I love you" ன்னு சொன்னான். உண்மைய சொல்லுங்க.. எவ அவ?

அய்யோ.. சத்தியமா அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.

எனக்கு உண்மை தெரியனும். இல்லாட்டி, பிள்ளைகளிடம் சொல்லிடுவேன்.

ஐயோ.. இதில் பிள்ளைகளை என் சேக்குற..நான் உண்மையை இப்பவே சொல்றேன். இங்க 2-3 பேர் வந்து நம்ப ரெண்டு பேரையும் "திருமணமான தம்பதிகளுக்கான அறிவுரை நிகழ்ச்சிக்கு" கூப்பிடாங்க. நான் அவர்களிடம் எனக்கு இது எல்லாம் தேவை இல்லை, வாழ்க்கை நல்லா ஓடுதுன்னு சொன்னேன். அதற்க்கு, நீ எப்ப கடைசியா உன் மனைவியிடம் " I love you" சொன்னாய் என்றார்கள். நான் இதுவரை இல்லை என்றேன், அதற்க்கு என்னை ரொம்ப "போர்ஸ்" பண்ணி உன்னிடம் சொல்ல வச்சிடாங்க. என்ன மன்னிச்சிடு.

அந்த 2-3 பேர் தமிழர்களா?

ஆமா.என் கேக்குற..?

அவங்க மூணு பேரை அவனவன் எப்ப அவனவன் மனைவியிடம் ' I love you" ன்னு சொன்னான்னு கேளுங்க...

நீயே ஸ்பீக்கரில் தான் இருக்க... நீயே கேளு.

வணக்கம்.. நீங்க தான் என் வீட்டுகாரை என்னிடம் "  I love you " சொல்ல சொன்னீங்களா?

ஆமா மேடம். நீங்க ரொம்ப சந்தோஷ படுவிங்கன்னு நினைத்தோம்.

"சும்மா கிடக்கிற சங்கை ஊதி" ஏன்யா கெடுக்குரீங்க. குடும்பத்தில் குழப்பத்த உண்டு பண்றிங்களே.

சாரி மேடம், எல்லாம் உங்க குடும்ப வாழ்க்கை நல்ல இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான்.

அது சரி, இப்படி ஊரானிடம் எல்லாம் போய் மனைவியிடம் " I love you" சொல்லுனு சொல்றிங்களே... நீங்க எப்ப உங்க மனைவியிடம் கடைசியா " I love you" ன்னு சொன்னீங்க..

அது வந்து.. வந்து.. வந்து...

அது வராது...ஏன்னா, உங்க ஊர் கலாச்சாரம், பழக்கம்... அன்பை செயலில் காட்டும், வார்த்தையில் சொல்லாது.

இல்ல மேடம், நாலு பேருக்கு எதிரில் கணவன் மனைவி "கை கோர்த்து கொண்டு அன்பாக இந்த மாதிரி " I love you" ன்னு சொன்னா வாழ்க்கை இனிக்கும் இல்லையா?

அட பாவிங்களா... அது வேண்டும் என்றால் வெள்ளைகாரர்கள் கலாச்சாரமாக இருக்கலாம். நம்ம ஆளுங்க.. குறிப்பா, தமிழர்கள்.. பொது இடத்தில கை கோர்த்து கொண்டு .. அன்பை அனைவருக்கு எதிரில் பகிர்ந்தார்கள் என்றால்.. அங்கே அவர்கள் வீட்டில் 4 சுவர்களின் உள்ளே செம சண்டைன்னு அர்த்தம். அவங்க போடுற சண்டை வெளியே தெரிய கூடாதுன்னு, வெளியே வரும் பொது மட்டும் கை கோர்த்து கொண்டு.. டார்லிங் டார்லிங்.. டார்லிங்.... " I love you ....னு பாடுவாங்க..உள்ள பிரச்சனை தான்.

நீங்க சரியா சொல்றீங்க மேடம். இவ்வளவு புத்திசாலிதனமா பேசுறிங்களே... இந்த "திருமணமான தம்பதிகளுக்கான அறிவுரை" நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டா நாங்க ரொம்ப பெருமை அடைவோம்.

அப்படியா? இந்த நிகழ்ச்சியினால், மனைவிகளுக்கு என்ன பயன்?

மேடம், நீங்க வந்து பாருங்க புரியும்.. போன மீடிங்கில் கூட..முரட்டு காளை மாதிரி வந்த ஆளை பசு மாடு மாதிரி மாத்தி அனுப்பி வைச்சோம்.

அப்படியா... அப்ப கண்டிப்பா வரோம்..

பின் குறிப்பு : அங்கே என்ன நடந்தது என்பதை இங்கே படியுங்கள்.

http://www.visuawesome.com/

புதன், 24 டிசம்பர், 2014

என் கிறிஸ்மஸ் கதை !

பல வருடங்களுக்கு முன் வளைகுடா நாடுகளில் வாழும் போது கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஓர் நிகழ்ச்சி:

இன்னொரு கிறிஸ்மஸ், இன்னொரு வருடம், குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் துக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு சிறிது நேரமாவது சந்தோசமாக இருப்போம்.  நீங்கள் அனைவரும் தம் தம் இல்லத்திற்கு போன் செய்து பேசி விட்டீர்களா? அப்படி போன் செய்யாதவர்கள் எங்கள் வீட்டு போனை உபயோகபடுத்தி கொள்ளலாம்.

சொல்லி முடித்தார், எங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பர். அவர் வளைகுடா பகுதியில் பல வருடங்கள் வாழ்ந்தவர். உயர்ந்த பதவியில் இருப்பவர். அதனால் அவர் தம் குடும்பத்தோடு அங்கே வாழ்ந்து வந்தார் . இவ்வாறான நல்ல நாட்களில் அவர் தன் சக பணியாளர்களையும் நண்பர்களையும் தன் இல்லத்தில் அழைத்து விருந்து வைத்து உபசரிப்பார்.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

கோழி கூவுது .... கொக்கர "கோ"

சென்ற வாரம் நான் எழுதிய பதிவில் "அச்சச்சோ புன்னகை" என்ற பதிவில் அருமை நண்பன் சம்பத் என்னிடம்,

"என்ன விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?"

கேட்டதாக எழுதி இருந்தேன். இதை படித்த என் கல்லூரி தோழனும் சக பதிவருமாகிய கோயில்பிள்ளை அவர்கள் (இவர் ஒரு தமிழ் விரும்பி, அருமையான பதிவாளர். இவரின் படைப்புக்களை படிக்க இங்கே சொடுக்கவும்), இப்படி பொதுவாக சொன்னால் எப்படி? கோழி கூவுற நேரத்தையும் மற்றும் கோழி கொழம்பு கொதிக்கும் நேரத்தையும் சற்று விவரித்தால் தானே நீ எத்தனை மணிக்கு எழுவாய் என்பது படிப்பவர்களுக்கு புரியும் என்றார். அதனால் தான் இந்த பதிவு.

இயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.

இரவு படுக்கைக்கு போகும் முன் செய்தியில் " கூத்தபிரான் அவர்கள் மறைவு" என்பதை படித்து விட்டு அவருக்கு ஒரு அஞ்சலி பதிவை போட்டு விட்டு தான் படுக்கைக்கு சென்றேன். படுக்கையில் தூக்கம் தழுவும் முன் அவரின் கிரிக்கெட் வர்ணனை நினைவில் வர எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

திங்கள், 22 டிசம்பர், 2014

நன்றி கூத்தபிரான் அவர்களே...

"இதோ வருகிறார், மால்கம் மார்ஷல், விக்கடிற்க்கும் மேல் அரபு நாட்டு குதிரை போல் நளினமாக ஓடி வந்து வேகமாக வீசுகிறார். மார்பளவு உயரத்தில் குதித்து விக்கடிற்க்கும் வெளியே சென்ற பந்தை வெங்கசர்க்கார் தொட்டு விட அந்த மட்டையின் விளிம்பில் பட்டு  ஸ்லிப் திசையை நோக்கி பறக்க, செல்லாமாக தான் வளர்த்த பச்சை கிளியை தன கையினால் அள்ளி அணைத்து வாரி கொள்வதை போல் சிறித்து கொண்டே பிடித்து கொண்டார் ஹார்ப்பர். இது விக்கடிற்க்கும் வெளியே சென்ற பந்து. இதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை விட்டு விட்டு தொட்டு விட்டார் வெங்க்சர்கார். வெளியில் போகும் பாம்பை ஏன் அடிக்க வேண்டும் அது நம்மை சீண்ட வேண்டும் நாம் இறக்க வேண்டும்? "

மனைவிக்கு "கிப்ட்" வாங்குவதெல்லாம்...இறைவன்,!

அலை பேசி அலறியது...

ஹலோ ... விசு பேசுறேன்..

வாத்தியாரே ... பிள்ளை பேசுறேன்.

சொல்லு மாப்பு.. எங்கயா? ஆளையே காணோம்..

கழுதை கெட்டா குட்டி சுவர், இங்கதான் பொண்டாட்டி பிள்ளைங்கள சந்தோசமா வச்சிக்க பாடு பட்டுன்னு இருக்கிறேன்.

என்ன பிள்ளை? என்னமோ உலகத்திலேயே நீ தான் பொண்டாட்டி   புள்ளைங்கள சந்தோசமா வச்ச்சிக்க பாடு பற்ற மாதிரி பேசுற? ஆம்பிளையா பொறந்த எல்லா அப்பாவிகளும் இதை தானே செய்கிறோம்.

சனி, 20 டிசம்பர், 2014

மின்சாரம் அது சம்சாரம்

விசு ... வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சி.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோடு வாயேன், இங்கே இருக்க இந்தியன் ஹோட்டல் எங்கேயாவது போய்  சாப்பிட்டு வரலாம்.

தண்ட பாணி! உனக்கு பேரு வைச்சவங்க வாய்க்கு சக்கரை தாண்ட போடணும். பாவி மவனே, மெதுவா பேசு. எங்க வீட்டு அம்மாவிற்கு நீ இப்ப சொன்னது கேட்டுச்சி ... எனக்கு பால் தான் !

என்ன விசு , ஆள்மட்டும் ஆறு அடி ரெண்டு அங்குலம், ஆத்துகாரிட்ட மட்டும் இவ்வளவு பயம் !

வெள்ளி, 19 டிசம்பர், 2014

நம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்.

கல்லூரி நாட்களில் விரும்பி பார்த்த மற்றொரு படம் பாரதிராஜா - கமல் - இளையராஜா கூட்டணியில் வந்த "ஒரு கைதியின் டைரி". இந்த படத்தின் கதை - திரைகதை பாக்யராஜ் என்று போட்டு இருந்தாலும், இந்த படத்தின் திரை கதைமட்டுமே பாக்யராஜ் ஆவார். இப்படத்தின் கதை  Alexandre Dumas     அவர்கள் எழுதிய  The Count of Monte Christo (  இது முதலில் நாவலாக வந்து பிறகு அதே பெயரில் திரை படம் ஆகியது ) கதையின் தமிழாக்கம்.
சரி, நான் சொல்ல வந்த விஷயமே வேறு. அதற்க்கு போகலாமா?

புதன், 17 டிசம்பர், 2014

அச்சச்சோ புன்னகை ....

என்னா விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?

அது எல்லாம் ஒன்னும் இல்ல? நான் எப்போதும் போல தான் காலையில் ஐந்து மணிக்கு தான் எழுறேன்.

டேய், எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சி, இதில் நீ வேற..
உண்மைய சொல்லு..

மச்சி, இந்த மாதிரி பொதுவா "உண்மைய சொல்லுன்னு" யாராவது கேட்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா பதில் சொல்ல வேண்டும். அவங்க எதோ கேட்க போய் நம்ப நம்மை பற்றிய தேவையில்லாத விஷயத்தை எல்லாம் போட்டு உடைச்சிடுவோம்.

சரி, நீ விஷயத்திற்கு வா, என்ன விஷயம்? இப்ப எல்லாம் காலையில் 5 மணிக்கு எழுந்து வெளிய போற?

சம்பத்து.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கும்..அதில் உனக்கு என்ன பிரச்சனை?



இல்ல நானும் ஒரு மாதமா பார்கின்றேன், நீ காலையில் எழுந்து உமா படிக்கின்றாளே அதே டைப்பிங் வகுப்பு நடக்கும் இடத்திற்கு போற. என்ன விஷயம்?

செவ்வாய், 16 டிசம்பர், 2014

கிறிஸ்மஸ் .. "உன் கண்ணில் நீர் வழிந்தால்..."

பள்ளி காலத்தின் இறுதி ஆண்டு ....என் அருமை தங்கை புற்றுநோயோடு நான்கு வருடங்கள் போராடி பின்னர் போராட சக்தி இல்லாமல் இறைவனடி சேர்ந்த வருடம்...

குடியரசு தினமான ஜன 26ம் தேதி பிறந்து  சுதந்திர நாளானா ஆகஸ்ட் 15ம் தேதி தன் 14ம் வயதில் உயிர் நீத்த நாள்.  அவள் பிரிந்து 4 மாதம் தானே ஆகின்றது. கிறிஸ்மஸ் எப்படி கொண்டாட முடியும்? வீட்டில் அலங்காரமும் இல்லை, தின்பண்டங்களும் இல்லை, சிரிப்பும் இல்லை மற்றும் வழக்கமாக இருக்கும் உறவினர் வருகையும் இல்லை.

சென்ற வருடம் இருந்த மகள் - தங்கை இப்போது இல்லையே என்று ஏங்கி அழுது கொண்டே வீட்டில் உள்ள அனைவரும்  டிசம்பர் 24ம் தேதி இரவு உறங்க சென்றோம்.

திங்கள், 15 டிசம்பர், 2014

இடஞ்சூட்டி பொருள் விளக்கு ..

நண்பர்கள் சிலர் சேர்ந்து மகிழ்வாக இருக்கும் போது எடுத்த படம். 

1.இந்த படம் எடுத்த நாள் - நிகழ்ச்சி எதுவாய் இருக்கும்? 

2. இவர்களின் நட்ப்பு எத்தனை நாட்கள் நட்ப்பு? 

3.இவர்களின் இந்த சிரிப்போடு கலந்த பேச்சின் "மையம்" எதுவாக இருக்கும்?

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எனக்கு ஒரு மகன் பிறப்பான்...

என்ன விசு... எப்பவும் ரொம்ப ஜாலியா இருப்ப.. சில  நாளாவே கொஞ்சம் "பீலிங்கா" இருக்க மாதிரி தெரியுதே..

அப்படியெல்லாம் இல்ல சாரதி.. அப்படியே தான் இருக்கேன்...

வாத்தியாரே... நானும் கேட்கவேண்டும் என்று யோசித்தேன்... நீ கொஞ்சம் "பீலிங்கா" தான் இருக்க.. இந்த மாதிரி நேரத்தில் நண்பர்களிடம் மனம் திறந்து பேசவேண்டும்.. சொல்லு வாத்தியாரே..

டேய்.. தண்டபாணி...நம்ம எல்லாம் தமிழன்கள். மனம் திறந்து பேசுன்னு சொல்லுவோம். பேசிய ரெண்டு நிமிஷத்தில்... கதை கந்தல் ஆகிடும்... ஆளை விடுங்க.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தாய்க்கு பின் தாரம்!

அலை பேசி அலறியது...

ஹலோ.. விசு பேசுறேன்..

வாத்தியாரே .. தண்டபாணி பேசறேன். உன்னிடம் ஓர் முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா? இல்லை அப்புறம் கூப்பிட்டா?

இப்ப கொஞ்சம் பிசி தான் தண்டம், இருந்தாலும் இப்பவே சொல்லு. அப்புறம்ன்னு சொல்லுன்னு போனாலும்...மனசெல்லாம் நீ என்ன பேச வந்தே என்ற எண்ணத்திலேயே இருக்கும் .. விஷயத்தை சொல்லு.

வியாழன், 11 டிசம்பர், 2014

லிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..

ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வீட்டிற்க்கு வரும் வழியில்...அலை பேசி அலறியது..

விசு...

சொல்லு பாணி..

என்ன பண்ற?

ஒன்னும் இல்ல பாணி...மாடு கட்டி போரடித்தா பத்தாதுன்னு யானை வாங்கலாமான்னு யோசித்து கொண்டு இருக்கேன். நீ என்னா நினைக்கிற? மாடே போதுமா ? இல்ல யானை வாங்கலாமா? இல்லை உங்க ஊர் ஸ்டைலில் ரோட்டில் போட்டு விட்டு போற வர வண்டியை வச்சி இலவசமா போரடிக்கலாமா?

புதன், 10 டிசம்பர், 2014

ரஜினிகாந்த் படம் ரிலிஸ்! முதல் நாள்.. முதல் காட்சி...

விசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு கல்லூரிக்கு வந்து விடு, கும்பலா போய் தாக்கிடலாம்.

டேய்.. சத்தமா பேசாதா, வீட்டில் அம்மா இருக்காங்க, நீ சொன்னது மட்டும் காதில் விழுந்தது.. மவனே.. உங்க அம்மா எங்க அம்மா, மற்றும் ஊரில் இருக்கிற எல்லா அம்மாக்களும் நாளைக்கு கல்லூரிக்கு வந்து அவங்க அவங்க பிள்ளைகள் ஒழுங்கா படிக்குதா இல்ல சினிமாவிற்கு போகுதான்னு பார்க்க வந்துடுவாங்க...

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 2)

இது ஒரு தொடர்ச்சி பதிவு, சென்ற பதிவை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இங்கே வருமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன். சென்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

பார்த்தால்.. விமானத்தில் ஒரே கூச்சல் குழப்பம். என்ன நடந்தது..?

தேவையான வெளிச்சமும் இல்லை, முற்றுமாக இருட்டும் இல்லாமல் ரெண்டும்கெட்டான் போல் ஒரு நிலைமை. எனக்கும் அருகில் இருந்த நபர்...

ஐயையோ..."டோன்ட் ஓபன் இட்" என்று சத்தம் போட்டு கொண்டு முன் வரிசையை நோக்கி ஓட முயற்சிகையில், அங்கே வரிசையில் அமர்ந்து இருந்த பயணியின் கால் தடுக்கி விழுந்தார்.

என்ன ஆயிற்று, என்று நான் விசாரிக்கும் முன்பு தான் அந்த 6 பயணிகளில் ஒருவர் அந்த அவசர கதவை திறக்க முயன்று கொண்டு இருந்ததை பார்த்தேன்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 1)

இது ஒரு தொடர்ச்சி பதிவு, சென்ற பதிவை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இங்கே வருமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன். சென்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


என்னடா இது.. விமானம் ஆரம்பித்து இன்னும் 20 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் குறட்டையா என்று அந்த இருக்கையில் அமர்ந்து  இருந்தவர்களை பார்த்த நான் பேய் அறைந்தவன் போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)  ஆனேன்.

விமானம் ஆரம்பித்து சில நிமிடங்கள் தான் ஆகின்றது. அதற்குள் தூக்கமா?  யார் இந்த கள்ளம் கபடம் இல்லாத ஆட்கள் என்று அவசர வழி வரிசையில் அமர்ந்து இருந்தோரை நோட்டமிட்டேன் அதில் அமர்ந்து இருந்த ஆறு பேரும் தாய்குலங்கள்.  இவர்கள் ஆறு பேருமே சராசரி மனிதர்களை விட சற்று எடை அதிகம் உள்ளவர்களாக காணப்பட்டனர்.

திங்கள், 8 டிசம்பர், 2014

அவசர வழியும் .. .வழி மேல் விழியும்

அருமை அண்ணன் அல்பி   ( பரதேசி என்னும் பெயரில் எழுதும் பதிவாளர் )  அவர்கள் அழைப்பை ஏற்று சென்ற சனிக்கிழமை நியூயார்க் நகரம் செல்ல புறப்பட்டேன்.

மனதில் ஒரு சிறிய கேள்வி. இந்த பட்டிமன்றத்தில் பேச போவது 8 நிமிடம். இந்த எட்டு நிமிட பேச்சுக்காக 12 மணி நேர விமான (போக வர இரண்டையும் சேர்த்து தான்) எடுக்க வேண்டுமா? இருந்தாலும் அண்ணன் நடுவராக உள்ள பட்டிமன்றதில் பேச வந்த வாய்ப்பு என்றால் மங்கல்யானில் ஏறி செவ்வாய்க்கு கூட போகலாம் என்று நினைத்தேன்.

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கண் கெட்ட பின்னே...

மற்றொரு நாள்.. மற்றொரு செய்தி.. பொதுவாக செய்தி தாளை படித்தாலே அந்த நாள் ஓர் சோகமான நாளா மாறும். இப்படி ஆகும் என்று தெரிந்தும் ... ஏதாவது ஒரு நல்ல செய்தி வராதா என்ற நப்பாசையில் "சொந்த செலவில் சூனியம்" வைத்து கொள்வதை போல் செய்தித்தாளை படித்து விடுவேன்.

இன்றைக்கான செய்தி ....

வியாழன், 4 டிசம்பர், 2014

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...

சென்ற பதிவில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது என்றும் அதை எப்படி எங்கே கற்று கொண்டேன் என்பதையும் தெளிவாக எழுதி இருந்தேன்.

அது என்ன கெட்ட பழக்கம்?

அந்த பதிவின் முடிவில் இந்த கெட்ட பழக்கத்தினால் எனக்கு வந்த கேடை பற்றி பிறகு எழுதுகின்றேன் என்று சொன்னேன். அந்த பிறகு தான் இந்த பதிவு.

புதன், 3 டிசம்பர், 2014

நண்பேண்டா ....

சிறிய வயதில் இருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். என்னன்னு  நிதானமா கேளுங்க.

"எங்கே ந்த காரியத்திற்கு போனாலும் நேரத்திற்கு போய் விடுவேன்'.

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த உனக்கு எப்படி இந்த கெட்ட பழக்கம் என்று நீங்கள் நிறைய பேர் கேட்பது தெளிவாக கேட்கின்றது. அது ஒன்னும் இல்லை.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

அப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆனார்கள்?

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'கேக் வேணும்மா ... கேக்கவே வேண்டாம் " என்ற பதிவை படித்து விட்டு நண்பர் மதுரை தமிழன் (அவர்கள் உண்மைகள்) பின்னூட்டம் மூலமாக :

//என்னைப் போலவே நீங்களும் ஒரு அப்பாவியான அப்பாவா? அப்பாக்கள் எப்போது இளிச்சவாயர்களாக இருப்பது ஏன்? இதைப் பற்றி நீங்கள் பதிவு போடலாமே//

என்று கருத்து இட்டு இருந்தார்.

திங்கள், 1 டிசம்பர், 2014

கைக்கு எட்டியது வாய்க்கு.......

லேசாக மழைத்தூறல் பார்த்தவுடனே எல்லா தமிழனுக்கும் வரும் ஆசை தான் எனக்கும் வந்தது.

அடே டே.. இந்த நேரத்தில் மட்டும் ஒரு மிளகாய் பஜ்ஜி கிடைத்தால் ...? எவ்வளவு நன்றாக இருக்கும்..

மனைவியிடம் கேட்டு வாங்க முடியாது? ஒரு பஜ்ஜிக்காக நமக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பஜ்ஜியால் உடம்பிற்கு வரும் கேடை பற்றி விளக்கி நம்மை வாழ்க்கை முழுவதும் பஜ்ஜி சாப்பிட முடியாதவாறு செய்து விடுவார்கள்.

அழகிருக்குது உலகிலே..

கடந்த "கேக் வேணுமா, கேக்கவே வேண்டாம்" என்ற பதிவில்  விடுமுறையும் அதுவுமா கேக் வாங்க போனதை பற்றி எழுதி இருந்தேன். அந்த  ATM ல் (என்னாது கேக் வாங்க  ATM  மா என்று நினைப்பவர்கள் அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்) என் இளைய மகள் எங்களுக்கு வேண்டிய கேக் பற்றிய விவரத்தை டைப் செய்து கொண்டு இருக்கையில் அருகில் இருந்த "பெண்கள் அழகு நிலையம்" என் கண்ணை கவர்ந்தது.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

கேக் வேணுமா? கேக்கவே வேண்டாம்!

அமெரிக்க நாட்டில் எனக்கு பிடித்த விஷயங்கள் பல இருப்பினும் இங்கே பிடிக்காத விஷயங்களும் சில உள்ளன. அதில் ஒன்று தான், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம்.

பிறந்த நாள் கொண்டாடுவதை எதிர்ப்பவன் அல்ல நான், அதலால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கே இந்த பிறந்தநாளை கொண்டாடும் போது வாங்கி வருகின்றார்களே ஒரு கேக், அதன் மேல் தான் எனக்கு வெறுப்பு.

சனி, 29 நவம்பர், 2014

போனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...


பள்ளி இறுதி நாட்களில் வெளி வந்த படம் " நினைத்தாலே இனிக்கும்" . ரஜினி காந்த் (அப்போ சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழி எல்லாம் இல்லை) மற்றும் கமல் ஹாசன் (அன்றும் சரி இன்றும் சரி இவரை உலக நாயகன் என்று என்னால் அழைக்க முடியவில்லை, வட இந்தியாவிலே இவர் படத்தை பார்க்க ஆள் இல்லை, பிறகு எப்படி உலகநாயகன்?) இருவரும் சேர்ந்து நடித்த படம்.

MSV  அவர்களின் 1000மாவது படம் என்று எங்கேயோ படித்த நினைவு, ஆனால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. அருமையான பாட்டுகள், அட்டகாசமான பாத்திரங்கள், மற்றும் ரசிக்க கூடிய நகைச்சுவை.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் இடையே ஒரு போட்டி. ரஜினி சிகரட்டை 10 முறை தூக்கி எறிந்து வாய; பிடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவருக்கு டொயோட்டா சார், தவறிவிட்டால் .. சுண்டு விரல் வெட்டு படப்பட்டும். இந்த காட்சியை மிகவும் அற்புதமாக டைரக்டர் பாலச்சந்தர் அமைத்து இருப்பார். எதனை முறை வேண்டுமானாலும் இந்த காட்சியை பார்த்து ரசிக்கலாம் (நல்ல வேளை , இந்த படம் அந்த காலத்தில் வந்தது. சிகரட் இருப்பதால் இந்த காலத்து மாமனிதர்கள் இதற்கு தடை விதித்து இருப்பார்கள், அது வேறு விஷயம்).

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்... "டொயோட்டா கார் ".!

இந்த டொயோட்டா கார் என்னும் வார்த்தையை நான் முதன் முதலாக என் வாழ்க்கையில் கேட்டதே இந்த படத்தின் மூலமாக தான். இதை கேட்டதில் இருந்து இந்த வாகனத்தின் மேல் ஒரு காதல். பாக்கெட்டில் 10 பைசா இல்லாத நேரத்திலேயே, வாழ்க்கையில் வாங்கும் முதல் கார் டொயோட்டா  கார் தான் என்ற முடிவு.


இதை தான் வாங்கவேண்டும் என்று ஆசை பட்டேன்.. ஆனால்....

இந்த வாரம் தான் "நன்றி திருநாள்" வாரம் ஆயிற்றே, சனியும் அதுவுமாய் , ராசாதிக்கள் இருவரும், துணைவியாரும் நாம் கிளம்பி எங்கேயாவது போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஒரு திருமணம் ஆன ஆணிடம் சனி கிழமை உனக்கு என்ன செய்ய விருப்பம் என்று கேட்டால், அவன் சொல்வதெல்லாம்.. வீட்டிலேயே நிமதியாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், உத்தரவு வந்து விட்டதே... காலையிலே கிளம்பி ஆயிற்று.

எங்கே செல்வது என்று முடிவு செய்யவில்லை. இது லாஸ் அஞ்சல்ஸ் நகரம் ஆயிற்றே. பார்த்து ரசிக்க 1000 இடங்கள் உள்ளது. வண்டியை எடுத்து கொண்டு நால்வரும் கிளம்ப.. மூத்த மகள் .. நாம்  "Grammy Museum"  செல்லலாம் என்றாள். அடேடே, பழம் நழுவி பால் விழுந்த கதை போல் இருகின்றதே ( எனக்கும் ரொம்ப நாளாக இங்கே செல்ல வேண்டும் என்ற ஆசை), சரி என்று வண்டியை விட்டேன்.

இந்த இடம் 10 மணிக்கு தான் திறக்கும் என்று அறிந்து கொண்டு அங்கே அருகில் இருந்த பார்கிங் வண்டியை நிறுத்திவிட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம். அந்த கதவு பூட்டி இருக்க, அங்கே நின்று கொண்டு இருக்கையில் அருகில் இருந்து பாட்டு சத்தம் காதை பிளக்க, என்ன என்று எட்டி பார்த்தேன்.

டொயோட்டா கார் ... பல வித வித மாக நின்று கொண்டு இருந்தன. என்ன விசேஷம் என்று அங்கே விசாரிக்கையில் இன்று ஒரு  "Car Exhibition"  என்றார்கள். சிறு வயதில் வந்த காதலை நினைத்து கொண்டு  ஒவ்வொரு வண்டியாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த பெண் ஊழியர்கள், நீ அமர்ந்து பார்க்கலாம், நாங்கள் புகை படம் எடுத்து உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்புவோம் என்று சொல்ல.. இதோ சில புகை படங்கள்.. உங்களுக்காக.


 Daytona Race Car....ல் அடியேன்




மற்றும் ஒரு வண்டியில்...


இந்த கடைசி வண்டியின் அருகே நின்று நான் ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கையில் என் இளைய ராசாத்தி சத்தம் போட்டு..

டாடி... நீங்க  "Grammy Museum"  வந்தீங்களா இல்ல டொயோட்டா கார் பார்க்க வந்தீங்களா என்று கேட்க்க, காரின் கதவில் உள்ளே என் சுண்டு விரல் இருப்பதை கவனிக்காமல் நானே அந்த கடவை தாடல் என்று சாத்த..

போனது சுண்டுவிரல்... வரவில்லை டொயோட்டா கார்...

www.visuawesome.com


பின் குறிப்பு ;
விசு... நீ முதல் முதலாக வாங்கிய கார் டொயோட்டா இல்லையே என்று தெரிந்த சில நண்பர்கள் முணுமுணுப்பதை அறிவேன். அது சிறு வயதின்  " Infatuation"  அல்லவா? அதனால் தான் வேறு ஒன்றை வாங்கி விட்டேன். புரிந்தால் சரி...






வெள்ளி, 28 நவம்பர், 2014

சமையல் குறிப்பு : உருளை கிழங்கு "தடி மாஸ்"

சமையல் குறிப்பை பற்றி பதிவு போடவேண்டும் என்று நினைப்பதோடு சரி, அதை எழுத வாய்ப்பு இல்லையே என்று நொந்து கொண்டு இருந்தேன். அப்படி இருக்கையில், என் இளைய மகள் என்னிடம் வந்து :

டாடி.. நீங்கள் அந்த ஸ்பெஷல் உருளை கிழங்கு செய்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. இன்று செய்யுங்கள் என்றாள். அது உனக்கு ரொம்ப பிடிக்குமா? என்ற என் கேள்விக்கு , நீங்கள் செய்யும் எல்லா சமையலிலும் எனக்கு மிகவும் பிடித்தது அது தான் என்றாள்.

வியாழன், 27 நவம்பர், 2014

இவர் தாய் மாமா இல்ல... "தலாய் லாமா..".

நன்றி திருநாள்!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று இங்கே " நன்றி திருநாள்" கொண்டாடப்படும். இந்நாளில் ஒவ்வொரு குடும்பமும் அனைவருமாக சேர்ந்து ஒரு இல்லத்தில் அமர்ந்து கடந்த வருடத்திலேயும் சரி, தங்கள் வாழ்க்கையிலேயும் சரி, தமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டி உண்டு மகிழ்வர்.

புதன், 26 நவம்பர், 2014

கிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்திய கிரிக்கெட்டின் தறுதலைகள்?

கிரிக்கெட் செய்திகளை வேண்டுமென்றே தவிர்த்து வந்த எனக்கு இன்று வலை தளம் சென்ற வுடன் ஒரு அதிர்ச்சி செய்தி. ஆட்டக்களத்தில் போட்டியில் பங்கேற்று கொண்டு இருந்த ஒரு வீரர் வேகமாக போடப்பட்ட பந்து தலையில்   பட்டதினால் மயங்கி விழுந்தது மட்டும் அல்லாமல் இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்து விட்டார் என்பதே.

செவ்வாய், 25 நவம்பர், 2014

பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !

நேரம் இல்லாதா  காரணத்தினால் என் பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று.. உங்களுக்காக " மீள் பதிவு".


இது கோடை விடுமுறை, இந்தியாவில் வாழும் உங்களுக்கு அல்ல, கடல் தாண்டி இங்கே அமெரிக்காவில் வாழும் எங்களுக்கு. இந்தியாவில் கோடை விடுமுறை  மார்ச்ல் ஆரம்பித்து மே மாத கடைசியில் முடிந்து விடும். ஆனா இங்கே இந்த விடுமுறை ஜூன் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் வரை போகும்.




கோடை விடுமுறை எப்போது என்பது முக்கியம் அல்ல, ஆனால் அதை பிள்ளைகள் எப்படி கழிக்கின்றனர் என்பது தான் முக்கியம். இந்த விஷயத்தில் இந்தியாவிலும் இங்கேயும் சிலபெரிய வித்தியாசங்களை பார்க்கின்றேன். நான் இங்கே தொடர்ந்து எழுதும் கருத்துக்கள் என் குடும்பதிலும் என்னை சார்ந்தவர்களையும் பற்றி. ஆதலால் இதை எல்லோருடைய வாழ்க்கையிலேயும் என்று எண்ணி பார்க்காதீர்கள்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

நண்பனே .. .எனது உயிர் நண்பனே....

விசு, கொஞ்சம் நாளா உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்... ஆனால் பேச முடியில்லை!

வா, தண்டபாணி, கொஞ்ச நாளா பேசவேண்டும் என்று நினைத்தாய், ஆனால் பேச முடியவில்லை என்றால், அது ஒரு நல்ல விஷயமாய் இருக்காதே.. ஏதாவது பிரச்சனையா?

விசு, நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.

வியாழன், 20 நவம்பர், 2014

தப்பி போன தொப்பி

சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம்! வளரும் வயதில் ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்தை ரசித்து வளர்ந்தவன் ஆயிட்ரே. அவர் பொதுவாகவே அவர் படங்களில் தொப்பியை போட்டுகொண்டு வருவார், அதனால் நாமும் தொப்பி அணிந்தால் மனதில் ஒரு தேவ் ஆனந்த் என்ற ஒரு நினைப்பு வரும். அந்த சில்லறை ஆசை தான்.

புதன், 19 நவம்பர், 2014

"பாப்பையா" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்கம் !

விசு, டிசெம்பர்  6ம் தேதி நீ ப்ரீயாக இருப்பியா?

அலை பேசியில் கேட்டார், அருமை அண்ணன் ஆல்பி (பரதேசி அட் நியூயார்க்) என்னும் பெயரில் பதிவுலகத்தில் பிரபலமான அண்ணன், அதுமட்டும் இல்லாமல் பதிவு உலகத்தில் என் குருவும் இவரே. இவர் கேட்டு நான் எப்படி பிசி என்பேன்).

கழுதை கெட்டால் குட்டி சுவர் அண்ணே, நான் என்னைக்கு பிசி ? ப்ரீ தான், விஷயத்த சொல்லுங்க.

இங்கே நியூ யார்க்கில் ஒரு பட்டிமன்றம், நீ வந்து கலந்து கொள்ள  முடியுமா?

செவ்வாய், 18 நவம்பர், 2014

10 வார்த்தையில் ஓர் பதிவு...



உலக ஆண்கள் தினம் இன்றைக்கா? ஏப்ரல் 1ம் தேதின்னு தான மனைவி சொன்னாங்க?

கன்புயுசன்...

இலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.

வெள்ளி கிழமை காலை !

காலை 6 மணி போல் மூத்த மகளை பள்ளியில் விட செல்லும் வழியில்..

டாடி.. சாயங்காலம் என்ன பிளான்?

நத்திங் மகள்.. ஜஸ்ட் வான்ட் டு ஸ்டேஹோம் அண்ட் ரிலாக்ஸ்.

டாடி, என் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் இன்றைக்கு சாயங்காலம் ஒரு Football போட்டியில் ஆடுகின்றார்கள். நம்ம போய் பார்க்கலாமா?

எங்க மகள்?

திங்கள், 17 நவம்பர், 2014

"குடி" உயர "கோள்" உயரும், "கோள்" உயர "குற்றம்" உயரும்!

சில நாட்களுக்கு முன் நம் மதிப்பிற்குரிய மூத்த பதிவர் தருமி அவர்களின் 800 வது பதிவை பார்த்து பரவசமடைந்தேன். (மேலே போகும் முன்னால், அடி ஆத்தி, 200 தான் போட்டு முடிச்சேன், அதுக்குள்ள மண்டை காஞ்சி உள்ளே இருக்கும் யோசிக்கும் திறன் எல்லாம் வற்றி போனதே, இவர் எப்படி 800 போட்டார்ன்னு உங்களை போலவே நானும் வியந்தேன்)

 

சனி, 15 நவம்பர், 2014

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....

பல வருடங்களுக்கு முன், திருமணம் ஆன புதிதில், ஒரு வார இறுதியில், காலை 9 மணிக்கு...

ஏங்க இன்னைக்கு என்ன சமைக்கட்டும்..


(Picture Courtesy : Google)

வெள்ளி, 14 நவம்பர், 2014

ஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...



போலிஸ்காரன் வீட்டு சுரைக்காயை சமைக்க 

முடியாதாமே?


ஏன்?



"ஏட்டு" சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு 

முன்னோர் சொல்லி இருக்காங்களே!








சென்ற வருடம் இதே நாளில் ...;



இன்றைக்கு தானே வந்து  இருக்கேன், அடுத்த 

வருடம் இதே நாளில் இங்கே வாங்க.. அப்ப 

படிக்கலாம்..

மாமா ... மாமா ஏன் பார்த்தே ..?


"சூதாட்ட அறிக்கையில் சீனிவாசன் - மெய்யப்பன்  ; சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது"

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?
 (Picture Courtesy : Google)
மாமா ! என்னை "தத்து" எடுத்த சீனு மாமா? சுப்ரீம்  கோர்டில் வச்சிட்டானே ஆப்பு? இப்ப என்ன பண்றது?

புதன், 12 நவம்பர், 2014

நான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...


தென் கலிபோர்னியா தமிழ் சங்கம் வெளியிட்ட தீபாவளி மலரில் என் கட்டுரை...

தென் கலிபோர்னியா தமிழ் சங்கதிற்கும்  அதை சார்ந்த நண்பர்களுக்கும் என் "தீபஒளி", வாழ்த்துக்கள். "பழையவை எல்லாம் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின" என்ற சொல்லுக்கேற்ப, அனைவர் இல்லத்திலேயும், மனதிலேயும் வாழ்க்கையிலேயும் இருள் நீங்கி ஒளி வீசுவதாக.

திங்கள், 10 நவம்பர், 2014

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

ஏங்க... உடனே கூப்பிடுன்னு மெசேஜ் விட்டு இருக்கீங்க...ஆபிசில் கொஞ்சம் பிசி, அதனால உடனே கூப்பிட முடியல? என்ன அவசரம். இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட் ?

ஒன்னும் இல்ல மா, இன்னைக்கு காலையில் நீ ஆபிசிக்கு போகும் போது தெரியாமல் என் கார் சாவியையும்  எடுத்து கொண்டு போய் விட்டாய்.  மூத்தவளுக்கு வேற ஒரு முக்கியமான பரீட்சை, கொஞ்சம் கூட தாமதமாக போக கூடாதுன்னு சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்..

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

ஞாயிறு, 9 நவம்பர், 2014

அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" !



விசு நான், பரதேசி பேசுறேன்,  இப்ப பேசலாமா இல்ல பிறகு அழைக்கட்டுமா?

பேசலாம் அண்ணே, என்ன விஷயம்?


இல்ல, ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும், கொஞ்சம் நேரம் தேவைப்படும்.. அதுதான்.

இப்பவே பேசலாம், சொல்லுங்க.

ஒரே நிமிஷம் இரு விசு, நம்ம மதுரை தமிழன் வேறொரு லைனில் இருக்கார், அவரையும் கனெக்ட் பண்றேன்.

சனி, 8 நவம்பர், 2014

"மவம்பர் மீசை'

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கே  "மொவெம்பெர் மீசை"  என்ற ஒரு காரியம் நடைபெறும் (இந்தியாவில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை).  இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் விழிப்புணர்வுக்காக நடத்த படும். இந்த நாட்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் முகத்தில் மீசை வைத்து கொள்வார்கள். தவறாக நினைக்க வேண்டாம். மீசை உள்ள ஆண்கள் அந்த பழக்கத்தை தொடர்வார்கள். மீசை இல்லாத ஆண்கள் (என் போல் திருமணம் ஆன பின் மீசை எதற்கு என்று நினைபவர்கள்) மற்றும் பெண்கள் ஒரு ஒட்டு மீசை வைத்துகொள்வார்கள். இது "நவம்பர் மாதம் மீசை " என்பதால் " Movember  Mustache  ' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் .

வெள்ளி, 7 நவம்பர், 2014

வெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...

சென்ற வருடம் அமெரிக்காவில் பேராசிரியர் பாப்பையா அவர்களின் தலைமையில் "பிள்ளைகளை வளர்க்க சிறந்த நாடு இந்நாடா (அமெரிக்காவா) அல்ல  தாய் நாடா (இந்தியாவா ) என்ற பட்டி மன்றம் நடந்தது. அதில் அடியேன் அமெரிக்காவே என்று பேசினேன். அதை பதிவாகவும் வெளி இட்டு இருந்தேன்.

திங்கள், 3 நவம்பர், 2014

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே...

பாம்பே தினங்கள். மற்றொரு சனி கிழமை.எங்களோடு தங்கி இருந்த தூத்துக்குடியில் இருந்து வந்த நண்பன் ரவி, சல்மான்கானின்  "மைனே பியார் கியா" படம் வந்துள்ளது, போலாமா என்றான். என்னை பொறுத்தவரை அன்றும் சரி, இன்றும் சரி, ஒரு ஹிந்தி படம் பார்த்தால் நூறு ஹிந்தி படம் பார்த்ததற்கு சமம். பாட்டுக்களின் நிலைமையும் அதுவே.


வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஏன் பிறந்தாய் மகனே...

டேய் சேகரு...

சொல்லு முத்து

உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?

என்ன சொல்ல வர?

உனக்கு 8 வயசு இருக்கும் போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்கதான் உன்னை என்னா நல்லா வைச்சிருந்தாங்க.. அவங்க போன பின்ன இந்த 4 வருஷத்தில் உனக்கு என்ன கஷ்டம். உன்ன பார்க்கையில் மனசுக்கு ரொம்ப விசனம்.. எப்படி இருந்த நீ...

வியாழன், 30 அக்டோபர், 2014

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்....



டாடி..நாளைக்கு என்னுடைய போட்டி எங்கே...

கேட்டு கொண்டே வந்தாள் என் இரண்டாவது மகள். அவள்  7 வயதில் இருந்தே கோல்ப் (Golf) ஆடுபவள்.  வாரத்திற்கு 4 நாட்கள் பயிற்ச்சிக்கு - இதற்க்கான வகுப்பிற்கும் சென்று வார இறுதியில் பல போட்டியில் பங்கேற்பவள். 

சிறு வயதில் இருந்தே  வெளியே ஆடும் விளையாட்டிற்கு அடிமை  (addicted to outdoor sports). எனக்கும் விளையாட்டு மிகவும் பிடித்த காரியம். சிறிய வயதில் நிறைய ஆட்டம், இப்போது பிள்ளைகள் ஆடுவதை ரசித்து பார்ப்பேன்.
என் கண்ணின் மணி 

திங்கள், 27 அக்டோபர், 2014

"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து", சுட்டு வைத்த தோசை!

விசு, சூப்பர் விசு, இப்ப தான் மணிரத்தினத்தின் "ரோஜா' படம் பார்த்தேன். இந்தியாவில் கிட்ட தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ரிலிஸ் ஆனாலும், இப்ப தான் இங்கே வீடியோ கிடைத்தது. இந்த வீடியோ கசட் இன்னும் 24 மணி நேரம் நம்மிடம் தான் இருக்கும். இன்று இரவு இன்னொரு முறை பார்க்கலாம், என்ன சொல்லுற?

வெங்கட்,,, மாப்பு. இன்றைக்கு நான் கொஞ்சம்  பிசி. மாணவர்களின் தேர்வுதாள்களை (நானும் ஒரு காலத்தில் வாத்தியாக இருந்தவன் தான், பாவம் என்னிடம் படித்த மாணவ - மாணவியர்) , இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

இரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது.

ஞாயிறும் அதுவுமா ஒரு காபியை பேஷா போட்டுண்டு செய்திதாளை  சொடுக்கினால், கண்ணுக்கு எதிரில் வந்த முதல் செய்தி...

" இரண்டாது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டாது."

என்னாடா இது, ஆரம்பமே சரியில்லை என்று நொந்து கொண்டு செய்தித்தாளை மூடிவிட்டு இதை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். எதற்காக இந்த சட்டம், இதினால் என்ன இலாபம், யாருக்கு...?

பாரதி இன்று இருந்தால் ...

பள்ளி - கல்லூரி நாட்களில் வார இறுதி போது நேரம் கிடைத்தால் அருகில் கோயில்பிள்ளையின் இல்லத்திற்கு சென்று அங்கே கிடைக்கும் சில சில்லறை சேகரித்து அருகில் உள்ள டி கடைக்கு சென்று நாட்டு நடப்புகளை விசாரிப்போம் - விவாதிப்போம்.

சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக!



சென்ற வாரம் நான் எழுதிய " அதை காண வானவிலும் அங்கே வந்தது" உங்களில் அநேகர் ரசித்து படித்து பின்னூட்டம் அளித்து இருந்தீர்கள். அந்த உற்சாகத்தினால் எனக்கு பிடித்த மற்ற சில  ஆங்கில பாடல்களை மொழிபெயர்ப்பு செய்து அந்த பாடலின் இணைப்பையும் (காணொளி) தருகின்றேன்.

இம்முறை நான் தரும் என்னை கவர்ந்த பாடல் "Shaggy" என்பவரின் "Strength of a Woman". ஒரு பெண்ணை , பெண் இனத்தை தான் என்ன அழகாக புகழ்ந்து ஒரு அருமையான ராகத்தையும் போட்டு தானே பாடி, கூட வாத்தியம் வாசிக்கும் இசை கலைஞ்சர்களை கூட பெண்களாகவே வைத்து... கீழ் உள்ள மொழியாக்கத்தை படித்து விட்டு நீங்களே இந்த பாடலை கேட்டு பாருங்களேன்.

வியாழன், 23 அக்டோபர், 2014

"இது நம்ம ஆளின் வேதம் புதிது"...அமெரிக்காவில்

அருமையான நாள். விடுமுறை வேறு! சூரியனவன் காலை 5 க்கு வெளியே வர, இன்று நாம் ஏன் கடல் கரைக்கு செல்ல கூடாது என்ற ஒரு கேள்வி. நாங்கள் வாழும் இடம் தான் "நெய்தல்" ஆயிற்றே. வீட்டை விட்டு வெளியே வந்து பத்து நிமிடத்தில் பசிபிக் பெருங்கடல். சரி, இந்த மாதிரி இடத்திற்கு செல்லும் போது நண்பர்களோடு சேர்ந்து போனால் நன்றாக இருக்குமே என்று நண்பர்களில் சிலரையும் அழைத்து செல்லலாம் என்று தொலை பேசியை எடுத்தேன்.

புதன், 22 அக்டோபர், 2014

நான் சிரிச்சா தீபாவளி!

முதுகலை முதலாம் ஆண்டு, தீபாவளி நாட்கள். அந்த காலத்தில் எல்லாம் வெறும் விழா காலத்தில் தானே புத்தாடை. எங்கள் வகுப்பில் வெவ்வேறு மதத்தை சேர்ந்த மாணவர்களும் சரி, ஏன் திராவிட இயக்கத்தை சேர்ந்த நாத்திகர்களும் (மன்னிக்கவும் நண்பர்களே, அன்றும் சரி இன்றும் சரி, கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லும் ஒரே காரணத்திற்க்காக உங்களை பகுத்தறிவாளன் என்று என்னால் அழைக்க இயலாது. பகுத்தறிவு என்பது அதற்கும் மேற்ப்பட்டது. பேராசிரியர் தருமி ஒரு பகுத்தறிவாளன் தான், ஆனால் அவரை நான் இப்படி அழைக்க காரணமே அவரின் பகிர்ந்த-பழுத்த-பயின்ற அறிவு தான், அடிக்க வராதேயும், தருமி அவர்களே, தங்களிடம் பேசி வெற்றி பெரும் திறமையும் -முறையும் யாம் அறியோம் சரி, எதோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ வந்து விட்டேன்.  தலைப்பின் கதைக்கு போவோம்.) ஒருவரின் ஒருவர் சந்தொஷதிலேயும், சோகத்திலேயும் பங்கேற்போம்.

MS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்!


நெஞ்சில் ஒரு ஆலயம்  என்ற திரைப்படம் ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக  வந்து உள்ளது.

இரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை - திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது!


சிறு வயதில் இருந்தே ஆங்கில பாடல்களை மிகவும் விரும்பி கேட்பவன் நான். 1000 கணக்கான ஆங்கில பாடல்களை ரசித்து கேட்டு இருந்தாலும் அதில் ஒரு சில பாடல்கள் மனதில் நின்று விடும்.  இவ்வைகையான பாடல்களில் ஒன்று தான்

சனி, 18 அக்டோபர், 2014

மல்யுத்த வீராங்கனையை மணந்தேன்! ( I married a Female Wrestler...)


வாலிப நாட்களில் பங்களூரில் குப்பை கொட்டி (கொட்டிய நாளா அல்ல குப்பையை பொறுக்கிய நாளா தெரியவில்லை) கொட்டி கொண்டு இருந்த நாட்கள். விட்டால் ஆடல்-பாடல் தான்.

நான் ஏற்னனவே கூறியதை போல் இலங்கை பாப்பிசையை (தமிழ்  பாடல்களை கேட்க இங்கே சொடுக்குங்கள்)  தமிழ் நாட்டில் பாடி கொண்டு இருந்த நான், அதை வைத்து கொண்டு பெங்களூரில் சமாளிக்க முடியவில்லை. இங்கே, இதே ராகத்தில் - வேகத்தில் ஆங்கில பாடல்கள் பாடி கொண்டு இருந்தார்கள்.

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!

இந்த பாடலில் வருவது போல் சிவாஜி-முத்துராமன்-கோபாலகிருஷ்ணன் பாணியில் மும்பை நகரில் நான்,அருமை நண்பன் டொமினிக், என் ஒன்று விட்ட சகோ ரமேஷ், வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் நடந்த சில காரியங்கள்...



அருமை நண்பன் டொமினிக் எங்களை விட்டு போய் வருடங்கள் 4 ஆனாலும் , அவன் நினைவுகளும், அவனோடு செய்த அந்த நாட்களின் அட்டகாசங்களும், நெஞ்சில் என்றும் நிற்கின்றன. You have gone too soon, Bro. RIP, Doms...


யாம் அறிந்ததிலே இவனை (டொமினிக்)போல் கலாய்ப்பவர் எவரும் இல்லை.


இது ஓர் மீள் பதிவு, என் நண்பன் டொமினிக்கின், நகைச்சுச்வை உணர்விற்கு சமர்ப்பணம்.


நிற வெறி, இன வெறி, சரி! இது என்ன உண வெறி?


மும்பை நகர வாழ்க்கை, நாட்கள் நொடிகள் போல ஓடும் நாட்கள் அவை. "மட்டுங்கா" என்னும் தமிழர் வாழ் பகுதியில் நான் நண்பன் டொமினிக் மற்றும் ரமேஷ் ஒரு சிறு அறையில் வாழ்ந்து வந்தோம். நீங்கள் எல்லாம் அறிந்தது போல் நான் ஒரு கணக்கு பிள்ளை, ரமேஷ் ஒரு தொழிலதிபர், டொமினிக் ஒரு வங்கி அதிகாரி. கஷ்டமோ நஷ்டமோ ஒருவருக்கு ஒருவர்  தான் எல்லாமே. பெற்றோர் மற்றோர் எல்லாம் தமிழ்நாட்டில், என்றாவது ஒரு நாள் கடிதம் வரும். தொலை பேசி மிகவும் அபூர்வம். தினமும் காலை எழுந்து கிளம்பி மூன்று பெறும் அருகில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்து கொண்டு வேலைக்கு கிளம்புவோம். அதோடு, வேலை முடித்து மாலை 6 மணி போல் சந்திப்போம். இவ்வாறாக நாட்கள் போய் கொண்டு இருக்கையில், திடீர் என்று ஒரு நாள் நண்பன் டொமினிக் ஒரு கடிதம் எடுத்து வந்தான். அதில் உனக்கு திருமணம் செய்ய போகிறோம், உடனடியாக  ஒரு குறிப்பிட்ட விலாசத்தில் சென்று அந்த பெண்ணை பார்த்து வரும்படி எழுதி இருந்தது.  உடனடியாக, நான், ரமேஷ், டோமொனிக் "அமர் அக்பர் அந்தோனி" போல பெண் பார்க்க புனே கிளம்பினோம். இரவு முழுதும் ரயில் பயணம் செய்து காலை ஒரு 7 மணி போல் புனே சென்று அடைந்தோம்.

வியாழன், 16 அக்டோபர், 2014

19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....


வெள்ளி மாலையும் அதுவுமா அம்மணி ...

சீக்கிரம் வெளிக்கிடுங்க .... 

வெள்ளிக்கிடுவதையெல்லாமா .. .வெளிப்படையா சொல்லுவாங்க..இது கொஞ்சம் டூ மச்...

உங்க காதுல ...மச்சாள் வீட்டுக்கு விருந்துக்கு போகணும் .... நல்ல முஸ்டபாதியா இருக்கும்... விசர் கதை கதைக்காம வெளிக்கிடுங்க...

அடே.. அடே .. நம் அம்மணியின் உள்ளது உறவினர்களோடு விருந்து  என்றால்.. .ஆட்டமும் பாட்டும் தானே... 

அங்கே வந்து பகுடியா கதைக்கிறேன்னு எதையும் சொதப்பி வைக்காதிங்க... 

அங்கே வந்து எங்கே கதைக்கிறது.. பாடுறதுக்கே நேரம் இருக்காதேன்னு நினைக்கையில்... அதை வைத்து புது பதிவு எழுத நேரம் இல்லாத காரணத்தினால் ... மனமோ.. வார இறுதி தானே.. பழைய பதிவு ஒன்னு அவுத்து விடுன்னு சொல்ல...

இதோ.... 


புதன், 15 அக்டோபர், 2014

என்னதான் சொல்லு! அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி தான்.

விஷ் குட் மார்னிங்

குட் மார்னிங் மிகுவேல், ஹொவ் ஆர் திங்க்ஸ்?.

விஷ், உங்க காரை ஷோ ரூம் டெலிவரி பண்ணி விட்டது. நீங்க மெயின் ஆபிஸ் வந்து எடுத்து கொள்ள முடியுமா?

சரி மிகுவேல். இப்ப நான் ஒட்டி கொண்டி இருக்கின்ற வாடகை காரை என்ன செய்வது?

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்) !

"தேவர் மகன்" படம் என்று நினைக்கின்றேன். அதில் நடிகர் வடிவேல் ஒரு சில காட்சிகளில் வருவார். அந்த படத்தில் சிவாஜி - கமல் அவர்களின் அற்புத நடிப்பை பார்த்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆகி விட்டது. அதை தொடர்ந்து ராஜ் கிரண் படத்தில் வடிவேலை பார்த்ததாக நினைவு. கௌண்டரும் - செந்திலும் ஒரு ரவுண்டு போய் கொண்டு இருந்த காலம்.

தமிழ் திரை பட உலகம் இன்னொரு நகைச்சுவை நடிகருக்காக காத்து கொண்டு இருந்த காலம். இந்நேரத்தில் நடிகர் விவேக் அவர்கள் பகுத்தறிவு பேசி " சின்ன கலைவாணர்" என்று பெயர் எடுத்து புகழ்ச்சியின் உச்சியில் நின்றார்.  விவேக் அவர்களின் நகைச்சுவை பட்டனந்தில் நன்றாக போனாலும் B & C சென்டரில் சரியாக போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நேரத்தில் தான் தமிழ் திரை உலகம் வடிவேலுவின் நகைச்சுவைக்கு அடிமை ஆகிற்று.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...

ரிங் ரிங் ...தொலைபேசி ரிங்கியது...

சனிகிழமை மாலையும் அதுவுமாய்... யாராய் இருக்கும் என்று நினைத்து  கொண்டே எடுத்தால்...

வாத்தியாரே.. தண்டம் பேசுறேன்...

தண்டபாணி... நான் உன்ன தண்டம்னூ கூப்பிட்டாலே, கோவித்து கொள்வாயே, இப்ப எல்லாம் நீயே உன்னை தண்டம்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டியே.. எப்படி இந்த மாற்றம்?.

வாத்தியாரே... கல்யாணம் ஆன ஒவ்வொரு ஆணும் ஒரு வருஷத்திற்குள்
"தான் ஒரு தண்டம்" என்பதை புரிந்து கொள்கிறான், இதில் நீ கூப்பிட்டா என்ன? இல்ல நான் கூப்பிட்டா என்ன?

பேஷா சொன்ன பாணி? வீட்டிலே ஆத்துக்காரி -பிள்ளைகுட்டிகள் சுகமா?

அவங்க சுகமா இருந்தா தானே வாத்தியரே, நான் உனக்கு போன் போட  முடியும். உங்க வீட்டிலேயும் எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு நினைக்கும் போதே சந்தோசம்.

பாணி, நீ இன்னும் என்னை வீட்டிலே எப்படி இருக்காங்கனே கேட்கவில்லையே, அப்புறம் எப்படி இங்க நல்லா இருக்காங்கன்னு  நீயே முடிவு பண்ண?

வாத்தியாரே, அங்கே நல்லா இருந்தாதானே நீ என் போனையே எடுப்ப, இல்லாட்டி "வாய்ஸ் மெசேஜ்" தானே.

சரி, கூப்பிட்ட விஷயம் சொல்லு பாணி,

ஒன்னும் இல்ல வாத்தியாரே,

சரி அப்புறம் பார்க்கலாம்.

வாத்தியாரே, ஒரு நிமிஷம் இரு, என்னமோ காலில் சுடு தண்ணி ஊத்தின  மாதிரி ஓடுறியே, ஒரு விஷயம் சொல்லணும்.

சொல்லு, பாணி.

வாத்தியாரே, போனவாரம் "ஆப்பிள்-பேரிக்காய் பிடுங்க", பக்கத்தில் எங்கேயோ குடும்பம் நண்பர்களோடு போனீயாமே?..

ஆமா தண்டம்.. சூப்பரா இருந்தது. சாரி, தீடிரென்று பிளான் பண்ணதால் உன்னையும் சுந்தரியையும் அழைக்க முடியவில்லை.

நீ கூப்பிட்டு இருந்தாலும் நான் வந்து இருக்க மாட்டேன் வாத்தியாரே, நமக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

தண்டம் நானும் அப்படி தான் யோசித்தேன், ஆனா அங்கே போய் அந்த பழத்தை பறிச்சு சாப்பிட்டு பார்த்தவுடன் தான், அடே டே, இவ்வளவு ருசியா இருக்கே... இம்புட்டு நாள் இதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று. சரி,தண்டம், அதை பத்தி நீ ஏன் கேக்குற?

வாத்தியாரே, நீ சந்தோசமா போன, ருசித்து சாப்பிட்ட, அதோட விட
வேண்டியது தானே, இந்த விஷயத்தை ஏன் உன் பதிவில்  (Blog) போட்ட?
(அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்)  

பாணி, "நான் பெற்ற இன்பம்"... என்ற லாஜிக் தான், நீயும் படிச்சியா? நல்லா இருந்ததா?

வாத்தியாரே, நான் படிச்சானோ இல்லையோ, இங்கே சுந்தரி படிச்சிட்டா, படிச்ச உடனே .. "வேதாளம் முரங்கை மரத்தில் ஏறிடிச்சு", உடனே தானும் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறா?

சாரி தண்டம், ஆனாலும் போய் பாரு தண்டம். அந்த இடம் -பழம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,

வாத்தியாரே... அந்த வகை பழம் எல்லாம் இங்கே பக்கத்திலேயே கிடைக்குது.அதுக்கு ஏன் 100 கிலோ மீட்டர் மேலே வண்டிய ஒட்டிக்கொண்டு..

பாணி, இங்கே பக்கத்தில் கிடைத்தாலும்  அந்த மாதிரி ப்ரெஷ் இல்ல!

என்ன வாத்தியாரே, விசயம் தெரியாமல் பேசுற... இங்கே உங்க வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டரில் ஒவ்வொரு ஞாயிறும் "உழவர் சந்தை" இருக்கே, அங்கே இந்த மாதிரி பழம் எல்லாம் இருக்கும், இங்கே போய் வாங்குறத விட்டு விட்டு, அவ்வளவு தூரம் போக சொல்லுறியே.. இப்ப உன் பேச்சை கேட்டு விட்டு, இங்கே என் வீட்டில் இவ கொடுமை தாங்கல.

என்ன பாணி, ஆச்சிரியமா இருக்கே, இங்கேயும் "உழவர் சந்தையா"?  நாளைக்கு காலையில் முதல் வேலையா அங்க போய்  நல்ல ப்ரெஷ் பழம்- காய் கறிகள் வாங்கி மனைவியை அசத்த போறேன்.

ஆல் தி பெஸ்ட் .. வாத்தியாரே. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.

என்ன?, சுந்தரிக்கு போன் போட்டு அந்த நல்ல ப்ரெஷ் பழம் சீசன் முடிந்து விட்டது, இதோடு அடுத்த வருஷம் தான்னு சொல்லணும், அவ்வளவு தானே..

என்ன வாத்தியாரே, என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிட்ட?..எப்படி கண்டு பிடிச்ச?.

இது எல்லாம் நானும் பண்ண வேலை தானே தண்டம். நாளைக்கு அந்த சந்தைக்கு போறேன், நீயும் வரியா?.
.
இல்ல வாத்தியரே, இந்த உழவர் சந்தை ஊருக்கு ஊர் இருக்கு, இங்க எங்க வீட்டிற்க்கும் பக்கத்தில் கூட இருக்கு, நான் அங்கே போவேன்.
சரி, அப்புறம் பார்க்கலாம்.

அடுத்த நாள் ஞாயிறு காலையில், உழவர் சந்தையில் நான், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி... ஆச்சரியப்பட்டேன். இதோ பாருங்கள் சில புகைப்படங்களை..


 ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டின் பார்க்கில் பகுதியில் இந்த சந்தையை அமைத்து இருந்தார்கள்.


 காலையில் முளைத்த  காளான்கள்

 பூங்கொத்துக்கள்

தமிழனுக்கு   பிடித்த "எழந்த பழம்.. எழந்த பழம்"
சுரைக்காய் 


 சக்கரை வெள்ளி (வள்ளி அல்ல) கிழங்கு
மக்காசோளம் மற்றும் காலி ப்ளவர்

 பீர்க்கங்காய் (இதை இறால் போட்டு எப்படி சமைப்பது என்பதை மற்றொரு நாள் எழுதுகின்றேன்)
கத்திரிக்காய் மற்றும் பல...


 கீரை வகைகள்.



 பழவகைகள்

வேறு சில பழவகைகள்

சிறிய சிறிய பூசணிகாய்களால் செய்ய பட்ட பூங்கொத்துக்கள்!


எனக்கு தேவையான சிலவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு  வந்து அவைகளை மேசையின் மேல் அடுக்கி வைத்து விட்டு, வெளியே சென்று இருந்த மனைவி மற்றும் ராசாதிக்களுக்காக காத்து கொண்டு இருந்தேன்.

அவர்கள் வந்தவுடன்..

இது எல்லாம் எங்கே இருந்து வந்தது?

இங்கேதான் பக்கத்தில்... உழவர் சந்தையில் இருந்து, இவ்வளவு அருகில் இருந்து உள்ளது, இத்தனை நாள் நமக்கு தெரியவில்லை பார்.

இப்படி நான் சொன்னவுடன் மனைவி ஒரு புன்முறுவல் விட்டார்கள். இந்த புன்னகையின் அர்த்தம் "கிண்டல்" ஆயிற்றே... என்னவாய் இருக்கும் என்று நினைத்து கொண்டே, மதிய உணவு என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தோம்.

பின் குறிப்பு;

ஏன் சிரித்தார்கள் என்று மனம் குழம்பி போனதால், என் இளைய ராசாத்தியிடம்:

காலையில் அப்பா அந்த பழம் - காய் வகையறாக்களை வாங்கி வந்து மேசையில் பார்த்தவுடன் அம்மா ஏன்சிரித்தார்கள் ".

டாடி.. இந்த கடை பற்றி உங்களுக்கு இன்று தான் தெரிந்து இருகின்றது. அம்மா பல வருடங்களாக ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் நாம் மூவரும் எழும் முன்பே இங்கே சென்று இந்த வகையறாக்களை வாங்கி வந்து கொண்டு இருகின்றார்கள்...

என்று போட்டாளே ஒரு போடு...


www.visuawesome.com

வெள்ளி, 10 அக்டோபர், 2014

No wonder they call him the "Boss"

"Bruce Springsteen", the name spells music. What an incredible artist and what a brilliant Band. I still remember the day when I heard this name for the first time. 

It was a Pre-grammy show and the song was "Dancing in the Dark" (By the way, who would have  thought that the teenager who danced with Bruce would end up as one of the biggest stars of modern day TV Show "Friends", Yes, I am talking about Courtney Cox)'. Springsteen had the music, the rhythm and above all the audience. His  Rugged-Bass voice was mesmerizing. The first time I heard it, I know for sure that this man's going to be on the center stage for a long time to come. And I was right.

நெஞ்சு (வலி) பொறுக்குதில்லையே....இந்த...!


உடல் நலத்தை கருதி அம்மையாருக்கே ஜாமீன் கொடுக்க விண்ணப்பம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம், என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அம்மையாராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லாவிடில் அது நாம் எல்லோரும் விசன பட வேண்டிய காரியம் தான்.

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். சிறைசாலையில்  உள்ள அம்மையாருக்கு உடல் நிலை காரணமாக ஜாமீன் தர வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி.

24 மணி நேரமும் ஒரு வேலையும் இல்லாமல் சிறையில் சும்மா இருக்கும் போதே  , உடல் நலம் குறைவாக இருக்கின்றார்களே, இவர்கள் இத்தனை நாட்களாய் எப்படி ஆட்சியை நடத்தினார்கள்.

உடல் நலம் குன்றிய ஒரு நபரால் எப்படி நல்ல முடிவுகள் எடுத்து நாட்டையும் அதன் மக்களையும் நல வழியில் கொண்டு செல்ல முடியும்.?

அப்படியே இவர்கள் வெளியே வந்தாலும், இவர்களால் தனக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொள்வதே சிரமம், இதில் நாட்டு மக்களின் நலனை எப்படி இவர்களால் கவனிக்க இயலும்?

என்னை பொறுத்தவரை, அரசியல் வாதிகளுக்கு ஒரு வயது வரம்புவிதி  வைக்கவேண்டும். ஒரு சாதாரண நிறுவனத்திலோ அல்ல ஒரு அரசு பதவியிலோ இர்ப்பவர்களுக்கு ஏன் ஓய்வு கொடுத்து வீடிற்கு அனுப்புகின்றோம். ஒரு வயது தாண்டியவுடன் அவர்களால் சரியாக வேலை செய்ய முடியாது என்று தானே.பின் அரசியவாதிகளுக்கு மட்டும் ஏன் இந்த சட்டம் இல்லை.

ஒரு வேளை, அரசியல்வாதிகள் என்ன வேலை செய்து கிழிக்கின்றார்கள்? என்பதால் இருக்குமோ?

இங்கே இன்னொரு காரியம். சிறையில் அடைத்தவுடனே  நம்மூர் அரசியல்வாதிகளுக்கு உடனே வருவது "நெஞ்சு வலி". இந்த "நெஞ்சு வலி" வந்த அரசியல்வாதிகள் மீண்டும் எந்த தேர்தலிலும் நிற்க கூடாது என்று ஒரு சட்டம் வந்தால் இப்படி வரும் தற்காலிக "நெஞ்சு வலிகள்" போயே போச்சு என்று பறந்து விடும்.

நம் நாடு முன்னேற நிறைய மாற்றங்கள் வேண்டும். அதில் ஒன்று இந்த வயது பிரச்சனை. சில முன்னேறிய நாடுகளிலும் இந்த வயதிற்கான உச்சவரம்பு இல்லை. ஆனால் இந்த நாடுகளில், அந்த அரசியல்வாதிகள் தங்கள் உடல் நலம் காரணமாகவும்- வயது காராணமாகவும் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சொல்லும் செய்திகள் அடிக்கடி வருவது உண்டு.

இந்த மாதிரி செய்திகளை நான் இதுவரை இந்தியாவில் கேட்டது இல்லை.
அப்படியே வயதாகி வேறு வலி இல்லாமல் இவ்வுலகை விட்டு பிரிய வரும் நேரத்தில் தம் பிள்ளைகளை நமக்கு பரிசாக அளித்து விட்டு போகின்றார்கள். பிள்ளைகள் பதவிக்கு வந்ததும், மீண்டும் "பழைய குருடி, கதவை திறடி" கதை தான்.

நெஞ்சு பொறுக்குதில்லையே...

பின் குறிப்பு;

எங்கேயோ எப்போதோ படித்ததில் பிடித்தது.

தலைவர்தான் கோர்ட்டு கேஸ் நடக்கும் போதே  3 மணி நேரமா "நெஞ்சு வலி - நெஞ்சு வலின்னு" கத்துனாராமே, அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தால் பிழைத்து இருப்பார் அல்லவா? ஏன் அவரை அழைத்து செல்லவில்லை.

அவர் சத்தம் போட்டது என்னமோ உண்மை தான். ஆனால் வழக்கம் போல் "அக்டிங்" கொடுக்கின்றார் என்று அங்கு இருந்தவர்கள் நினைத்து விட்டார்கள்.

www.visuawesome.com

 

வியாழன், 9 அக்டோபர், 2014

இவங்க தான் "அம்மா" மற்ற எல்லாரும் "சும்மா"!

கடந்த சில நாட்களாக எங்கே பார்த்தாலும் "அம்மா - அம்மா" என்ற சத்தம். நம் அனைவருக்கும் தெரிந்த தமிழகத்தின் அம்மையாருக்காக எழுந்த சத்தம் இது. இந்த அம்மையார் வருமானத்திற்கும் அதிகமாக  சொத்து சேர்த்த வழக்கில், குற்றம் நிரூபிக்க பட்டு இன்று சிறையில் இருக்கின்றார்.  இந்த தண்டனை இவர் செய்த தவறுக்காக.

சரி, இந்த சிறை தண்டனை மட்டும் அல்லாமால், இவர் உடனடியாக  சட்ட சபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து நீக்க பட்டதும் அனைவரும் அறிந்ததே. அதற்கும் மேலே ஒரு படியாக இவர் இன்னும் 10 வருடத்திற்கு தேர்தலில் நிற்க கூடாது என்று  நீதிபதி  ஒரு ஆணை இட்டார்.

பேய் அறைந்த கதை...

ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்

ஆரம்பத்தில் இருந்தே என் பதிவுகளில் "பேய் அறைந்த கதையை, மற்றொரு நாள் கூறுகிறேன் என்று சொல்லி வந்தேன். இன்று என் நண்பன் கோயில்பிள்ளை அவன் பாணியில் "பேய் வந்த கதை"யை சொல்லி இருகின்றான். படித்து ரசியுங்கள்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அது ஜாமீன்...

இந்திய சட்ட திட்டத்தின் மேல் ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்துள்ளது. நீதி மன்றத்தில் குற்றவாளி என்ற தீர்ப்பு அதிகாரபூர்வமாக வந்த பின் அடுத்த நடவடிக்கை, அம்மையாரை ஜாமீனில் வெளியே எடுக்கும் கட்டம் ஆரம்பித்தது. லண்டனில்  இருந்து ஓடோடி வந்தார், "பெரியவர் ராம் ஜெத்மலானி". இவர் செய்வது எல்லாம் தொழில் தர்மம். சில மாதங்களுக்கு முன் கனி மொழிக்காக போராடினார். இப்போது அம்மையாருக்காக. சரி, பணத்திற்காக தன தொழிலை செய்கின்றார் என்று விட்டு விடுவோம்.
இந்த தற்காலிக விடுதலையை நிராகரித்த மாண்புமிகு நீதிபதி, இது சாதாரண விஷயம் அல்ல, ஊழல். அதாவது.. "மனித உரிமை மீறல்"  என்று சொல்லி தன் தீர்ப்பை நியாய படுத்தினார்.

"மனித உரிமை மீறல்"  - நன்றாக, சரியாக சொன்னார். பொது மக்களின் பணத்தை திருடும் ஒவ்வொரும் மனித உரிமையை தான் மீறுகின்றார்கள்.
இந்த தீர்ப்பில் எனக்கு பிடித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், இதைகேள்வி பட்டவுடன், நாளை விசாரணைக்கு வரும் நம் வேறு சில நண்பர்களை, நீதி மன்றம் ..... "அதிருதில்ல" என்று கேட்பது போல் ஒரு உணர்ச்சி.
நீண்ட  நாட்களுக்கு பிறகு இந்தியன் என்பதில் ஒரு சந்தோசம், நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து இருகின்றது.

இந்த ஜாமீன் விசாரிக்க வந்த நாள் அன்று, தனியார் பள்ளி கூடங்கள் மூட படுகின்றனவாம். பிள்ளைகளுக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

டீச்சர் .. டீச்சர்.. ஏன் இன்றைக்கு பள்ளி கூடம் இல்லை..

அது வந்து... 18 வருஷதிற்கு முன்னால் நம் முதல்வர், ஊழல்  செய்து வருமானத்திற்கும் அதிகமா சொத்து சேர்த்ததினால், இன்று நீதி மன்றம் அவர்களை குற்றவாளின்னு சொல்லி கைது செய்து இருக்கு, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் எல்லாம் போராடவேண்டும். அதுதான்.

அப்ப, பிறரின் பொருளை திருடவது சரியா, டீச்சர்?

சரி, இந்த ஜாமீன் நிராகரிக்க பட்ட பின்.. நம் தொண்டர்கள் கொதித்து எழுந்த காட்சி இருக்கே.. பரிதாபம். சரி, அம்மையார் உங்க தலைவி, பொங்கி எழுங்க, பரவாயில்லை. அதற்காக முட்டாள்தனமான சுவரொட்டி அடிப்பதா?

இதை பாருங்களேன்..

இதை விட முட்டாள் தனம் எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா? அம்மையாரை விடுதலை செய்யாவிடில் இவர்கள் தமிழகத்தில் வாழும் 1000 கணக்கான கரநாடக மக்களை சிறை பிடிப்பார்களாம். இந்த அறிவு கொழுந்துக்கள்.

அடே முட்டாள்களே, ஏற்கனவே தமிழன் என்றாலே, பொருளாசை-பேராசை- தன்னலம்- சுயநலம்- பதவிஆசை பிடித்தவன் என்று மற்ற மாநிலத்தார் முத்திரை குத்தி விட்டனர். இதில் நம்மை "முட்டாள்கள்" கூட என்று சேர்த்து அழைக்க வைத்து விடாதீர்கள்.

இந்த சுவரொட்டியில் தங்கள் பெயர்களையும் போட்டு வைத்து உள்ளனர். இது நாட்டில் வன்முறையை தூண்டும் காரியம் அல்லவா? எவ்வளவு தைரியம் (அல்லது முட்டாள் தனம்) இருந்தால் இவர்கள் இவ்வாறன கருத்தை வெளியிடுவார்கள். கர்நாடகத்தில் வாழும் தமிழரை பற்றி இவர்கள் சிறிதாவது நினைத்து பார்த்தார்களா?

இந்த ஒரே சுவரொட்டி போதும், டாக்டர். சுப்ரமணிய சுவாமிக்கு. சட்டம் ஒழுங்கு குறைந்து விட்டது என்று சட்டசபையை கலைக்க. நடுவில் பிஜேபி யின் ஆட்சி, அதுவும் முழு மெஜாரிட்டியுடன். சற்று கவனமாக இருக்கவும்.

தொடர்ந்து மேல் கோர்டில் முறையிடுவதாக அம்மையாரின் தரப்பில் சொல்ல பட்டு இருக்கின்றது. அப்படியே அவர்கள் ஜாமின் கிடைத்து வெளியே வந்தாலும், இவர்கள் உள்ளே இருந்த இந்த சில நாட்கள் நம் நாட்டின் ஊழல் அரசியவாதிகளுக்கு ஒரு பயத்தை ஏற்பட்டுதும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

வந்தே மாதரம்.

www.visuawesome.com

திங்கள், 6 அக்டோபர், 2014

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை.


என்னங்க...

சொல்லும்மா:

இன்றைக்கு நம்ம வீட்டிற்கு ஒரு மூணு நண்பர்கள் குடும்பம்டின்னர்க்கு வருகின்றார்கள் அல்லவா? டின்னர் முடிந்ததவுடன் சாப்பிட இனிப்பு ஏதாவது  வாங்கி வாருங்கள். 

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...